Kaathal Mozhi Pesidavaa
தென்னங் காற்றும்.. ஜன்னல் சீட்டும்..
மினி பஸ்சும்.. சொந்த ஊர்ப் பயணமும்..
யாக்கையின் ஒவ்வொரு அணுவும் ‘ஐயம் ஹாப்பி!!!!!’ என அரற்றிக் கொண்டிருக்க.. சிங்காரச் சென்னையிலிருந்து சின்னாம்பாளையத்தில் வந்திறங்கினான் ஸ்ரீராம்.
மண் வாசம் மனதை நிறைத்துச் செல்ல.. மலர்ச்சியுடன் வீட்டை நோக்கி நடை போட்டான்.
திண்ணையில் அமர்ந்துகொண்டு போவோர் வருபோரை எல்லாம் உற்று உற்று பார்த்தபடி இருந்த தொண்ணூறைத் தொட்ட...
நதியோடு நாள்களுக்கென்ன பந்தயமோ..? நில்லாது நிகழ்காலத்தை கடந்தகாலமாக்கியபடி சென்று கொண்டிருந்தது.
கதிரவன் பூமியில் பரப்பிய தன் செங்கதிர்களை திரும்பப் பெற்றுக்கொள்ள ஆயத்தமான நேரம்.. கடற்கரையில் மணல்வெளியில் அமர்ந்திருந்தாள் நற்பவி நங்கை.
ஆழியின் அலைகளைப்போல் அவள் அகமும் அமைதியற்று ஆர்ப்பரித்தது.
மனம் சமீபத்திய நிகழ்வுகளையே சுற்றிவந்தது. அந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் நிற்பவன் தான் அவன் நினைவுகளுக்குப் பின் நிற்பவனும்.
அலை நுரைகள்...
லட்சம்.. லட்சம் இடைவெளியை கடந்திடும் லட்சியத்தில் நொடிக்கு நொடி வேகம் நாடி, பூக்கள் தரும் பூமியை முத்தமிட்டுக் கொண்டிருந்தது மழை.
தலைநகரின் இன்னொரு பக்கம்... அத்தனை அத்தனை அழுக்குடன் அடையாளம் மறைந்து போகும் வண்ணம் சாலையில் சாக்கடையும் சந்தைக்கடை இரைச்சலுமாய்.. மக்களின் பொறுமைக்கு சோதனையாய்.. ஹெவி ட்ராபிக்கும் ஹெவி ரெயினும்..
“டேய் ஸ்ரீ... ஒரு காரை வாங்கித்...
‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே’ - நக்கீரர் நீதி போல்
நெஞ்சில் ஈரம் இன்றி நாட்டினில் வஞ்சகர் பலர் இழைத்து வரும் குற்றங்களுக்குச் சாட்சி நானே..! சிக்ஷையும் நானே தருகிறேன்..! என்பது வெய்யோனின் நீதி போலும்.
விடியலில் தொடங்கியது தொட்டு அத்தனை வெம்பல் அவனிடம்..! தலைநகரம் தவித்துக் கொண்டிருந்தது.
ஆனால்..
அதே தலைநகரில்.. முற்றும் முரணாய் குளிர்காற்றை நிரப்பிக்கொண்டு நின்றது அந்த...
இளந்தென்றல் காற்று இசைத்த காதலிசை அவன் செவிகளை எட்டியதோ..? தன் கண்ணிமைகளை மெல்ல விடுவித்தான் கதிராயன்.
திரைசீலைகள் அசைந்து அவனை அருகில் அழைக்க.. பஞ்சணையிலிருந்து எழுந்தவன் பால்கனி கதவுகளை திறந்துகொண்டு சென்றான்.
தூரிகை தொடா செவ்வானம்.. அங்கும் இங்குமாய் வெண்மேகங்கள்.. ஆலம் வீட்டில் விடியலை வரவேற்கும் விதமாய் பறவைகளின் சத்தம்.. ம்ஹூம்.. சங்கீதம்..!
அத்தனை இனிய காலைப் பொழுது....
உ
‘சொர்க்கமேஏஏ என்றாலும்ம்ம்.. அது நம் ஊரைப் போல வருமா...??’
நிஜம் தனையும் நிழல் தனையும் மறைத்து வைக்கும் இருள்.. இன்பம் தான்.
இசைத் தூறலோடு.. பேரின்பம் தான்..!
‘ஆல் இன்டியா ரேடியோ’ இசையின் தூவானமாய் இருக்க.. நெஞ்சிலாடும் நினைவுகளின் கனத்தோடு.. மெல்லிய பொன்மஞ்சள் விளக்கின் பொழிவில் யாருமில்லா சாலையை சாளரத்தின் வழியே ‘சைட்’ அடித்தபடி அமர்ந்திருந்தார் அவர்.
வெண்மை தாங்கிய...