Kaathal Mozhi Pesidavaa
வான் அரங்கத்தில் மேகத்தின் அரங்கேற்றம்.. இசையோடான இன்ப மழை. அதே கணம்.. புவியிலும் ஓர் இசை அரங்கேற்றம்..!
“தி வின்னர் இஸ்.......... மிஸ் நற்பவி இராமநாதன்..!!!!!”
வான் மழையோடு வாழ்த்து மழையும் அவ்விடம் சேர்ந்திட.. சுகமாய் நனைந்தாள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறவுள்ள ‘தி வோர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற ரியாலிட்டி ஷோவிற்கான தகுதிச்சுற்று பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில்...
தென்னங் காற்றும்.. ஜன்னல் சீட்டும்..
மினி பஸ்சும்.. சொந்த ஊர்ப் பயணமும்..
யாக்கையின் ஒவ்வொரு அணுவும் ‘ஐயம் ஹாப்பி!!!!!’ என அரற்றிக் கொண்டிருக்க.. சிங்காரச் சென்னையிலிருந்து சின்னாம்பாளையத்தில் வந்திறங்கினான் ஸ்ரீராம்.
மண் வாசம் மனதை நிறைத்துச் செல்ல.. மலர்ச்சியுடன் வீட்டை நோக்கி நடை போட்டான்.
திண்ணையில் அமர்ந்துகொண்டு போவோர் வருபோரை எல்லாம் உற்று உற்று பார்த்தபடி இருந்த தொண்ணூறைத் தொட்ட...
நதியோடு நாள்களுக்கென்ன பந்தயமோ..? நில்லாது நிகழ்காலத்தை கடந்தகாலமாக்கியபடி சென்று கொண்டிருந்தது.
கதிரவன் பூமியில் பரப்பிய தன் செங்கதிர்களை திரும்பப் பெற்றுக்கொள்ள ஆயத்தமான நேரம்.. கடற்கரையில் மணல்வெளியில் அமர்ந்திருந்தாள் நற்பவி நங்கை.
ஆழியின் அலைகளைப்போல் அவள் அகமும் அமைதியற்று ஆர்ப்பரித்தது.
மனம் சமீபத்திய நிகழ்வுகளையே சுற்றிவந்தது. அந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் நிற்பவன் தான் அவன் நினைவுகளுக்குப் பின் நிற்பவனும்.
அலை நுரைகள்...
யாயும் ஞாயும் யாராகி யரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப்பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
யார் யாராகவோ இருந்து எவ்வித உறவுமுறையுமின்றி காதலால் மட்டுமே கலந்த இரு நெஞ்சங்களின் இனிய கலப்பு.
அன்பு வயப்பட்ட காதலர்கள் இதயத்தால் ஒன்றுபட்டு திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்து இன்றோடு மூன்று மாதங்களாயிற்று.
லாஸ் ஏஞ்சல்ஸ்...
கொஞ்சம்.. கொஞ்சமாய்.. இருள்...
இளந்தென்றல் காற்று இசைத்த காதலிசை அவன் செவிகளை எட்டியதோ..? தன் கண்ணிமைகளை மெல்ல விடுவித்தான் கதிராயன்.
திரைசீலைகள் அசைந்து அவனை அருகில் அழைக்க.. பஞ்சணையிலிருந்து எழுந்தவன் பால்கனி கதவுகளை திறந்துகொண்டு சென்றான்.
தூரிகை தொடா செவ்வானம்.. அங்கும் இங்குமாய் வெண்மேகங்கள்.. ஆலம் வீட்டில் விடியலை வரவேற்கும் விதமாய் பறவைகளின் சத்தம்.. ம்ஹூம்.. சங்கீதம்..!
அத்தனை இனிய காலைப் பொழுது....
‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே’ - நக்கீரர் நீதி போல்
நெஞ்சில் ஈரம் இன்றி நாட்டினில் வஞ்சகர் பலர் இழைத்து வரும் குற்றங்களுக்குச் சாட்சி நானே..! சிக்ஷையும் நானே தருகிறேன்..! என்பது வெய்யோனின் நீதி போலும்.
விடியலில் தொடங்கியது தொட்டு அத்தனை வெம்பல் அவனிடம்..! தலைநகரம் தவித்துக் கொண்டிருந்தது.
ஆனால்..
அதே தலைநகரில்.. முற்றும் முரணாய் குளிர்காற்றை நிரப்பிக்கொண்டு நின்றது அந்த...