Siththakaththi Pookkale
அதைக் கண்டு கோபம் கொப்பளித்தாலும் “என்ன ஆச்சு டா? ஜெகா இப்படி எல்லாம் செய்ய மாட்டானே?”, என்று கேட்டான் மனோஜ்.
“இல்லைன்னா அது வந்து...இன்னைக்கு பேப்பர்ல, சித்தி கொடுமைல ஒரு பையன் செத்து போனதைப் படிச்சான். பழைய விஷயம் எல்லாம் நினைவு வந்துருக்கும் போல? இப்ப வறேன்னு சொல்லிட்டு கிளம்பி போனவன் இப்படி தான் வந்தான்”,...
“உன்னைத் தான் கேக்குறேன். எங்க போயிட்டு வர? கேக்குறது காதுல விழலையா ஆஷா?”
“அது வந்து மா.... அது....கடைக்கு.... பென் வாங்க.... இல்லை சாக்லேட் வாங்க”, என்று தடுமாறிய படியே சொன்னாள்.
“இப்பவே ரோட்டுக் கடைல பொறக்கி திங்க ஆரம்பிச்சிட்டியா?”, என்று கேட்டு அங்கிருந்த கம்பை எடுத்து அவளுடைய தொடைக்கு கீழே அடி பின்னினாள் புஷ்பா.
“அம்மா வேண்டாம்...
அத்தியாயம் 6
உன் மனதில் இருக்கும்
எந்தன் நினைவுகளே போதும்
எந்தன் காதலை புதுப்பிக்க!!!
ஆஷா முழுவதுமாக புஷ்பாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பட்டாள். நிர்மலுடன் கூட அவளை எங்கேயும் அனுப்பவில்லை. புஷ்பாவே ஆஷாவை பள்ளிக்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வாள்.
அப்படி ஒரு நாள் புஷ்பாவுடன் பள்ளிக்கு போகும் போது அவர்கள் போகும் ரோட்டில் எதுவோ வேலை...
ஸ்கூல் முடிந்ததும் இருவரும் சைக்கிள் ஸ்டாண்ட்க்கு நடக்க “ஏய் சரண்யா, என்ன ஆச்சு? நீயும் என்கூட வீட்டுக்கு கிளம்புற? நீ பிராக்டிஸ் போகலையா?”, என்று கேட்டாள் ஆஷா.
“இல்லை, நான் இனி கிரவுண்டுக்கு போக மாட்டேன்”
“ஏய் ஏன்? நான் வரலைன்னா நீயும் போகாம இருக்க?”
“அப்படி எல்லாம் இல்லை. எனக்கு போக பிடிக்கலை”
“கேம் பிடிக்கலையா?”
“அதெல்லாம் இல்லை. நான்...
அத்தியாயம் 5
நீ பேசும் காதல்
மொழிகளே போதும்
புது இலக்கியம் படைக்க!!!
அண்ணனின் கேள்வியில் கடுப்பானவள் “எல்லாத்துக்கும் உன்னோட பிரண்ட் தான் காரணம் போதுமா? அவனால தான் நான் கிரவுண்டுக்கு வர வேண்டாம்னு நினைக்கிறேன். அவனைப் பாக்க கூடாதுன்னு தான் இப்படி. போதுமா?”, என்று சொன்னாள் ஆஷா. சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கியது.
“என்னது என்னோட பிரண்டா? என்னோட...
அதன் பின் வந்த நாட்கள் ஆஷாவுக்கு டென்ஷன் மிகுந்ததாகவே இருந்தது. தினமும் மாலை சரண்யா மனோஜிடம் கடலை போட ஆரம்பித்தாள். “எனக்கு அதை சொல்லுங்க. உங்க வீட்டைப் பத்தி சொல்லுங்க. இதைச் சொல்லுங்க”, என்று மனோஜிடம் பேச்சுக் கொடுப்பாள்.
மனோஜை பேச வைக்க ஆஷா என்னவெல்லாம் செய்தாளோ அதையே சரண்யாவும் செய்ய ஆரம்பித்தாள். நிர்மலும் ஆஷாவும்...
அத்தியாயம் 4
உன்னைக் கண்ட
அந்த நொடியில் பல
வானிலை மாற்றம் எனக்குள்
உருவானது அன்பே!!!
நண்பனின் தங்கை என்று தான் மனோஜும் முதலில் அவளிடம் பேசினான். அதன் பின் தினமும் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில் இருவருக்கும் அடிக்கடி சந்திப்பு இருக்கும்.
எப்போதும் ஆஷாவும் மனோஜும் நிர்மல் இருக்கும் போது தான் பேசிக் கொண்டிருப்பார்கள். நிர்மலிடம் அவள் எப்படி...
புஷ்பாவும் அன்னபூரணியும் சேர்ந்து ஒரு பெரிய ஸ்கூலை நிர்வகிக்கிறார்கள்.
முத்துவேலுக்கு பிள்ளைகள் இருவர் என்றால் உயிர். அவர்கள் ஆசைப் பட்டுக் கேட்டதைச் செய்து கொடுப்பார். ஆனால் அவர்கள் தங்கள் கைக்குள் தான் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்.
முத்துவேலுக்கும் புஷ்பாவுக்கும் ஆசை என்னவென்றால் தங்களுக்கு பிறகு நிர்மல் அரசியல் வாரிசாகவும், ஆஷாவை ஸ்கூல் பொறுப்பையும் எடுக்க சொல்ல...
அத்தியாயம் 3
உயிர் பிரியும் நிலை
வந்தாலும் எனது
கடைசி ஆசை, உந்தன்
நினைவோடு சாவது தான்!!!
ஒரு நான்கு மணி போல் தன்னுடைய வீட்டுக்குச் சென்ற மனோஜ் “சிவானி”, என்று அழைத்தான்.
“அண்ணா”, என்ற படி அறையில் இருந்து வெளியே வந்தாள் சிவானி.
“தேவையானது எல்லாம் எடுத்து வச்சிட்டியா மா? ஆட்டோ வரச் சொல்லவா?”
“எல்லாம் எடுத்து வச்சிட்டேண்ணா. நீ வரச் சொல்லு. கிளம்பலாம்”
“ஏதாவது...
நித்யா மற்றும் திலீபன் இருவரையும் பற்றி தெரிந்ததால் தான் மனோஜ் அப்படி சொன்னான். “என்ன எல்லாரும் வாயை மூடிட்டு இருக்கீங்க? சொல்றது காதுல விழுந்தது தானே? அக்கா, உன்னோட கொழுந்தனைக் கட்டி வைக்கணும்னா உன் புருஷன் கிட்ட சொல்லி நான் செலவு பண்ணின பணத்தை தரச் சொல்லு. செலவு கணக்கு எழுதி வச்சிருக்கேன். அப்புறம்...
அத்தியாயம் 2
பக்கம் பக்கமாய் உன்னிடம்
வசனம் பேச எண்ணினாலும்
முதலில் தலை காட்டுவது
என் மௌனம் தான்!!!
“அண்ணா, நீ இப்ப வீட்டுக்கு வரியா?”, என்று கேட்டாள் சிவானி.
“அம்மு, நான் வரேன். அதுக்கு முன்னாடி இப்ப என்ன ஆச்சுன்னு சொல்லு டா. எனக்கு பதட்டமா இருக்கு. யாரும் ஏதாவது சொன்னாங்களா?”, என்று கேட்டான் மனோஜ். அவனுக்கு தெரியும், அவள் தங்கை...
அந்த வீட்டில் மனோஜ் மீது அக்கறையும், பாசமும், தீராத அன்பும், கொண்டது திலீபனுக்கு அடுத்து பிறந்த சிவானி தான். பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கிறாள்.
பெற்றவர்களால் திலீபனை மன்னிக்க முடிந்தது. நித்யாவால் மன்னிக்க முடிந்தது. ஆனால் சிவானி “என் அண்ணனை கஷ்ட படுத்திட்டல்ல நீ? இனி நீ எனக்கு அண்ணன் கிடையாது. அவ எனக்கு அண்ணியும்...
அத்தியாயம் 1
காதல் பாலம் ஒன்றை
உருவாக்கினேன் உன்னுடன்
என்னை இணைக்க!!!
மதுரை மாவட்டம் சிம்மக்கல் கடை வீதியில் நடுநாயகமாக வீற்றிருந்தது ஒரு மெக்கானிக் ஷாப். அதன் உரிமையாளன் மனோஜ்.
அதே ஊரைச் சேர்ந்த துரைப்பாண்டி, பார்வதி இருவரின் மகன் தான் மனோஜ். துரைப்பாண்டி தான் அந்த மெக்கானிக் ஷாப்பை முதலில் ஆரம்பித்தார்.
வீட்டின் பொருளாதார நிலை காரணமாக படிப்பை பத்தாம் வகுப்போடு...