Advertisement

     வெகு நேரம் யோசித்த கீர்த்தி “நான் முடிவு பண்ணிட்டேன் சுனில். அந்த ஜானகியை கதற விடணும். அவளுக்கு ஒண்ணுன்னா அந்த ரகுவும் துடிப்பான்”, என்றாள்.

     “என்ன செய்யப் போற?”

     “அந்த ஜானகியை ஒட்டுத் துணி இல்லாம வீடியோ எடுக்கப் போறேன்”, என்று அவள் சொல்ல அதிர்ந்து போனான். “ஏய் என்ன சொல்ற நீ? இது எல்லாம் தப்பு கீர்த்தி”, என்று சுனில் சொல்ல “இல்லை இதை வச்சு தான் அவளை காலம் முழுக்க நான் மிரட்ட முடியும்? இப்படி ஒரு விஷயம் நடந்தா அவ கல்யாணமும் பண்ணிக்க மாட்டா. எனக்கு அது தான் வேணும். நான் பண்ணத் தான் போறேன். அதுவும் நீ தான் பண்ணனும் சுனில்”

     “என்னால முடியாது கீர்த்தி. சொல்றதை கேளு மா. இது கிரைம்”, என்று சொல்ல “நீ இதை செஞ்சு தான் ஆகணும். நாம என்ன நேரடியாவா மிரட்டப் போறோம்? நம்ம பேர் கூட வெளிய வராது. நீ செய்யனும் சுனில், என் மேல லவ் இருந்தா?”, என்று கேட்டாள் கீர்த்தி.

     “நீ என் உயிர் டி. உனக்காக என்ன வேணும்னாலும் செய்வேன். ஆனா இது என்னால முடியாது. வேணும்னா வேற யாரையாவது வச்சு செய்யலாம்”

     “வேண்டாம் வேண்டாம். இது நம்ம ரெண்டு பேருக்குள்ள மட்டும் தான் இருக்கணும். என் மேல லவ் இருந்தா நான் சொன்னதை செய்”, என்றவள் அவனுடைய உதடுகளை சிறை செய்ய அதற்கு மேல் அவனையே மறந்தான். அவள் சொன்னதற்கு சரி என்று சொன்னான் அரை மனதாக.

     அதற்காக சரியான நேரத்துக்கு கொக்கு போல காத்திருந்தாள் கீர்த்தி. வேறு எதை வைத்தும் ஜானகியை அவளால் ஒன்றும் செய்ய முடியாது. மானம் என்ற ஒன்றை வைத்து தானே அவளை ஆட்டிப் படைக்க முடியும்? அதனால் தான் அவள் மூளை இப்படி விபரீதமாக சிந்தித்தது.

     அப்போது ரகு ஜானகி இருவரும் கடைசி வருடத்தின் கடைசி செமஸ்டரில் இருந்தார்கள். இன்னும் ஒரு மாதமே கல்லூரி இருக்க அப்போது கீர்த்தியின் பிறந்த நாள் வந்தது. அந்த நாளை விட்டால் ஜானகியை ஒன்றும் செய்ய முடியாது என்று முடிவு செய்தவள் சுனிலிடம் சொல்லி ஏற்பாடு செய்தாள்.

     சொன்னது போல சுனிலில் வீட்டில் பிறந்த நாள் பார்ட்டியை சுனில் ஏற்பாடு செய்திருந்தான். ஆறு நண்பர்களும் கீர்த்தியை தோழி என்று எண்ணி தான் அதற்கு அவள் சொன்ன வீட்டுக்கு சென்றார்கள்.

     “இது யார் வீடு கீர்த்தி?”, என்று அனிதா கேட்க “என் மாமாவோட வீடு”, என்று சொல்லி சமாளித்தாள். எந்த சந்தேகமும் வரக் கூடாது என்று எண்ணி கீர்த்தி ஆறு பேரை மட்டுமே அழைத்திருந்தாள். சுனில் கூட வீட்டுக்கு வரவில்லை. அவளுடைய காதல் இன்னும் யாருக்கும் தெரியாதே. அவன் வெளியே தங்கி இருந்தான். அதற்கு முன்னேயே அதிக பணம் கொடுத்து ஒரு போதை மருந்தை வாங்கி வந்து கீர்த்தியிடம் கொடுத்திருந்தான்.

     பார்ட்டியின் போது ஜூசில் அதைக் கலந்து வைத்திருந்தாள். இதை மற்ற யாரும் அறிந்திருக்க வில்லை. கீர்த்தியின் நடிப்பு அந்த அளவுக்கு இருக்க யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. ரகு வேறு ஜானகியிடம் காதலைச் சொல்லலாமா என்ற யோசனையில் இருக்க அவன் கூட சுதாரிப்பாக இருக்க வில்லை.

     அது மட்டும் இல்லாமல் கிண்டல் கேலி என்று நேரம் செல்ல கேக் வெட்டி விட்டு உணவு நேரம் வந்ததும் ஹோட்டலில் ஆர்டர் செய்திருந்த பிரியாணி, சிக்கன் மட்டன் என்று எல்லாம் வந்தது. அதை எல்லாம் சுனில் தான் ஏற்பாடு செய்திருந்தான்.

     உணவு வந்ததும் அனைவரும் வெளுத்து வாங்க துவங்க உண்டு முடித்ததும் அங்கிருந்த டி‌வியில் படத்தைப் போட்டு விட்டாள் கீர்த்தி. படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலே அனைவருமே அரை மயக்கநிலையில் இருந்தனர். அதாவது கண் விழித்திருந்தாலும் தங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இருந்தார்கள்.

     கீர்த்தி மட்டும் அந்த ஜூசை குடிக்க வில்லை. அதனால் அனைவரும் மயங்கியது தெரிந்து சுனிலை அழைத்தாள். அப்போது அறைக்குள் வந்த சுனில் கீர்த்தியைப் பார்த்தான்.

     “என்ன சுனில் என்னையே பாத்துட்டு இருக்குற? இதோ இவ தான் ஜானகி. இவளை உள்ள இழுத்துட்டுப் போ”, என்று அவள் சொல்ல ஜானகியை இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்றான். ஆனாலும் அவன் கைகள் தவறு செய்கிறோம் என்று எண்ணி நடுங்கியது.

     ஜானகியோ நல்ல மயக்கத்தில். அவளுக்கு நடப்பது எதுவுமே தெரிய வில்லை. ஆனாலும் அவள் கண்கள் விழித்து தான் இருந்தது. அவளை கட்டிலில் படுக்க வைத்திருந்தான் சுனில். அப்போது அறைக்குள் வந்த கீர்த்தி “என்ன சுனில் பாத்துட்டே இருக்க? ஆரம்பி. நான் வீடியோ செட் பண்ணுறேன்”, என்றவள் கேமராவைப் பொறுத்தினாள்.

     “கீர்த்தி நீயே பண்ணேன். நான் வெளிய இருக்கேன்”, என்றான் சுனில்.

     “சுனில் உன் மனசுல நான் தான் இருக்கேன்னு தெரியும். ஆனா என்னால இந்த சந்தர்ப்பத்தை விட முடியாது. பேசாம இவளை ரேப் பண்ணிரு. அப்ப தான் இவளை இன்னும் அழ வைக்க முடியும். நான் உன்னை தப்பா எல்லாம் எடுக்க மாட்டேன்”, என்று வெறியுடன் சொல்ல “ஏய் என்ன விளையாடுறியா? அந்த அளவுக்கு எல்லாம் எனக்கு தைரியம் இல்லை. ஆளை விடு”, என்றான்.

     “இல்லை நீ பண்ணி தான் ஆகணும். என்னை லவ் பண்ணுற தானே? இப்ப நீ அவளை ரேப் பண்ணனும். நான் உன் முகம் தெரியாம அதை வீடியோ பண்ணப் போறேன். நீ பண்ணலைன்னா நான் செத்துருவேன்”

     “இங்க பாரு கீர்த்தி, நான் உன்னை விரும்புறேன் தான். ஆனா என்னால அதெல்லாம் பண்ண முடியாது. வேணும்னா நீ முதல்ல சொன்ன பிளான் பண்ணலாம். நீ அந்த பொண்ணு டிரஸ் மட்டும் ரிமோவ் பண்ணு, நான் வீடியோ எடுக்குறேன்”, என்றான்.

     “சரி ரேப் வேண்டாம். நீ வீடியோ மட்டும் எடு. நான் வெளிய இருக்குறேன். இங்கயே இருந்தா இவளை ரேப் பண்ணச் சொல்லிருவேன்”

     “கீர்த்தி, என்னால முடியாது. பிளீஸ், வேணும்னா நீ அதை செய்”

     “நான் என்ன உன்னை அவளை ரேப் பண்ணவா சொல்றேன். அவ டிரஸ் இல்லாம வீடியோ தானே எடுக்க சொல்றேன்? செய் சுனில். வீடியோ தெளிவா இருக்கணும்”, என்று சொல்லி விட்டு கீர்த்தி வெளியே செல்ல அதற்கு மேல் சுனிலால் என்ன செய்ய என்று தெரிய வில்லை.

     ஜானகி ஒரு டீசர்ட் ஜீன்சில் பொம்மை போல கட்டிலில் படுத்திருந்தாள். அவள் கண்கள் அங்கும் இங்கும் அலை பாய்ந்தது. அவளை நெருங்கிய சுனிலின் கைகள் ஒரு நொடி நடுங்கியது. ஆனால் கீர்த்தி மேல் இருந்த காதல் அவனுக்கு தைரியம் ஊட்டியது.

     அவளை நெருங்கி அவள் உடையில் கை வைத்தவன் எல்லாவற்றையும் கழட்டிப் போட்டு விட்டு அவளை ஆடையின்றி வீடியோ மட்டும் எடுத்தான். சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டு மீண்டும் அவளுக்கு உடை மாற்றி விட்டு வேகமாக வெளியே அவளை இழுத்துக் கொண்டு வந்தவன் பழைய இடத்திலே அவளை விட்டுவிட்டான்.

     “என்ன சுனில் முடிச்சிட்டியா? வீடியோ எடுத்துட்டா தானே?”, என்று கேட்டாள் கீர்த்தி.

     “ஆமா”, என்று குற்ற உணர்வுடன் சொன்னவன் கேமராவை அவளிடம் நீட்டினான்.

     அதை வாங்கிப் பார்த்தவள் “குட்”, என்று சொல்லி அவனை முத்தமிட்டவள் “சுனில் அப்படியே என்னை ரகு கூட சேத்து வச்சு சில போட்டோஸ் எடு”, என்றவள் ரகுவை நெருங்கி கட்டிக் கொண்டாள்.

     எதுக்கு? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் கீர்த்தி”

     “சொல்றதைக் கேளு சுனில். எனக்கு அவங்க காதல் சேரக் கூடாது. அதுக்கு நான் சில கேம் பிளே பண்ணப் போறேன். ரகுவையும் ஏதாவது விசயத்துல மாட்ட வைக்கணும்ல?”, என்று சொல்லி அவனை போட்டோ எடுக்க வைத்தாள்.

     முகம் சுளிக்கும் படியான சில போஸ்களைக் கொடுக்க சுனில் எரிச்சலுடன் போட்டோ எடுத்து முடித்தான். அப்போது சுனில் கிளம்புவதாக சொல்ல அவனை இழுத்துக் கொண்டு அறைக்குச் சென்றவள் அவனுக்கு முத்தமிட அவனது அலைபாய்ந்த மனதுக்கும் உடலுக்கும் அவள் அந்த நிமிடம் தேவையாக இருந்தாள்.

     அது வரை நேர்மையாக கீர்த்தி மட்டுமே தன்னுடைய மனைவி என்று இருந்த சுனிலுக்கு இப்போது ஜானகியை எண்ணி மனம் அலைபாய்ந்தது. அந்த வேகத்தை அவன் கீர்த்தியிடம் காட்டினான். அன்று அவர்களின் கூடலில் கீர்த்திக்குள் உருவான குழந்தையை இருவரும் உணர வில்லை.

காதல் தொடரும்….

Advertisement