Raaja Bavani
தேர் ஊர் சுற்றி வரும் முன்னே விஷயம் ஊருக்குள் பரவிவிட, தனா, அனுவின் ரகசிய காதல் ஊரின் பேசும் பொருளானது. சிலர் ஆதரித்து, சிலர் எதிர்த்து, பெரியவர்கள் வியாக்கினம் பேச, இளையவர்கள் கொண்டாட.. என்று எங்கும் இவர்கள் காதல் கதை தான்.
குருமூர்த்திக்கு அங்கம் எல்லாம் கொதிக்க, தேரை இடம் சேர்த்து வீட்டிற்க்கு வந்தவர், எதிரில்...
“ம்மா.. நான் சாருகிட்ட பேசிட்டேன், அவளுக்கு ஓகே தான், குகன் பத்தி எனக்கு தெரியும், அவனும் தானா வந்து சம்மதம் சொல்வான் பாருங்க..” என்றான் தனா நிச்சயமாக. சாருவிடம் குகன் உரிமை எடுத்து பேசுவதிலே தனா கண்டுகொண்டான்.
“என்னடி இது..? இப்போத்தானே அப்படி எதுவும் இல்லை சொன்ன..” வைதேகி மகளிடம் கேட்டார்.
“நீங்களே கட்டி வச்சா ஏன்...
“ஓஹோ.. அப்படி.. க்கா.. நீ சரியான ஆளு, மனசுல உனக்கும் அவர் மேல ஆசை இருக்கு, அப்படித்தானே..?” அனு அக்காவிடம் சந்தோஷ சிரிப்புடன் கேட்டாள். சித்ரா முகத்தில் சட்டென ஒரு வெட்கம், இளக்கம். அன்று சஞ்சய் அவளை பார்த்து பளிச்சென்று சிரித்தது நினைவிற்கு வந்தது.
“இதுவரைக்கும் நான் பார்த்ததுல அவர் வித்தியாசமான ஆளுடி..” என்றாள்.
“உனக்கு அவரை...
“ஆனாலும் உனக்கும், அந்த அன்பழகனுக்கும் எவ்வளவு ஏத்தம் பாரு, நான்.. நான் வந்து அவன் வீடேறி பொண்ணு கேட்கணும்ன்னு என்கிட்ட எதிர்பார்க்கிறீங்க..?” காந்தினார் மனிதர்.
“அவரோட சொந்த பந்தங்களுக்காக அவர் பார்க்கிறார், அங்க யாரும் ஒத்துக்கல..” என்றான் மகன்.
“எப்படி ஒத்துக்குவாங்க, எல்லாம் முறை தெரிஞ்சவங்க, அவங்கவங்க இனத்துக்கு கட்டுப்பட்டவங்க, உங்களை மாதிரியா..?” அவர் பொரிந்தார். தனா ...
தனாவிற்கோ அவர் எதற்கு அங்கு சென்றிருக்கார் என்று தெரியுமே..? இப்போது அண்ணனாக அவன் என்ன செய்ய வேண்டும்..? போக தான் வேண்டும், இவர்கள் எல்லாம் ஊர் பெரியவர்கள். இவர்கள் சொல் மீறி செய்ய முடியாது, செய்தால் இவர்கள் இவனுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். ஊருடன் ஒத்து தான் வாழ வேண்டும். “போறேன்..” என்றுவிட்டான்.
“தனா தங்கமான பிள்ளைப்பா,...
இராஜ பவனி 12
“குகன்.. நீ எதுக்கு இங்க இருக்க..? வீட்டுக்கு போ..” பந்தி கவனித்து கொண்டிருந்தவனை விரட்டினான் தனா.
“நீ தனியா என்ன பண்ணுவ..? நான் இங்க கவனிச்சுக்கிறேன், நீ வேற வேலையை பாரு..” குகன் சொன்னவன், யாரோ சாம்பார் கேட்கவும் பரிமாற சென்றான்.
“ம்ப்ச்.. குகன், என்னை கோவப்படுத்த கூடாது, நீ கிளம்பு, நான் இங்க...
இராஜ பவனி 2
தனாவின் உரிமை பார்வையும், அனுவின் முகச்சிவப்பும் மற்றவர் கண்களுக்கு நன்கு தெரியும்படியும், புரியும்படியே இருக்க, “தனா..” என்று எச்சரிக்கை குரல் எழுப்பினான் குகன்.
கடையில் வச்சு எல்லாம் பார்க்கிற இடத்துல இது என்ன..? குகன் கண்டிக்கும் பார்வை பார்க்க, தனா புரிந்து தலை கோதி கொண்டான்.
“அனு.. நாம கிளம்பலாமா..?” பில் போட ஆட்கள்...
இன்னும் வேகமாக, உற்சகமாக திருமணத்திற்கு தயாராகினான் மாப்பிள்ளை. வேலைகளும் முழு வீச்சில் சென்றது. “நீ கல்யாண வேலையை பாருடா மச்சான், நான் கடைய பார்த்துகிறேன்..” குகன் எப்போதும் போல தோள் கொடுத்தான்.
சாருவும் எங்க அண்ணனுக்கு நான் செய்வேன் என்று அம்மா வீட்டிலே அந்த இருபது நாளும் தங்கிவிட்டாள். வைதேகி என்ன நினைத்தாரோ அன்று கணவனிடம்...
தனா மிகவும் பொறுமையாக, நிதானமாக தயாரானான். முகம் மிகவும் அமைதியாக இருந்தது. உள்ளே அவ்வளவு ஆர்ப்பரிப்பு, வெளியே காட்டி கொள்ளவில்லை.
அங்கு அனுவிற்கோ உள்ளங்கைகள் வேர்த்து கொண்டே இருந்தது. அத்தனை திடமாக இருந்தா பெண்ணா இவள்..? கிளம்பும் முன் அன்பழகன், சுஜாதா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள். அன்பழகன் மகள் தலை தடவ, மகள் அவர்...
“இதுல நம்ப, நம்பாம போக என்ன இருக்கு, இங்க என்ன சம்மந்தமா பண்றாங்க, யார் சரக்குல பித்தலாட்டம் இருக்கோ அங்க தானே கேட்க முடியும்..” குருமூர்த்தி எகத்தாளமாக சொன்னார்.
“ப்பா..” தனா அவர் பக்கத்தில் சென்றவன், “என்ன நடந்துச்சுன்னு அவருக்கு தெரியாம கூட இருக்கலாம்.. பொறுமையா பேசலாம், இருங்க..” என்றான்.
“பொறுமையா பேச என்ன இருக்கு தனா,...
“ஆமா.. நீங்க தானே இப்போ கேட்டீங்க உங்க தம்பி தானே எங்களுக்கு அப்பான்னு, அப்போ எங்களுக்கு கொடுக்கிறது அவர் கடமை தானே, சட்டமும் அது தான் தெரியும் இல்லை, ஆஹ்.. இதை பத்தி உங்களுக்கு போய் சொல்றேன் பாருங்க, அந்த காலத்திலே என் தாத்தாகிட்ட சண்டை போட்டு சொத்து வாங்கிட்டு போனவங்க தானே நீங்க..?”
“என்னடா...
இராஜ பவனி 14
“இன்னும் என்னம்மா பண்றீங்க..? டைம் ஆச்சு..” தனா அவசரப்படுத்த,
வைதேகி “நானும் வரணுமா தனா..?” கேட்டு நின்றார்.
“வராம..? இங்க என்ன செய்ய போறீங்க..? கிளம்புங்க, கிளம்புங்க..” என்றான் மகன்.
“இல்லை தனா, கடையில வந்து நான் என்ன பண்ண..? எனக்கு என்ன தெரியும்..?” அவர் தயங்கினார்.
“நான் மட்டும் எல்லாம் தெரிஞ்சா அவ்வளவு பெரிய...
இராஜ பவனி 6
“இந்த மாச கடைசில சித்திரை திருவிழா வருது இல்லை, அது முடியவும் வைகாசி முதல் வாரத்திலே கல்யாணம் வச்சுக்கலாம்ன்னு மாப்பிள்ளை வீட்ல சொல்லிட்டாங்க..” அன்பழகன் வீட்டிற்கு வந்ததும் சொன்னார்.
“நல்லதுங்க.. நமக்கும் நேரம் கிடைக்குது, ஜவுளி, தாலி, கல்யாண பத்திரிக்கைக்கு நாள் சொன்னாங்களா..?” சுஜாதா கேட்டார்.
“அதையும் குறிச்சு கொடுத்துட்டாங்க சுஜா, இந்த வாரத்துலே...
இராஜ பவனி 16
“என்னடா இன்னும் வரலையேன்னு பார்த்தேன், வந்துட்ட..” குகன் கிண்டலாக சொல்லி சிரிக்க,
“போய் வேலையை பாரு, போடா..” அவன் தோள் தட்டிய தனா, கடை வாசலில் தலை கோதி நின்றான். கண்கள் ரோட்டையே பார்க்க, முகம் தாராளமாக மலர்ந்திருந்தது.
சில நொடிகள் கடக்க, பொறுக்கவில்லை காதலனுக்கு, “இன்னும் என்ன பண்றா..?” நேரம் பார்த்தான். தூரத்தில்...
அத்தியாயம் 18 4
இந்த காதல் கிடைக்க தானே இவ்வளவு போராட்டம், தவம்..!!! தனா கண்கள் ஆனந்தத்தில் கலங்கி போக, மனைவியை இன்னும் தன்னோடு அழுத்தமாக அணைத்தான். அனு கணவன் மனம் புரிந்து தானும் அவனை நெருக்கமாக அணைத்தவள், அவன் நெஞ்சோடு முகம் புதைத்து கொண்டாள்.
அவ்வளவு உவகை இருவருக்கும். நடக்கவே நடக்காது, கிடைக்கவே கிடைக்காது, சேரவே...
“என்ன இருபத்தி ஆறா..? சஞ்சய்க்கே இருபத்தி ஆறு தான் ஆகுது..” என்றார் அவனின் அம்மா. “ஏங்க ஜாதகம் பார்த்தப்போ நீங்க இதை பார்க்கலயா..” கணவரிடம் வேறு பாய்ந்தார்.
அவர் என்ன சொல்வார், மகனுக்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்பதால் சீக்கிரமே ஜாதகம் எடுத்துவிட்டனர். முதல் சம்மந்தமே சித்ரா தான். தரகரும் இவர்கள் குடும்பத்தை பத்தி சொல்லியிருக்க,...
இராஜ பவனி 15
“குகன்.. கடைக்கு கிளம்பாத, வீட்லே இரு, நாங்க இப்போ வரோம்..” தனா போன் செய்து சொன்னவன், வைதேகியிடம் வந்தான்.
அவர் மிகவும் கலவரத்துடன் மகனை பார்த்திருந்தார். “ம்மா.. ஏன் இவ்வளவு பயம்..?” அவர் கை பிடித்து கொண்ட மகன் கேட்டான்.
“பயப்படாம எப்படி இருக்க தனா..? இந்த விஷயம் உங்க அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவு...
இராஜ பவனி 13
அன்றிரவு குகனின் வீட்டில் வைதேகி தடதடக்கும் இதயத்தை மறைத்தபடி, மகளுக்கு உணவு ஊட்டி கொண்டிருந்தார். இத்தனை நாள் சாரு திருமணம் நல்லபடியாக முடிந்தால் போதும் என்றிருந்தவருக்கு இப்போது கணவனை நினைத்து பயம்.
“எனக்கு போதும்மா..” சாரு மறுக்க, வைதேகி விடாமல், மூன்று இட்லிகளை ஊட்டி எழுந்தார்.
“ம்மா.. கிளம்புறீங்களா..? இங்கேயே இருங்கம்மா..” மகள் அம்மா ...
இராஜ பவனி 8
“இப்பவே வீட்டுக்கு போகணுமா..? டேய் மணி ஏழு தாண்டா ஆகுது..” கடையை விட்டு வீட்டுக்கு போக வேண்டும் என்ற தனாவிடம் கேட்டான் குகன்.
“அம்மா வர சொன்னாங்கடா, ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமாம்..” தனா சொல்லி வெளியே செல்ல, குகனும் அவனுடன் கிளம்பினான்.
அங்கு குகனின் அம்மா பரிமளம் இருக்க, குகனுக்கு ஆச்சரியம்...
இராஜ பவனி 10
“என்னத்தை பேசுறீங்க..? இதுக்கும், அதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு..? இப்படி எல்லாம் வார்த்தைகளை விடாதீங்க..” குகன் கோபத்துடன் வைதேகியிடம் பேச, அவருக்கும் பேசிவிட்ட வார்த்தைகள் புரிந்தது.
மகனை பார்க்க, அவன் மிகவும் வேதனையுடன் அமர்ந்திருந்தான். அண்ணனை அப்படி பார்த்த சாருவிற்கு அழுகை ஒருபக்கம், கோவம் ஒரு பக்கம் என்று வைதேகி, குகனை முறைத்தவள்,
“இப்போ...