அருகினில் என் தூரமே
தூரம் 4
சக்திக்கு வாயிலேயே அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது, கொஞ்ச நேரம் முன்புதான் லாலாவோட நன்றாக உண்டுவந்தான். அந்த வாசமும் சுவையும் நீங்காது இருக்க, சரோவிடம் பேசும்போது சரளமான பேச்சில் அதையும் சொல்லிவிட்டான். கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தவன், மீண்டும் கையை முகர்ந்து பார்க்க தக்காளி சாதம் வாசம் மூக்கைத் துளைத்தது. இவன் என்ன பேசலாம்...
தூரம் 2
சக்திவேலும் லாலாவும் இன்று நண்பர்கள் இல்லை. அவர்களின் பத்து வயது முதல் தோழர்கள். சிறுவர்களாய் இருந்த போது ஒன்றாய் விளையாட, திலகரும் லட்சுமணனும் தங்கள் பிள்ளைகளிடமிருந்து பேரப்பிள்ளைகளிடம் பகையை வளர்க்க தொடங்கினார்கள்.
திலகர் "ஏண்டா லாலா? நம்ம குடும்பம் எப்பேர்ப்பட்ட குடும்பம் வெள்ளையனை வெளியேற சொல்லி போராடினவங்க, இவன் கொள்ளுத்தாத்தா கூஜா குமாஸ்தா ஆனான்,...
அடுத்த நாள் விடியலிலே பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டனர்.
காலை ஆறு மணி போல் திலகர் வயலில் நின்றார். அவர் வரப்பை சீர்ப்படுத்திக்கொண்டிருந்தவர் லட்சுமணனின் பக்கமும் வெட்டிவிட்டார். வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த லட்சுமணன், வயல்வழியே வீட்டுக்கு செல்ல திரும்பும்போது திலகர் மண்வெட்டியோடு நிற்பதைப் பார்த்தார்.
யோசனையோடு நடந்து வந்தவர், அவர் பக்கம் வரப்பில் கொஞ்சம் வெட்டுப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு...