Layam Thedum Thalangal
உடை மாற்றியவன் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, எழுந்து அமர்ந்த பவிக்குட்டி கண்ணைத் தேய்த்துக் கொண்டு, “குத் மார்னிங் அப்பா...” என்றது.
“குட் மார்னிங் செல்லம்... வாங்க, பிரஷ் பண்ணிட்டு பால் குடிக்கலாம்...” அவன் சொல்ல, “அம்மா எங்கேப்பா... எனக்கு அம்மாதான் செய்யணும்...” என்றாள் குழந்தை.
“ம்ம்... கீழ இருப்பாங்க, போயி பாரு...” என்றதும் குழந்தை எழுந்து...
“ம்ம்... சரி சார்...” என்றவன் சென்றான். பெரிய பெரிய அண்டாக்களில் சோறு வெந்து கொண்டிருக்க வெந்ததை மூங்கில் கரண்டியால் அள்ளி கூடையில் போட்டு வடித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு அண்டாவில் சோறும் இன்னொரு அண்டாவில் குழம்பும் கொண்டு செல்லத் தயாராய் இருக்க, அதை இரண்டிரண்டு பேராய் பிடித்து டிராலியில் ஏற்றி வைத்தனர். அதைத் தள்ளிக் கொண்டு கேட்டுக்கு...
அத்தியாயம் – 33
ஆகஸ்ட் 15.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே...
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே...
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே...
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
மலையோ அது பனியோ நீ மோதி விடு...
மிமிக்ரியில் திறமை கொண்ட சிவா பெண் குரலில் அழகாய் பாடிக் கொண்டிருக்க முன்னில்...