Thirumathi Thiruniraichelvan
முகூர்த்தம் 25
இன்னும் இரண்டு நாட்களே இருந்தது ப்ராஜெக்ட் சப்மிட் செய்வதற்கு. மைவிழி காலையிலிருந்து போன் அடித்துக் கொண்டிருக்கிறாள் தன் தோழியருக்கு. இருவருமே எடுத்தபாடில்லை.
இதற்கு மேலும் காத்திருந்தால் சரிவராது என முடிவு செய்ட்தவள் பேருந்தில் ஏறியிருந்தாள். குளித்தலையிலிருந்து திருச்சி சத்திரம் பேருந்து செல்லும் அந்த பேருந்து காவேரிப்பாலத்தை தாண்டும் போது இவளுக்கு ஒரு குறுஞ்செய்தி...
முகூர்த்தம் 15
காதலின் ஆழமதை கண்களில்
கண்டுகொள்ள
தேடலின் நீளமது தெளியாத
வானமானதேனோ
காதில் விழுந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் மைவிழியின் கண்கள் உதிரத்தை கசியவிட்டுக் கொண்டிருந்தது. பட்டாம்பூச்சியின் இறகுகள் அசைந்ததில் சுனாமி வந்த கயாஸ் தியரியை அவள் வாழ்வில் பிரதியிட்டது யாரோ.
தான் வைத்த சில அடிகளில் தன் உலகம் பெரிய சுழலில் சிக்கும் என அவள் எதிர்பார்க்கவில்லை.
பேசும் நிலையில் மட்டுமல்ல அசையக்கூட...