Kaathal Mozhi Pesidavaa
வான் அரங்கத்தில் மேகத்தின் அரங்கேற்றம்.. இசையோடான இன்ப மழை. அதே கணம்.. புவியிலும் ஓர் இசை அரங்கேற்றம்..!
“தி வின்னர் இஸ்.......... மிஸ் நற்பவி இராமநாதன்..!!!!!”
வான் மழையோடு வாழ்த்து மழையும் அவ்விடம் சேர்ந்திட.. சுகமாய் நனைந்தாள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறவுள்ள ‘தி வோர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற ரியாலிட்டி ஷோவிற்கான தகுதிச்சுற்று பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில்...
லட்சம்.. லட்சம் இடைவெளியை கடந்திடும் லட்சியத்தில் நொடிக்கு நொடி வேகம் நாடி, பூக்கள் தரும் பூமியை முத்தமிட்டுக் கொண்டிருந்தது மழை.
தலைநகரின் இன்னொரு பக்கம்... அத்தனை அத்தனை அழுக்குடன் அடையாளம் மறைந்து போகும் வண்ணம் சாலையில் சாக்கடையும் சந்தைக்கடை இரைச்சலுமாய்.. மக்களின் பொறுமைக்கு சோதனையாய்.. ஹெவி ட்ராபிக்கும் ஹெவி ரெயினும்..
“டேய் ஸ்ரீ... ஒரு காரை வாங்கித்...
யாயும் ஞாயும் யாராகி யரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப்பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
யார் யாராகவோ இருந்து எவ்வித உறவுமுறையுமின்றி காதலால் மட்டுமே கலந்த இரு நெஞ்சங்களின் இனிய கலப்பு.
அன்பு வயப்பட்ட காதலர்கள் இதயத்தால் ஒன்றுபட்டு திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்து இன்றோடு மூன்று மாதங்களாயிற்று.
லாஸ் ஏஞ்சல்ஸ்...
கொஞ்சம்.. கொஞ்சமாய்.. இருள்...
சில வருடங்களுக்குப் பின்...
“ஏய் மாடசாமி அந்த ஆட்டுக்குட்டிய பிடிச்சிட்டு வா” என்ற குரலில்
“அதிகாரம் பண்ணுறதுல அப்படியே அன்னம் ஆத்தாள உரிச்சு வெச்சிருகீங்க சின்ன அம்மிணி” என்றபடி பிறந்து சில தினங்களே ஆனா ஆட்டுக்குட்டியை தூக்கிவந்தான் அவன்.
“என்ரா என்டர பேத்திகிட்ட வம்பு பன்னுற” என்ற அன்னத்தின் குரலில்
“அதெல்லாம் ஒண்ணுமில்லீங் சின்ன அம்மிணி ஆட்டுக்குட்டி கேட்டாங் புடிச்சாந்தனுங்”...
வண்ணங்கள் தூவிய விடியலின் துவக்கத்தில் சென்னை திரும்பியிருந்தான் ஸ்ரீராம்.
அவனது பிளாட்டை அடைந்தவனின் விழிகள் இரண்டும் அனிச்சையாக எதிர் பிளாட்டில் அடைக்கலம்.
காட்சி கொடுக்க யாருமில்லை கதவைத் தவிர.
இன்று விசா இன்டெர்வியு.. அதற்கான சான்றிதழ்களை சரிபார்த்து எடுத்து வைத்தவன் ஒரு குளியல் போட்டு வந்தான்.
கோபி அவனது டீமை அழைத்துக்கொண்டு பாண்டிச்சேரிக்கு டீம் அவ்டிங் சென்றிருக்க.. ஸ்ரீராம் தனக்குமட்டும்...
‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே’ - நக்கீரர் நீதி போல்
நெஞ்சில் ஈரம் இன்றி நாட்டினில் வஞ்சகர் பலர் இழைத்து வரும் குற்றங்களுக்குச் சாட்சி நானே..! சிக்ஷையும் நானே தருகிறேன்..! என்பது வெய்யோனின் நீதி போலும்.
விடியலில் தொடங்கியது தொட்டு அத்தனை வெம்பல் அவனிடம்..! தலைநகரம் தவித்துக் கொண்டிருந்தது.
ஆனால்..
அதே தலைநகரில்.. முற்றும் முரணாய் குளிர்காற்றை நிரப்பிக்கொண்டு நின்றது அந்த...