வஞ்சிக்கொடியும்! வத்தலகுண்டின் ரகசியமும்!!
அரவிந்த் இறந்து சித்துவை விட்டு சென்று நான்கு நாட்கள் முடிந்திருந்தது. சித்தார்த்தும் தற்போது அலுவலகம் செல்ல துவங்கி விட்டான். ஆளில்லா அவன் வீட்டில் இருப்பதை விட அலுவலகம் செல்வது கொஞ்சம் மனதுக்கு இதமாக இருந்தது.
அதே நேரம் ஆன்மாவாக இருந்த அரவிந்த் தன் மகனை பின்தொடர்வதை தன் வேலையாக மாற்றிக் கொண்டார்.
...
அரவிந்த் அவர் வீட்டின் உள்ளே சித்துவின் அருகே இருந்த உருவத்தை கண்டு அதிர்ந்து தலை சுற்றி நின்றார்.
பின்னே இருக்காதா அவர் சித்துவின் அருகே கண்டது அவரின் சொந்த உருவத்தை தான். அதுவும் ஒரு பெஞ்சில் அந்த உருவத்தை படுக்க வைத்திருந்தனர். அந்த உருவத்துக்கு அருகில் அமர்ந்து அவர் மகன் சித்து...
"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா வீரா. அந்த கடைசி வீட்டு காவேரி இருக்கால்ல. அவ பொண்ணு ஒரு பையன கூட்டிட்டு ஓடிட்டாளாம்"
கங்கா எப்போதும் போல் ஊர் கதை ஒன்றை வீராவிடம் பேசிக் கொண்டே கீரையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.
அவள் கூறியதை கேட்டு "அட ஆமா க்கா உனக்கு இது தொரியுமா....
மாலை நேர காற்று இதமாக வீசிக் கொண்டிருக்க, அதை எதையும் உணராமல் அந்த ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் பரபரவென நகர்ந்து சென்றுக் கொண்டிருந்தனர்.
கல்லூரி முடிந்து செல்லும் மாணவர்கள், அலுவலகம் முடிந்து செல்லும் அலுவலர்கள் என பலர் அவர்களின் இல்லங்களுக்கு செல்ல ஒருவரை ஒருவர் முட்டி மோதி ரயிலில் ஏறிக் கொண்டிருந்தனர்.
...
காலை இளந்தென்றல் காற்று மேனியை உரசி செல்ல, அந்த காலை வேளையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் அவன்.
"அரவிந்தா" என்ற அழைப்பு மென்மையாக எங்கோ தூரத்தில் கேட்பது போல் அவன் காதுகளில் விழ, லேசாக தூக்கம் கலைந்தது.
தொடர்ந்து அதே பெயர் ஏலமிடுவதை போல் காதில் வந்து விழ அடித்து பிடித்து...