Monday, April 29, 2024

    Kannamaavin Kaanthan

    செழியன், வெற்றி, தமிழ் மூவரும் தீவிரமாக ஆலோசித்து கொண்டிருக்கும் போது, கதவு தட்டும் ஓசை கேட்க, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். செழியனின் கண்ணசைவில், தமிழ் சென்று கதவிடுக்கில் பார்க்க, கதவை தட்டிய நபர் கதவுக்கு முதுகை காட்டியபடி நிற்க, முகம் தெரியவில்லை.
    செழியன் தேவி பாட்டியிடம் பேசிவிட்டு வெளியே கிளம்பி செல்ல, சரியாக அதே சமயம், வீட்டிற்கு திரும்பி வந்தான் நன்மாறன். காலையில் வெயிலுக்கு முன்பே தன் நண்பர்களுடன், மட்டை பந்து விளையாட என்று சென்றிருந்த நன்மாறன், கலைத்து போய் அப்போது தான் வந்து சேர்ந்தான்.
    ஆக சிறந்த துன்பம் என்பது எதுவெனில், நமது அன்புக்கு உற்றவர் வருந்தும் போது, அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல், மூன்றாம் மனிதர் போல தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது தான். செழியனும் அப்படி பட்ட, அடிபட்ட மனநிலையில் தான் இருந்தான். தேவி பாட்டியிடம்...
    செழியனிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறி, அவனின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய விஜய் நிதானமாக, "நீ தேவி காலனியில் தானே வீடு எடுத்து ஸ்டே பண்ணி இருக்க" என்று தன் விசாரணையை தொடங்க, செழியனின் மனதிற்குள், "இதை எதற்கு இப்போ...
    உள்ளத்தின் உளைச்சல் உடலில் தெரிவது இயல்பு தானே. செழியன் ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்லவே. ஏதோ தேவி காலனியில் இருந்து நடந்தே வந்தது போல, கலைத்து ஓய்ந்து போய், அந்த தனி வீட்டிற்கு வந்து சேர்ந்தான் செழியன். உள்ளே நுழைந்த செழியன், எதுவும் பேசாமல்,...
    இன்று பேருந்து நிறுத்தத்தில், அந்த ரவுடி கூட்டத்தை குறித்த பயம் எழும் போது தான், நேற்றைக்கு செழியன் செய்த உதவியும், நங்கைக்கு நினைவுக்கு வந்தது. விரும்பதகாத அந்த சம்பவத்தை பற்றி, அவள் யோசிக்க விழையாததாலோ அல்லது அடுத்தடுத்து அணி வகுத்து காத்திருந்த அவளின் கடமைகளோ, அவள்...
    நன்மாறன் கூறிய பதிலை கேட்ட செழியனுக்கு, முதலில் வியப்பாக இருந்தாலும், பின்பு தான் சரியாக தான் கேட்டோமா என்ற சந்தேகம் தான் எழுந்தது செழியனுக்கு. "நாம எல்லாம் மிடில் கிளாஸ், கேஸ் கொடுத்துட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு எல்லாம் அலஞ்சிகிட்டு இருக்க முடியாது" என்று...
    இரவு மணி எட்டை தாண்டி ஓடி கொண்டிருக்க, செழியன் அப்போது தான் வீட்டிற்கு வந்தான். அவன் மாடியேற போக, நங்கை வீட்டிற்குள் இருந்து, அவனுக்காகவே காத்திருந்தது போல, வெளியே வந்தார் தேவி பாட்டி. தேவி பாட்டியை பார்த்ததும், நேற்று அவரிடம் வலிய சென்று வாங்கியது எல்லாம் நினைவு...
    ஒரு நிலையில் நிற்கும் வரை தானே, மனது அலைப்பாய்ந்து கொண்டிருக்கும். திருமணம் செய்து கொள்வது, என்று முடிவு எடுத்த பிறகு, செழியனின் மனது அமைதியில் திளைத்து விட்டது. தன் தினசரி வழக்கம் போல நங்கையின் தரிசனத்தோடு, அவள் வேலைக்கு சென்ற பிறகு, நன்மாறனின் உடல் நலத்தை விசாரித்து,...
    செழியன், தான் மடிக்கணினியில் பார்த்து கொண்டிருந்த வேலையை, ஓர் அளவுக்கு முடித்து நிமிரும் போது, மணி அதிகாலை நான்கை நெருங்கி கொண்டிருந்தது. கண்காணிப்பு அறைக்கு சென்று பார்க்க, வெற்றியும், தமிழும் அவர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த மேசையின் மீதே, தலை கவிழ்த்து உறங்கி கொண்டிருந்தனர்.
    நங்கையின் சித்தி முகவரியை கண்டுபிடிக்க தான் எடுத்து கொண்ட இந்த இரண்டு நாட்களில், நங்கைக்கு ஒரு வரனுடன் அவர் வருவார், என்று சற்றும் எதிர்பாக்காத செழியனுக்கு ஆயாசமாக இருந்தது. "முறைப்படி பொண்ணு பார்க்க கூட வரல, வெறும் பேச்சு வார்த்தை தானே"
    நங்கையின் சித்தி, நங்கைக்கு அவள் சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்ட வரனுடன் தான் வந்திருப்பதாக சொல்ல, அதை கேட்ட, தேவி பாட்டி தான் அதிக அதிர்ச்சியில் இருந்தார். தேவி பாட்டி இரண்டு நாள் முன்னர் தான் முத்தையா தாத்தாவிடம், செழியனை பற்றிய தகவலை கறந்து இருந்தார்.
    error: Content is protected !!