வஞ்சிக்கொடியும்! வத்தலகுண்டின் ரகசியமும்!!
சித்தார்த் தன்னுடைய ஒருபுறம் வீரா, மறுபுறம் கதிர் என இருவரையும் அணைவாய், அதேநேரம் திடமாய் பிடித்திருந்தான். அவனுடைய செய்கையே சொல்லாமல் சொன்னது, அவர்களை எந்தவித ஆபத்து வந்தாலும் என்னைதான்டியே வரவேண்டுமென.
அதுவும் அந்த பாட்டி பேய் வீராவின் ரத்தத்தை கேட்டதில், விட்டால் கேப்டன் ஸ்டைலில் ஓங்கி அடிச்சிடுவேன்டா என்பதை போன்ற ஒரு போசில்...
அரவிந்த் அவர் வீட்டின் உள்ளே சித்துவின் அருகே இருந்த உருவத்தை கண்டு அதிர்ந்து தலை சுற்றி நின்றார்.
பின்னே இருக்காதா அவர் சித்துவின் அருகே கண்டது அவரின் சொந்த உருவத்தை தான். அதுவும் ஒரு பெஞ்சில் அந்த உருவத்தை படுக்க வைத்திருந்தனர். அந்த உருவத்துக்கு அருகில் அமர்ந்து அவர் மகன் சித்து...
அரவிந்தின் பழைய பீரோவில் இருந்து இரண்டு கவர்களை அள்ளி வந்து போட்ட சித்து "நைனா இந்தா லேண்ட் டாக்குமெண்ட்ஸ் எதை அடகு வைக்கிறதுன்னு சொல்லு. கமான் பாஸ்ட்"
அரவிந்த் சரி என்றவுடனே கேட்டு பெறவில்லை எனில் அவர் மீண்டும் வேண்டாம் என முறுங்கைமரம் ஏறிவிட்டால் என்ன செய்வது என அவசர அவசரமாக எடுத்து...
கண்ணாத்தா கிழவி கொடுத்த ஷாக்கில் இருந்து முதலில் மீண்டு வந்தது நம் மாதவனே. அந்த பேய் சொல்லியதை கேட்டு உள்ளுக்குள் ஒரு பூகம்பமே வெடித்தது மாதவனுக்கு.
பின்னே இருக்காதா இவ்வளவு நேரம் இந்த பேயை கண்டு பயந்து நடுங்கிய அவனுக்கு, இது ஒரு டம்மி பீசிலும் கம்மியான பீசாக இப்போதுதான் தெரிகிறதே.
போயும்...
"அதான் சாப்டு முடிச்சிட்டியே. இந்த நாலு நாள் என்ன செஞ்ச. சொல்லு சொல்லு"
சித்து கேட்டதிற்கு அரவிந்தும் தன் அரும் பெரும் சாதனைகளை எடுத்துரைக்க தலையிலே அடித்துக் கொண்டான் சித்து. திடீரென எதோ தோன்ற
"அப்போ காலைல என் ஆபிஸ்ல கலாட்டா செஞ்சது நீதானா?" பல்லை கடித்து கொண்டு சித்து கேட்க "ஹீஹீஹீ..."...
வீரசுந்தரி பெண் சிங்கமென சித்தார்த்தின் அலுவகத்தில் இருந்து எடுத்த ஓட்டத்தை அவன் வீட்டிற்கு வந்து தான் நிறுத்தினாள். ஓடிய வேகத்தில் நாக்கு தள்ள தஸ்சுபுஸ்சு என மூச்சு வாங்கியபடி வந்து சேர்ந்தாள்.
அவள் வந்து கதவை தட்டியபின் கொட்டாவி விட்டுக் கொண்டே கதவை திறந்தார் அரவிந்த்.
"ஹேய் வீராம்மா நீயா வா.. உள்ள...
இடி மின்னல் சூறாவளி என மொத்தமாய் தாக்கியதில் பிஞ்சு பீசுவாங்கி போன காய்ந்த ரொட்டிப்போல் மாதவனும் ஷங்கரும் நட்ட நடுவீட்டில் தலை மீது கை வைத்து வாழ்க்கையை வெறுத்த நிலையில் அமர்ந்திருந்தனர்.
'சோதனை வேதனை; இன்னும் ரெண்டு நாளு நாம உயிரோட இருந்தோம்னா அது மிகப்பெரிய சாதனை' அவர்கள் மைண்ட் வாய்சோ ரைமிங்காக...
கண்ணாத்தா பேய் தன்னுடைய வாழ்வில் நடந்த மீதி நிகழ்வுகளை, தான் சொல்லாமல் விட்டதை மீண்டும் சொல்ல தொடங்கியது.
அரவிந்தின் தாத்தா கண்ணாத்தாவை திருமணம் செய்து கொண்டபோது, கண்ணாத்தாவின் வீட்டில் அவள் அண்ணன் அந்த திருமணத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே கண்ணாத்தாவை இழுத்து சென்று தான் கல்யாணம் செய்திருந்தார் அந்த மனிதர். அதனால் தன்...
அந்த விசாலமான அறையை சுற்றி பார்த்தபடி வீரா கதிர் இருவரும் நிற்க, சித்துவோ கடுப்பாக அவன் கையில் இருந்த பையை கீழே போட்டுவிட்டு புசுபுசுவென மூச்சு வாங்கிய படி அமர்ந்து விட்டான். அவனை கண்டு குழப்பமாக புருவத்தை சுழித்த வீரா
"என்ன ஆச்சு சித்து? ஏன் பேக இப்புடி தூக்கி போடுறீங்க. உங்க...
"மச்சான் இன்னைக்கு உன் வீட்டுல என்னடா சாப்பாடா இருக்கும்? உன் மாமன் குடும்பம் வந்ததுல இருந்து உன் அம்மா நல்லா வகைத்தொகையா நாக்குக்கு ருசியா சமைக்குறாங்களே அதான் கேக்குறேன்"
நாக்கை சப்புக்கொட்டி இப்படி கேட்டபடி வந்த ஷங்கரை திரும்பி முறைத்த மாதவன் மனமோ பல குழப்பத்தில் இருக்க இருவரும் கொஞ்சம் வெளியே சுற்றி...
அரவிந்தின் வீடு என்றும் இல்லாமல் அன்று மிக அமைதியாக இருக்க 'நம்ம வீடு இப்படி இவ்ளோ அமைதியா இருக்காதே. ஒருவேளை வீடு எதுவும் மாறி வந்துட்டோமா?' என எண்ணிக் கொண்டே வீட்டின் கதவை மெல்ல திறந்து உள்ளே பார்த்தாள் வீரசுந்தரி. அங்கே சோபாவின் ஒரு மூலையில் சித்து முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு...
அப்படி அந்த புதையலை அந்த புண்ணியவான் எங்கே மறைத்து வைத்திருக்கிறான் என அங்கிருந்தவர்கள் எல்லாரும் மண்டையை பிய்த்து கொள்ள, "எனக்கு ஒரு ஐடியா இருக்கு" என்று சொல்லி எல்லோர் மனதிலும் லிட்டர் கணக்கில் பாலை ஊற்றினாள் வீரா.
"என்ன ஐடியா வீரா பாப்பா"
புதையல் அப்படி எங்க தான் போனதோ என ஆர்வத்தில்...
"ஐயா! ஐயா!
கார்மேகம் ஐயா!
கார்மேகம் ஐயா!"
வாசலில் யாரோ கார்மேகத்தை கூப்பிடும் குரல் கேட்க, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்தனர் கார்மேகம் அலமேலு தம்பதியினர். அது கிராமம் ஆதலால் அதிகாலையில் எப்போதும் விரைவாகவே எழுந்துவிடும் பழக்கம் கொண்டவர்கள் தான் அலமேலு மற்றும் கார்மேகம் இருவரும். இன்று ஏனோ வெகு நேரம் உறங்கி விட்டனர்.
அதோடு...
அரவிந்தின் கேவலமான சிரிப்பில் அவரை முறைத்து வைத்து 'தூதூ...' என மெதுவாக துப்பியே விட்டான் சித்தார்த். 'ச்சே என்னா இது அசிங்கமா போச்சு!' என நொந்து போய் நின்றார் அரவிந்த்.
"என்ன தம்பி என்னாச்சு?" சித்து துப்பியதை பார்த்து அலமேலு கேட்க
"அது ஒன்னும் இல்லைங்க. பல்லு இடுக்குல ஒரு துரும்பு சிக்கி...
நள்ளிரவு நேரம் அந்த பெரிய வீட்டின் ஈ எறும்பு கூட நல்ல உறக்கத்தில் இருக்கும் நேரம் இரு களவானிகள் பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்திருக்க நம் அரவிந்தும் அவர்களை பாலோ செய்து வந்திருந்தார்.
இருளில் மெல்ல அந்த இரண்டு உருவங்களும் சுற்றுப்புறத்தை கவனித்தபடி நகர்ந்து ஹாலை வந்தடைய, அதில் ஒருவன் அங்கிருந்த டேபிளை...
அரவிந்த் இறந்து சித்துவை விட்டு சென்று நான்கு நாட்கள் முடிந்திருந்தது. சித்தார்த்தும் தற்போது அலுவலகம் செல்ல துவங்கி விட்டான். ஆளில்லா அவன் வீட்டில் இருப்பதை விட அலுவலகம் செல்வது கொஞ்சம் மனதுக்கு இதமாக இருந்தது.
அதே நேரம் ஆன்மாவாக இருந்த அரவிந்த் தன் மகனை பின்தொடர்வதை தன் வேலையாக மாற்றிக் கொண்டார்.
...
"உன் குத்தமா என் குத்தமா
யார நானும் குத்தம் சொல்ல
பச்சஞ்பசு சோலையிலே
பாடி வந்த பைங்கிளியே"
வானத்தில் இடிக்கும் இடி தங்கள் தலையின் மீது விழுந்ததைப் போல் கண்ணத்தில் கையை முட்டுக் கொடுத்து வாசலைப் பார்த்து அமர்ந்திருந்தனர் மாதவனும் ஷங்கரும். எதுக்கு இப்படி உக்காந்திருக்காங்கனு பாக்குறீங்களா? வேற ஒன்னும் இல்லைங்க வெளிய...
'அந்திமாலை நேரம் என் அண்டர்வேரை காணோம்' அகோரமான ஒரு குரல் காதுகளில் விழ ஏற்கனவே பற்றி எரியும் நெருப்பில் யாரோ மீண்டும் ஒரு கொள்ளிகட்டையை வைத்தது போல் திகுதிகுவென இன்னும் எரிந்தது சித்துவுக்கு. அவனை கடுப்பாக்கி பார்க்க கூடிய ஒரே ஜீவனான அவன் தந்தை அரவிந்தோ பாட்டை பாடியபடி அவர் கையில் இருந்த...
"என்னவே எல்லா பயலும் முழிச்சுக்கிட்டு நிக்குதீய. எதாவது யோசனை பண்ணி இந்த இடத்தை தாண்டுங்கலே. அப்பதேன் அந்த பொதையல எடுக்க முடியும்"
எல்லாரும் வெளிரிபோய் நிற்பதை கண்டு கண்ணாத்தா இடையில் வர "ஏய் கெழவி! இங்க என்ன நடந்துட்டு இருக்கு நீ என்ன பேசிக்கிட்டு இருக்க. இங்க பூமியே பொழக்குது என்ன பண்றதுன்னு...
சூரிய தேவனவன் தன் காதலியாம் ஆழ்கடலுடன் சங்கமம் ஆகி சில மணி நேரம் கடந்திருக்க, தென்றல் காற்று சில்லென சற்று வேகத்துடனே அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது.
அதை வைத்து அப்போது இரவு நேரம் மணி ஒரு பத்து இருக்கும் என கூறலாம். நன்கு இருட்டியிருந்த அந்தகார வேளையில் அந்த பரந்து விரிந்த தென்னந்தோப்பின்...