யுகம் சுகம் தானே
“அப்போ அவன் பேசினது, செஞ்சது..?”
“பிரசாத்தை ஹாண்டில் பண்ண என்னால முடியும்..”
“அவன் என்னை பேசியிருக்கான்..”
“அதை நீங்க கேர் கூட பண்ணியிருக்க மாட்டிங்கன்னு எனக்கு நல்லா தெரியும்..” சர்வ நிச்சயமாய் சொன்னாள்.
அது என்னமோ உண்மை தான். உதய்யை பொறுத்தவரை அவன் அவனை அப்படியே ஏற்று கொள்வான். இது தான் நான், என் ஸ்டேட்டஸ் இது தான், என்...
யுகம் சுகம் தானே 14
கணவனின் நெஞ்சில் சாய்ந்திருந்த ஷாவிற்கு முன் போல் இல்லாமல் மனம் இப்போது கொஞ்சம் அமைதியாக இருந்தது. அவளின் இத்தனை வருட பாரத்தை உதய்யிடம் சொல்லி அழுதிருக்க, லேசான உணர்வு.
அப்படியே தூங்கி போக, மறுநாள் மிகவும் தாமதமாக தான் எழுந்தனர். அவர்களை யாரும் எழுப்பவும் செய்யவில்லை. அனிதாவும், அனிதா கணவரும் காலை...
யுகம் சுகம் தானே 6
“உங்களை பார்க்க உதய் சார் வந்திருக்கார்..” ரூமில் இருந்த RK விடம் சென்று ஜித்தனின் அப்பா தியாகு சொல்ல,
“உட்கார வைச்சு கவனிங்க.. வரேன்..” என்றவர் யோசனையான முகத்துடன் டிஷர்ட் அணிந்து ஹாலுக்கு சென்றார்.
அங்கு தியாகுவின் மனைவி ஜோதி உதய்க்கு டீ கொடுத்திருக்க, அது டீபாய் மேல் ஆறி போயிருந்தது. உதய்...
“கண்டிப்பா கூடிய சீக்கிரமே மீட் பண்ணலாம் பிரசாத்..” உதய் ஒரு வித தீவிரத்துடன் தான் சொன்னான்.
“சார்.. நீங்க கொஞ்சம் உஷாரா..” ஜின்னா அவனிடம் சொல்ல வர,
“கண்டிப்பா உஷாரா தான் இருப்பேன் ஜின்னா, நான் சாதிக்க வேண்டியது இன்னும் எவ்வளவுவோ இருக்கு..” என்றுவிட்டவன், “நீ கொஞ்சம் பொறுமையா RK சார் சொல்றதை கேட்டு நடப்பா..” என்றான்...
கண்ணம்மாவிற்கு வீட்டில் பெண்கள் இல்லாததால் டக்கென வந்த விஷயத்தை ஆரம்பிக்க முடியவில்லை. கணபதியை பார்க்க, புரிந்து கொண்ட அவர்,
“முதல்ல நாங்க உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறோம், உதய் இப்படி உங்ககிட்ட கலந்துக்காம கல்யாண விஷயம் வெளியே சொன்னதுக்கு..” என,
“இல்லை.. இல்லை அப்படி பார்த்தா நான் தான் உங்ககிட்ட முதல்ல மன்னிப்பு கேட்கணும், நாலு அஞ்சு வருஷத்துக்கு...
யுகம் சுகம் தானே 21
“கந்தண்ணே.. கிரீன் டீ..” உதய் அவனின் ஜிம் ரூமில் இருந்து கூப்பிட்டு சொல்ல, இரண்டு கப் கிரீன் டீ வள்ளி மூலம் மேலே சென்றது. யோகா முடித்த உதய், ஷா இருவரும் கையில் கிரீன் டீயுடன் அமர்ந்திருந்தனர்.
“இன்னிக்கு என்னென்ன மீட்டிங்..?” உதய் மனைவியின் டே ஷெடியூலை எப்போதும் போல கேட்டு...
யுகம் சுகம் தானே 11
“அன்னிக்கு இப்படித்தானே பதட்டத்தோட என்னை பார்க்காம பார்த்துட்டு இருந்த, அப்போ உன்கிட்ட வந்து சொல்ல தோணுச்சு ஏன் இவ்வளவு பதட்டம், நான் தானேன்னு..” ஷாராவின் கை பிடித்து உதய் சொல்ல, அவளின் முகம் சிவந்து தான் போனது.
“இப்போ என்ன திடீர்ன்னு..” மனதில் நினைத்தவள், அவனிடம் இருந்து தன் கைகளை...
இது போல திருமணங்களில் தான் இரு குடும்பத்தின் வசதி வாய்ப்பு மற்றவர் பார்வைக்கு விருந்தாக அமையும். இவர்கள் சம்மந்தத்தில் ராம் குடும்பம் அளவிற்கு உதய் குடும்பம் இல்லை என்றாலும், இவர்களும் சாதாரணமானவர்கள் இல்லையே. உதய்யின் வளர்ச்சியும், பிஸ்னஸ் விரிவும் அவர்களை ஒரு படி மேலேற்றி இருக்க, திருமண ஏற்பாடுகள் தடல்புடல் தான்.
ராம் கூட கொஞ்சம்...
யுகம் சுகம் தானே 15
“இன்னும் என்ன பண்ற அனி..? நேரம் ஆச்சு.. சீக்கிரம்..” அனிதாவின் கணவர் ராகுல் பிள்ளைகளை தயார் செய்து கொண்டே மனைவிக்கு குரல் கொடுத்து கொண்டிருந்தான்.
“இதோ வந்துட்டேங்க.. ரொம்ப நாள் ஆச்சு இல்லை புடவை கட்டி, அதுவும் இந்த காட்டன் சேரி சரியாவே நிக்க மாட்டேங்குது..” சலிப்பாக மடிப்பை சரி செய்தவாறே...
யுகம் சுகம் தானே 20 PREFINAL
நடுவானில் நிலா ஒளிர்ந்து கொண்டிருக்க, உதய், ஷா இருவரும் கையில் பாலுடன் சேரில் அமர்ந்திருந்தனர். சுற்றலிலும் மெல்லிய வெளிச்சம், குளிர்ந்த காற்று, ஜாதி மல்லியின் வாசம் என்று அந்த நடுஇரவு உதய்க்கு ஏகாந்த மனநிலையை கொடுத்தது.
இளம் சூட்டில் இருந்த பாலை குடித்தபடி மனைவியை பார்த்தான். கலைத்திருந்தவளின் முகம் அவனுக்கு...
பிரசாத்திற்கு உதய் மேல் இருந்த சந்தேகம் தீர்ந்தது அந்த நொடி. இவன் தான் என்னை தூக்கியிருக்கான்.. உள்ளுக்குள் கொந்தளித்தவன், “அதான் ரிசப்ஷன் இருக்கு இல்லை உதய்.. அதுக்கு கண்டிப்பா வந்துடுறேன்..” என்றான் வஞ்சத்துடன்.
“வாங்க வாங்க.. உங்களை ரொம்ப எதிர்பார்ப்பேன்..” உதய்யின் முகத்தில், வாடி.. வந்து தான் பாரேன்.. என்ற சவாலே தான் இருந்தது.
இருவரையும்...
இதோ நாளை மூன்று வருட ஆனுவல் பன்க்ஷனும், அவர்களின் புது வீட்டிற்கான கிரக பிரவேசமும். ராம் வீட்டிற்கு பக்கத்து இடமே அவர்களுக்கு கிடைக்க, உதய் கண்ணம்மாவிடம் பேசி வாங்கிவிட்டான்.
ராமிற்கு மனைவி வாழ்ந்த வீடு என்ற அட்டேச்மெண்ட் இருக்க, அவரால் அந்த வீட்டை விட்டு வரமுடியவில்லை. ஷாவிற்கோ தந்தையை நினைத்து கவலை. பார்த்தவன் வீட்டில்...
யுகம் சுகம் தானே 2
“இப்படி பண்ணிட்டியே உதய்..? உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல..” குணா வருத்தத்துடன் சொல்லி கொண்டிருக்க, உதய் அமைதியாக அமர்ந்திருந்தான். கொலு பூஜை முடிந்து எல்லாம் கிளம்பியிருக்க, இவனை மட்டும் நிறுத்தி வைத்திருந்தார் குணா.
“என்னப்பா..? என்ன ஆச்சு..?” முகில் புரியாமல் கேட்க,
“அதை உன் ப்ரண்ட்கிட்டேயே கேளு முகில்..” என்றார் குணா...
“எதுக்கு இவ்வளவு அவஸ்தை..?” கண்ணம்மாவிற்கு மகனின் வலி புரிந்தது. வீம்பு புடிச்சவன், நாம தான் ஏதாவது செய்யணும்..? மனதில் என்ன செய்ய என்ற யோசனை.
“ரொம்ப நேரம் ஆயிடுச்சு, வா உள்ள போலாம்..” மகனுடன் உள்ளே வந்தவர், அவனுக்கு பால் எடுத்து வந்து கொடுத்தார்.
“எனக்கு காபி கொடுங்க..” என்றான் அவன்.
“தூங்க முடியாது, பாலே குடி..” கையில்...
“எது.. இந்த காஞ்சி போன ரோல், சமோசாக்கு முந்நூறா..? பகல் கொள்ளை..” இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டி கொண்டிருக்க, மேலே எப்போதும் போல சிசிடிவி பார்த்து கொண்டிருந்த ஷா கண்களில் சிக்கினர்.
பார்த்தவள் அப்படியே வைத்துவிட்டாள். அடுத்து போகவில்லை. கணவன் முகத்தில் தெரிந்த அந்த சிரிப்பு , மலர்வு கண்ணம்மா மேல் கொண்ட அவனின் பாசத்தை...
அடுத்து மகன் வளர்ந்து நிக்கிறான். அவனுக்கு எல்லாம் செய்ய வேண்டுமே.. அதிலும் அவன் பிஸினஸில் வளர வளர அம்மாவாக மகிழ்ச்சி கொண்டாலும் அவனின் பழக்க வழக்கத்தில் முன்னை விட அதிக கண்காணிப்பு.
கையில் பணமும், சுதந்தரமும் தாராளமாக இருக்க, பயம். எங்கே மகன் தவறிவிடுவேனோ என்று. ஒரு நாளில் ஓராயிரம் ஆட்களுடன் பழகுகிறான், அவர்கள் எல்லோரும்...
“இன்னும் ரெண்டு நாள் ஆகும் உதய், அப்பறம் நானே சொல்லணும் நினச்சேன், அனிதா குடும்பம் இங்க இருக்கும் போதே எல்லாம் குலதெய்வ கோவிலுக்கு போய்ட்டு, பொங்கல் வச்சுட்டு வந்துடலாமா..?” அவருக்கு மனம் உறுத்த தொடங்கி இருந்தது.
உதய்க்கு உடனே நேற்று ஷா பேசியது தான் நினைவுக்கு வந்தது. “நான் சொல்றேன்ம்மா..” என்றான்.
“போன வாரம் நான் கேட்டப்போ...
யுகம் சுகம் தானே 1
“கந்தண்ணே.. ஜிம்முக்கு கிரீன் டீ கொடுத்து விட்டுடுங்க..” சொல்லி போனை வைத்துவிட்ட “உதய்.. உதய் கிருஷ்ணா..” தொடர்ந்து டம்பிள்ஸை எடுக்க செய்தான். தினமும் காலையில் இங்குதான் அவனின் நாள் தொடங்கும்.
“தம்பி டீ..” கந்தனின் மனைவி வள்ளி எடுத்து வந்து கொடுத்தார்.
“தேங்க்ஸ்க்கா..” எடுத்து கொண்டவன் குடிக்க ஆரம்பிக்க, போன் ஒலித்தது. ட்ரு...
யுகம் சுகம் தானே 12
இன்னும் இரண்டு நாட்களில் பவ்யாஷாரா.. உதய் திருமணம். நாளை மாலை மண்டபத்திற்கு செல்ல வேண்டும். அடுத்த நாள் முகூர்த்தம். இரு வீட்டிலும் கல்யாண வேலைகள் வேக வேகமாக நடந்து கொண்டிருந்தது.
உதய் வீட்டில் பாதி உறவினர்கள் வெளியூர் என்பதால் இன்று, நாளை போல வீட்டிற்கே வந்துடுவார்கள். வரத்தான் வேண்டும். இல்லை என்றால்...
யுகம் சுகம் தானே 10
“இன்னும் பர்ஸ் கிடைக்கலையாங்க..? நேரம் ஆச்சு, அப்பறம் நல்ல நேரம் முடிஞ்சிடும்..” கண்ணம்மா ஹாலில் இருந்து கணவரிடம் கத்தி கொண்டிருக்க, சோபாவில் அமர்ந்திருந்த உதய்யோ கண்ணம்மாவையே பார்த்து கொண்டிருந்தான்.
“இதோ வந்திட்டேன் கண்ணு, ஏன் இவ்வளவு டென்க்ஷன்..?” கணபதி கையில் பர்ஸுடன் வந்தார்.
“டென்க்ஷன் ஆகாம, நல்ல நேரத்துல முகூர்த்த பட்டு...