Thursday, June 4, 2026

    பார்வை கற்பூர தீபமோ?

    மாலை மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் ஸ்ரீயும் ராகுலும். மதியம் நடந்தவற்றை கேட்டு பொறாமையில் வெந்துகொண்டிருந்தான் ராகுல். “அடிப் பாவி…. வீடு வரதுக்கு முன்னாடி மெசேஜ் போட்டிருந்தா கூட நான் ஓடி வந்திருப்பேன்.  இப்படி கண்லயே காட்டாம அனுப்பிட்டயேடி…. “, என்று மூன்றாவது முறையாக புலம்பினான். “டேய்… இங்க நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்…. நீ என்ன...
    “போ… அப்ப நவீன் இப்ப வரமாட்டார். “,  என்று சொன்னவள் அதன் பிறகு பிட்ச் பற்றிய பேச்சுகள் அங்கிருந்த டீ.வி.யில் வருவதில் ஆர்வமில்லாமல் எழுந்து கண்ணாடி வழியே நவீன் தெரிகிறானா என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.  ஆட்டம் களை கட்டத் தொடங்க, ராகுல் அதில் மொத்தமாக மூழ்கியிருந்தான். சற்று  நேரம் ஆர்.சி.பியின் ஆடாத சில வீரர்கள் வந்திருக்க, அவர்களைப்...
    அத்தியாயம் – 4 மறுநாள்  காலை பத்து மணி போல போனைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு நவீனிடமிருந்து போன். வருமோ என்ற சந்தேகத்தில் இருந்தவள் ஒரு பெரிய புன்னகையோடு எடுத்தாள். “ஹலோ…”, என்றதும் மறுபுறம் “ஹே…. இரு அஷ்வின் அண்ணா பேசணும்ங்கறார்.”, என்று நவீன் போனை தந்துவிட, “ஹலோ.. ஸ்ரீ?”, என்றார் அஷ்வின். “அண்ணா… கங்க்ராட்ஸ் ! நேத்து மாட்ச் கலக்கிட்டீங்க.”, உற்சாகமாக வாழ்த்தினாள். “ஹா...
    திங்கள் காலை பத்து மணிக்கு ராக்ஸ் லாஜிஸ்டிக்ஸ் கம்பனியின் வரவேற்பில் நின்றிருந்தாள் ஸ்ரீ. மனித வளத் துறை தலைவர் ராமலிங்கத்தைப் பார்க்க  கடந்த பத்து நிமிடமாகக் காத்திருந்தாள். அழைப்பு ஒரு வழியாக வரவும், மூன்றாவது மாடியில் இருந்த ஹெச். ஆர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கே சென்றதும், அமைதியாக இருந்தது அலுவலகம். எட்டு பத்து பேர் ...
    “ம்க்கும்… அப்படின்னா  கூட தேவலாம். ஆனா இங்க படுத்தறதே என் புருஷன்தான்.  அம்மா, பொண்டாட்டின்னு பாகுபாடெல்லாம் கிடையாது. இரண்டு பேர்ல யார் மாட்டினாலும் திட்டி தீர்த்துடுவார். அவர்கிட்டருந்து தப்பிக்க அப்பப்ப மாமியாரோடதான் கூட்டு சேரணும்.”, என்றாள் மைதிலி. “இதென்னக்கா புதுசா இருக்கு. அவ்வளவு டெரா உங்க ஹஸ்பண்ட்?  எதுக்கு திட்டுவார் ?” “எதுக்கு வேணாலும் திட்டுவார். இன்னிக்கு...
    அத்தியாயம் – 5 ஸ்ரீயின் சித்தப்பா ராஜனிற்கு தலை கால் புரியாத சந்தோஷம். பின்னே, ஐ.பி.ல் வீரர் நவீன் சந்திரசேகர் அவர் வீட்டில், அவருடன் உணவருந்திக் கொண்டிருக்கிறார் என்றால் பெருமைதானே. சராசரி இந்தியக் குடிமகனாக ராஜனும் ஐ.பி.ல் கிரிக்கெட் ஆர்வமாகப் பார்ப்பவர்தான்.நுணுக்கங்கள் எல்லாம் தெரியாது என்றாலும் மாட்ச் பார்க்கப் பிடிக்கும் என்னும் ரகம். ஸ்ரீ போன் செய்து அவள்...
    “ஓஹ்… என்ன ரூல் போடப் போறீங்கக்கா?”, என்று ஸ்ரீ கேட்க, “ ஹா ஹா… இனிதான் யோசிக்கணும். அவர் ரூல்ஸ்ல எது என்னை ரொம்ப படுத்துதுன்னு பார்த்துட்டு செய்யணும்.”, என்றாள் மைதிலி. இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜென்னிஃபர், “ ஏன் ஸ்ரீ, எனக்கும் ஒரு கவுன்சலிங் குடேன். சின்ன விஷயம்தான். ஆனாலும் என்னை கடுப்படிக்குது. என் மாமியார்...
    அத்தியாயம் – 7 இரவு தூங்கவே வெகு நேரமானதால், காலையில் தாமதமாகத்தான் எழுந்தாள் ஸ்ரீ.  அலுவலகத்திற்கு இரண்டாம் நாளே நேரம் கழித்துச் சென்றால் நன்றாக இருக்காதே என்று அரக்க பரக்கக் கிளம்பினாள். ஒருவழியாக சரியான நேரத்திற்கு வந்து அவளது இருக்கையை அடைந்த பின் தான் நிம்மதியானது. வந்த அமர்ந்து கம்ப்யூட்டரை ஆன் செய்யும் போதே, அலுவலக தொலைபேசி...
    அத்தியாயம் – 6 மாலை நேரம் நவீனின் போன் வந்தது. “ஹேய் ஸ்ரீ…. கங்கராட்ஸ். இப்பதான் ப்ராக்டீஸ் முடிச்சு, குளிச்சிட்டு வந்தேன். உன் மெசேஜ் பார்த்தேன். “, உற்சாகமாக வந்தது நவீனின் குரல். “தாங்க்ஸ் நவீன்.”, இவள் வேலை கிடைத்துவிட்டதாக போட்ட மெசேஜிற்கு வாழ்த்து செய்தி வரும் என்று நினைத்தவளுக்கு அவனே கூப்பிட்டு பேசவும், உள்ளம் பூரித்தது. “என்ன வேலை...
    “ஒரு நாலஞ்சு கேள்வில ஓரளவுக்கு தெரிஞ்சிரும் சர். உழைக்கறவங்களா? ஓபி அடிக்கறவங்களா? இருப்பாங்களா இல்லை கொஞ்சம் வேலை கத்துகிட்டதும் ஓடிருவாங்களா? கண்டுபிடிக்கலாம் சர்.”,என்றும் ஸ்ரீ சொல்ல, அப்போதும் அவர் நம்பிக்கையில்லாமல் பார்க்க, ஸ்ரீ கொஞ்சம் விலாவாரியாக உதாரணங்களோடு  அவருக்கு விளக்கினாள். “இந்த பேச்சு பேசறியே, என்னை மீறி நீ முதலாளிகிட்ட இது பத்தி பேசினது தப்புனு தெரியலையாம்மா...
     “பக்கத்து வீடு, எதிர் வீடுன்னு யாருக்காச்சம் போன் பண்ணுங்களேன் சர்?  போய் பார்த்துட்டு விவரம் சொல்லுவாங்கல்ல?”, ஸ்ரீ சொல்லவும், உதடு சுழித்தவர், “ம்க்கும்…அப்படியே போய் பார்த்திடுவாங்க… எல்லாம் வேஸ்ட்.”, என்று சொல்லி மறுபடியும் லான்ட் லைனுக்கு அழைத்தார். மணி அடித்து அடங்க, “சர்… நாம ஒரு எட்டு வீட்டுக்கே போயிடலாம் சர். எப்பவும் உங்க கிட்ட சொல்லாம...
    அத்தியாயம் – 8 அன்றிரவு பத்து மணி போல, ‘முழிச்சிருக்கியா ? பேசலாமா?’, என்று மெசேஜ் அனுப்பியிருந்தான் நவீன். ஆன்-லைனில் இருந்த ஸ்ரீ, உடனே அவனை அழைத்தாள். “ஹே… நாளைக்கு மாட்ச்… இன்னும் தூங்க போகலியா நீங்க?”, என்றாள் ஸ்ரீ. “ம்ம்.. போகணும். இப்பதான் போலர்ஸ்க்கான மீட்டிங் முடிஞ்சுது. ரூமுக்கு வந்தேன். அம்மாகிட்ட பேசிட்டு, உனக்கு மெசேஜ் பண்ணேன்.:, என்று...
    அத்தியாயம் – 9 அடுத்து வந்த ஒரு வாரமும் வேலையில் மும்மரமானாள் ஸ்ரீ. போட்டியைப் பற்றிய டீசர்கள் அனுப்பி, ஒவ்வொரு துறையும் 4 பேர் குழுவாக போட்டிக்கு பதிவு செய்யக் கோரி அடுத்த கட்ட வேலைகளை துவங்கியிருந்தாள். இவளது போட்டிக்கான முனைப்பிற்கு இராமலிங்கம் எதுவும் உதவ முன் வரவில்லை. ஸ்ரீக்கும் அதற்கான நேரத்தை பெரிதாக  ஒதுக்க விடவில்லை....
    error: Content is protected !!