Raaja Bavani
“என்ன இருபத்தி ஆறா..? சஞ்சய்க்கே இருபத்தி ஆறு தான் ஆகுது..” என்றார் அவனின் அம்மா. “ஏங்க ஜாதகம் பார்த்தப்போ நீங்க இதை பார்க்கலயா..” கணவரிடம் வேறு பாய்ந்தார்.
அவர் என்ன சொல்வார், மகனுக்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்பதால் சீக்கிரமே ஜாதகம் எடுத்துவிட்டனர். முதல் சம்மந்தமே சித்ரா தான். தரகரும் இவர்கள் குடும்பத்தை பத்தி சொல்லியிருக்க,...
“பாருங்கப்பா.. உங்க அக்கா மக எவ்வளவு செல்வாக்கா இருக்காங்கன்னு.. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகியும் பூ மாதிரி தான் இருக்காங்க..” என்றான் அப்பாவிடம் கூர் பார்வையாக. குருமூர்த்திக்கு மகன் சொல்வது புரிய, தனா விடாமல்,
“அப்புறம் அத்தை மாமா எங்க..?” கேட்டான்.
“அவர் கிடக்குகிறார் வீட்ல..”
“அவருக்கு சாப்பாடு..”
“ஒரு நாளைக்கு வெளியே வாங்கி திங்கட்டும்..” என்றார் அலட்சியமாக.
“அது...
“ஓஹ்.. இப்படி தான் அண்ணா அவங்களை பத்தி தெரிஞ்சுகிறானா..?” சாரு கேட்க,
“ம்ம்.. போன வருஷம் அனு அவங்க அம்மாகிட்ட வாங்கின அடி, பொண்ணு பார்க்க ஆரம்பிச்சது, அனு உறுதியா நின்னது, அவங்க அப்பா அறைஞ்சுது, அனு அவர்கிட்ட கல்யாணமே வேணாம்ன்னு கையேந்தி அழுததுன்னு எல்லாம் சொன்னாங்க, கேட்க கேட்க எனக்கே ரொம்ப கஷ்டமா போச்சு,...
“ஆமா.. நீங்க தானே இப்போ கேட்டீங்க உங்க தம்பி தானே எங்களுக்கு அப்பான்னு, அப்போ எங்களுக்கு கொடுக்கிறது அவர் கடமை தானே, சட்டமும் அது தான் தெரியும் இல்லை, ஆஹ்.. இதை பத்தி உங்களுக்கு போய் சொல்றேன் பாருங்க, அந்த காலத்திலே என் தாத்தாகிட்ட சண்டை போட்டு சொத்து வாங்கிட்டு போனவங்க தானே நீங்க..?”
“என்னடா...
தனா மிகவும் பொறுமையாக, நிதானமாக தயாரானான். முகம் மிகவும் அமைதியாக இருந்தது. உள்ளே அவ்வளவு ஆர்ப்பரிப்பு, வெளியே காட்டி கொள்ளவில்லை.
அங்கு அனுவிற்கோ உள்ளங்கைகள் வேர்த்து கொண்டே இருந்தது. அத்தனை திடமாக இருந்தா பெண்ணா இவள்..? கிளம்பும் முன் அன்பழகன், சுஜாதா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள். அன்பழகன் மகள் தலை தடவ, மகள் அவர்...
“அவ படிக்கணும் ஆசைபடுறா, இருபது வயசிலே என்ன கல்யாணத்துக்கு அவசரம்..?” தனா சொல்ல,
“டேய்.. வந்திருக்க வரன் ரொம்ப நல்ல மாதிரிடா, என்னோட பங்காளி தான், MNCல வேலை, ஊர்லயும் தோட்டம், துரவு, ஒரே பிள்ளை, வசதியான குடும்பம், சாரு ரொம்ப சந்தோஷா இருப்பா..” என்றான் குகன்.
“வசதி இருந்தா மட்டும் போதுமா..?”
“மாப்பிள்ளை பையன் குணமும் நல்ல...
தனாவிற்கோ அவர் எதற்கு அங்கு சென்றிருக்கார் என்று தெரியுமே..? இப்போது அண்ணனாக அவன் என்ன செய்ய வேண்டும்..? போக தான் வேண்டும், இவர்கள் எல்லாம் ஊர் பெரியவர்கள். இவர்கள் சொல் மீறி செய்ய முடியாது, செய்தால் இவர்கள் இவனுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். ஊருடன் ஒத்து தான் வாழ வேண்டும். “போறேன்..” என்றுவிட்டான்.
“தனா தங்கமான பிள்ளைப்பா,...
“என் உழைப்புக்கு சம்பளம் கொடுக்கட்டும், அதோடு இவருக்கு நான் ஏன் சும்மா உழைக்க வேண்டும்..?” என்ற கோவமும் உள்ளுக்குள். இவ்வளவு என்று கேட்டே வாங்கினான்.
ஆனாலும் உள்ளுக்குள் அடுத்து என்ன என்று ஓட தான் செய்தது. குருமூர்த்தியிடமே இருக்கும் எண்ணமில்லை. சில காலம் பொறுத்தவன், கையில் கொஞ்சம் பணம் சேர்த்து, வைதேகியின் நகை, கூட லோன்...
இராஜ பவனி 3
“இதெல்லாம் சரிப்பட்டு வருமா அனு..? அப்பா என்ன சொல்வார் தெரியலையே..” மகள் யோசனைக்கு சுஜாதா தயங்கினார்.
“ம்மா.. நான் அப்பாகிட்ட கேட்டுக்கிறேன், உனக்கு இது பத்தி தெரியும் தானே..?” மகள் கேட்க,
“எனக்கும் இப்படின்னு உன் பெரியம்மா சொல்ல தான் செஞ்சாங்க, நான் தான் இந்த சம்மந்தம் முடிஞ்சிடும் நினைச்சேன்..” அவர் வருத்தத்துடன் சொன்னார்.
“இப்போ...
“இதுல நம்ப, நம்பாம போக என்ன இருக்கு, இங்க என்ன சம்மந்தமா பண்றாங்க, யார் சரக்குல பித்தலாட்டம் இருக்கோ அங்க தானே கேட்க முடியும்..” குருமூர்த்தி எகத்தாளமாக சொன்னார்.
“ப்பா..” தனா அவர் பக்கத்தில் சென்றவன், “என்ன நடந்துச்சுன்னு அவருக்கு தெரியாம கூட இருக்கலாம்.. பொறுமையா பேசலாம், இருங்க..” என்றான்.
“பொறுமையா பேச என்ன இருக்கு தனா,...
“டேய் என் தகுதியை பத்தி பேசுற ஆம்பிளையாடா நீ..? உன் ஒழுக்கம் கொடி கட்டி பறக்குது.. ஊருக்கு நடுவுல என்..”
“ஆமா.. ஆமா.. இவர் பார்வையில நான் ஒழுக்கம் இல்லாதவன் தான், எனக்கான பொண்ணை நான் தேடிகிட்டவன் தான், இவர் மரியாதையை ஊர் நடுவுல கெடுத்தவன் தான், ஆனா என் தங்கச்சி அப்படி இல்லை தானே,...
“ஆனாலும் உனக்கும், அந்த அன்பழகனுக்கும் எவ்வளவு ஏத்தம் பாரு, நான்.. நான் வந்து அவன் வீடேறி பொண்ணு கேட்கணும்ன்னு என்கிட்ட எதிர்பார்க்கிறீங்க..?” காந்தினார் மனிதர்.
“அவரோட சொந்த பந்தங்களுக்காக அவர் பார்க்கிறார், அங்க யாரும் ஒத்துக்கல..” என்றான் மகன்.
“எப்படி ஒத்துக்குவாங்க, எல்லாம் முறை தெரிஞ்சவங்க, அவங்கவங்க இனத்துக்கு கட்டுப்பட்டவங்க, உங்களை மாதிரியா..?” அவர் பொரிந்தார். தனா ...
“ம்மா.. நான் சாருகிட்ட பேசிட்டேன், அவளுக்கு ஓகே தான், குகன் பத்தி எனக்கு தெரியும், அவனும் தானா வந்து சம்மதம் சொல்வான் பாருங்க..” என்றான் தனா நிச்சயமாக. சாருவிடம் குகன் உரிமை எடுத்து பேசுவதிலே தனா கண்டுகொண்டான்.
“என்னடி இது..? இப்போத்தானே அப்படி எதுவும் இல்லை சொன்ன..” வைதேகி மகளிடம் கேட்டார்.
“நீங்களே கட்டி வச்சா ஏன்...
இராஜ பவனி 12
“குகன்.. நீ எதுக்கு இங்க இருக்க..? வீட்டுக்கு போ..” பந்தி கவனித்து கொண்டிருந்தவனை விரட்டினான் தனா.
“நீ தனியா என்ன பண்ணுவ..? நான் இங்க கவனிச்சுக்கிறேன், நீ வேற வேலையை பாரு..” குகன் சொன்னவன், யாரோ சாம்பார் கேட்கவும் பரிமாற சென்றான்.
“ம்ப்ச்.. குகன், என்னை கோவப்படுத்த கூடாது, நீ கிளம்பு, நான் இங்க...
“என்ன சாரு மூக்குல புகை வருது..? பீடி, தம்மு ஏதும் அடிச்சியா..? மாமாக்கு சொல்லட்டா..?” குகனின் வாய் கிண்டலாக கேட்க, மனமோ தனா திருமணத்திற்கு மறுத்ததை சொல்லிவிட்டானோ என்று யோசித்தது.
சாருவோ, “நான் உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை மாமா..” என்றாள்.
“சொல்லிட்டானா ராஸ்கல்..” குகன் தனாவை அர்ச்சித்தான்.
“இப்போ எதுக்கு என் அண்ணாவை திட்டுறீங்க..? நீங்க தானே...
இராஜ பவனி 18
விடிந்தால் தனஞ்செயன்.. அனுபமா திருமணம். ஊரில் பாடல்கள் , சீரியல் லைட், வாழை மர தோரணங்கள் என்று கல்யாண களை கட்டியிருந்தது. பெரிய ஊர் என்பதால் ஆங்காங்கு பாடல்கள் ஒலித்தது.
குருமூர்த்தி இருக்கும் இடத்தில் சாமி பாடல் என்றால், அன்பழகன் இருக்கும் இடத்தில் பழைய பாடல்கள். அதை தவிர்த்து மற்ற இடங்களில் குத்து...
“ஏன் இங்கன்னா உருப்படியா போய் சேர மாட்டோம்ன்னு பயமா..?” அவன் சீண்டினான்.
அதை புரிந்து கொண்ட தனா, “ஏன் கேட்டுக்கு வெளியேன்னா உனக்கு பயமா..? இல்லை தானே, அப்போ வெளியே போய் இரு, நான் இவர்கிட்ட பேசிட்டு வரேன்..” என்றான்.
“என்னடா விட்டா பேசிட்டே போற..? உன் அப்பன் என்ன பெரிய இவனா..? அந்த ஆள் மகன்...
இராஜ பவனி 16
“என்னடா இன்னும் வரலையேன்னு பார்த்தேன், வந்துட்ட..” குகன் கிண்டலாக சொல்லி சிரிக்க,
“போய் வேலையை பாரு, போடா..” அவன் தோள் தட்டிய தனா, கடை வாசலில் தலை கோதி நின்றான். கண்கள் ரோட்டையே பார்க்க, முகம் தாராளமாக மலர்ந்திருந்தது.
சில நொடிகள் கடக்க, பொறுக்கவில்லை காதலனுக்கு, “இன்னும் என்ன பண்றா..?” நேரம் பார்த்தான். தூரத்தில்...
“ஓஹோ.. அப்படி.. க்கா.. நீ சரியான ஆளு, மனசுல உனக்கும் அவர் மேல ஆசை இருக்கு, அப்படித்தானே..?” அனு அக்காவிடம் சந்தோஷ சிரிப்புடன் கேட்டாள். சித்ரா முகத்தில் சட்டென ஒரு வெட்கம், இளக்கம். அன்று சஞ்சய் அவளை பார்த்து பளிச்சென்று சிரித்தது நினைவிற்கு வந்தது.
“இதுவரைக்கும் நான் பார்த்ததுல அவர் வித்தியாசமான ஆளுடி..” என்றாள்.
“உனக்கு அவரை...
இராஜ பவனி 14
“இன்னும் என்னம்மா பண்றீங்க..? டைம் ஆச்சு..” தனா அவசரப்படுத்த,
வைதேகி “நானும் வரணுமா தனா..?” கேட்டு நின்றார்.
“வராம..? இங்க என்ன செய்ய போறீங்க..? கிளம்புங்க, கிளம்புங்க..” என்றான் மகன்.
“இல்லை தனா, கடையில வந்து நான் என்ன பண்ண..? எனக்கு என்ன தெரியும்..?” அவர் தயங்கினார்.
“நான் மட்டும் எல்லாம் தெரிஞ்சா அவ்வளவு பெரிய...