இன்னும் ரெண்டு நாள் ஆகும் உதய், அப்பறம் நானே சொல்லணும் நினச்சேன், அனிதா குடும்பம் இங்க இருக்கும் போதே எல்லாம் குலதெய்வ கோவிலுக்கு போய்ட்டு, பொங்கல் வச்சுட்டு வந்துடலாமா..?”  அவருக்கு மனம் உறுத்த தொடங்கி இருந்தது

உதய்க்கு உடனே நேற்று  ஷா பேசியது தான் நினைவுக்கு வந்தது. “நான் சொல்றேன்ம்மா..”  என்றான்

போன வாரம் நான் கேட்டப்போ போலாம்ன்னு தானே சொன்ன, இப்போ என்ன..?”

ம்மா.. நான் எப்படி வேலை இருக்குன்னு பார்த்துட்டு சொல்றேன் இரு, அவசரப்படாத..”

டேய் இதுவா அவசரப்படுறது, உங்க கல்யாணம் முடிஞ்சே ஒரு மாசம் ஆகுதுடா, இதுக்கு மேல தள்ள முடியாதுஅதான் ராம் அண்ணா சரியாகி வந்துட்டு இருக்கார் இல்லை..”

நான் மும்பை போய்ட்டு வந்து பார்த்துக்கலாம் விடு.. நான் ஆபிஸ் கிளம்புறேன்அங்கிருந்து அப்படியே ஏர்போர்ட், இரண்டு நாள்ல வந்துடுவேன்..”  என்றவன் அப்போதே மும்பை செல்ல பேக்கோடு கிளம்பிவிட்டான்

நேரே கன்ஸ்டரெக்ஷன் ஆபிஸ் சென்று அப்பாவிடமும் மும்பை செல்வதை பற்றி சொல்லி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தவன், அங்கிருந்த வேலைகளை பிரித்து கொடுத்து நேரே ஹோட்டல் சென்றான். லன்ச்சுடன் கூடிய கிளையண்ட் மீட்டிங்

முடித்து வெளியே வர, எதிரில் பிரசாத், காலதரன். உதய் இங்கிருப்பது தெரிந்து வந்திருக்கிறார்கள். மூக்கை தேய்த்து விட்டு கொண்ட பிரசாத், “ஹலோ உதய்..” என்றான் கை நீட்டி

ஹலோ..”  உதய் கைகள் அவனின் கைகளை அழுத்தமாக பிடிக்க, பிரசாத்தின் இறுக்கமான பிடி அவனின் வன்மத்தை காட்டியது

என்ன மீட்டிங்கா..? பிஸ்னஸ்ல மேல மேல போறீங்க போல, பார்த்து ரொம்ப மேல போயிடாம.. கீழே விழுந்தா..?” 

அவர் கீழே விழுந்தா என்ன பிரசாத், அதான் தூக்கிவிட மாமனார் இருக்காரே..”  கலாதரன் இடையிட்டு சொன்னார்

அதுவும் சரி தான் சித்தப்பா, RK சார் மாதிரி மாமனார், ஷா மாதிரி பொண்டாட்டி இருந்தா எல்லாம் சாத்தியம் தான்.. ஆனாலும் ஒருத்தன் கீழே விழுந்ததுக்கு அப்பறம் மாமனார்  தூக்கிவிட்டு, அவர்  தயவுல வாழுறது..”  பேசி கொண்டே போக, உதய் அமைதியாகவே நின்றான் அவனின் எப்போதுமான அலட்சிய பார்வையுடன்

இருடா.. இரு, உனக்கான ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டேன், இனி உனக்கு தொடர்ந்து அடி தான்.. அப்பறம் எப்படி இப்படி நிமிர்ந்து நிக்கிறன்னு நானும் பார்க்கிறேன்..” மனதில் கருவி கொண்ட பிரசாத், 

“அப்பறம் உதய் மும்பை போறீங்க போல அந்த ப்ராஜெக்டிற்காக..” கேலியாக கேட்டான். 

“நீங்களும் வரீங்க தானே அதே பிளைட்ல.. அங்க பேசுவோம் பிரசாத்.. பை..”  உதய் கட்டுப்படுத்தி வைத்த கோபத்துடன் கிளம்பிவிட்டான். இப்போது எதுவும் பேசி கெடுத்து கொள்ள விரும்பவில்லை. நிதானம், பொறுமை மிக முக்கிய தாரக மந்திரம்.

நேரே கன்சல்டன்சி ஆபிஸ் சென்றவன், அவனின் டேபிளுக்கு வெளியே வேலை பார்த்து கொண்டிருந்த கவினை பார்க்க கைகள் பரபரத்தது. எல்லோரும் அவனுக்கு விஷ் செய்தது போல கவினும் செய்ய, வெகுவாக முயன்றே, பதில் விஷ் கொடுத்து உள்ளே சென்றான்

அதன் பிறகு நேரம் அவனுக்கு பறந்தது. இருக்கும் வேலைகளை எல்லாம் முடித்தவன், மாலை எல்லோரையும் சீக்கிரமே போக சொல்லிவிட்டான் ஆபிஸ் மெயின்டனன்ஸ் என்று. எல்லோரும் கிளம்ப, சிசிடிவி அனைத்தும் அனைத்தவன், டெண்டர் முழுதும் மறுபடியும் செக் செய்து, அமவுண்ட் போட்டு  அனுப்பி வைத்தான்

அதற்கு பிறகே நேரம் பார்க்க, ஏழு  மணிபத்து மணிக்கு செக் இன் செய்ய வேண்டும். போற வழியில சாப்பிட்டுக்கலாம்.. பார்மல் உடைய மாற்றி, டிராவல் உடை அணிந்து பேக்கை எடுத்து கொண்டு கிளம்பினான். ட்ரைவரை முன்னமே வர சொல்லியிருக்க அவனின் காரிலே கிளம்பினர்

கார் டிராபிக்ல ஊர்ந்து போக, நன்றாக சீட்டை சாய்த்து  ரிலாக்ஸாக அமர்ந்தவனுக்கு ஆட்டோமேட்டிக்காக மனைவி நினைவு. அவளிடம் சொல்லவே இல்லையே. எப்படி சொல்ல..? போன் செய்ய மனம் இல்லை. வாட்ஸ் அப் மெசேஜ் மட்டும் அனுப்பி வைத்தவன், வீட்டிற்கு போன் செய்து பேசி விட்டு, மெயில்களை செக் செய்ய ஆரம்பித்தான்

ஹோட்டல் வர, சாப்பிட்டு ஏர்போர்ட் சென்று சேர்ந்தான். அரை மணி நேரம் முன்னமே வந்திருக்க, பொறுமையாக இறங்கி உள்ளே வர, ஜின்னா நின்றிருந்தான்

இவன் எங்க இங்க..?” கண்களை சுழல விட்டவனுக்கு ஷாவின் கார் பட்டது. இவன் பார்க்கவும் காரில் இருந்து இறங்கி வந்தாள்

இந்த நேரத்துக்கு ஏன் வரணும் ஜின்னா..?” மனைவியிடம் பார்வை பதித்து அவனிடம் கேட்டான்

பவ்யா வரணும்ன்னு ஆசை பட்டுச்சு..” என்றவன் தள்ளி போக, கணவன்,  மனைவி இருவர் மட்டுமே. மிகவும் வாடி போய் இருந்தாள். அவளின் எப்போதுமான கம்பீரம் இல்லைதளர்ந்து நின்றிருந்தாள். பார்த்தவனுக்கு மிகவும் வருத்தம் தான். ஆனாலும் அவளின் பேச்சு.. மீண்டும் இறுகி கொண்டான்

காபி குடிக்க போலாமா..? நேரம் இருக்கு தானே..?” ஷா கேட்க, அவன் ஜின்னாவை தான் பார்த்தான்

நான் பேசிக்கிறேன், எனக்கு இப்போ கண்டிப்பா ஏதாவது வேணும்..”  குரல் மிகவும் கம்மியிருந்தது

வா..” உதய் வெளியவே இருந்த காபி ஸ்டாலுக்கு அழைத்து செல்ல, ஜின்னா வேகமாக இவர்களிடம் வந்தான். ஷா பேசி அனுப்பி வைக்க, உதய் முதலில் கேக் வாங்கி தான் சாப்பிட்டு அவளுக்கு கொடுத்தான். ஷா மறுக்கவில்லை. சாப்பிட, உதய் இன்னொரு கேக் வாங்கி கொடுத்தான்

மில்க் ஷேக் இருக்க அதையே வாங்கி கொடுத்தான். அவள் குடித்து கொண்டே  நடக்க, உதய்யும் அவளுடன் நடந்தான். நுழைவு வாயிலை விட்டு தள்ளி வர, ஷா குடித்து முடித்திருந்தாள். வாங்கி சென்று போட்டு வந்தவன், மனைவியை பார்க்க அவள் அங்கிருந்த தூணில் சாய்ந்து நின்றிருந்தாள்

இவன் வரவும், “நான் அப்படி பேசியிருக்க கூடாது, சாரி..”  ஷா உணர்ந்து மன்னிப்பு வேண்டினாள். உதய் பதில் ஏதும் சொல்லவில்லை.

அவனின் அமைதியில் மிகவும் பலவீனமாக உணர்ந்தாள் பெண். முதல் ஊடல். எப்படி சமாதானம் செய்ய என்று தெரியவில்லை. அதுவும் தவறு அவளது எனும் போது திணறவே செய்தாள். மேற்கொண்டு பேச முடியவில்லை. கணவனை பார்த்தாள்

லேப்டாப் பேக் இரு தோளில் மாட்டியிருக்க, அவனின் டிராலி ஜின்னா இருக்கும் இடம் இருந்தது. ட்ராவலுக்காக ஜீன்ஸ், சாக்லேட் கலர் டிஷர்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து, கைகளை பேக்கெட்டில் விட்டு அவர்களை கடக்கும் கார்களை பார்த்து நின்றிருந்தான்

கண்ணை மிகவும் கவர்ந்தான். கட்டி கொள்ள உடல், மனம் இரண்டும் துடித்தது. அவனின் ஒதுக்கத்தில் நெருங்க முடியவில்லை. துயரத்துடன்  முகம் திருப்பி கொள்ள, உதய் மனைவியை பார்த்தான்

அவசரமாக கிளம்பி வந்திருக்கிறாள் என்று தெரிந்தது. பிளாக் பேண்ட், ஆலிவ் கிரீன் டிசர்ட், ப்ரீ ஏர், நெத்தி குங்குமம் என்று சோர்விலும் மிளிரவே செய்தாள். பெரு மூச்சுடன் நேரம் பார்த்தான்

அவன் கிளம்ப போவதை உணர்ந்து கொண்ட ஷா, உதடுகள் துடிக்க, “ப்ளீஸ்ங்க..” என்றாள்

ஏன் இப்படி பேசுன..?” அதற்கு மேலும் அவளை தவிக்க விட முடியவில்லை

உங்களை தேடி தான் இப்படி பேசிட்டேன்..”  மனதில் சொல்லி கொண்டவள், அதையே கணவனிடம் சொல்ல முடியாமல் நின்றாள். மனம் முழுதும் தடுமாற்றம்.

“நீ  இப்படி நினைக்கிற அளவுக்கா நாங்க நடந்துகிறோம்..” உதய் கேட்க, ஷா கண்களில் ஒற்றை கண்ணீர் துளி உடைந்தே  விட்டதுவேகமாக முடி ஒதுக்குவது போல சுண்டிவிட்டாள்.

நாங்க..”   இந்த ஒற்றை வார்த்தை இவ்வளவு வலிக்க வைக்குமா..? நாங்க என்றால் அப்போ அந்த  ‘நாங்க’ வில்    ‘நான்’   இல்லையா..?  ஒற்றை சொல் பிரிக்குமா..? பிரித்து தான் வைத்தது

அந்த நாங்க அவனின் பெற்றவர்களாக இருக்கட்டும், உடன் பிறப்புகளாக இருக்கட்டும், ஏன் அவர்கள் பிள்ளைகளாக கூட இருக்கட்டும், அது நிச்சயம் கணவன்மனைவியை பிரித்து பேசும் சொல் தான்.  

ஏற்கனவே புகுந்த வீட்டு ஆட்களிடம் ஓட்ட முடியவில்லையோ என்ற தவிப்பில் இருந்தவளுக்கு, கணவனின் இந்த பேச்சு இன்னும் வலிக்க வைத்தது

“பதில் சொல்லுடி..”  உதய்க்கு அவனின் வார்த்தை புரியவில்லை. அது கொடுக்கும் வேதனை புரியவில்லை. சாதாரணமாக கேட்டுவிட்டான்

“நீங்க கிளம்புங்க.. நேரம் ஆச்சு..”  கமறிய குரலை செருமி சொன்னாள்

பதில் இல்லையில்லை.. அப்பறம் எதுக்கு இங்க வந்த..? போடி..”  அடிக்குரலில் சீறியவன் வேக நடையுடன் கிளம்பிவிட்டான்.

“வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே..

 வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே..

 வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்..

 வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே..!!

 இது தவித்திடும் நெருப்பா..?

  இல்லை குளிர்ந்திடும் நீரா..?

 இது பனி எரிமலையா..?

 இதை அறிந்தோர் யாருமில்லை..

 உள்ளத்திலே அரை உண்டு வாசலில் இல்லை..!!!