அருகினில் என் தூரமே
தூரம் 1
"மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் வரப்போவுது, யார்லாம் மண்டாபிடி செய்யப்போறீங்களோனு வரிசையா வந்து பதிவு பண்ணிடுங்க" கோவில் நிர்வாகி சொல்ல ஊரார் எல்லாரும் வரிசையாக வந்து பெயரினை சொல்ல, எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார் அந்த கோவில் நிர்வாகி சண்முகம்.
"காசி"
"கணேசன்"
"தமிழ்செல்வன்" என்று அவரவர் பெயர்கள் சொல்லிக் கொண்டு வர இடையே
"லட்சுமணன்" என்று குரல் கொடுத்தான்...
தூரம் 3
சக்திவேலுக்கு சரோஜினியை விட லாலா என்ன நினைப்பான் என்ற கவலையே அதிகம். தன் நட்பை அவன் எவ்வளவு மதிக்கிறான் என்று தெரியும்.
சரோஜினிக்கும் அவனுக்குமான காதல் இந்த ஐந்து வருடமாகத்தான். சக்திவேல் சென்னையில் படிப்பு முடிந்து, எஸ்.ஐ தேர்வுக்காக அகாடமியில் படித்தான். லாலா படிப்பு முடிந்ததும் ஊருக்கு வந்துவிட, சரோஜினி படிக்க சென்னை வந்தாள்.
லாலாவின்...
தூரம் 2
சக்திவேலும் லாலாவும் இன்று நண்பர்கள் இல்லை. அவர்களின் பத்து வயது முதல் தோழர்கள். சிறுவர்களாய் இருந்த போது ஒன்றாய் விளையாட, திலகரும் லட்சுமணனும் தங்கள் பிள்ளைகளிடமிருந்து பேரப்பிள்ளைகளிடம் பகையை வளர்க்க தொடங்கினார்கள்.
திலகர் "ஏண்டா லாலா? நம்ம குடும்பம் எப்பேர்ப்பட்ட குடும்பம் வெள்ளையனை வெளியேற சொல்லி போராடினவங்க, இவன் கொள்ளுத்தாத்தா கூஜா தூக்கி குமாஸ்தா...
அடுத்த நாள் விடியலிலே பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டனர்.
காலை ஆறு மணி போல் திலகர் வயலில் நின்றார். அவர் வரப்பை சீர்ப்படுத்திக்கொண்டிருந்தவர் லட்சுமணனின் பக்கமும் வெட்டிவிட்டார். வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த லட்சுமணன், வயல்வழியே வீட்டுக்கு செல்ல திரும்பும்போது திலகர் மண்வெட்டியோடு நிற்பதைப் பார்த்தார்.
யோசனையோடு நடந்து வந்தவர், அவர் பக்கம் வரப்பில் கொஞ்சம் வெட்டுப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு...