Thursday, July 23, 2026

    Malaril Nilavin Kairaegai

    16 “நிலவு காத்திருக்கிறது இண்பனுக்காக” என்று மனதில் எண்ணியவள், அவனுக்கு எந்தத் தகவலும் அனுப்பாமல் இருந்தாள், இதழில் உறைந்த புன்னகையோடு அமர்ந்திருக்க  அழைத்துவிட்டான். அவள் கைகள் மெல்ல நடுங்கியது அடித்து ஓயும் நேரம் அழைப்பை எடுத்தவள், அமைதியாக இருக்க “கொற்றவை” என்றான் காற்றாக. அந்தக் குரலில் விழிகள் மூடி லயித்திருக்க அவனின் குரல் செவி வழி உள்நுழைந்து உடலில்...
    15 காலையிலே வீட்டில் வந்து நின்ற மருமகனை பார்த்துப் பதட்டம் வந்தது ராதாவிற்கு. கணவர் எதுவும் பிரச்சனை செய்த்திருப்பாரோ, வேறு ஏதும் பிரச்சனையோ என்று. “என்ன அத்த அப்படி  பாக்குறீங்க” என்ற வெங்கடேசன் அங்கிருந்த சேரில் அமர, ராதா மருமகனுக்கு காபி எடுத்து வர அடுப்படி சென்றார். அனைவரும் அங்கு ஹாலில்  கூட  ராதா காபியோடு வந்தார், “நீங்களும் வாங்க...
                                 17 சேரில் அவன் அமர்ந்திருக்க அவன் அருகில் நெருங்கி நின்று வலப்பக்க மீசையை முறுக்கியவள், அவன் கன்னத்தில் இரு பக்கமும் விரல்களால் பிடித்து  “இந்த முகம் எப்போவும் ஒரு இறுக்கத்தில் இருக்கும், சிரிச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சேன், சிரிக்கிற மாதிரிக் கற்பனை பண்ணி பார்த்தேன்”. “ஒரு நாள் உண்மையிலேயே சிரிச்சப்போ அது எப்போவும் இந்த முகத்துல...
                                  21 இத்தனை அழகான இனிமையான ஒரு விடியல் தன் வாழ்வில் வரும் என்று கொற்றவை நினைத்துக்கூட பார்க்கவில்லை. கட்டிலில் அவன் சாய்ந்து அமர்ந்திருக்க அவன் மார்பில் தலை சாய்ந்திருந்தாள். இருவரிடமும் அமைதி அவள் நாடி பற்றி முகம் உயர்த்தி நெற்றியில் இதழ் பதித்தவன் “இன்பனின்  நிலவு சந்தோஷமா இருக்கா” என்க. அவனையே பார்த்திருந்தவள் “ரொம்ப” என்றாள் விழிகளில் கனவு...
                                   20 மிக எளிமையாகத் திருமணம் நடந்து முடிந்தது, அனைவரும் வாழ்த்தி விருந்துண்டு விடை பெற்றனர், நெருங்கிய சொந்தம் மட்டும் அங்குக் குழுமி இருந்தனர். இன்பநிலவனின் மாமாவும் அத்தையும் வசந்தனிடம்  கேள்வி கேட்டுக் குடைந்தனர், பெண் யார் என்ன செய்கிறாள், இவன் எப்படி சம்மதித்தான் என்று. வசந்தன் தெளிவாக “இன்பன் விரும்பிப் பெண்கேட்டு மணந்து கொள்கிறான்” என்று கூற...
      10 தன்னுடய துணிகள் சிலவற்றை இரண்டு பாகில் வைத்தவள், சில பொருட்களை ஒரு சிறிய கட்டைப்பையில் வைத்து எடுத்துக் கொண்டாள். அறையிலிருந்து வெளியில் வந்தவளை பார்த்த அருண் ஒரு நிமிடம் தடுமாறினான், போகச் சொல்லிவிட்டான் ஆனால் அவளைத் தனியே விட மனம் இல்லை. “அம்மாடி எங்க போற” என்று அவள் அருகில் ஓடி வந்து தடுத்தார் ராதா. “தப்பு தான்...
                                 6 கொற்றவையை இன்று நேற்று அல்ல உண்மையில் அவளை அவளுடைய பதினான்கு வயதில் இருந்தே தெரியும் அவனுக்கு. அவள் அக்கா ஆராதனாவை மனந்திருக்கும் வெங்கடேசனின் உறவு இன்பநிலவன், கொஞ்சம் சுற்றி வளைத்துச் சொந்தமாக வரும். அவர்களின் திருமணத்தில் பார்த்திருக்கிறான், அவன் இங்கு இருந்த வரை குடும்ப விசேஷங்களில் பார்த்திருக்கிறான் அவ்வளவே, இங்கே ஒரு கடை தொடங்க எண்ணி...
      8 இன்பநிலவனின் குடும்பம் மிகச் சாதாரணமான விவசாய குடும்பம், அவனின் பாட்டி, தாய் தந்தை, சித்தி சித்தப்பா அனைவரும் ஒரே குடும்பமாக ஒரே வீட்டில் வசித்தனர். இரண்டு அறைகள் மட்டும் உடைய ஓட்டு வீடு, குடும்ப சொத்தாக இருந்த பத்து ஏக்கரில் விவசாயம் பார்த்து,  இருப்பதை கொண்டு நிறைவாய் தான் வாழ்ந்தனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் நான்கு...
     14 காலை அவனுடன் வண்டியில் ஏற, நேரே அவனின் துறையூர் நர்சரி  வந்து நிறுத்தினான், அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை அதுவரை. அங்கு வந்தும் அவள் அப்படியே நிற்க, அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான், என்ன ஆயிற்று இவனுக்கென்று அவள் அவனையே பார்த்திருக்க அவள் அருகில் நெருங்கி நின்றான். மூச்சடைத்தது அவளுக்கு, தன் சட்டைப்பையிலிருந்து ஒரு சிறிய பொருளை...
    11 தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு யாரேனும் கஸ்டமராக இருப்பார்கள்  என்று எண்ணி அதை எடுத்தவன் “ஹலோ” என்க “மிஸ்டர் இன்பநிலவன்” என்றது ஒரு பெண் குரல். கொஞ்சம் பழகிய குரல்போல ஆனால் தெரியவில்லை “எஸ்” என்க. “நான் **** ஸ்கூல் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி சார் பி.எ கொற்றவை பேசுறேன்” என்க ஒரு நிமிடம் அவனிற்கு ஒன்றுமே புரியவில்லை. நிச்சயம் அவள்...
                               19 திருமண ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது, வட்டிக்கு வாங்கிய பணத்தில் மிக உற்சாகமாக ஷாப்பிங் செய்துகொண்டிருந்தாள் அருணா. இந்தப் புடவை வேண்டும், அந்த நகை வேண்டும் என்று இருக்கும் பணத்தில், பார்த்தால் கொஞ்சம் நிறைய நகை இருப்பதை போலத் தோற்றம் வரும் நகைகளைத் தேர்ந்தெடுத்தாள்.  சபையில் பார்க்கப் பளிச்சென்று இருக்க வேண்டுமே. கொஞ்சம் அடக்கி வாசிக்கிறியா,...
      12 மாலை வீட்டிற்கு வரும்போது ஒரு வித இனிமையான மனநிலை கொற்றவைக்கு,  அவள் வண்டியில் பறந்துகொண்டு இருப்பதை போல மனமும் உடலும் லேசாக இருந்தது. கடத்தி செல்லத் தோணுவதாகச் சொன்னவன் அப்படி ஒன்றும் செய்யவில்லை, ஆனாலும் அவள் மனம் மிக மிகச் சந்தோஷமாக இருந்தது. அவன் அழைத்துச் சென்றது அவனின் நர்சரிக்கு, துறையூர் செல்லும் ரோட்டில் வேறொரு...
      9 “ரெண்டாம் தாரம்” இதற்க்கு என்ன எதிர் வினையாற்றுவது என்றுகூட தெரியவில்லை அவளுக்கு. “இது சரியா வராதுங்க” என்று அவள் முடிக்க. “கொஞ்சம் யோசிங்களேன்” என்றான் அந்தத் தம்பதியருடன் வந்திருந்தவன். “என் பெரு கிஷோர், என் அண்ணன் கார்த்திக்கு தான் உங்கள பாக்க வந்திருக்கோம்” என்க. “இங்க பாருங்க என் அக்கா தான் சொல்லிட்டாங்கல்ல, ப்ளீஸ் நீங்கக் கிளம்புங்க” என்றான்...
            3 ஸ்கூல் காம்பௌண்ட் உள்ளே நிழலில் வண்டியை நிறுத்தியவள் வணக்கம் வைத்த அனைவருக்கும் புன்னகையோடு பதில் கூறிக் கொண்டே சேர்மன் அறைக்கு விரைந்தாள்.  இவள் சென்றவுடனே அலுவலகக அறையிலிருந்து பைலோடு வந்துவிட்டார் அதன் ஹெட்,  அவரிடம் அதை வாங்கி விவரங்களைக் கேட்டுக் கொண்டவள், டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட் ஹெட்டை  அழைத்து அந்த விவரங்களையும் வாங்கி கொண்டாள். தன்னுடைய டேபிளின்...
                             5 கண் விழித்ததிலிருந்து யாரிடமும் பேசவில்லை, குட்டி பல முறை கேட்டு விட்டான் “என்ன நடந்தது” என்று, உடல் நிலை சரி இல்லாமல் மயங்கிவிட்டாள் என்று சமாளித்துவிட்டார் ராதா. இரவு நெருங்கும் நேரம் வந்தார்கள் அப்பாவும் இளைய மகளும், ஹாலில் அவர்கள் பேசும் சத்தத்தைக் கேட்டதும் அத்தனை நேரம் இருந்த அமைதி பறந்து விட வெளியில்...
                                   7 “மாமா” என்ற அழைப்பை உணர்ந்தாலும் திரும்பிப் பாராமல் அமர்ந்திருந்தான் அருண்,  வருவது அவன் அக்கா ஆராதனாவின் சீமந்த புத்ரி சக்தி. வயது பதினைந்து தான், ஆனால் இருபத்தி ஐந்து வயதின் கணவகளும், விவரமும், அலைபேசி என்னும் தேவை இல்லாத ஆணி நிறைய முட்டாள் தனமான போதனைகளை அவளில் கடத்தி இருந்தது. அவளைக் கவனிக்க சொல்லிப் பலமுறை...
                                4 “அப்பாடா… இந்த ஒரு நாள் காலைல எழாம கால் ஆட்டித் தூங்குற சுகமே தனி தான், என்ன சில்லுனு எ.சி இருந்தா நல்லா  இருக்கும்” என்றவள் சிந்தனை ஓட “தங்கம் தரையிலே தவிடு பானையிலே, கட்டிலுக்கே வக்கில்லாம கழுதை தரைல கிடக்குற உனக்குக் குளு குளு ஒண்ணுதான் கேடு” என்றது மனச்சாட்சி. “ஏய் இன்னைக்கு எல்லார்க்கும்...
    error: Content is protected !!