Advertisement

     மோகன் அவளிடம் என்னவென்று விசாரிக்க ரகுவைப் பற்றி அவனை விரும்புவதைப் பற்றி என அனைத்தையும் சொன்னாள். அவர்கள் தான் அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள். மகளின் மனதில் காதல் இருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.

     “விடு பாப்பா, இன்னைக்கு கல்யாணம். நாம ஒண்ணுமே செய்ய முடியாது”, என்று சொன்ன மோகன் கார்மெண்ட்ஸ் கூட  போகாமல் அவளைத் தேற்றினார்.

     ரகு கீர்த்தனா திருமணம் நல்ல முறையில் நடைபெற்றது. ரகுவோ உணர்வுகள் மருத்த நிலையில் இருந்தான் என்றால் கீர்த்தியோ உச்சகட்ட பயத்தில் இருந்தாள். சுனில் பற்றிய கவலை, ரகுவிடம் எப்போது மாட்டுவோமோ என்ற பயம், அதுவும் குழந்தை விஷயம் எப்படி வெளியே சொல்ல என்று பயம்? ஜானகி இப்படி தன்னை கோர்த்து விடுவாள் என்றும் சுனில் தன்னை இப்படி இக்கட்டில் தவிக்க விடுவான் என்றும் அவள் எதிர் பார்க்கவே இல்லையே.

     இத்தனை வருடம் நண்பர்களாக பழகினாலும் இப்போது ரகுவும் கீர்த்தியும் பேசிக் கொள்ளவே இல்லை. அது பெரியவர்களுக்கும் தெரிய வில்லை. இருவரும் தங்கள் மனதுக்குள் இருந்த உளைச்சல்களுக்குள் மூழ்கி இருந்தனர். ரகு கீர்த்தியின் கழுத்தில் வேண்டா வெறுப்பாக தாலியைக் கட்டினான். அதுவும் ஒரு முடிச்சைப் போட அவனது சித்தி பெண் தான் மற்றதைப் போட்டாள். மணமக்கள் பொம்மை போல மற்றவர்கள் சொல்வதைச் செய்தனர்.

     ஜானகியோ நண்பர்கள் பதிவிட்டிருந்த ரகுவின் திருமணப் புகைப்படங்களை பார்த்து பார்த்து கதறிக் கொண்டிருந்தாள். அதில் இருந்து மகளை எப்படி வெளியே கொண்டு வர என்று தெரியாமல் திணறினார் மோகன். சோசியல் மீடியா நண்பர்கள் என எல்லாவற்றிலிருந்தும் விலகிக் கொண்டாள்.

     அவர்கள் திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்த நிலையில் அருகில் இருந்த பார்க்குக்கு ஜானகி சென்றாள். அதுவும் தந்தை வற்புறுத்தியதால் தான். அவளை பின் தொடர்ந்து வந்த சுனில் “ஹாய் ஜானு, நான் உன் சீனியர். உங்க காலேஜ் தான்”, என்றான்.

     “ஹாய், நான் உங்களைப் பாத்தது இல்லை”

     “பரவால்ல ஜானு, உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”

     “என்ன?”

     “நான் உன்னை லவ் பண்ணுறேன்”

     “வாட்?”

     “யெஸ் ஐ லவ் யு”

     “சாரி, நான் ஏற்கனவே ஒருத்தரை விரும்புறேன். அவரை விட்டுட்டு வேற யாரையும் என்னால கல்யாணம் பண்ண முடியாது”, என்றாள்.

     எல்லாம் செய்து கடைசியில் இப்படி ஆகி விட்டதே என்று எண்ணியவன் “நீ லவ் பண்ணினது ரகு தானே? அவனுக்கு தான் கல்யாணம் ஆகிருச்சே?”, என்று கேட்டான்.

     “அது உங்களுக்கு எப்படி தெரியும்?”

     “சும்மா ஒரு கெஸ் தான். சரி விடு. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”

     “இல்லை, என்னால ரகுவை மறக்க முடியாது. நீங்க போகலாம்”, என்று சொன்னவள் வீட்டுக்குச் சென்று விட்டாள்.

     அவள் மறுக்க அவள் வேண்டும் என்ற ஆசையும் வெறியும் அதிகமாக அவளை விட்டுக் கொடுக்க முடியாமல் தன்னுடைய தந்தை குப்தாவிடம் பேசினான். அனைவரும் மறுக்க அவன் பிடிவாதம் பிடிக்க வேறு வழி இல்லாமல் சம்மதித்தார்கள்.

     அவனுக்கு இரண்டு அண்ணன்கள் இருந்தாலும் அவன் பிடிவாதம் பிடிக்கவும் அவன் ஆசையை நிறைவேற்ற தான் முயன்றார்கள். தரகர் மூலமாக மோகனிடம் பேசினார்கள். ஆனால் மோகனோ மகள் இப்போது திருமணத்துக்கு தயாராக வில்லை என்று ஜானகியிடம் கேட்காமலே மறுத்து விட்டார். அவருக்கு தான் தெரியுமே மகள் இன்னும் ரகு நினைவில் இருப்பது.

     சுனிலுக்கு இந்த ஏமாற்றத்தை தாங்கவே முடிய வில்லை. என்ன செய்து அவளை அடைவது என்று அவன் மூளை யோசனை செய்தது. கீர்த்தனா இடையில் ஏதாவது ஜானகியிடம் சொல்லி விட்டால் ஜானகியை முழுதாக இழக்க வேண்டியது தான் என்று பயந்தவன் அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்று உறுதி எடுத்தான்.

     அதற்காக அவளது வீடியோவை அனுப்பி அவளை பிளாக்மெயில் செய்ய முயல வில்லை. ஏனென்றால் காலம் முழுக்க அவள் அவனுடன் வாழ்ந்தாக வேண்டுமே.

     “பேசாம அன்னைக்கு கீர்த்தி பெர்மிசன் கொடுத்தப்பவே அவளை ரேப் பண்ணிருக்கணும்”, என்று கூட அவன் கேடு கெட்ட மூளை யோசித்தது.

     அடுத்த இரண்டு நாட்கள் யோசித்தவன் ஒரு முடிவு எடுத்து ஜானகியை அழைத்தான். “ஹலோ யாரு?”, என்று கேட்ட ஜானகியிடம் தன்னை அறிமுகப் படுத்த “அதான் என் முடிவைச் சொல்லிட்டேனே? அப்புறம் என்ன?”, என்று அவள் எரிந்து விழுந்தாள்.

     ஆனால் அவன் திமிராகவே பேசி அவளை தனியே ஒரு இடத்துக்கு வரச் சொன்னான்.

     அவள் வர மறுக்கவே ரகு கீர்த்தனாவின் நெருக்கமான புகைப்படம் அவனிடம் இருப்பதாக சொன்னான். அவள் நம்பவில்லை என்றதும் அவன் சேம்பிள் புகைப்படங்களை அனுப்பி “இப்ப நம்புறியா ஜானகி? உன்னோட காதலன் புகைப்படங்கள் தான். கீர்த்தி இப்ப அவன் பொண்டாட்டி தான். ஆனா இப்ப இதை நெட்ல விட்டா என்ன ஆகும் தெரியுமா? அன்னைக்கு நீங்க பார்ட்டி கொண்டாடின வீட்ல இருந்த சிசிடிவில எடுத்தது. நான் அனுப்பின போட்டோல டிரஸ் இருக்கு. ஆனா டிரஸ் இல்லாத போட்டோ கூட என் கிட்ட இருக்கு. அதை நெட்ல போடப் போறேன். உன் காதலன் உன் ஃபிரண்ட் ரெண்டு பேரோட போட்டோவையும் நெட்ல பாரு”, என்றான்.

     “ஏன் இப்படி பண்ணுற? உனக்கு என்ன வேணும்?”

     “எனக்கு உன் கிட்ட பேசணும், நீ இங்க வா”

     உடனே வருவதாக சொன்னாள். அவசரத்தில் அந்த புகைப்படங்கள் எப்படி அவனிடம் வந்தது என்றோ? பார்ட்டி கொண்டாடினது அவனுக்கு எப்படி தெரியும் என்றோ? அது கீர்த்தியின் வேலை என்றோ அவள் யோசிக்க வில்லை.

     அவன் லொகேஷன் அனுப்பியதும் அதைப் பார்த்தவள் உடனடியாக கிளம்பி விட்டாள். ஆட்டோவில் ஏறி அமர்ந்த பிறகு தான் “இவன் எதுக்கு என்னை வரச் சொல்றான்? கல்யாணம் பண்ணச் சொல்லி கேப்பானோ? ரகு போட்டோ அனுப்பி ரகுவை தானே மிரட்டனும்? என்னை எதுக்கு வரச் சொல்றான்?”, என்று எண்ணினாள். ஆனாலும் போக தான் நினைத்தாள். ரகுவின் போட்டோ வெளியே வந்து விடக் கூடாது என்று அவ்வளவு தீவிரமாக இருந்தாள். அவனுக்கு ஒரு கெட்ட பெயர் வந்தால் அதை எப்படி அவளால் தாங்க முடியும்?

     ஆனால் தனக்கும் ஏதோ ஆபத்து என்று புரிய உடனே மோகனை அழைத்தாள். அவர் சைலெண்டில் போட்டிருக்க விஷ்ணுவுக்கு அழைக்க அவனும் எடுக்க வில்லை. வேறு வழி இல்லாமல் தனக்கு ஆபத்து என்றும் இந்த இடத்திற்கு வரும் படியும் தந்தைக்கு அனுப்பி வைத்தாள்.

     ஒரு கெஸ்ட் ஹவுஸ் போன்ற வீடு தான் அது. அங்கே சென்றதும் தயக்கத்துடன் உள்ளே நுழைய சுனில் அவளை ஆர்வமாக பார்த்தான்.

     உள்ளே வந்ததும் “போட்டோவைக் கொடு, நான் போறேன்”, என்றாள்.

     “தர முடியாது”, என்று அவன் தெனாவெட்டாக சொல்ல “உனக்கு என்ன வேணும்? பணம் வேணுமா? எவ்வளவு வேணும்னாலும் தரேன். அதைக் கொடு”, என்றாள்.

     “எனக்கு நீ வேணும்”

     “வாட்?”

     “யெஸ் ஐ லவ் யு. நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கு சம்மதம் சொல்லு. இதோ இந்த பெண்ட்டிரைவை உன் கிட்ட தரேன். அதுவும் இப்ப இல்லை. நம்ம பர்ஸ்ட் நைட்ல”

     “அது முடியாது, எனக்கு அந்த போட்டோஸ் கொடு”, என்று சொல்லி அவள் பிடுங்க போக “எனக்கு நீ வேணும் ஜானகி. உன்னை என்னால இழக்க முடியாது. உன்னால நான் ஒவ்வொரு நாளும் பைத்தியமா ஆகிட்டு இருக்கேன். என்னால வேலைல கூட கான்செண்ட்ரேட் பண்ண முடியலை”, என்றவன் அவன் அவளை பிடிக்க போக அவள் தப்பிக்க போராட இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஆனது.

     அதில் அவன் அவளைத் தள்ளி விட அருகில் இருந்த கப்போர்டில் தலை இடித்து அடி பட்டு கீழே விழுந்தாள் ஜானகி. கண்கள் சொருகி அப்படியே மயங்கிப் போனாள். இவளை இப்படியே விட்டால் இனி தனக்கு கிடைக்க மாட்டாள் என்று எண்ணி அவளை நெருங்கினான்.

     அவளை அருகில் கண்டதும் அவனுக்குள் ஆசை ஊற்று பெருக்கெடுக்க அவள் மேல் படர்ந்தவன் அவளை ஆக்ரமிக்க முயல அவன் பின் தலையில் நச்சென்று அடி விழுந்தது.

     ‘அம்மா’, என்று தலையை பிடித்த படியே விலகியவன் திரும்பிப் பார்க்க அங்கே ருத்திர மூர்த்தியாக நின்றார் மோகன்.

     “என் பொண்ணையே சீரழிக்கப் பாக்குறியா? சாவு டா சாவு டா”, என்றவர் அவனை தலையில் நச் நச்சென்று அடிக்க அப்படியே கண்கள் நிலை குத்தி கீழே விழுந்தான்.

     அவன் மூச்சு நின்றது கூட தெரியாமல் அடி பின்னி விட்டார். சிறிது நேரம் கழித்து தான் அவருக்கு அவன் செத்ததே புரிந்தது. அவனை விட்டவர் மகளைப் பார்க்க அவள் மயக்கத்தில் இருந்தாள். தலையில் அடி பட்டு ரத்தம் வேறு வந்து கொண்டிருந்தது. அடுத்த நொடி என்ன செய்ய என்று கூட அவருக்கு தெரிய வில்லை. அவர் மூளை அடுத்து என்ன என்று வேகமாக யோசித்தது. மகளைக் காப்பாற்றுவது முக்கியம் என்று புரிந்து அவள் தலையைப் பார்க்க அடி பெரியது இல்லை என்று எண்ணிக் கொண்டார்.

     முதலில் மகள் எதற்கு இங்கே வந்தாள் என்று யோசித்தவர் அவளுடைய மொபைலைப் பார்க்க சுனில் அனுப்பிய ரகு மற்றும் கீர்த்தியின் புகைப்படம் இருந்தது. அவனுக்காகவா இங்கே வந்தாள் என்று எண்ணி அவள் காதல் மேல் வியப்பு வந்தது அவருக்கு. மகளின் காதலனின் மானத்தை காப்பாற்ற எண்ணிய அந்த தந்தையும் சுனில் போன் மற்றும் லேப்டாப்பை ஆராய்ந்தார்.

     லேப்டாப் ஆன் செய்ததும் அதில் வந்த வீடியோவைப் பார்த்து ஒரு தந்தையாக துடித்துப் போனார். ஏனென்றால் அதில் ஜானகியின் வீடியோவைத் தான் அவள் வரும் போது பார்த்துக் கொண்டிருந்தான் சுனில். அதைக் கண்டு அதிர்ந்து கண்களைத் திருப்பிக் கொண்டவர் அவசர அவசரமாக அதை ஓட விட்டு மகளுக்கு அவனால் ஒன்றும் நடக்க வில்லை என்று புரிந்து ஆதியோடு அந்தமாக அதை டெலீட் செய்தார்.

     உடனே விஷ்ணுவை அழைத்து இங்கே வரச் சொன்னார். அவனும் வருவதாக சொன்னான். இதில் இருந்து எப்படியாவது தப்பிக்க முடியுமா என்று யோசித்தார்.

     எப்படி என்றாலும் போலீஸ் மோப்பம் பிடித்து விடுவார்கள் என்று புரிந்தது. அதனால் இதில் இருந்து மகளைக் காப்பற்றுவதற்காக தான் மாட்ட முடிவு எடுத்தார்.

காதல் தொடரும்…

Advertisement