En Kathal Senorita
அத்தியாயம் 14:
காதலித்தவள் மனைவியாகி
விட்டாள் வேறு ஒருவனுக்கு
நான் காதலனாகவே நின்றுவிட்டேன்
அவளின் நினைவுகளோடு!
விசாலாட்சியால் இன்னமும் தன் மகன் செய்ததை நம்ப முடியவில்லை. தன் அருகே நின்றிருந்த அனுவை அழைத்தவர் “அனு போய் பைகளை எடுத்துட்டு வா… கிளம்பலாம்” என்றார்.
என்ன செய்வது அருணை எப்படியாவது சந்தித்து சமாதனப் படுத்தலாம் என்றால் அன்னை கிளம்ப சொல்கிறார்களே என்ற யோசனையில் நின்றிருந்தவளை...
அத்தியாயம் 13:
கவர்ந்து சென்றதால் நான்
ராவணன் இல்லையடி!
உன்னை தவிர யாரையும்
மனதால் நினைக்காத
தெரியாத ராமனடி நான்!
தாமோதரனிடம் இருந்து தகவல் வந்த அடுத்த நொடி சஜனும் அருணும் அங்கிருந்து கிளம்பியிருந்தனர்… இவர்களுக்கு தகவல் சொல்லிவிட்டு தாமோதரன் சிவப்பிரகாசத்திற்கும் தனுசா கிடைத்த விவரத்தை சொல்ல,
“அப்படியா ரொம்ப சந்தோஷம் சம்மந்தி… நீங்க வீட்டுல இருங்க நாங்க வர்றோம் சேர்ந்து போவோம்…”...
அத்தியாயம் 12:
இத்தனை நாள் நான்
கண்ட தனிமை நொடியில்
விலகியது பெண்ணே உனை நான்
அள்ளி அணைத்திடுகையில்!
“நீ தான் வேண்டும் நீ மட்டும் தான் வேண்டும்…” என்று அவன் கூறியதில் தனுஷாவின் மனம் திடுக்கிட்டது…. ‘என்ன ஒரு தீரம் அவனது குரலில்’ என்று அவனை எடை போட முயன்ற மனதில் பயம் குடியேற தொடங்கியது.
இருந்தும் ஒருவாறு...
அத்தியாயம் 11:
எந்தன் ஊனுக்குள்
உயிராய் கலந்தவளே
நீ இல்லாத வாழ்வு நிலவில்லா
வானம் போல் வெறுமையானது!
தனுஷா கடத்தப்பட்டு முழுதாய் மூன்று மணி நேரம் ஆகியிருந்தது. தியா மூலம் விஷயம் தெரியவந்த பின் அடுத்த நொடி தியா கூறிய முகவரிக்கு விரைந்திருந்தான் அருண். அவனும் தியாவும் தங்களால் முடிந்த வரை பக்கத்தில் இருந்த இடங்களில் விசாரிக்க பலன் தான்...
அத்தியாயம் 10:
காற்றை மட்டும் குடித்து
என்னை உயிர் வாழ
சொன்னால் உயிர்த்திடுவேன்
அது உன் மூச்சு காற்றாக இருக்கும் பட்சத்தில்!
சிவப்பிரகாசம்-கயல்விழி கூறியதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைய தாமோதரனும் “அவ்வளவு அவசரம் என்ன..?” என்ற கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தார்.
தாமோதரனின் அமைதியை கண்ட சிவசங்கர் “எதும் தப்பா நினைக்காதிங்க..? ரொம்ப நாளா என் பையனை கல்யாணம் பண்ணிக்க...
அத்தியாயம் 9:
தாமரை இலை நீர்
போல் ஒட்டாமல் நீ
இருந்தாலும் உன் அருகே
நான் இருக்கும் வரமே போதும்
இவ்வாழ்நாள் முழுமைக்கும்!
பார்ட்டியில் தனு பேசியதை கேட்ட பின்பு சஜனின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. அவளிடம் காதலை உரைத்து அவள் சம்மதம் கிடைத்த பின் பெற்றோரிடம் சொல்லி அவளை கரம் பற்றலாம் என அவன் நினைத்திருக்க அதற்க்கு...
அத்தியாயம் 8:
மழையென நீ பொழிவாய்
கடலென நிறைந்து வழிந்தோடலாமென
நான் காத்திருக்க நீயோ இடியென
என்னுள் இறங்கி எனை பொய்க்க
செய்ததேனோ?
பறவைகள் அனைத்தும் தன் வீட்டிற்கு திரும்பும் அந்த மாலை வேளையில் மனிதர்களும் தங்கள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு விரைந்து கொண்டிருந்தனர். அவர்களின் அவசரம் அங்கு ஏற்பட்ட வாகன நெரிசலில் தெரிய அதிலிருந்து ஒரு வழியாக தப்பித்து வீடு வந்து...
அத்தியாயம் 7:
சூரியனை கண்டு கரைந்திடும்
பனித்துளி போல நானும் உன்
நினைவுகளில் கரைந்திட
ஆசை கொள்கிறேன்!
கோவை மருத்துவமனை அதற்குரிய பரபரப்பில் இயங்கி கொண்டிருக்க, ட்ரைனிங் மாணவிகளை அழைத்து இதய நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய முதலுதவி பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அவர்களும் கவனத்துடன் அதை குறிப்பெடுத்துக் கொண்டனர்.
“ஓகே ஸ்டூடண்ஸ், இதை பற்றி இன்னும் டிடைலா கார்டியாலிக்...
அத்தியாயம் 6:
மரண வலி பொறுத்து நம்மை
ஈன்றெடுத்த அன்னையை பின்பற்றி
நானும் பொறுத்துக் கொள்கிறேன்
பிரிவெனும் வலியை என்றாவது
உன் காதல் என் கைகளில் வந்து
சேரும் என்ற நம்பிக்கையில்!
நாட்குறிப்பை மூடியவள் “அய்யோ தனு நம்மளை நோட் பண்ண ஆரம்பிச்சுட்டா இனி ரொம்ப கவனமா இருக்கணும். எதையும் முகத்துல காட்டக் கூடாது” என்று உறுதி எடுத்துவிட்டு...
அத்தியாயம் 5:
கண் சிமிட்டும் விண்மீன்களை
கண்டு நழுவாத இதயம்
உன் விழி மீனில் சிக்குண்டு
சிதறிப் போவதேனோ?
அனுவை மருத்துவமனை கல்லூரியில் இறக்கி விட்டவன் தன் நண்பன் ஹரிஷை காண இதற்கு முன் தான் வேலை செய்த கம்பெனியான விஸ்டா கம்ப்யூட்டர் சொலியூசனை நோக்கி தனது அப்பாச்சியை செலுத்தினான்.
நேராக உள்ளே சென்றவன் “ஹாய் டா ஹரிஷ்..! எப்படி...
அத்தியாயம் 4:
வானிலிருந்து நீக்க இயலா
நீலம் போல
ஆழியிலிருந்து பிரிக்க முடியாத
மழைத்துளி போல
என்னில் இருந்தும் உன்னை பிரிக்க
முடியாதடி – பிரித்த நேரம் என் உயிர்
இம்மண்ணில் வாழாதடி!
காலையில் எழுந்து வந்து ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த இளாவின் பின்புறமாய் வந்து கழுத்தை கட்டிக் கொண்டு “டேய் தடியா..! எப்போடா வந்த..? “ என்றபடி...
அத்தியாயம் 3:
மயிலிறகாய் வருடும்
உன் நினைவுகள்!
சில நேரங்களில் கூர்முனை கத்தியாகி
என்னை குத்தி கிழிப்பதேனோ?
கல்லூரியில் இருந்து வேக வேகமாய் வெளியேறியவன் தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்று அங்கு இருந்த தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை அடைந்தான் இளா.
ஏற்கனவே தான் புக் செய்திருந்த அந்த தனியார் ஸ்லீப்பர் கோச் பேருந்தில்...
அத்தியாயம் 2:
கரு மேகம் கூட தன் பாரத்தை
அழுது தீர்த்துக் கொள்ளும்
ஆணாகி போனதாலோ என்னவோ
அழக் கூட முடியாமல் தவிக்கிறேன் நான்!
விடாமல் அடித்துக் கொண்டிருந்த அலாரத்தை எட்டி எடுத்து அணைத்து சோம்பலை முறித்தவாரே எழுந்து அமர்ந்தாள் அனன்யா. பின்னர் தன் உள்ளங்கையை விரித்து அதில் கண்விழித்தவள் நேராக குளியலறை சென்று தன் காலை கடன்களை முடித்து...
அத்தியாயம் 1:
உன் ஆழ்கடல் மனதிற்குள்
நுழைய நினைத்த எனக்கு அதில்
மூழ்கி உயிர் விடும் பாக்கியமும் கிட்டவில்லை
விட்டு விலகி கரையேறவும் மனமில்லை!
இளந்தென்றல் வீசிய அந்த இனிய காலைப் பொழுது மனதில் இதமான உணர்வை தோற்றுவிக்க பூஜை அறையில் கந்தசஷ்டி கவசத்தை கர்ம சிரத்தையாக பாடிக் கொண்டிருந்தாள் தனுஷா.மகளின் இனிமையான குரலில் ஒலித்த பாடலை மெய்மறந்து கேட்டுக்...