Naalai Nee Iranthakaalam
அத்தியாயம் - 6
இந்த தகவலை அம்சுமான், தாத்தா சகர ராஜாவுக்கு சொல்ல.. சரி நாம ஆரம்பிச்ச யாகத்தையாவது முடிச்சுவைப்போம்னு, சகர சக்ரவர்த்தி அஸ்வமேத யாகத்தை முடிச்சார். அந்த அறுபதாயிரம் பேருக்கு எப்படி திவச காரியம் செய்யறது? அவா அஸ்தி கபிலாஸ்ரமத்துலேயே கிடக்கே? அவா மனசு சாந்தியாரத்துக்கு என்ன பண்றதுன்னு தெரியாம... ரொம்ப நாள் கழிச்சு...
"சிஸ், நீங்க ஹாஸ்பிடலுக்கு வழி சொல்லுங்க, சாரை கார்ல கூட்டிட்டு போயிடலாம்.", என்று ஒருவன் கூற,
"உங்க வண்டி சாவி குடுங்க, நான் எடுத்திட்டு வந்துடறேன்", இன்னொருவன் கைநீட்ட..
கடவுள் எல்லா நேரத்திலும், அனைத்து வடிவத்திலும் கூடவே இருந்து தன்னை வழிநடத்துகிறார், என்பதை தேஜு உளமாற நம்பிய தருணம் அது. சாவியைக் குடுத்துவிட்டு, தனாவை ஏற்றிய காரின்...