En Kathal Senorita
அத்தியாயம் 28:
தன் ஒளிப்பிழம்பால் சுட்டெரிக்கும் சூரியன்
அதே ஒளியை நிலவுக்கு தந்து
நம்மை குளிர்விப்பது போல் ஒரு நாள்
உன் கோபத்தை மறந்து உனதன்பினில்
எனை குளிர்விப்பாய் என்ற நம்பிக்கையில் நான்!
தியாவின் ஸ்டடி லீவ் முடிய இன்னும் இரண்டு நாள் மட்டுமே பாக்கி இருந்தது. அன்று காலை சமையலறையில் கயல்விழியுடன் பேசிக் கொண்டே...
அத்தியாயம் 27:
தன் இணையை தொலைத்து விட்டு
செய்வது அறியாது இருளில் தனியாய்
தத்தளிக்கும் நிலவினை போல நானும்
தத்தளிக்கிறேன் பிரிவெனும் துயரில்
என் உயிரோடு கலந்துவிட்ட உனை நீங்கி!
சஜன் தியாவையே பார்த்துக் கொண்டிருக்க, ஏதோ ஒரு உருவம் தன் முன் நிழலாடுவது போல் தோன்றிய உணர்வில் சட்டென்று கண்களை திறந்த தியா அங்கு நின்றிருந்த சஜனை கண்டதும்...
அத்தியாயம் 17:
பொங்கியெழும் கடலலை
கரை தாண்டி வந்து தீண்டுவது போல
உன் மேல் எனக்கிருக்கும் காதலும்
நின் பாதங்களை நினைக்கும்
என்ற நம்பிக்கையில் நான்!
“ஏன் இப்போ அமைதியா இருக்க. பிடிக்கலைனா பிடிக்கலைனு நேரடியா சொல்ல வேண்டியது தான. நீ சொல்ல மாட்ட அது ஏன்னும் எனக்கு தெரியும்” என்றபடி குனிந்திருந்த அவளின் முகத்தை நிமிர்த்த முயற்சி செய்ய, அவன்...
அத்தியாயம் 12:
இத்தனை நாள் நான்
கண்ட தனிமை நொடியில்
விலகியது பெண்ணே உனை நான்
அள்ளி அணைத்திடுகையில்!
“நீ தான் வேண்டும் நீ மட்டும் தான் வேண்டும்…” என்று அவன் கூறியதில் தனுஷாவின் மனம் திடுக்கிட்டது…. ‘என்ன ஒரு தீரம் அவனது குரலில்’ என்று அவனை எடை போட முயன்ற மனதில் பயம் குடியேற தொடங்கியது.
இருந்தும் ஒருவாறு...
அத்தியாயம் 23:
அனலில் இட்ட மெழுகு உருகி
கரைந்தோடினாலும் அதன் துளிகள் இறுகி
மீண்டும் பழைய நிலை எய்துவது போல
உன் கோபம் எனை உருக செய்தாலும்
இறுகி மீண்டும் உனையே நெருங்கிடுவேன்!
சஜனின் கையணைவில் இருந்த சுகம் இன்னும் மனதில் இருந்து நீங்காமல் ஒரு வித பரவசத்தோடு திரிந்து கொண்டிருந்த தியாவை கண்டு மனதிற்குள் மகிழ்ந்த கயல்விழியின் முகம்...
அத்தியாயம் 16:
நீ எனை மறுக்கும் ஒவ்வொரு
நொடியிலும் மறித்தாலும் மீண்டும்
எழுகிறேன் என்றாவது ஒரு நாள்
உன் கைகளில் எனை
ஏந்துவாய் என்ற நம்பிக்கையில்!
அலார்ம் அடித்த சத்தத்தில் கண்விழித்து பார்த்தவன் அங்கு அவனது சின்னு இருந்ததற்கான அடையாளம் ஒன்றுமே இல்லாததை கண்டு தலையில் தட்டிக் கொண்டவன் “ச்ச கனவா? அதானே பார்த்தேன் இப்போ அவளுக்கு...
அத்தியாயம் 14:
காதலித்தவள் மனைவியாகி
விட்டாள் வேறு ஒருவனுக்கு
நான் காதலனாகவே நின்றுவிட்டேன்
அவளின் நினைவுகளோடு!
விசாலாட்சியால் இன்னமும் தன் மகன் செய்ததை நம்ப முடியவில்லை. தன் அருகே நின்றிருந்த அனுவை அழைத்தவர் “அனு போய் பைகளை எடுத்துட்டு வா… கிளம்பலாம்” என்றார்.
என்ன செய்வது அருணை எப்படியாவது சந்தித்து சமாதனப் படுத்தலாம் என்றால் அன்னை கிளம்ப சொல்கிறார்களே என்ற யோசனையில் நின்றிருந்தவளை...
அத்தியாயம் 21:
மழை வந்தால் வீசும் மண் வாசம்
வேண்டுமானால் மழை நின்றதும்
மறைந்து விடலாம் உன் மேல் நான்
கொண்ட நேசம் எனை விட்டு நீ
நீங்கினாலும் என் நெஞ்சில் ஓயாமல் வீசும்!
இளா அடித்ததை நம்ப முடியாமல் கன்னத்தில் கை வைத்தபடி அதிர்ந்து அவனை நோக்கி கொண்டிருந்தாள் தனுஷா. கோபப்படுவான் என்று நினைத்தாள் தான்...
அத்தியாயம் 9:
தாமரை இலை நீர்
போல் ஒட்டாமல் நீ
இருந்தாலும் உன் அருகே
நான் இருக்கும் வரமே போதும்
இவ்வாழ்நாள் முழுமைக்கும்!
பார்ட்டியில் தனு பேசியதை கேட்ட பின்பு சஜனின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. அவளிடம் காதலை உரைத்து அவள் சம்மதம் கிடைத்த பின் பெற்றோரிடம் சொல்லி அவளை கரம் பற்றலாம் என அவன் நினைத்திருக்க அதற்க்கு...
அத்தியாயம் 13:
கவர்ந்து சென்றதால் நான்
ராவணன் இல்லையடி!
உன்னை தவிர யாரையும்
மனதால் நினைக்காத
தெரியாத ராமனடி நான்!
தாமோதரனிடம் இருந்து தகவல் வந்த அடுத்த நொடி சஜனும் அருணும் அங்கிருந்து கிளம்பியிருந்தனர்… இவர்களுக்கு தகவல் சொல்லிவிட்டு தாமோதரன் சிவப்பிரகாசத்திற்கும் தனுசா கிடைத்த விவரத்தை சொல்ல,
“அப்படியா ரொம்ப சந்தோஷம் சம்மந்தி… நீங்க வீட்டுல இருங்க நாங்க வர்றோம் சேர்ந்து போவோம்…”...
அத்தியாயம் 15:
மண்ணில் புதைந்த செடியை
வேரோடு பிடுங்கினாலும் அதோடு
ஒட்டிக் கொள்ளும் மண் போல
என்னில் இருந்து உன்னை நீ விலக்கினாலும்
உனை விட்டு போகாது என் நேசம்!
மண்டபத்தில் அனைத்து சடங்குகளையும் முடித்த பின் தியாவை சஜனின் வீட்டில் கொண்டு போய் விடுவதற்கு தாமோதரினின் குடும்பமும் உடன் சென்றனர். தனுஷா தான் வரவில்லை என்று சொல்லிவிடலாம் என்று நினைத்திருக்க,...
அத்தியாயம் 8:
மழையென நீ பொழிவாய்
கடலென நிறைந்து வழிந்தோடலாமென
நான் காத்திருக்க நீயோ இடியென
என்னுள் இறங்கி எனை பொய்க்க
செய்ததேனோ?
பறவைகள் அனைத்தும் தன் வீட்டிற்கு திரும்பும் அந்த மாலை வேளையில் மனிதர்களும் தங்கள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு விரைந்து கொண்டிருந்தனர். அவர்களின் அவசரம் அங்கு ஏற்பட்ட வாகன நெரிசலில் தெரிய அதிலிருந்து ஒரு வழியாக தப்பித்து வீடு வந்து...
அத்தியாயம் 11:
எந்தன் ஊனுக்குள்
உயிராய் கலந்தவளே
நீ இல்லாத வாழ்வு நிலவில்லா
வானம் போல் வெறுமையானது!
தனுஷா கடத்தப்பட்டு முழுதாய் மூன்று மணி நேரம் ஆகியிருந்தது. தியா மூலம் விஷயம் தெரியவந்த பின் அடுத்த நொடி தியா கூறிய முகவரிக்கு விரைந்திருந்தான் அருண். அவனும் தியாவும் தங்களால் முடிந்த வரை பக்கத்தில் இருந்த இடங்களில் விசாரிக்க பலன் தான்...
அத்தியாயம் 18:
தெளிவாக ஓடும் நீரோடை
போலான என் வாழ்வில்
உன் வருகையினால் கல் எறிந்தாய்
அது சலனமா? இல்லை சங்கீதமா
குழப்பத்தில் நான்!
காலையில் எப்போதும் பரபரப்பாக சுற்றிக் கொண்டு வீட்டையே ரணகளப்படுத்தி சிறகடித்து பறப்பவள் இன்றோ பத்து நாள் பஞ்சத்தில் அடிபட்டது போன்றதொரு சோர்வை பிரதிபலிக்க, நேற்று இரவு முழுதும் அழுததன் பயனாய் முகம் மட்டும் செழிப்பாய் வீங்கியிருந்தது.
அவளை...