Alar Nee Agilam Nee
அகிலம் – 7
மனிதமனம் என்றும் விசித்திரம்தான்..
சஞ்சலங்கள் அதில் பல..
குரங்கை நினைக்காதே மனமே என்று மூளை அதட்டினால் குரங்கை மட்டுமே நினைக்கும் மனது..
கடவுளின் மேனுபாக்ச்சரிங் டிபெக்ட் போல..
ஆருவின் நிலையம் அதுதான் அன்று..
ஆதியை நினைத்து வட்டமிட்டுக்கொண்டிருந்தது..
தனக்கும் அவனுக்குமான பந்தத்தில் உழன்றுகொண்டிருன்தவள் அவளே அறியாமல் அவனுள் தொலைந்துகொண்டிருந்தாள்..
எங்கு பார்ப்பினும் அவன் நியாபகங்களே..
“அவன் எனக்கு சில்லி சூனியம் வெச்சுட்டானோ..??”, அடிக்கடி...
அகிலம் – 1
கருமேகங்கள் தோட்டத்தை முழுவதுமாக மூடியிருக்க மழைக்காய் மயிலொன்று தோகைவிரித்துக் காத்திருக்க அன்று பூத்த மலராய் இயற்கையின் வண்ணக்கோலங்களை இரசித்தவாறு அந்த பார்ம் ஹவ்ஸையொட்டிய கீற்றுக்கொட்டகையின் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருந்தாள் அவள்.. ஆரண்யா..
இயற்கையில் கலாரசிகை.. நிலத்தில் காய்ந்துகிடக்கும் சருகு முதல் வானில் பூத்துக்கிடக்கும் நிலவுவரை அனைத்துமே அவளுக்கு பிடித்தவொன்று..
கோவையின் மிகப்பெரிய கட்டுமான கம்பனியான...
அகிலம் – 3
லெமன்வுட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்..
பழுப்பும் மஞ்சளும் சேர்த்துக் குழைத்து பெயின்ட்டடிக்கப்பட்டிருந்தது அந்த ஐந்து மாடிக் கட்டிடம்..
எப்பொழுதும் போல் அந்தக் கலர் கோம்போ மனதிற்குள் ஒரு குளுமையைப் பரப்ப பார்க்கிங்கை நோக்கி காரைச் செலுத்தினான் ஆதி..
காலை முதலே தனது சின்ட்ரெல்லாவைப் பார்க்க விழிகள் ஏங்க தனது ஆபிஸிற்குச் செல்வதற்கு முன்பாக அவளை தரிசிக்க வந்துவிட்டான்...
அகிலம் – 5
காலேஜின் அருமை பெருமை காணொளிகள் ஒளிபரப்பாகும் அந்த டிவியில் இன்று அந்தப் பேராசிரியர் ரத்தினத்தின் கீழ்த்தரமான செயல்பாடுகள்..
ஒரு இறுகிய மனநிலையில் அனைவரும் அதைப் பார்த்துக்கொண்டிருக்க ரத்தினத்தின் மனைவி சந்திராவிற்கும் மகள் நிஷாவிற்கும் அதிர்ச்சியும் அருவருப்பும்..
தனது இருண்ட பக்கங்கள் வெட்டவெளிச்சமாக கூனிக்குருகினார் ரத்தினம்..
சுமார் முப்பது நிமிடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காணொளியைக்காண...
அகிலம் – 9
ஆதி சென்னையில் இருந்து திரும்பி வருகிறான் என்று சொன்னதும் ஆருவிற்கு மனது முழுதும் மகிழ்ச்சி அலைகள்..
மித்ரன் அவளிடம் ஆதியைப்பற்றி பேச இன்னும் தெளிந்திருந்தாள் அவள்..
அடுத்தநாள் அவனைப் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வு சிறு படபடப்பையும் எதிர்பார்ப்பையும் கொடுத்திருந்தது..
விடியலில் நடக்கப்போவது எதுவும் அறியாமல் ஆதியை நினைத்துக்கொண்டு விட்டதை வெறித்தபடி படுத்திருந்தாள் ஆரண்யா..
“ஆரண்யா..”, ஹாலில்...
அகிலம் – 8
கதிரோனைக் கண்டு மலரும் தாமரையாய் ஆதியைக் கண்டதும் அவனை இறுக்கமாக அணைத்திருந்தாள் ஆதியின் சின்ட்ரெல்லா..
தாய் மடி சேர்ந்த கன்றாய் அவனை ஒன்றினாள் அவள்..
அவள் அணைப்பில் முதலில் திகைத்த ஆதி பிறகு அவளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டது இறுக்கமாக..
அந்த அணைப்பில் உனக்கு என்றும் நானென்ற செய்தி..
நிமிடங்கள் கனமான மௌனத்துடன் கரைய குலுங்கத்துவங்கினாள் ஆரண்யா..
“என் சின்ட்ரெல்லா...
அகிலம் – 2
மலையோரம் மழைவாசத்துடன் ஓடும் நதியில் ஆனந்தமாய் நீராடியபடி அவள்..
வானமகன் மேகமாய் குடைப்பிடிக்க லேசாய் நனையத் துவங்கியது பூமி.. மிகமிஞ்சிய மகிழ்ச்சியில் பூரித்த முகத்துடன் அவள்..
மழையும் பூமியும் சாரலாய் காதல் கொண்டிருக்க நதியானது பொறாமையுடன் சுழலுருவாக்கியது அவள் தன்மேல் கொண்ட காதலறியாமல்..
சுழலும் சுகமென சுகமாய் அதில் அவள் சிக்கிக்கொள்ள.. கொஞ்சம் கொஞ்சமாய் அவளைத்...