Azhagae Azhagae
அத்தியாயம் - 13
விமல் உட்பட அந்த வீட்டிலிருந்த அனைவருக்குமே அது அதிர்ச்சிதான். இருந்தும் சமாளித்துக் கொண்ட விமல்¸ “மேடம்¸ ப்ரதர் சொன்னது உண்மையா?” என்று கேட்டான்.
மீரா அழுகையினூடே “ஆம்” என தலையசைத்துவிட்டு¸ “ப்ளீஸ்¸ என்னை என் பையன்கிட்ட கூட்டிட்டுப் போகமுடியுமா?” என்று கெஞ்சிக் கேட்டாள்.
“கண்டிப்பாக வாங்க மேடம்” என்று அழைத்துச் சென்றான்.
மருத்துவமனையில் டாக்டர் குழந்தையை...
அத்தியாயம் - 9
கோவை வந்தபின்னர் அபர்கீதனின் செயல்பாடுகளில் நிறைய மாற்றம். ஷோரும் சென்றால் இரவு லேட்டாகத் தான் வருவான். அத்தோடு அவன் மாடியிலேயே வேறு அறையை உபயோகிக்கத் தொடங்கிவிட்டான். தேவைக்கு அவளிடம் வருபவன் ஆசை தீர்ந்ததும் உடனே சென்றுவிடுவான்.
நான் இவனின் இந்தத் தேவையை மட்டுமே நிறைவேற்றவா பிறப்பெடுத்தேன் என்று நொந்துகொள்ள ஆரம்பித்தாள் மீரா. இது...
“சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை
நீதான் வசியம் செய்தாய்
அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில்
இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா
காதலுக்காக உந்தன் நெஞ்சை
கடன் கொடுப்பாயா ஐ லவ் யூ டா
தீராதா உன் அன்பினால் போராடி
என்னை வென்றதால்
என் அழகெல்லாம் உனக்காக சமர்பிக்கிறேன்
தினம் காலையில் எந்தன் நாள் காட்டியில்
உன் பிம்பம் நான்...
அத்தியாயம் 4
தன்னுடைய டூவீலரில் பொங்கலுக்கு எடுக்கப்பட்டிருந்த புது சேலையை கட்டிக்கொண்டு சிகைக்காய் தேய்த்து குளித்த தலைமுடியில் மல்லிகை சரமும் வைத்து அழகாக கிளம்பிச் சென்றவளைப் பார்த்து மகளிடம் “இவளைப்போய் அழகில்லாதவள்னு சொல்றவங்களுக்கு கண்டிப்பாக கண்ணில் எதாவது பிரச்சனை இருக்க வேண்டும்” என்றார்.
விசாலத்திற்கும் மீராவைப் பற்றித் தெரியும்தான். மற்ற இருவரையும்விட சற்று நிறம் மட்டுந்தான் குறைவு....