Kathalin Kanivaana Gavanathirkku
காதல் 8:
“மாமா…” என்ற அதியனின் குரல் அதிர்வோடு ஒலித்த அதே நேரம் ,
ராம் நாத்தும் ,”என்ன அண்ணா…?யோசிச்சு சொல்லுங்க…இப்படி டக்குனு சொன்னா..?” என்றபடி விஸ்வாவைப் பார்க்க
“நல்லா யோசிச்சு தான் பேசுறேன் ராம்…கண்டிப்பா இது சரிப்படாது…”
“ஏன் சரி படாது. மாமா?எனக்கு என்ன குறை…?”
“அதி…புரிஞ்சிட்டு பேசு ….உன்ட்ட குறையிருக்கறதால உன்னை வேண்டாம்னு சொல்றேன்னு நினைக்காத…நிறைகள் இருந்தாலும் கூட...
“ரியாட்ட பேசிட்டு சொல்லவா…” என தயக்கத்தோடு சத்ரியன் கேட்கவும்.
“தாராளமா….கல்யாணாமாகிட்டா மிஸஸ்ட்ட கேட்டுதான் எல்லா முடிவும் எடுக்கனும் போலயே” என கிண்டலாய் சொல்லி அதியன் சிரிக்க,சத்ரியன் எதுவும் பேசாமல் புன்னகைத்து விட்டு சென்றான்.ரியாவைத் தனியே அழைத்துப் போய் அவன் விசயத்தை சொல்ல,கேட்டதும் அவள்,
“ நான் போக மாட்டேன்…” என பிடிவாதமாய் சொல்ல,
“என்னடா சஷிம்மா நீ…யோசிக்காம உடனே...
காதல் 7:
காதல் இருக்கிறதா என்று தெரியவில்லை…இல்லையா..அதுவும் புரிபடவில்லை….இப்படி தெரியாததும் தெளிவில்லாததுமாய் தவித்துக் கொண்டிருந்தன அதியனின் அக எண்ணங்கள்.
தெரியாதது எல்லாம் தெரிதலாகிவிட்டால் அது எல்லாம் தெளிதலாகிடும்…அவனும் காதலாகி கமிட்டாகி கல்யாணமாகி வாழ்வான்.
அதியன் மனதில் அந்த எண்ணம் தோன்றிய ஷணமே அதை அவனால் நம்பவே முடியவில்லை.அந்த பக்கம் வேறு தாத்தா,
“அதியா….இருக்கியா..?” என்று கத்திக் கொண்டிருந்தார்.
“ஹா….எஸ்…தாத்தா…நான் ஐராவைப் பார்த்துக்கிறேன்…நீங்க...
காதல் 6:
“ஐரா என்ன சொன்னா பாரு…” என்று விஸ்வநாத் கேட்டது தான் போதும் ,பார்வதி பொங்கி விட்டார்.
“இங்க பாருங்கோண்ணா….இனிமே நான் உங்க இரண்டு பேருக்கும் இடையில் மீடியேட்டர் வேலை பார்க்கறதா இல்லை….அது என்ன…அவ சாப்டாளான்னு அவட்ட கேட்கிறதுக்குப் பதில என்ட்ட கேட்குகிறது….இப்படி மாப்பிள்ளை போட்டோ காமிச்சு அவ விருப்பம் கேட்குறதுன்னு..இனி எதுனாலும் நீங்களே அவட்ட...
காதல் 5:
“அண்ணா…ப்ளீஸ்ணா…என்னை மன்னிச்சிடு…ஐ அம் ரியலி சாரி…” ரியா அரை மணி நேரமாய்க் கெஞ்சிய போதும்,
அதியன் அசையவே இல்லை.மனதின் அழுத்தம் மன்னிக்க விடவில்லை.
“அண்ணா… ….ப்ளீஸ்னா…உங்கள பார்க்காம பேசாம இரண்டு வருசம் இருந்ததே எனக்குத் தண்டனை…இப்ப பார்த்தும் பேசாம என்னைக் கஷ்டப்படுத்தாத..ப்ளீஸ்..…பேசுண்ணா…”
“………………….”
“அண்ணா…என்னை மன்னிச்சுடுண்ணா..இல்லனா அடிக்காவது செய்…ஆனா இப்படி அமைதியா இருக்காத…..ப்ளீஸ்…” என அவள் அத்தனையாய் அழுத...
காதல் 4:
அதியன் அந்த இரவு நேரத்தில் ஒரு புத்தகத்தில் மூழ்கி இருக்க,ஐராவின் அறையில் விளக்கின் வெளிச்சம்..
என்னவென்று இவன் கவனிக்கும்போதே அவள் அறையை விட்டு வெளியேற, ‘நடுராத்திரில இந்த பேய் எங்க போகுது’ என நினைத்தபடியே வெளியே வந்தவனிடம் வசமாய் சிக்கினாள் வஞ்சியவள்.
இவனது கேள்வியில் ஒரு நிமிடம் திகைத்தவள் பின்னர்,
“ரியாவுக்கு உடம்பு சரியில்லையாம்..அதான் பார்க்க போறேன்..”...
காதல் 3:
தன்னை நோக்கி கை ஒங்கியவனின் கால் முட்டியின் கீழ் தன் ஷூ காலால் கோபமாய் ஐரா ஒரு உதை விட,தீடீரென அவள் அடிப்பாள் என எதிர்ப்பார்க்காத அந்த வெள்ளை வெட்டி நிலை தடுமாறி கீழே விழ,
“ஏய்….யார் மேல கை வைக்கிற?” என அடுத்தவன் கை ஓங்க…ஐராவின் பார்வை அருகில் ஏதேனும் இருக்கா என...
காதல் 2:
“ழகரத்துல உங்களுக்கு எந்த பிரச்சனைனாலும் எங்கிட்ட நீங்க தயங்காம சொல்லலாம்.விஷாகா கைட்லைன்ஸ் நம்ம ஆபிஸ்ல இன்னிலேர்ந்து பாலோ செய்றோம்..உங்க கிட்ட கொலிக்ஸ் யாராவது தப்ப நடந்தா பயப்படாதீங்க…உங்களுக்கு என்ட்ட நேர்ல சொல்ல தயக்கம் இருந்தா [email protected] இந்த ஈமெயிலுக்கு மெயில் செய்துடுங்க…என்ன ஆக்ஷன் எடுக்கனுமோ அதை நான் கண்டிப்பா எடுப்பேன்…உங்களுக்கு நான் சொல்லித்...
காதலின் கனிவான கவனத்திற்கு…!!
காதல் 1:
ராம ராம ராமேதி
ரமே ராம மனோ ரமே..!
சகஸ்ர நாம தத்துல்யம்..
ரமே ராம வரானனே..!
இல்லத்தில் இனிய இசை பரவும் வண்ணம் பாடினார் பார்வதி.வீடென்றால் அன்பு தழும்ப,ஆர்ப்பாட்டம் பெருக,அடிதடி நடக்க,அதன்பிறகு சமாதானம் பறக்க வேண்டுமல்லவா..?
சத்தமும் யுத்தமும் இல்லாமல் அவர்கள் வீடா..??
அதெல்லாம் வரலாற்று நிகழ்வு..வாய்ப்பு இல்லை..!
பார்வதியை பக்தி அவதாரத்திலிருந்து பத்ரகாளி அவதாரத்துக்கு மாற்ற...