Thursday, July 23, 2026

    பால் வீதிப் புன்னகை

    “அம்மா நம்ம பிரச்சனையை வீட்ல போய் பேசிக்கலாம். மாமா நீங்க இதுல எதுவும் பேச வேண்டாம். ஆன்ட்டி உங்களுக்கு நல்லா தெரியும். நான் பிரகாவை பிரபோஸ் செய்யலை. அவ என்னை பிடிச்சி இருக்குன்னு சொன்னப்ப அப்பாவோட பிரண்ட் டாட்டர் சின்ன வயசுல இருந்து பார்த்து விளையாடின சைல்ட் வுட் பிரண்ட் லைப் பார்ட்னரா வந்தா...
    “மா...! நான் பேச வேண்டிய கட்டாயம் வந்துச்சி பேசினேன். எங்க அப்பாவை யார் பேச வந்தாலும் அவங்களை நான் பேச தான் செய்வேன். நீங்க இந்த பணத்தை திரு பேர்ல நல்லா ரிட்டன்ஸ் கொடுக்குற மியூட்சுவல் பண்ட்ஸ்ல போட்டு வைங்க. மத்ததை அப்புறம் பேசிக்கலாம். நான் ஹாஸ்பிடல் கிளம்புறேன். கிருஷ்ணா அங்கிள் வந்ததும் டாக்டர்ஸ்கிட்ட ...
    மருத்துவர் கூறிய விசயம் கார்த்திகையும் அதிர்ச்சியில் தான் தள்ளி இருந்தது. பிருந்தா தினமும் விண்வெளியில் பயணிக்க மேற்கொள்ளும் பயிற்சிகளை நன்கு அறிந்தவன். உடல்நலம் மிக்கவர்களையே அசைத்து பார்க்கும் திறனுள்ளது. இனி அவளால் எவ்வாறு பயிற்சியில் ஈடுபட முடியும் என்ற குழப்பம், குழந்தையின் நிலை, அடுத்து செய்ய வேண்டியது என அனைத்தும் அவன் மூளையில் காட்சி...
    திரு அவள் தன்னை கவனிக்கிறாளா என்று நின்று பார்த்தான். ஆனால் அவனின் பின்னோடு கார்த்திக் வந்து இறங்கவும், திரு இருவரையுமே கண்டு கொள்ளாமல் கிளம்பினான். அதே நேரம் வெளியே வந்த மதுரா, “பாப்பா...! திரு அத்தான் வந்து இருக்கார் பாரு. மாமாவுக்கு எப்படி இருக்குன்னு விசாரிக்க மாட்டியா...?’’ என்றார் கடின குரலில்.  அவரை முறைத்து பார்த்து...
    பால் வீதி – 18  ஒரு வாரம் மருத்துவமனை வாசம் முடிந்து, மித்ரா வீட்டிற்கு திரும்பி இருந்தாள். யாரிடமும் அவள் அதிகம் பேசவில்லை. யாரும் அவளிடமும் பேசுவதற்கு முயலவில்லை. மகள் திரும்ப கிடைத்துவிட்டாள் என்பதே பெற்றவர்களுக்கு பெரிய ஆறுதலை அளித்தது.  விசயத்தை கேள்விப்பட்ட கார்த்திக் பதறி உடனே தன் ஐ.பி.எல் தொடரை விட்டுவிட்டு வருவதாக துள்ள, அண்ணனின்...
    அந்த நொடி முதல் மித்து இப்படித்தான் முகத்தை மூன்றடிக்கு தூக்கி வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள். தன் அணைப்பில் கட்டுண்டு கிடந்தவளை, “ஏய்... நீ என் கூட இருந்தது வெறும் ஆறு மாசம் தான் மித்து. ஆனா உங்க அப்பா  அம்மா கூட 24 வருசமா இருக்க. அப்போ  அவங்களை விட்டுட்டு என் கூடவே...
    பால் வீதி – 3  கார்த்திக் தன் நிஞ்சாவை வீட்டை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான். அடுக்கடுக்காய் அவன் மனதில் பழைய நினைவுகள். தகப்பனின் வழியில் அவனால் யாரையுமே சொந்தம் என்று முழு மனதாக ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை.  “இவரு எங்க அப்பா. உன்னோட அப்பா சாமிக்கிட்ட போயிட்டாராம்.’’  புகழும், இனியனும் சிறு வயதில் அவர்களோடு விளையாட முனைந்த...
    பால் வீதி – 15 சென்னை சூப்பர் கிங்க்ஸ்க்கும், ஹைதராபாத் அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருந்தது. இரு அணியின் கேப்டன்களும் டாஸ் போட்டு பார்க்க களம் காண தயாராகி இருந்தனர். மஞ்சள் நிற சீருடையில் தயாரான கார்த்திக், நேற்றைக்கு தான் பிருந்தாவிற்காய் அனுப்பி வைத்த பரிசுப் பொருள் குறித்து சிந்திதித்து...
    கார்த்திக் சூன்யமான மன நிலையில் அமர்ந்து இருந்தான். சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் அவனை வைத்து செய்து கொண்டிருந்தனர். அவன் குறித்த மீம்களை எல்லாம் கண் கொண்டும் பார்க்க முடியவில்லை. அவனோடு சேர்த்து அவன் குடும்பத்தையே கழுவி ஊற்றிக் கொண்டிருந்தனர். போன வருட டி- டிவண்டி போட்டியில் அவன் ஹாட்ரிக் எடுத்து கோப்பையை வென்ற போது யாரெல்லாம்...
    பால் வீதி – 16  ‘இன்றைக்கு கண்டிப்பாக வெளியே போகத் தான் வேண்டுமா...? வேண்டாமா...?’ என தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள் பிருந்தா. முதல் போட்டி முடிந்த நிலையில், அடுத்த போட்டியும் பெங்களூரில் தான் நடப்பதாக இருந்தது.  அதற்காக சி.எஸ்.கே வீரர்கள் பெங்களூர் பயிற்சி மையத்திலேயே தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இரு நாட்களுக்கு முன்னால், கார்த்திக்கை ஆற்றுப்படுத்துவதற்காய்...
    ஆனால் மித்ரா, தாய், தந்தையரின் செல்வ சீமாட்டி. பிறப்பில் இருந்தே ராஜ குமாரி போல வளர்க்கப்பட்டவள். அவள் வளர வளர யாரும் திணிக்காமலேயே மேல்தட்டு வர்கத்தின் கர்வம் அவள் மேல் படர்ந்திருந்தது. அதானல் அவள் இயல்பு போல எப்போதும்அவர்களை கண்டு கொள்வதில்லை.    கார்த்திக் பழைய சிந்தைகளில் உழன்ற படி வர, வீட்டின் மரகத நிற கதவுகள்...
    பால் வீதி – 17 கார்த்திக்கின் வாகனம் பிருந்தாவின் குடியிருப்பின் அருகே வந்து நின்றது. பிருந்தா பகிர்ந்த செய்தியின் தாக்கத்தில் வரும் வழியெல்லாம் கார்த்திக் மௌனியாக பயணித்து வந்தான். அவர்களின் காலணியில் நின்று பார்ப்பது (‘ஸ்டாண்ட் ஆன் தேர் ஷூஸ்’) எத்தனை கடினமான விஷயம் என்பதை அவன் உணர்ந்திருந்தான். பிருந்தாவின் மனநிலை காலையில் இருந்ததற்கு தற்சமயம் மொத்தமாய்...
    பால்வெளி – 25     மூன்று வருடங்களுக்கு பிறகு.  தன் கையில் இருந்த புத்தகத்தை அன்றுடன் பதினாறாவது முறையாக படித்துக் கொண்டிருந்தான் திரு. எத்தனை முறை படித்தாலும், அந்த புத்தகம் அவனுக்கு சலிப்பை ஏற்படுத்துவதில்லை. அதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு.  ஒன்று அந்த கதையின் களம். இரண்டு அந்த கதையை எழுதிய எழுத்தாளர். இரண்டுமே அவன் மனதுக்கு மிகவும்...
    இம்முறை கார்த்திக் நேரடியாக திருவிற்கு அழைத்திருந்தான். அவன் மறுமொழிக்கு காத்திருக்காமல், “பிருந்தாவோட மென்டார் நீங்க தான். இந்த டைம் கண்டிப்பா நீங்க பெங்களூர் வரணும். அவளை நேரடியா வாழ்த்தணும். வெளிய சொல்லாட்டியும் அவங்க மனசுக்குள்ள அந்த ஏக்கம் இருக்கும். தயவு செஞ்சி வந்துட்டு போங்க.’’ என ஏறக் குறைய இறைஞ்சி இருந்தான்.  ஆனாலும் திரு அந்த...
    ஆனாலும் மேலும் சிறிது நேரம், கேலியும் கிண்டலுமாக வம்பளந்து விட்டே நண்பர்கள் பட்டாளம் இடத்தை காலி செய்தனர். “நிச்சயதார்த்த மேடையில நீங்க அப்படியே ஆகணும் சீனியர்..’’ என்று மிரட்டிவிட்டு மதுரா உறங்குவதற்காய் பால்கியோடு அறைக்குள் நுழைய, கால சுழற்சியை எண்ணி பிரதாப் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.   முசோரியில் இருந்த லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக...
    பால் வீதி – 12 கார்த்திக் வலை பயிற்சியில் ஈடுபட்டிருதான். இன்னும் இரு வாரங்களில் டி- 20 உலக கோப்பை தொடங்க இருந்தது. கார்த்திக் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சார்பில் விளையாட ஏலம் எடுக்கப்பட்டிருந்தான். தன்னை நோக்கி வந்த பந்துகளை அவன் சரியாக கையாள, பயிற்சி நேரம் முடிந்ததும், “வெல்டன் மிஸ்டர் கார்த்திக். யூ டிட்...
    அதே நேரம் செவிலி ஒருவர் வந்து, “வெண்ணிலா கூட இருக்குறவங்க யாரு?’’ என கேட்க அங்கிருந்த அறுவரும் எழுந்து நின்றனர். “அவங்களுக்கு கான்சியஸ் வந்துருச்சு. ஓவ்வொருத்ரா உள்ள வந்து பாருங்க.’’ என்றார்.  ஆனால் ஒரே நேரத்தில் திருப்பதி, கோதை, பால்கி, கார்த்திக், இனியன் மற்றும் மாரி அனைவரும் அவர் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தனர். வெண்ணிலா கரைந்த...
    பால் வீதி – 9 நடந்து முடிந்த சம்பவத்தை யாராலும் நம்ப முடியவில்லை. ஏன் சில நிமிடங்களுக்கு முன்னால் ஆத்திரத்தில் பொங்கிக் கொண்டிருந்த பால்கி கூட அப்படியே உறைந்து விட்டார். நண்பனுக்கு உதவியாக அந்த இடத்திற்கு விரைந்திருந்த பிரதாப் நடந்தவற்றை நம்ப முடியாது அதிர்ந்து போய் நின்றிருந்தார்.   ஆனால் அந்த செயலின் ஆதார காரணியான கார்த்திக் முகத்தில்...
    பால் வீதி – 22 தலையை எங்கேனும் சுவற்றில் கொண்டு போய் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது திருவிற்கு. அவன் எந்த முறையில் மித்ராவை அணுக முயற்சித்தாலும் அத்தனை கதவுகளும் பட் பட்டென அவன் முகத்திற்கு நேரே அறைந்து சாத்தப்பட்டன. முதல் இரண்டு நாட்கள் அவனின் அழைப்பை ஏற்காத மித்து, மூன்றாம் நாள் அவன் தொடர்பு எண்ணை...
    பால் வீதி – 7    குளித்து விட்டு வந்த மித்ரா விடுதி  அறையில் இருந்த அலமாரி கதவுகளை திறந்தாள். அதன் உள்பக்கம் 2021 ஆம் ஆண்டில் ஆட்சியர் பணிக்காய் தேர்வானவர்கள் ஆளுனரோடு இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெட்டப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது.  அந்த புகைப்படத்தின் முன் வரிசையில் திரு பளீர் புன்னைகயோடு நின்றிருந்தான். தமிழ்நாட்டில் இருந்து தேர்வான மூன்று...
    error: Content is protected !!