Chathriya Vendhan
சத்ரிய வேந்தன் - 8 – பசலை நோய்
நின்னைச் சரணடைய தவம் புரிந்தேன்...
உன் பார்வையில் விழும் பொழுதை
நான் ரசித்தேன்...
பசலை நோய் கொண்டு வாடவிட்டாய்...
உன் நினைவுகளால் நிதமும் மூழ்கடித்தாய்...
தலைவா...
நின்னைச் சரணடைய தவம் புரிந்தேன்...
வேங்கை நாட்டின், பிரதான அரண்மனையில், வீணையை மடியினில் ஏந்தி அதனை மீட்டியபடி, தமது சிப்பி இமைகளை மூடியபடி சோகம் இழையோடிய குரலில் தோகையினி பாடிக்கொண்டிருந்தாள். பொன்னில் வெள்ளியை குழைத்து செய்த நிறத்தினில் மிளிரும் தோகையினி, பசலை நோயின் (தலைவனின் பிரிவாற்றாமை) தாக்கத்தால், தமது மேனியின் நிறம்...
சத்ரிய வேந்தன் - 20 – மதி மகள்
வாள் ஏந்திய கைகளால்
மலர்களை ஏந்த வைக்கின்றாய்...
இறுக்கம் கொண்ட முகத்தினில்
இதழ்கள் விரிய செய்கின்றாய்…
நாடாளும் வேந்தனை
உன் சேவகனாய் மாற்றுகின்றாய்…
அடர்ந்த மரங்கள் சூழ்ந்த சிவவனம், அது நண்பகல் வேளை என்பதனைக் கூட உணர விடாமல், மரங்களின் குளுமையால் நிறைந்திருந்தது. உச்சி வேளையில், திக்கு தெரியாத காட்டினில் தனித்து இருந்தனர் சந்திர நாட்டு அரசர் ரூபன சத்ரியரும், மருத தேசத்து இளவரசி சமுத்திர தேவிகையும்.
“கிளம்பலாம் தானே பெண்ணே!”...
சத்ரிய வேந்தன் - 16 – சத்ரிய வீரன்
சந்திர நாடு மிகவும் பழமையான, பாரம்பரியம் நிறைந்த நாடு. தென்னாற்றங்கரையோரம் கோட்டையை அமைத்து பல தலைமுறைகளாக ஆண்டு வந்தனர் சந்திர நாட்டின் மூதாதையர்கள். இதுவரை சந்ததி இல்லை என்ற நிலையே வந்திடாத நாட்டிற்கு, அருள் வேந்தருக்கு வாரிசுகள் இன்றி போகவே, இப்பொழுது இப்படி ஒரு இக்கட்டான...
சத்ரிய வேந்தன் - 12 – கரடு மலை
எத்தனை பாவங்கள்
செய்தால் என்ன?
உனக்கென இழப்பு
வரும் பொழுது,
நீயும் வருந்த
வேண்டும் அன்றோ!
உன் இழப்புகளின்
வலியே உனக்கு
சாதாரணமாய்
தோன்றுகிறதென்றால்…
நீ பிறருக்கு
இழைத்த அநீதிகளின்
அளவு???
தமது உடல்நிலை ஏற்கனவே தேறி வந்த நிலையில், மார்பில் ஏற்பட்ட காயங்களுக்கான சிகிச்சை மட்டுமே சில நாட்களாக ரூபன சத்ரியர் எடுத்து வந்தார். புதிதாக மருத தேசத்திலிருந்து வந்த வைத்திய குழுக்களின்...
சத்ரிய வேந்தன் - 14 – வெகுமதி
உன் வீரம் வான்புகழ்
அடையட்டும்…
உன் திறமையும்,
விடாமுயற்சியும்,
பொறுமையும்
உன்னை சிறந்த
தலைவனாக செதுக்க
இறைவனின் அருளும்,
ஆசியும்
என்றும் உனக்கே…
தீட்சண்ய மருதர் வேங்கை நாட்டிலிருந்து புறப்பட்டு, சந்திர நாடு நோக்கி தமது பிரயாணத்தை தொடங்கினார். மருத சக்கரவர்த்தி வீரேந்திரரின் முன்னேற்பாட்டின்படி ஒவ்வொரு நாட்டைக் கடக்கும் பொழுதிலும் அந்தந்த நாட்டின் வீரர்கள் சிலர், தீட்சண்யருடன் இணைந்து அவர்கள் நாட்டின் எல்லை வரை பயணித்தனர்.
ஏற்கனவே தங்கை சமுத்திர தேவிகையுடனும், மருத...