Advertisement

அகிலம் – 7
மனிதமனம் என்றும் விசித்திரம்தான்..
சஞ்சலங்கள் அதில் பல..
குரங்கை நினைக்காதே மனமே என்று மூளை அதட்டினால் குரங்கை மட்டுமே நினைக்கும் மனது..
கடவுளின் மேனுபாக்ச்சரிங் டிபெக்ட் போல..
ஆருவின் நிலையம் அதுதான் அன்று..
ஆதியை நினைத்து வட்டமிட்டுக்கொண்டிருந்தது..
தனக்கும் அவனுக்குமான பந்தத்தில் உழன்றுகொண்டிருன்தவள் அவளே அறியாமல் அவனுள் தொலைந்துகொண்டிருந்தாள்..
எங்கு பார்ப்பினும் அவன் நியாபகங்களே..
“அவன் எனக்கு சில்லி சூனியம் வெச்சுட்டானோ..??”, அடிக்கடி தன்னையே கேட்டுக்கொண்டாள் அவனுள் தான் உறைந்துவிட்டது புரியாமல்..
மருதமலையில் அன்றைய சந்திப்புதான் இருவரின் கடைசி சந்திப்பு..
அதன் பிறகு ஆதி சென்னைக்கு வேலை விஷயமாக சென்றுவிட்டதால் வெறும் போன் கால்கள் மட்டுமே இருவருக்குள்ளும்..
இதுவரை பத்துப் பதினைந்திற்கு மேலிருக்கும் அழைப்புகள்..
மருதமலை நிகழ்வுகளை என்றும் அவன் பேசியதில்லை..
அதுவே அவளை அவனிடம் ஐஸ்க்ரீமாய் ஈர்த்தது..
நினைவுகள் முழுதும் ஆதிதான் ஆதியின் சின்டரெல்லாவிற்கு..
ஆனால் அது என்ன வகை உணர்வென்றே புரியவில்லை அவளுக்கு..
சுத்தலில் ஆழ்த்தியிருந்தது அவளின் மனம்..
தெளிவுகிடைக்க சந்தர்ப்பங்கள் கிட்டுமா..??
“நாளை காலை கோவை வந்திருவேன் ஆரு..”, உற்சாகத்துடன் ஒலித்தது ஆதியின் குரல் தன் சின்ட்ரெல்லாவைக் காணப்போகும் மகிழ்ச்சியில்..
“சூப்பர் ஆதி..”, அவனது உற்சாகம் அவளுக்குள்ளும்..
“நாளை மாலை லெமன்வுட் வருகிறேன்..”, ஒரு புதுவித எக்ஸைட்மன்ட்டுடன்..
“யூ ஆர் மோஸ்ட் வெல்கம் ஆதி..”, என்ற ஆரு, ”ரொம்ப எக்ஸைட்டடா இருக்க மாதிரி இருக்கே..?? எனிதிங் ஸ்பெஷல்..??”, சிறு குறுகுறுப்புடன்..
“ஸ்பெஷல் தான்.. ரொம்ப ஸ்பெஷல்.. உன்கிட்ட நேர்ல வந்து சொல்றேன்..”
“பீடிகை எல்லாம் பலமா இருக்கு..?? என்ன விஷயமா இருக்கும்..??”, மனதோடு பேசுவதாய் நினைத்துக்கொண்டு ஆதியிடம் கேட்டுவிட்டாள் ஆதியின் சின்ட்ரெல்லா..
“ஹா.. ஹா..”, பலமான சிரிப்பு ஆதியிடம்..
ஆதியென்ற சிணுங்கள் ஆருவிடம்..
பெண்ணின் சிணுங்களில் நின்றேவிட்டது ஆதியின் இதயம்..
அவனது மௌனத்தில் என்ன உணர்ந்தாளோ, “என்னாச்சு ஆதி..?? சடன் சைலென்ட்..??”, என்று கேட்டாள் ஆரு..
“ஐ ஆம் வைடிங் பார் டுமாரோ..”, குரலில் ரோஜா இதழ் மென்மையை சேர்த்து..
ஆதியின் டோனின் மாற்றத்தால் மௌனிப்பது ஆருவின் முறையானது..
“தேர் ஆரு..??”
“எஸ் ஆதி..”, என்றவளுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை..
பதுமையாகிப்போனாள் ஆதியின் சின்ட்ரெல்லா..
அந்த மௌனம் ஏனோ ஆதிக்குப்பிடித்ததாய்..
ஆருவின் மூச்சுக்காற்றின் ரீங்காரம் காதுகளில் தீண்டிச்செல்ல அதில் மூழ்கிக்கொண்டிருந்தான் ஆதி..
இருவரும் தங்களது உலகில் மூழ்கியிருக்க ஆருவின் கதவு தட்டப்பட்டது..
“ஆதி.. யாரோ கதவைத் தட்டுகிறார்கள்..”, முனங்களாக..
“தட்டட்டும் விடு ஆரு..”, ஆழியில் சிக்கி அதனுள் மூழ்கிப்போயிருந்தவனை தடுப்பதுபோல் ஆரு பேச இன்ஸ்டன்டாக பதில் வந்தது ஆதியிடம் சற்றே சத்தமாக..
“அப்புறமா பேசறேன் ஆதி..”, ஆதவனின் சத்தத்தில் தன்னை மீட்டெடுத்துக்கொண்டவள் போனைக் கட் செய்திருந்தாள்..
கதவு பலமாக தட்டப்படவே, “எஸ் கம் இன்..”, என்றவளது குரல் ஒருவித கம்பீரத்தைத் தத்தெடுத்துக்கொண்டது..
“ஆர் யூ ஆல்ரைட் ஆரண்யா..??”, என்றபடி உள்ளே நுழைந்தவனை அந்நேரம் எதிர்பாராமல் எழுந்து நின்ற ஆரு, “குட் மார்னிங் மித்ரன்..”, ஸ்கூல் பிள்ளையைப்போல்..
“இன்னும் நீ இந்த ஸ்கூல் பழக்கத்தை விடவில்லையா..??”, கேலிபோல் அவள் தலையில் கொட்டு வைத்தான் மித்ரன்..
அவனை முறைக்கமுயன்று தோற்றவளுக்கு முகம் முழுதும் புன்னகையே தங்களது பள்ளிப்பருவத்தை நினைத்து..
“என்ன பண்றதுண்ணா.. நீங்க பயம் காட்டுனது இன்னும் தெளியல எனக்கு..”, அவனைப்போல் கேலியாகவே சொன்னாள் மித்ரனின் ஸ்கூல் ஜூனியர்..
“எனக்குமே உன்னால பெல்ட் அடி கிடைச்சது மறக்கல..”
“சாரிண்ணா.. நான் இன்ட்டென்ஷலா பண்ணல அதை..”, சிறு குற்றவுணர்வுடன்..
“ஹே.. நோ கில்டி பீலிங்ஸ் ஆரு.. அன்னைக்கு தப்பு என் பேரில்தான்.. என் ப்ரெண்டை பயப்படுதறதா நெனச்சு உன்மேல் பல்லியைத் தூக்கிப்போட்டு.. நீ பயத்துல மயங்கி.. மிஸ்டேக் வாஸ் மைன்..”, என்றவன், “ஆரு.. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..”, அதுவரை இருந்த கேலிக்குரல் மாறி சற்றே சீரியஸ்ஸாக ஒலித்தது..
“சொல்லுங்கண்ணா.. புதுசா ஏதாவது டிசைன் பண்ணனுமா..??”
“இல்லை ஆரு.. இது பெர்சனல்.. உன்னோட பெர்சனல்..”, தயக்கமாக..
“என்னோட பெர்சனல்லா..?? என்னண்ணா..??”, புரியாமல்..
“ஆதி..”
ஒற்றைவார்த்தையில் புரிந்துவிட்டது ஆருவிற்கு..
மித்ரனுக்கும் ஆதிக்கும் நடுவிலிருக்கும் சொந்தம் முதலிலேயே தெரிந்திருந்தாலும் ஆதி தன்னைப்பற்றி மித்ரனிடம் கூறியிருப்பான் என்று நினைக்கவில்லை ஆரு..
மித்ரனை தீர்க்கமாகப் பார்த்தாள் அவள்..
அவளின் பார்வை புரிந்தவனாக, “ஆதியாக சொல்லவில்லை ஆரு.. நானாக கண்டுபிடித்ததுதான்.. சாரி உங்கள் இருவருக்கும் இடையில் நான் வரவேண்டும் என்று நினைக்கவில்லை..”, விளக்கத்துவங்கினான் மித்ரன்..
“புரியுது மித்ரன்.. சொல்லுங்க..”
“நீயும் ஆதியும் எனக்கு ஒன்றுபோல்தான்.. அந்த உரிமையில் சொல்கிறேன்.. ஆதிக்கும் நீயும் உனக்கு அவனும் என்னைப் பொறுத்தவரை பெஸ்ட் சாய்ஸ்..”
“……………………”
“ஐ ஆம் நாட் ப்ரெயின் வாஷிங் யூ.. நான் என்னுடைய ஒப்பீனியனைச் சொன்னேன்.. முடிவு செய்வது உன் விருப்பம்..”
மெல்ல தலையசைத்தவளிடம் கீற்றாய் மிக மெல்லிய புன்னகை இதழுக்கிடையில்..
கடிகாரம்மணி பதினொன்றே முக்கால் என்று காட்ட ஆதியின் வீட்டில் எதுவோ உடையும் சத்தம்..
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மீனாட்சி திடுக்கிட்டு எழ.. அவர் எழுந்த வேகத்தில் சைட் டேபிளில் இருக்கும் வாட்டர் பாட்டில் விழ முழித்துக்கொண்டார் விஸ்வநாதன்..
எழுந்து அமர்ந்திருந்த மீனாட்சியைக் கண்டு, “மீனா.. என்னம்மா ஆச்சு..??”, பதற்றமாக..
“என்னமோ கீழ விழற சத்தம் கேட்டுச்சுங்க.. அதான்..”
“ஏதாவது பூனையா இருக்கும்..”, என்றார் விச்சு விட்டேத்தியாக..
“பூனையா..?? அதுவும் நம்ம வீட்டிலையா..?? இருக்காது..”, என்றார் மீனாட்சி நெற்றிச்சுருக்கத்துடன்..
மீண்டும் டம்மென்ற சத்தம்.. இப்பொழுது வெகு அருகில் கேட்பதுபோல்..
“திருடனோ..??”, மீனாட்சியின் குரலில் சிறு சந்தேகம் கூடவே கவியைப்பற்றிய நினைப்பும்..
சுதாரித்துக்கொண்டார் விச்சு, “நான் போய் பார்க்கிறேன்..”, என்றபடிஅருகில் இருந்த பிளவர் வேசை எடுத்துக்கொண்டு மெதுவாக சத்தம் வரும் திசையை நோக்கி நடக்கத்துவங்கினார்..
அவரை ஒட்டியபடியே மீனாட்சி..
பெட்ரூம் கதவை திருந்துகொண்டு இருவரும் ஹாலைத் தொட்டநொடி ஆப்பானது வீட்டின் பவர்..
பயத்தில் விச்சுவின் கையை இருக்கப்பற்றினார் மீனா..
ஒரு கையில் மனைவியையும் மறுக்கையில் வேசையும் இறுகப்பற்றியபடி தயாராக இருந்தார் விச்சு..
தன்னருகில் யாரோ வருவதுபோல் இருக்க அந்நபரைத்தாக்க கையோங்கிய சமயம் பளிச்சென மின்னியது ப்ளாஷ்..
விச்சுவும் மீனாட்சியும் நின்றிருக்கும் போஸை அழகாய் படம்பிடித்திருந்தான் மித்ரன்..
இருவரின் பின்னால் நின்றுகொண்டு ஆதி பெரியதொரு பலூனை உடைக்க அதிலிருந்து பூக்கள் மழை இருவரின் மீதும்..
என்ன நடக்கிறது என்று சுத்தமாக புரியவில்லை இருவருக்கும்..
ஒரு ப்ளான்க் ஸ்டேட்டில் இருந்தனர்..
“இனிய திருமணத்தின நல்வாழ்த்துக்கள்..”, என ஆதி கவி மித்ரன் மூவரும் ஒரு கிப்ட் பாக்ஸை நீட்ட கண்கள் கலங்கியது பெரியவர்களுக்கு..
கேக் வெட்டி இருவரையும் மாற்றிமாற்றி ஊட்டச்சொல்லி கலாட்டாக்கள் செய்து இருவரையும் ஒருவழியாக்கிவிட்டனர் சிறியவர்கள் மூவரும்..
“ஆதி.. நீ எப்போடா வந்த..??”, ஆதியின் வரவை அந்நிமிடம் உணர்ந்தவராகக் கேட்டுவைத்தார் மீனாட்சி..
“ஜஸ்ட் ஒரு ஹால்ப் ஆன் ஹார்.. மித்ரன் தான் என்னை பிக்கப் பண்ணான்..”, என்ற ஆதி இருவரிடமும் ஒரு கவரை நீட்டினான்..
“என்னடா இது..??”, கவெர்மென்ட் சீலுடன் இருந்த அந்தக்கவரை கையில் வாங்கியபடியே கேட்டார் விச்சு..
“பிரிச்சுப்பாருங்கப்பா..”, என்றாள் கவி குறுஞ்சிரிப்புடன்..
கேள்விகள் பல எழுந்தபோதிலும் அதனைப் பிரித்துப்பார்த்த விசுவிற்கு வார்த்தைகள் தந்தியடிக்கத்துவங்கியது..
அவரது முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்த மீனாட்சி அவரது முகமாற்றத்தைக் கண்டு, “என்னாச்சு..??”, பதற்றமாக..
“ரிலாக்ஸ்ம்மா.. சந்தோஷமான விஷயம்.. என்னன்னு சொன்னா நீங்களும் ரொம்ப சந்தோஷப்படுவீங்க..”, என்றான் ஆதி..
“அப்படி என்னடா விஷயம்..??”
“அதுவா.. அது..”, கொஞ்சமே கொஞ்சம் இழுத்தவன், “நம்ம ஆர்கானிக் பார்மில் விளையும் காய்கறிகளின் தரத்திற்காகவும் அதை நாம் சேல் செய்யும் விதத்திற்காகவும் அப்பாவுக்கு ஒரு விருது கிடைக்கபோகுது.. விவி க்ரூப்க்கிட்ட இருந்து.. மதியம் இரண்டு மணிக்கு அநோன்ஸ் பண்ணினாங்க..”, அவ்வளவு மகிழ்ச்சி குரலில்..
“நெஜமாவா..?? என்னால நம்பவே முடியல ஆதி..”, குரலில் அத்தனை எதிர்பார்ப்பு..
அதுதான் சாக்கென்று மீனாட்சியைக் கிள்ளிய கவி அவர் கத்தவும், “உனக்கு வலிக்குதுனா நிஜம் தான்..”, சிரிப்புடன்..
அவள் முதுகில் ஒன்று போட்ட மீனாட்சி, “என்னால இன்னும் நம்ப முடியலை ஆதி..”, என்றவர் விச்சு இன்னும் மீளாததைக் கண்டு,“ரொம்ப மேனக்கட்டார் இவர்.. கெமிக்கல்ஸ் யூஸ் பண்ணி இனி மேல் விளைச்சலே வராதுன்னு இருக்க நிலத்தை வாங்கி அதில் விளைச்சல் செய்யறது எவ்வளவு பெரிய விஷயம்.. அதுவும் இயற்கை உரங்களை மட்டும் நம்பி.. ரொம்ப பெருமையா இருக்கு எனக்கு..”, ஆத்மார்த்தமாக..
மீனாட்சி சொல்வதுபோல் ரொம்பவும் சிரமப்பட்டார் விச்சு.. விருதுக்காக அல்ல அந்த உழைப்பு.. தங்களுக்கு அடுத்த தலைமுறைக்காக எல்லாம்..
மலடென்று பெயரெடுத்த நிலம்தான் விஸ்வநாதனின் குறி..
சுற்றத்தார் சொல்வதுண்டு.. இப்படி உபயோகமே இல்லாத நிலத்தை வாங்குகிறீர்களே.. காலத்திற்கும் நஷ்டம் மட்டும்தான் நமக்கு மிச்சமென்று..
அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளமாட்டார் விச்சு..
இயற்கைவேலாண்மைப் பொருட்களின் விலை கூடுதலாமே சமாளிதுவிடமுடியுமா? என்று மீனாட்சி கேட்டால், “உற்பத்தி செலவு குறையக்குறையத்தான் வேளாண்மை பொருட்களின் விலை குறையும்.. இப்பொழுது இது சாத்தியமில்லைதான்.. அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்..”, என்பவர் இப்பொழுது நம் கையில் பணம் இருக்கிறது.. அதை நல்ல காரியத்திற்காக பயன்படுத்த விரும்பிகிறேன் என்பார்..
விவரம் புரிந்த பிறகு இதெல்லாம் இந்தக்காலத்தில் சாத்தியமாப்பா என்று ஆதியும் மீனாட்சியைப் போல் பலமுறை கேட்டிருக்கிறான்..
அதற்கு அவரோ, ”இப்பொழுதுதான் இது சாத்தியம் ஆதி.. இன்னும் சில பல ஆண்டுகள் கடந்தால் இது எட்டாக்கனியாகிவிடும் நம் நாட்டுக்கு.. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும் என்பதுபோல் இதை நாம் இப்பொழுதே செயல்படுத்தவேண்டும்..”, என்பார் கூடவே எனக்குப் பிறகு நீயும் இது செய்யவேண்டும் என்ற வார்த்தைகளும் அவரிடமிருந்து பிறக்கும்..
வார்த்தைகளில் மட்டும் அவர் ஜாலம் காட்டவில்லை.. சொன்னது போல செயலிலும் ஜாலம் காட்டினார்..
அவருக்கு வழிகாட்டியாக பலரும் தூண்களாக..
ஆதி தொழிலில் இறங்கிய பிறகு விச்சுவிற்கு பலமாக..
இருவரும் புதுமையை விவசாயத்தில் புகுத்தவில்லை.. பழமையை மட்டும் புகுத்தியிருந்தனர்..
ஆம்.. முழுவதும் இயற்கை முறையே..
இவர்கள் விதைத்து கருவாகி உருவாகும் காய்கறிகள் கோவை முழுதும் ஓரளவிற்கு பிரபலமாகி இருந்தது..
தந்தையும் மகனும் சேர்ந்து செய்யும் விவசாயத்தில் கொள்ளை லாபம் இல்லையென்றாலும் இருவருக்கும் விவசாயி என்பதில் பெருமையே..
ஆட்டங்கள் பாட்டங்கள் எல்லாம் முடிய தனது சின்ட்ரெல்லாவை அழைத்திருந்தான் ஆதி துள்ளலுடன்..
ஆனால் ஆதிக்கு மறுபுறமிருந்து கிடைத்த விடை ஸ்விட்ச் ஆப்..
-அகிலமாவாயோ நீ..??

Advertisement