Kathalae Thedalaai
தேடல் 8:
ஆறு மாதங்களுக்குப் பிறகு…
“என் இதழ் மேல் இன்று மௌனங்கள்
என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்
சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே
தூரம் தள்ளிச் சென்றாலும் உயிர் தேடுதே”
அதிகாலையில் நல்ல உறக்கத்தின் பிடியில் இருந்தாள் ரவீணா.படுக்கையில் கையை வைத்தவள் தீடீரென ஏதோ வித்தியாசத்தை உணர,விடிவிளக்கின் வெளிச்சத்தில் கண்களை நன்றாய் விரித்துப் பார்த்தாள்.அவளது கணவன் ஹர்ஷா தான்...
தேடல் 4:
‘நெஞ்சுக்குள்ளே கத்தி வீசிப் போகிறான்..’
ஹர்ஷா சொன்னது காதில் விழ , துடித்துப் போய் கீழிறிருந்து எழுந்தாள் ரவீணா.முகமெல்லாம் வாடி , கண்கள் கலங்கி ,
“நான் ஒன்னும் அவளை மாதிரி இல்ல….” என அவள் பட்டென சொல்ல
“ஆமா நீ அவளை மாதிரி இல்ல..குனிஞ்ச தலை நிமிராத அவளே அப்படின்னா….மேடம் பத்தி எனக்கு சொல்லித் தெரியனுமா…என்ன?”...
தேடல் 1 :
‘ராம நமோ ராம நமோ சாய் ராம நமோ
தசரத நந்தன ராம நமோ’
என்று பூஜையறையில் விளக்கேத்தி பாடி வித்யாவதி
“வித்யா வித்யா…….” என கணவரின் அழைப்புக் கேட்டு விளக்கேற்றி விட்டு ஹாலுக்கு ஓடி வந்தார் .
“என்னங்க……எதுக்குக் கூப்பிட்டீங்க….?”
“நான் பையன் ஃபோட்டோ கொடுத்தேனே…பூமிஜா என்ன சொன்னா?” என வினவினார் வித்யாவதியின் கணவர் செந்தில்.
செந்தில்குமார் தாசில்தாராக...
தேடல் 5:
திருமணம் முடிந்த நாலாவது நாள் ஹர்ஷா ஆபிசுக்கு செல்ல , அவன் சென்றதைப் பார்த்தவள் தானும் கிளம்பி சென்றாள்.ஆபிஸ் சென்றதுமே ராஜி,தீபக் இருவரும் அவளை சூழ்ந்து கொள்ள ,
“எப்படி இருக்க..?” என ராஜி கேட்டது தான் போதும்,அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அணையை உடைத்துக் கொண்டு அழுகையாக வெளி வர,
தோழியைக் கூட்டிக் கொண்டு...
தேடல் 6:
வீட்டிற்குள் நுழைந்த ஹர்ஷாதித்யனைப் பிடித்துக் கொண்ட வைதேகி ,
“ஹர்ஷா அம்மா உங்கிட்ட பேசனும்டா..” என
“சொல்லுங்கம்மா” என்றபடி அமர்ந்தான்.
“நானும் நாலஞ்சு நாளா சொல்லத்தான் நினைக்கிறேன் டா..ஆனா நேரம் வாய்க்கல.. நடக்கனும்னு இருக்கறது நடந்துடுச்சு.கிடைச்ச வாழ்க்கையை சந்தோசமா வாழ பழகிக்கோடா…பாவம் ரவீணா.அந்த பிள்ளையை எதுவும் சொல்லாதடா…இன்னிக்கு முகம் வாடிப் போய் வந்திருக்கா…முன்னாடி நல்லா கலகலன்னு சிரிச்சிட்டு...