O Crazy Minnal
மின்னல்-15
“அஷ்மீ!!!!” என்றவள் தொண்டை தண்ணி வற்ற கத்திக் கொண்டிருந்தாள்.
“என்ன இஞ்சி?”
“இன்னும் எவ்வளவு நேரம்?”
“கொஞ்சம் டைமாகும்டா…”என்றவள் மறுபடியும் அந்த லாப்டாப்பிற்குள் ஆழ்ந்துவிட… அதில் கடுப்பாகிப் போனவள்…
“சரி அப்போ நான் ரேவ்ஸ் பார்க்கப் போறேன்” என்றாள்.
பின்னே அவளும் எவ்வளவு நேரம்தான் சமாளிப்பாள்.
ரெஸ்டாரன்டிலிருந்து கிளம்பியவர்கள்… வீட்டகனுள் நுழையும் முன்னரே அஷ்மிக்கு அழைப்பு வந்திருந்தது… ஒரு நல்லுள்ளம்...
மின்னல்-18
இரவு வெகு நேரம் சென்று உறங்கியதலோ…இல்லை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து விட்டதாலோ என்னவோ… நிம்மதியான… ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவள்…குறிஞ்சி!
கதிரவன் சோம்பலாக எழுந்துக் கொண்டிருந்தான்… இலைகளின் மீது இன்னும் பனித்துளி உறங்கிக் கொண்டுதானிருந்தது! இதம் தரும் காலைநேர கதிரொளி இன்னும் அவளறை பக்கம் வரவில்லை போலும் குளிரில் சற்று குறுகி...
மின்னல்-33
கட்டிலில் கண்மூடிக் கிடந்தவளின் அருகில் அமர்ந்தவனின் பார்வையோ தன்னால் அவள் காலுக்குச் சென்றது!
இடது காலின் காயத்திற்கு மருந்து வைத்து கட்டப்பட்டிருக்க அவளது வலது கையிலும் ஒரு கட்டிருந்தது!
அதை கண்டவனின் மனமோ இன்னும் கொதித்துக் கொண்டுதான் இருந்தது!
ஆனால் எல்லாம் அவளின் பிள்ளை முகத்தை காணும்வரைதான்….
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்…நரேந்திரன்!
அந்த முகத்தினில்...
மின்னல்-8
"ஸ்ஸ்ஸ்" என்ற குக்கர் விசில் சத்தத்தில் பதறியடித்துக்கொண்டு படுக்கையறையில் இருந்து அடுக்களைக்கு ஓடினான் நரேந்திரன்.
"ச்சே!!! பக்கத்து வீட்டுலயா...நம்மதான் குக்கரே வைக்கலேயே...ஏன்டா நரேன் இப்படியா பல்பு வாங்குவே...எதிர்கட்சி காரன் பாத்தா என்ன நினைப்பான்...???" யாருமில்லாத தைரியத்தில் தன்பாட்டுக்கு பேசிக்(?) கொண்டிருந்தான் அவன்.
அவன் தனியாக இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் அலறியது அவனது கைபேசி. "இதுவாது...
மின்னல்-12
ஆராவையே பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம் உள்ளுக்குள் ஒரு குத்தாட்டம் போட்டாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தாள்.
'நன்றி சொல்லனுமா???... இல்ல நான் ஏன் நன்றி சொல்லனும்? அவன்தானே ஒடச்சான்... அப்போ அவன் அத சரி செஞ்சதுக்கு நான் ஏன் தாங்க்ஸ் சொல்லனும்..??' என்று கோர்ட்டில் நீதிபதி முன் வழக்கறிஞர்கள் வாதாடுவதைப் போல தன் மனசாட்சியுடன்...
மின்னல்-29
ஏற்கனவே உண்ட மயக்கத்தில் இருந்தவள் மனதுக்குள் முடிந்த அளவு ரேவதியையும் நரேந்திரனையும் தாளித்துக் கொண்டிருந்தாள்!
எப்பொழுதும் அவள் உண்பதைவிட கொஞ்சம் அதிகமாகவே உண்டுவிட நடக்க முடியாமல் அவள் நடந்து வந்து படியேறுவதற்காக முதல் படியில் காலை வைக்க அவள் கையை பிடித்து யாரோ இழுத்திருந்தனர்.
அவள் சற்று தடுமாற அவளை பிடித்து நிறுத்தியவனைக் கண்டவள் ருத்ரதேவியாய் உருமாறி...
மின்னல்-32
அவள் கேள்வி என்றவுடன் ‘ஏன் எங்கிட்ட பேசல??’ என்பதுபோன்ற கேள்விகளை அவர் எதிர்பார்க்க அவளோ சரியாய் நாடியை பிடித்துவிட்டாள்!
என்ன கேட்டுவிடுவாள் என்ற தைரியத்தில் அவர் இருக்க அவளோ அவர் சற்றும் எதிர்பாராத ஒரு கேள்வியை கேட்டிருந்தாள்.
அவர் பதிலுக்காக அவள் அவர் முகம் பார்த்து நிற்க அவரோ அவரது வழக்கமான முகமூடியை அணிந்துக் கொண்டார்…
மௌனமாகிவிட்டார்!
ஆனால்...
மின்னல்-38
கண்ணாடி பாட்டில் ஒன்று விழுந்து நொறுங்கிய சத்தத்தில் அவர்கள் அனைவரும் திகைத்தவர்களாய் திரும்பினர்.
விரிந்த விழிகளும்…உணர்ச்சிகளற்ற முகமுமாய்… உள்ளுக்குள் பல பூகம்பங்களை தாங்கியவளாக…. அறைவாசலில் நின்றிருந்தவளைக் கண்டு அவர்கள் அனைவரின் முகத்திலும் அதிர்வலைகள்..!!
ஜிதேந்திரனின் வாய்மொழியில் தன்னிலை மறந்து நின்றவள் அவரையே விழி விரித்துப் பார்க்க அவர் கண்களோ அதிர்ச்சியை மட்டுமே பிரதிபலித்தது.
முதலில் தன்னை மீட்டவனாக நரேந்திரன்...
மின்னல்-39
“ரேவ்ஸ்…. ரேவ்ஸ்ஸ்!!!!” என்றவளின் கெஞ்சல் குரலுக்கு நேரெதிராய் கடுமையாய் ஒலித்தது ரேவதியின் குரல்.
“நோ வே!!” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
வளர்மதியைக் கண்டவளோ “பாருங்க அத்த!! “ என்று அவரிடம் முறையிட்டாள்.
அவரும் “ரேவதி…” என்று ஆரம்பிக்க ரேவதியோ யார் பேச்சையும் கேட்பதாக இல்லை.
“ரொம்பத்தான்!” என்று அலுத்துக் கொண்டவளாக “இப்போ எதுக்கு இப்படி பண்ற நீ???” என்று வினவினாள்...
மின்னல்-23
வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ...??
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ...??
மையிருட்டு கரையும் வேளை…!
அந்த காருக்குள் அமுதமாய் அந்த பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது..!!
இனிமையான அதிகாலை வேளை அது! மென்மையான தென்றல் காற்று மனம் தீண்டிச் செல்ல காரை சீரான வேகத்தில் இயக்கியவன் கண்ணாடி வழியாக பின் இருக்கையை நோட்டம் விட்டான்.
ரேவதி...
மின்னல்-28
பெரிய அளவிலான அறை அது!
அந்த அறையில்… துளிக்கூட வெளிச்சம் இல்லாமல்…இருண்டு கிடந்தது!
இருளவன் தனது கைகளுக்குள் அடக்கியிருந்தான் அந்த அறையை..!!
இன்னும் சற்று நேரத்தில் விமலா வந்துவிடுவார் கருக்கல்ல லைட்ட அமத்திட்டு என்னல பண்ணுதே!?” என்ற அங்கலாய்ப்புடன்.
நல்ல வேளை கதவை அடைத்திருந்தான்…உறங்கிக் கொண்டிருப்பான் என்று எண்ணிக் கொள்வார் இப்போதைக்கு யார் முகத்தையும் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படாதே!
இறுக...
மின்னல்-7
வாழ்க்கையில் ஒரு சிலரைப் பார்த்தவுடனே பிடித்துவிடும்...சிலரிடம் முதல் சந்திப்பிலேயே ஒருவித ஒதுக்கம் தோன்றிவிடுமென்றால்...சிலரிடம் நெருக்கம்...!
அப்படித்தான் லீலாமதிக்கும் நரேந்திரனை கண்டவுடன்...!
ஏதோ நெருங்கிய உறவினனைக் கண்ட உணர்வு...! இவன் பாதுகாப்பானவன் என்ற உணர்வும்கூட இல்லையெனில் அவனை அடுக்களை வரை அனுமதித்திருப்பாரா...இல்லை வார்த்தைக்கு வார்த்தை அவனுடன் சேர்ந்து கிண்டலடித்திருப்பாரா என்பது சந்தேகமே...!
அவர்களது குடும்பம் அவர்களுக்கு ஒரு...
மின்னல்-31
வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து ஏதோ நெருடலாகவே இருந்தது! ஆனால் தேவேந்திரன் முக்கியம் என்று தன்னிடம் கொடுத்திருக்கும் வேலைகளை விட்டுவிடவும் மனமில்லாமல் போகவே அவன் கிளம்பியிருந்தான்.
ஆனால் ஏனோ நேரம் கடந்ததே தவிர அவனது பதற்றம் குறையாமல் கூடியது! கூடவே இலவசமாக பய உணர்வும்!
ஏதோ ஒன்று தவறாக நடக்கவிருக்கிறது என்று அவன் மனம் அடித்துக் கூற மனதில் அதற்குமேலும்...
மின்னல்-14
வண்டியை வெளியே இடம் பார்த்து நிறுத்தியவன் ரேவதியை அழைத்துக் கொண்டு உள்ளே நுழையும்பொழுதே அஷ்மியை பார்த்துவிட்டான்.
அவர்கள் இருவரையும் பார்த்த மகிழ்ச்சியில் “அஷ்மி!” என்று அழைத்துவிட பக்கத்தில் இருந்த ரேவதியோ…
“யாரு இந்திரா?” என்று வினவ
“வேண்டியவங்க!” என்று திரும்பியவன் பொறி தட்டியவனாக அவளிடம் திரும்பி…
“என்ன இந்திரான்னு கூப்பிடாத!”
“ஏன்???”
“காரணமாத்தான்!” என்றவனின் முகத்தில் விளையாட்டுத்தனம் இல்லை…ஏன் என்று புரியாவிட்டாலும்… அவனிடம்...
மின்னல்-10
"ஓய்!!! நில்லு! மரியாதையா நின்னுரு" என்று கத்திக் கொண்டே விரட்டினாள் குறிஞ்சி.
"அய்யோ!! அஷ்மீ!!! ஆன்ட்டீ!!!" என்று எல்லோரையும் இழுத்து நடுவில் விட்டவன் கடைசியில் ஜிதேனிற்கு பின் வந்து நின்றிருந்தான்
அன்றைய நாளே அவளை வைத்து செய்திருந்த காரணத்தினால் கடுப்பிலிருந்தவள்...அவனை கண்டவுடன் முதலில் அதிர்ந்து பின் அது மனதில் பதிய...அவனை கொலைவெறிப் பார்வை பார்த்தாள்.
அவனால் ஆன...
மின்னல்-9
"அப்போ நீ அவள அடிச்சிட்ட...?" என்று ஒற்றை புறுவத்தை உயர்த்திய ஹாட்பாக்ஸை....ச்சே ஹெச்.ஓ.டீயை பார்த்து நின்றவளின் முகத்தில் துளியும் குற்ற உணர்வு இல்லை.
எப்படியிருக்கும் அவளை பொருத்தமட்டில் அவள் செய்தது சரியல்லவா...எது வந்தாலும் பார்த்துவிடலாம் என்றிருக்க அதில் லாரி லாரியாக மண்ணள்ளி கொட்டியிருந்தாள் புவன்.
"இந்த ஹெச்.ஓ.டீ. ஹாட்பாக்ஸ்ஸ எப்படி சமாளிக்கப் போறோம்...???" என்று அவள்...
மின்னல்-27
அவனையும் எப்படியாவது அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து வந்தவள்…அவனது அனல்பறக்கும் வார்த்தைகளில் அசைவற்று நின்றுவிட்டாள்.
அவளுடன் வந்த கார்த்திகாவும்! தன் அண்ணனா இப்படி கத்தியது? என்று நம்ப முடியாமல் அவனை வெறித்துக் கொண்டிருக்க அவனோ எதுவுமே நடக்காததுபோல் அமர்ந்திருந்தான்.
குறிஞ்சிக்கோ உள்ளே கோப அலைகள் கரைத்தாண்ட தயாராய் இருக்க…எங்கே இன்னும் ஒரு நிமிடம் அங்கு நின்றாள்கூட தான்...
மின்னல்-40
முன்தின இரவில்… ராகவேந்திரன் வந்துச் சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அங்கு அமைதியாய் வந்து நின்றாள் அவள்.
எந்தவித ஆர்பாட்டமுமின்றி…. தனது சுபாவத்திற்கு நேரெதிராய்…அமைதியே உருவாய்… வாசலில் வந்து நின்ற மகளை கண்டவருக்கோ உள்ளம் பிசைந்தது.
தந்தையின் பார்வை தன்மேல் விழுவதை கண்டுக் கொண்டவள் உள்ளே நுழைந்தாள்.
உள்ளே நுழைந்தவளைக் கண்டு ஜிதேந்திரன் தன் கரம் நீட்டி அழைக்க… அவளோ...
மின்னல்-11
சூரிய கிரணங்கள் சுள்ளென்று என் முகத்தில் விழும்வரை நான் எழுவதாக இல்லை என்ற சபதத்துடன் உறங்கிக் கொண்டிருந்தாள் குறிஞ்சி.
இரவு முழுக்க பேசிப் பேசியே அஷ்மியை கொன்றவள் இப்பொழுதுதான் களைத்துப் போய் உறங்குகின்றாள்.
ஆனால் அது அந்த ஆதவனுக்குத் தெரியாதில்லையா...அவளை தன் கைகளால் ஸ்பரிசிக்க அவளும் சுளீரென்று முகத்தில் படிந்த சூரிய ஒளியால் புருவத்தை சுளித்தவாறு...திரும்பி...
மின்னல்-20
மனம்கவரும் மாலை நேரமது!
மஞ்சள் வானில் கலப்படமாய் சிவப்பு ரேகைகள் சில படர்ந்து அதை சிவப்பும் இல்லாமல் மஞ்சளும் இல்லாமல் தங்கமாய் தகதகத்துக் கொண்டிருந்தது அந்த வானம்..!!
கீழோ ஆர்பரிக்கும் ஆழியும் அதன் அழகிய நிறமும்..!!
கால் நனைக்கும் அலைகளின் நுனியில் துள்ளி விளையாடும் சிறு பிள்ளைகள்..!
தயங்கி தயங்கி கால் பதிக்கும் பூக்குவியல்கள் என அந்த இடத்தில் எல்லாமே...