மஞ்சள் காட்டு மைனா
மஞ்சள் காட்டு மைனா 4
'இப்போ என்ன கேட்க போறானோ?' என்று எல்லாம் தேவாவை பார்த்தனர்.
தேவா திறமையான வக்கீல் என்பதை விட, அவன் ஒரு கிரிமினல் வக்கீல் என்பதாலே, சந்தோஷ் பக்கம் அவன் போக கூடாது என்பது இவர்களின் நோக்கமாக இருந்தது.
யாருக்கு தெரியும் சந்தோஷுக்கு அப்படி ஒரு பெண்ணுடன் பழக்கமே இல்லை என்று கூட வாதாடுவான்.
அப்படிபட்ட...
"இப்போ எல்லாம் பயமா இருக்குண்ணா. நான் இருக்கிற வரை என் மகளுக்கு பாதுகாப்பு. நானும் இல்லாமல் போனா என் பொண்ணு என்ன பண்ணுவான்னு நினைச்சாலே" என்ற வளர்மதி தளர்ந்துவிட்டார்.
"நல்லதா நினை வளர்மதி. நீயும், உன் பொண்ணு ரொம்ப நல்லா இருப்பீங்க. தைரியமா இருக்கணும்" என்றார் மனிதர்.
"தைரியம். அது மட்டும் தான்ண்ணா இப்போ என் சொத்து....
மஞ்சள் காட்டு மைனா 19
மணமக்கள் கோவிலில் இருந்து மண்டபத்திற்கு வந்தனர். "எதாவது சாப்பிட்டுக்கோங்க. அப்புறம் மேடையில் இருந்து இறங்க நேரமாகிடும்" என்று செல்வி சொல்ல,
"எனக்கு காபி மட்டும் கொடுங்கக்கா" என்றான் தேவா.
துளசியை பார்க்க, "எனக்கும் அண்ணி" என்றாள்.
"லேட் ஆகிடும் துளசி. சாப்பிட்டுக்கோ" என,
"பசிக்கலை அண்ணி" என்றுவிட, இருவருக்கும் காபி வந்தது.
இதுவரை தன்னிடம் பேசாத கணவனை...
மஞ்சள் காட்டு மைனா 3
துளசிக்கு எப்போதும் அவளை பற்றிய சிந்தனைகளே அதிகம்.
பருவ வயதில் எல்லோருக்கும் தன்னை ரசிக்க தோன்றும். ஆனால் இவளுக்கு ஆராய தோன்றியது.
ஆம். அவளின் தந்தை சரவணன் இருக்கும் வரை, இந்த ஆராய்ச்சி எல்லாம் இருந்ததில்லை.
சரவணனுக்கும், மகளுக்கும் எல்லா விஷயத்திலும் நல்ல ஒற்றுமை. இருவரும் ஒரே குணம் கொண்டவர்கள்.
அதனாலே சரவணனால் அவரின் குடும்பத்திடம்...
மஞ்சள் காட்டு மைனா 5
துளசியின் பார்வையில் கடுப்பாகி சுற்றி கொண்டிருந்த தேவா, மாலை போல சந்தோஷை சந்திக்க சென்றான்.
"சார் எப்போ மீட் பண்ணலாம்?" தொடர்நது போன் செய்து கொண்டிருந்தான் சந்தோஷ்.
"அலுவலகத்தில் இல்லை. வீட்டிற்கு வந்துவிட்டேன்" என்று சொல்லியும் விடவில்லை.
அவனின் தொல்லை தாங்க முடியாமல், "சந்தோஷ். வரேன். பேசலாம்" என்று அழைப்பை துண்டிக்க,
"தேவா" என்று பசுபதி...
மஞ்சள் காட்டு மைனா 14
செல்வி அம்மா வீட்டிற்கு வந்திருந்தாள். ஜெயலட்சுமி மகளை வர வைத்திருந்தார்.
"உனக்கு ஆயிரம் வேலை இருக்கும். அம்மாவை எல்லாம் உனக்கு எங்க ஞாபகம் இருக்க போகுது? நானா உன்னை கூப்பிட்டா கூட, நாளைக்கு வரேன், அடுத்த வாரம் வரேன்னு சொல்ற. உங்க யாருக்கும் நான் தேவையில்லை" என்று கோவத்தில் பேசி போனை...
மஞ்சள் காட்டு மைனா 20
அதிகாலையிலே துளசியின் போன் ஒலித்தது. கண்களை திறக்க முடியாமல் நல்ல தூக்கம். "ச்சு" என்ற தேவாவின் குரலில் துளசி கண்களை திறந்தாள்.
நேற்றிரவு கணவனை மடி தாங்கி உறங்க வைத்ததும், பின் அவன் தலையை தலையணையில் நகர்த்தி வைத்து தானும் படுத்தது நினைவிற்கு வந்தது.
அருகருகே ஆழ்ந்த தூக்கம். முந்தின இரவு தூங்காததால்...
மஞ்சள் காட்டு மைனா 24
மிகவும் பிடித்தமான கனவு பலித்ததா என்ன?
தன் வீட்டில் துளசியின் நடமாட்டம் அப்படி தான் என்றது!
தேவா வீட்டிற்குள் வலது கால் எடுத்து வைத்து, கணவனின் மிகப்பெரிய வருத்தத்தை போக்கிவிட்டாள்.
உங்க பொண்டாட்டி துளசி எந்த கால் எடுத்து வைச்சு வீட்டுக்குள்ள வராங்கிறது தான் கணக்கு! என்று செயலில் காட்டினாள்.
துளசியின் முன்னெடுப்பு தேவாவின் கோவத்தை,...
மஞ்சள் காட்டு மைனா 10
"என்னடா சொல்ற?" என்று சுந்தரம் கேட்க,
"ஆமாங்க சார். இப்போதான் தெரிஞ்சது. வைரவேலுக்கு பதிலா இன்னைக்கு தேவா சார் தான் ஆஜர் ஆக போறார்" என்றான் மற்றவன்.
அருணிடம் சொல்லி அதற்கான நடைமுறையை பார்க்க சொல்லி தேவா போனில் சொல்லியிருந்தான்.
தேவா கோர்ட்டுக்கு வருவதற்குள் அருண் அதற்கான வேலையில் இறங்கியிருக்க, விஷயம் சுந்தரம் காதுக்கு...
மஞ்சள் காட்டு மைனா 8
துளசியின் வழக்கில் நல்ல முன்னேற்றம். சந்தோஷிடம் இருந்து விடுதலை கிடைப்பதற்கான அத்தனை சாத்தியமும் கண் முன் தெரிந்தது.
வைரவேலின் விடா முயற்சி அப்படி. மனிதர் மிகவும் வலுவாக துளசி பக்கம் நின்றார்.
சந்தோஷ் எப்போதும் போல, "எனக்கு என் மனைவி வேண்டும். அவளை பிரிந்து என்னால இருக்க முடியாது" என்று கண்ணீர் மல்க...
மஞ்சள் காட்டு மைனா 7
முதல் நாள் வழக்கில், துளசி அவளுக்கு விடுதலை வேண்டும் என்று தெளிவாக சொல்ல,
சந்தோஷும், எனக்கு என் மனைவி வேண்டும் என்று உறுதியாக நின்றான். வழக்கு தள்ளி போனது.
தெரிந்தது தானே, அடுத்து என்ன என்று வைரவேல் துளசியிடம் பேசினார்.
மகள் முடிந்த வரை எல்லாவற்றையும் தானே பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்...
மஞ்சள் காட்டு மைனா 11
வைரவேல் தனி அறைக்கு மாற்றப்பட்டிருக்க, தேவா தான் முதலில் அவரை பார்க்க சென்றான்.
கால்களில் சிறிதான அறுவைசிகிச்சை செய்தபடியால், வைரவேல் மயக்கத்தில் இருந்தார்.
"தெளியும் நேரம் தான்" என்று மருத்துவர் சொல்ல, தேவா கைகட்டி அமர்ந்துவிட்டான்.
வைரவேல் சில நிமிடம் சென்று கண் விழிக்க, மனிதர் அசைய முயன்று, முடியாமல், அக்கம் பக்கம் பார்த்தார்.
தேவா...
மஞ்சள் காட்டு மைனா 15
வைரவேலிடம் "சந்தோஷ் மேல பைல் பண்ற இன்னொரு கேஸை நீங்க பார்த்துக்கோங்க சித்தப்பா" என்று சொல்லிவிட்டான் தேவா.
வைரவேலுக்கு யோசனை. "மோசடி கேஸ் நடத்தணுமா தேவா? நமக்கு தான் விவாகரத்து கிடைச்சிருச்சு இல்லை" என்று கேட்டார்.
ஏற்கனவே சுந்தரத்தின் பல கணக்குகள் தவறிவிட்டன. இதில் இந்த வழக்கு அவரை மேலும் தூண்டிவிடுவது போலாகி...
பசுபதி தங்கள் குடும்பத்துடன் வளர்மதி வீட்டுக்கு வந்தார். முக்கியமான பெரிய தலைகளை மட்டும் உடன் வைத்து கொண்டு உறுதி பேசி முடித்தனர்.
"தேவாவுக்கு வரமுடியலை" என்று வைரவேல் சொல்ல வர,
"தெரியும்ண்ணா. ஏதோ முக்கியமான கேஸ் இருக்குன்னு போன் பண்ணி பேசினான்" என்றார் வளர்மதி.
குடும்பத்தினர் ஆசுவாசப்பட்டு கொண்டனர். சங்கடத்துடன் தான் அமர்ந்திருந்தனர்.
"கல்யாணம் வர முகூர்த்தத்துல வைச்சுடலாம்" என்றார்...
மஞ்சள் காட்டு மைனா 26
'இதென்ன சொல்றான்?' பசுபதி கேள்வியுடனே வீட்டிற்குள் நுழைந்தார்.
"தனிக்காட்டு ராஜா தேவா!" என்று வைரவேல் சொல்லி முடிக்க,
"ஆமா. நான் தனிக்காட்டு ராஜா தான். இப்போ என்னாங்குறீங்க நீங்க?" என்று தேவா கேட்டிருந்தான்.
"தேவா" என்ற அதட்டலில் தந்தையை கவனித்தவன்,
"உங்க பங்காளி என் பங்காளியா நிக்கிறார்ப்பா" என்றான் மகன்.
"டேய். என்ன பங்காளின்னு சொல்ற" என்று...
மஞ்சள் காட்டு மைனா 13
வைரவேல் போன் பேசி கொண்டிருக்க, "சித்தப்பா" என்று வந்தான் தேவா.
"இரு" என்று சைகையில் சொல்லி, போன் பேசி வைத்தவர் முகத்தில் கோவம்.
"இப்போ என்ன?" என்று அவரின் பக்கத்திலே படுத்துகொண்டான் தேவா.
"டேய் இங்க வேணாம். எழுந்திரு" என்று சின்ன தந்தை மகனை அதட்ட,
"ஏன் படுத்தா என்ன?" என்று இன்னும் சட்டமாக படுத்தான்.
"உன்னோட....
இதில் வாசலிலே வைத்து, "ஏங்க. தேவாவுக்கு புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டு வரதில்லையா?" என்று மாலதி வேறு கணவனை கடிந்து கொண்டார்.
வைரவேல் மனைவியை முறைக்கவே செய்தவர், "உன் மகனை பத்தி தெரியாம என்னை பேசுற நீ? நீங்கதான் புது மாப்பிள்ளை. நீங்க முதல்ல கிளம்புங்கன்னு கரைச்சல் கொடுத்துட்டான் தெரியுமா?" என்று மனைவியிடம்...
மஞ்சள் காட்டு மைனா 16
வைரவேல் நேரம் கேட்டு கூட இரண்டு வாரம் கடந்துவிட்டது. தேவா தன் சிறிய தந்தையிடம் அது பற்றி பேசவில்லை.
மற்றதில் எப்படியோ, இதில் மாலதியும் அடங்கியிருக்கிறார். திருமணத்திற்காக அவரை கட்டாயப்படுத்தினான் தான்.
ஆனால் மாலதியை கட்டிக்க சொல்வதில் அவரை நெருக்கவில்லை. முழு மனதாக அவர் சம்மதிக்க வேண்டும்.
இல்லையென்றால் நாளை வைரவலுடன் மாலதி மட்டுமில்லை,...
மஞ்சள் காட்டு மைனா 27
'இப்போ இவளுக்கு இந்த பேர் வைச்சது தான் பிரச்சனையா என்ன?' தேவா நம்ப முடியாமல் மனைவியை பார்த்தான்.
துளசி மனது ஆறாமல், "இதெல்லாம் பேரா? போந்தா கோழியா நான் உங்களுக்கு? இதுல நீங்க என்னை காதலிச்சேன்னு வேற சொல்றீங்க?" என்று கேட்க,
'காதலிச்சேனா? ஏன் இப்போ நான் அவளை காதலிக்கலையா?’ கணவனுக்கு முகம்...
தேவா நிதானமாக நின்று திரும்பி பார்க்க, "அட சொல்லுப்பா. நம்ம பொண்டாட்டியை பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு. சீக்கிரம் வரேன்னு அவகிட்ட சொல்றியா?" என்று தேவா அருகில் வந்தான்.
தேவா அவன் இரு கைகளையும் பேண்ட் பேக்கெட்டில் விட்டு கொள்ள, "முறையில நீ எனக்கு தம்பி, அண்ணன் பொண்டாட்டியை கட்டியிருக்க இல்லை" என்றவன்,
"உன்கிட்ட ஒன்னு கேட்கணும் நினைச்சேன்...