Pothipparuvam
அத்தியாயம்-5-1
சாஸ்திரிகள் அங்கிருந்து சென்றவுடன்,”இன்னைக்கு காலம்பறதான் நீ வந்து இறங்கின..அதுக்குள்ளே உன் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்திட்டார் பிள்ளையார்.” என்று சந்தோஷமடைந்த ருக்மிணியிடம்,
“ஐயாம் நாட் ரெடி நவ்..அடுத்த விநாயகர் சதுர்த்திலே ஆரம்பிக்கலாம்.” என்றான் ஜெய்.
“விளையாடறியா? ஒரு வருஷம் கழிச்சா..முடியாது டா..அடுத்த விநாயகர் சதுர்த்திக்கு என் மாட்டுப் பொண் கையாலே பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை நைவேத்தியம் பண்ணனும் நேக்கு..இன்னைக்கு மாமாகிட்டே...
அத்தியாயம் - 5
ஜெய்யை முதன்முதலாக எப்போது அவள் சந்தித்தாள் என்று யோசித்த போது ஒட்டடைக் குச்சி தோற்றத்தில் வேகமாக சைக்கிளில் ஸ்கூலுக்கு சென்ற ஓர் உருவம் தான் அவள் நினைவுக்கு வந்தது. கடைசியாக அவள் ஜெய்யை சந்தித்தது அவனின் கல்லூரியின் முதல் வருடத்தில். அவளுக்காக அவனுடைய ஷேர் பிரசாதத்தைக் கொண்டு வந்து கொடுத்த ஜெய்...
அத்தியாயம்-4
வாசல் அழைப்பு மணி ஒலிக்க, பவி கதவை திறந்தவுடன்,”எல்லாம் இடத்திலேயும் மனுஷா ஒரே மாதிரிதான் இருக்கா.” என்று பேசியபடி உள்ளே நுழைந்தார் சுகந்தி.
“என்ன ம்மா ஆச்சு?”
“நோட்டீஸ் போர்ட்லே போட்ட நேரத்துக்குப் பூஜை நடக்காது போல..நாலு பிளாக்கிற்கு நாலு பிள்ளையார்..நாலு தனித் தனி பூஜை..எல்லாரும் அவா அவா இஷ்டத்துக்குப் பூஜைக்கு வரா..நம்ம டவுன்ஷிப் போல இங்கேயும்...
அத்தியாயம் - 3
“இன்னைக்காவது இந்த சூரிய பகவானைப் பார்க்கறதை விடக்கூடாதா..தலைக்கு மேலே வேலை இருக்கு.. ஆத்துப் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை, சுண்டல், வடை, பாயசம்…பில்டிங் பிள்ளையாருக்குத் தனியாக் கொழுக்கட்டை.” என்று சமையலறையில் சுகந்தி புலம்பிக் கொண்டிருந்தார்.
அந்த ஃபிளாட்டின் ஒரே படுக்கையறையை ஒட்டியிருந்த ஒரே பால்கனியில் நின்று கொண்டு, உதிக்கும் சூரியனையைப் பார்த்தபடி “ததோ யுத்த பரிச்ராந்தம்”...
அத்தியாயம்-2-1
அவர்கள் திரும்பி வர எடுத்துக் கொண்ட பதினைந்து நிமிடங்களில், அவன் ஃபோனில் வந்திருந்த மெஸேஜுகளுக்குப் பதில் அனுப்பிக் கொண்டிருந்தான் ஜெய். அப்போது, காரின் டேஷ்போர்டில் இருந்த பாலகிருஷ்ணனின் ஃபோன் ஒலிக்க, அதை எடுத்த ஜெய், அழைப்பது கீதா என்றவுடன், ஓபன் செய்து பேச ஆரம்பித்தான்.
“சொல்லு க்கா.” என்றான்.
“ஆத்துக்கு வந்திட்டியா டா.” என்று கேட்டாள் கீதா.
“லேண்டாகி...
அத்தியாயம் - 2
பத்து வருடங்களுக்கு முன், அந்த மாலை வேளையில், பவியைத் தவிர அவள் வீட்டினர் மூவரும் பிள்ளையார் கோவிலுக்கு சென்றிருந்தனர். வரவேற்பறை சோஃபாவில் குப்பற படுத்தபடி டிவியைப் பார்த்துக் கொண்டு, சிப்ஸ் பாக்கெட்டைப் காலி செய்து கொண்டிருந்தாள். எப்போதும் போல், வாசல் அழைப்பு மணியை ஒருமுறை ஒலிக்க விட்டு, அவள் வீட்டிற்குள் நுழைந்தான்...
அத்தியாயம் - 1
சென்னை சர்வதேச விமான நிலையதிலிருந்து அவனுடைய பேக்கேஜ் ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தான் ஜெய். அரைவலில் அவன் வருகைகாகக் காத்திருந்தனர் பாலகிருஷ்ணனும் ருக்மிணியும். அவர்கள் கண்ணில் அவன் பட்டவுடன் அவருடைய கையை அசைத்து,
“ஜெய்..ஜெய்..ஜெய் இங்கே..இங்கே இருக்கேன் அம்மா.” என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றார் ருக்மிணி.
ருக்மிணியை நோக்கி கை அசைத்த ஜெய், அடர்...