Monday, May 20, 2024

    வசுந்தரா தேவி

    இன்றைய ஹியரிங்கின் ஆரம்பத்தில் இருந்தே நீலகண்டன் அர்ஜுனைத் தாக்கியே பேசிக் கொண்டு இருந்தார். “மிஸ்டர்.அருணாச்சலம் சொல்வதைப் பார்த்தால், சம்பவம் நடந்த அன்று, மிஸ்.ரீட்டாவுக்கு போன் செய்த அர்ஜுன், நாளைய கெஸ்ட் லிஸ்டில் தன் தாயின் பெயரைச் சேர்க்கும்படி சொல்லியிருக்கார். அதை ரீட்டா அருணாச்சலத்திடம் தெரிவிக்கவும், அப்பாவுக்கும் மகனுக்குமிடையே ஒரு பெரிய சண்டை அரங்கேறி இருக்கிறது. அதன் முடியில், தன் தாய்...
    அத்தியாயம்  1  டெல்லி சட்ட கல்லூரி.. “சர்மிளா மேம், பூங்கொத்து எங்கே?” என்று கோ-ஒர்க்கர் பதட்டம் நிறைந்த அதே நேரம் தணிந்த குரலில் கேட்டவருக்கு, “அப்பவே வாங்கிட்டு வர ஆள் அனுப்பிட்டேன் மேடம். இதோ பாக்கிறேன்!” என்று சொல்லித் திரும்பிய நேரம், அங்கே கையில் பூங்கொத்துடன் ஓடி வந்து நின்றார் பியூன் மணி. “ஹப்பா சாமி! சரியான நேரத்துக்கு...
    அந்த ஏரியா முழுவதும் காலையில் இருந்து அலைந்து திரிந்து ஓய்ந்து போயிருந்த அருணின் கண்களுக்கு, அப்பொழுது தான், மெயின் ரோட்டிற்குக் கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த மெக்கானிக் கடை கண்களில் பட்டது. வசுந்தரா ஏற்கனவே மெக்கானிக் ஷெட், பாழடைந்த இடங்கள், ஆள் நடமாட்டமில்லாத இடங்கள் இந்த மாதிரி இடங்களில் கவனம் செலுத்தி தேடுங்கள் என்று சொல்லி...
    விடிந்தும் விடியாமலும், எந்தவித முன்னறிவிப்புமின்றி தங்கள் வீட்டுக்கு வருகை புரிந்து இருக்கும் அர்ஜுனையும், அவனின் தாயையும் கண்ட யாழினிக்குக் கண்களே தெறித்து விடும் நிலை!! வீட்டை சுற்றி போடப்பட்டு இருக்கும் ஜாகிங் ட்ராக்கில் ஓடிக் கொண்டு இருந்தவள், அர்ஜுனின் கார் உள்ளே வருவதைக் கண்டு, காரை விட்டு இறங்குபவர்களை நோக்கி ஓடி வந்தவள், மூச்சு வாங்க,...
    வசுந்தராவின் பதிலில் மொத்த மாணவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்து இருப்பதைக் கண்ட போதும், அதற்கு நின்று விளக்கமளிக்க விரும்பாதவர், தன் கையில் இருந்த மைக்கை டேபிளில் வைத்து விட்டு, மேடையை விட்டு இறங்கி முதல்வரை நோக்கிச் சென்றார். “நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான ஹியரிங் இருக்கு, சோ...” என்று தன் வார்த்தைகளை அவர் சொல்லி முடிக்கும் முன்,...
    “மேம்! நீங்க சொல்றது உண்மையா? அர்ஜுன் சாரா இந்தக் கொலையைச் செய்தார்?” என்று நம்ப முடியாத பாவனையில் அருண் கேட்டான். அதற்குக் காரணம், அவன் அறிந்த அர்ஜுன், முரடன் மற்றும் கொஞ்சம் முன்கோபி. ஆனால் கொலை, அதுவும் ஒரு பெண்ணை என்பதை அவனால் கொஞ்சம் கூட ஏற்க முடியாததாகவே தோன்றியது. அதன் வெளிப்பாடாகவே அவன் கேள்வி...
    துளசி கேஸில் இதுவரை தங்களுக்குத் தற்காலிக தீர்வு தான் கிடைத்து இருக்கிறதே தவிர, நிரந்தர தீர்வைக் கொடுக்கக் கூடிய அந்தக் குற்றவாளியின் நிழலைக் கூட இன்னும் தன்னால் நெருங்க முடியவில்லையே என்று பைலில் பார்த்துக் கொண்டு இருந்த எவிடென்ஸில் இருந்து கண்களை அகற்றி, நெற்றியை நீவி விட்டபடி, பின்பக்கமாகச் சாய்ந்து இமை மூடி, தன்னைத்தானே...
    ஏஜே பேலஸ்.. பெயருக்கு ஏற்றார் போலவே சென்னையின் மையப் பகுதியில் பிரம்மாண்டத்தைத் தன் தோற்றத்திலும், ஆடம்பரத்தைத் தன் அலங்காரத்திலும் காட்டிக் கொண்டு, தன்னைக் கடந்து செல்வோரை எல்லாம் தன் பளிங்கு கண்ணாடி பளபளப்பில் வசீகரித்துக் கொண்டு, வானைத் தொடும் கம்பீரத்துடன் காட்சி அளித்துக் கொண்டு இருந்தது, அந்த நவீன அரண்மனை தோற்ற மாளிகை. ஏழு ஏக்கர் பரப்பளவில்,...
    error: Content is protected !!