மாலை நேரத்து மயக்கம்
எங்கும் அவளைப் பற்றிய எந்த அறிகுறியும் தெரியவில்லை., வெளியே வந்தவுடன் கண்டிப்பாக மது வீட்டில் இருந்து வெளியே வந்து இருந்தால் 'உங்க பொண்ணு இந்த பக்கமா வந்தா எங்க இந்த நேரத்தில் தனியா போனா' என்று யாராவது கண்டிப்பாக கேட்பார்கள்.
ஆனால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்க., எங்கு சென்று எப்படி...
14
தேனிலும் கசப்பிருக்கும்
இனிப்பிலும் துளி உப்பிருக்கும்
காற்றிலும் காதல் உண்டு
கோபமும் உண்டு,
உன் காதல் மட்டும்
எப்படி கலப்பு அற்ற
அன்பு அக்கறையை
அள்ளித் தருகிறது,
நீ அருகில் இருந்தால்
போதும், என் நாட்கள்
அனைத்தும் நலம் பெற,
10 மாதங்கள் முடிந்து இருந்த நிலையில், காலை சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது உதவிக்கு இருந்த உதவியாளர், இவள் எடுக்க போன பொருளை...
சரண் இறங்கி வரவும் சரியாக இருந்தது.
அவனுக்கோ தூங்கி எழுந்த பிறகு தான், அவள் தன்னிடம் சண்டை போட்டதே நினைவு வர, 'அச்சச்சோ இவ என்ன பண்ணி இருக்கான்னு தெரியலையே', என்று யோசனையோடு இறங்கி வர,
அவளோ சிவாவுடன் வெளியே கிளம்பி கொண்டிருந்தாள்.
சிவாவை பார்த்து "டேய் காலங்காத்தால ரெண்டு பேரும் எங்க டா...
4
நினைவுகள் துறந்து
நிஜங்களோடு
கைக்கோர்க்க தான்.,
கனவுகளை தொலைத்த
கல்லாய் மாறுகிறது
மனம்.,
காலை கண் விழித்தவளுக்கோ எல்லாம் கனவு போல் தெரிந்தது., சற்று நேரம் அமைதியாக யோசித்தவளுக்கு அனைத்தும் புரிந்தது., யோசித்துக் கொண்டே அப்படி உறங்கி இருக்கிறாள்
பழைய விஷயங்களை நினைத்துக் கொண்டே அசையாமல் இருந்தவளுக்கு வெளியே பேச்சு சத்தம் கேட்டது.,
கிச்சனில்...
அவனுக்கு அந்த நேரத்திலும் சிரிப்பு வந்தாலும்., மீண்டும் அவள் கன்னத்தை தட்டி "மது எழுந்துக்கோ இங்க பாரு., திட்ட மாட்டேன்., உன்னை காணலை ன்ற டென்ஷன் தான்., எல்லாரும் தேடிட்டு இருக்காங்க., நீ என்ன காரியம் பண்ணிட்டு இருக்கேன்னு தெரியுதா., உனக்காக அங்கிருந்து பறந்து வராத குறையா வந்து இருக்கோம் மது எழுந்துக்கோ"., என்று...
மதுவும் "அம்மா ப்ளீஸ் என்ன விட்ரு, இப்பதான் அத்தை மாதுளம்பழம் கொடுத்தாங்க, அதை சாப்பிட்டு முடிச்சிட்டு தான், காபி குடிச்சேன், மறுபடியும் பழமா வேண்டாம் ப்ளீஸ்", என்று சொன்னாள்.
"அப்ப ஏதாவது செஞ்சு தரேன் சாப்பிடுறியா", என்று கேட்டார்.
"ஏன் ஆயில் புட் சாப்பிட்டேன்னா, இன்னைக்கு என் வீட்டுக்காரர் முன்னாடி பஞ்சாயத்து நடக்கும் அது எதுக்கு...
அதற்குள் அவளிடத்தில் அமர்ந்திருந்த மதுவும்., 'அந்த சிவா பக்கி தான் சொல்லியிருப்பான்., அப்படி இப்படின்னு., பெரிய இதுங்க நான் என்ன தலையாட்டி பொம்மையா., இவங்க இஷ்டத்துக்கு என்னாலும் பண்ணுவாங்க., நான் தலையாட்டனுமா., என்ட்ட பிடிச்சிருக்கா பிடிக்கலையா ன்னு கேட்க வேண்டாமா'., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்.,
'என்னத்த எழுத போறேன்னு தெரியல., நான் படிச்ச...
13
தேடித் தொலைத்த
காலங்களை தேடி
அலைகிறது.,
தொலைந்தது கிடைக்காது
என்று தெரிந்தும்
தேடித் திரிகிறது.,
எப்போதும் ஏதோ
ஒன்றை தேடிக்
கொண்டிருக்கும்
மனம்.
அதன் பிறகு அவ்வப்போது ஊருக்கு சென்று வந்தாலும், அந்த முறை சென்றிருக்கும் போது சரண் அவன் அப்பாவோடு வெளியே சென்று இருந்தான்.
வீட்டில் மது அம்மாவும் சரண் அம்மாவும் பேசிக் கொண்டிருக்க, இவளோ அவர்களது அறைக்கு சென்றவள் கபோர்டு...
8 மாலை நேரத்து மயக்கம்
கனவு என்று நினைத்ததெல்லாம் நிஜமாய் நிற்கும்போது
நிஜமென்று நினைத்ததெல்லாம்
கனவாய் களைவதில்
அதிசயம் ஒன்றுமில்லை.,
நிஜங்களும் நிழல்களும்
போட்டிபோடும் உலகமிது அறிந்துகொள்ள தான்
முடிவதில்லை
அதிகாலையில் கண் விழித்தவளுக்கு நேற்று நடந்தது எல்லாம் கனவு போலவே தோன்றியது., சற்று நேரம் புரண்டு புரண்டு படுத்தவள்., 'கல்யாணம் சரண் ன்னு நெனச்சி நெனச்சி கடைசில கனவுல கூட ஃபேமிலி மொத்தமா...
அவள் அம்மா பேச, "நீ பேசாதம்மா, உனக்கு தான் அறிவு இல்ல, நீ யோசித்து இருந்தனே கல்யாணம் பண்ணி கொடுத்திருக்க கூடாது, இந்தா இன்னைக்கு சொல்லிட்டாரு பாத்தியா, சொந்தத்தில் கல்யாணம் பண்ணி இருந்தா நல்லா இருந்திருக்கும் ன்னு , அதனால தான் சொந்தத்துல கல்யாணம் பண்ணனும்னு யோசிக்கிறேன்னு சொல்றாரு, வேண்டாம் நான் போறேன்",...
10
ஒற்றை முத்தத்தில்
சிலிர்த்து அடங்கும்
உணர்வு குவியலில்.,
உன் முத்தத்தின்
எண்ணிக்கையை
கோட்டை விட்டு
விட்டேன்.,
நீயே கணக்கு
வைத்து கொள்.,
பிறகு நேர் செய்து
கொள்வோம்.,
இரவு உணவை முடித்து விட்டு தோழிகள் கிளம்பினர்.
அவர்களை அனுப்பி விட்டு சோபாவில் ஒரு ஓரமாக அமர்ந்தவள், தனது செல்போனை எடுத்து நண்பர்கள் அனுப்பியிருந்த புகைப்படத்தை பார்க்க தொடங்கியிருந்தாள்.
ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே இருந்தவள், நண்பர்களின் வாழ்த்துக்களையும் பார்த்து விட்டு...
அவன் கோர்ட்டுக்கு செல்லும் போது, எப்படியும் வேலைக்கு என்று வருபவர்களும் கோர்ட்டுக்கு சென்று விடுவார்கள் என்று தெரியும், அதனால் அவளுக்கு வீட்டிற்கு வேலைக்கு ஆள் பார்க்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அதை பின்னர் யோசிப்போம் , என்ற நிலையில் அன்று கிளம்பி சென்றவனுக்கு எந்த டாக்டரை பார்க்கலாம் என்று யோசனையோடு அங்கிருந்த தெரிந்த ஒருவரிடம்...
சிவாவின் அம்மாவும் பின்னாடியே செல்ல., சிவா வந்து பார்த்தவுடன்., அவள் முகத்தை திருப்பிக் கொள்ளவும்., மது என்று அவன் கூப்பிட அவளோ அவனின் அழைப்பிற்கு திரும்பியும் பார்க்கவில்லை.,
சிவா அமைதியாக காத்து நிற்பதை பார்த்தவுடன்., சரண் தான் பதில் சொன்னான்.
"சரி நீ போ., அப்புறம் அவட்ட பேசு"., என்றான்.
"போகும் போது கதவை...
அருகில் அமர்ந்திருந்த நந்தினி தான்., அவள் கையை பிடித்துக் கொண்டு, "லூசு மாதிரி பேசாத மது., உன்னோட லைஃப்ல பின்னாடி யோசிச்சி பார்ப்ப., கண்டிப்பா நீ அந்த அண்ணாவோட சந்தோஷமா இருப்ப., அத மட்டும் உறுதியா இல்லசொல்லுறேன்., உனக்கு இதைவிட நல்ல குடும்பம்., உன்ன புரிஞ்சிக்கிட்ட அத்த மாமா எங்க கிடைப்பாங்க சொல்லு., ...
9
எரியும் நெருப்பில்
பஸ்பமாகி கொண்டிருக்கிறது
என் எதிர்ப்புகளும்
எதிர்பார்ப்புகளும்
இனி நான்
என்பதன் அடையாளம்
நீயாகி போனாயோ...
திருமணத்திற்கான அலங்காரங்கள் நடந்துகொண்டிருக்க பிடித்து வைத்த பொம்மை போல அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அலங்காரம் முடியவும் கண்ணாடி முன் நின்ற அவளுக்கு 'இது நாம் தானா' என்று தோன்றியது.
ஏனெனில் இதுவரை அவள் மேக்கப் என்ற ஒன்று பயன்படுத்தியதே கிடையாது. அதிகமாக அலங்காரங்களில் ஆர்வம் செலுத்தியதும் கிடையாது.
ஆனால்...
அவனும் சிரித்தபடி "ப்ரொபோஸ் பண்ணி இருந்தா என்ன பண்ணி இருப்ப, ஒன்னு பிரச்சினை பண்ணி இருப்ப, இல்லாட்டி ரெண்டு வீட்டுக்கு இடையிலும் சண்டை இழுத்து விட்டு இருப்ப, அதைத்தானே செஞ்சிருப்பே", என்று கேட்டான்.
"நான் சண்டை இழுக்காத அளவுக்கு, நோ சொல்லாத அளவுக்கு என்கிட்ட சொல்லி இருக்கணும்", என்றாள்.
"எப்படி சொல்லணும்" என்று கேட்டான்.
...
"உன் கிட்ட போயி பேசினேன் பாரு., என்னைய சொல்லனும்., நான் எங்கேயாவது போறேண்டி., அப்ப தான் இவங்களுக்கெல்லாம் அறிவு வரும்"., என்று சொன்னாள்.
"லூசு மாதிரி பேசாத போ., காபி குடிச்சிட்டு படி"., என்று சொல்லியவள் போனை வைத்தாள்.
அதற்குள் இங்கு இடி இடிக்க தொடங்கவும்., இவளும் போனை கட் செய்துவிட்டு 'இனிஎன்ன...
அவனும் "ஆமா நீ என்ன இப்படி சாப்பாட்டு ராமன் ஆயிட்ட, அப்பப்ப என்னத்தையாவது தின்னுகிட்டு இருக்க", என்று கேட்டான்.
"எரும மாடு, கண்ணு வைக்காத, பிள்ளைக்கு சேர வேண்டாமா", என்று சொல்லி விட்டு கிண்ணத்தோடு மாடிக்கு செல்லப் போனவளோ, அவன் அழைப்பில் நின்றாள்.
"ஆமா வேற என்னமோ கேட்கணும் கேட்கணும்னு சொன்னியே, என்னது", என்றான்.
"சொல்ல...
அவனும் "மது சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்காத மது, அவங்க எல்லாம் பயப்படுறாங்க, பெயின் எதுவும் வந்து விடக்கூடாது ன்னு பயப்படுறாங்க, நீ அங்க தனியா வேற இருக்கனும் யோசிச்சு பாரு", என்று சொன்னான்.
இவள் பதில் அப்போதும் எதுவும் சொல்லாமல் இருக்க "மது" என்று அழுத்தி அழைக்க, எதுவுமே சொல்லாமல் அமைதியாக...
மது அம்மாவோ., "இங்க பாருங்க நீங்க பேசாம இப்படி சொல்லிட்டு போயிட்டா எப்படி., நான் அவட்ட பேசமாட்டேன்., சரணை விட ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்சிடுமா., சரணையே வேண்டான்டா., வேற எவனுக்கு இவ சரி சொல்ல போறா., எவன கட்ட போறா., இவ யாரையும் நினைச்சிட்டு இருக்காளோ என்னவோ"., என்று சொன்னார்.
'என்ன இப்படி...