Thursday, June 4, 2026

    பார்வை கற்பூர தீபமோ?

    அத்தியாயம் – 7 இரவு தூங்கவே வெகு நேரமானதால், காலையில் தாமதமாகத்தான் எழுந்தாள் ஸ்ரீ.  அலுவலகத்திற்கு இரண்டாம் நாளே நேரம் கழித்துச் சென்றால் நன்றாக இருக்காதே என்று அரக்க பரக்கக் கிளம்பினாள். ஒருவழியாக சரியான நேரத்திற்கு வந்து அவளது இருக்கையை அடைந்த பின் தான் நிம்மதியானது. வந்த அமர்ந்து கம்ப்யூட்டரை ஆன் செய்யும் போதே, அலுவலக தொலைபேசி...
    திங்கள் காலை பத்து மணிக்கு ராக்ஸ் லாஜிஸ்டிக்ஸ் கம்பனியின் வரவேற்பில் நின்றிருந்தாள் ஸ்ரீ. மனித வளத் துறை தலைவர் ராமலிங்கத்தைப் பார்க்க  கடந்த பத்து நிமிடமாகக் காத்திருந்தாள். அழைப்பு ஒரு வழியாக வரவும், மூன்றாவது மாடியில் இருந்த ஹெச். ஆர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கே சென்றதும், அமைதியாக இருந்தது அலுவலகம். எட்டு பத்து பேர் ...
    அத்தியாயம் – 1 வழக்கம்போல தாமதமாக எழுந்த ஸ்ரீநிதி அதற்காக பதட்டப்படாமல் கிளம்பிக்கொண்டிருந்தாள்.  ‘ம்ப்ச்… ராக்குதானே… வந்தா இரண்டு குதி குதிப்பான்… ஆஃப் பண்ணிக்கலாம் ‘, என்கிற அலட்சியம். காது வளையங்களை மாட்டி, இந்தப்புறம் அந்தப் புறம் என்று தன் அழகை திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்படி ஒன்றும் பேரழகியெல்லாம் இல்லை. இருபத்தி இரண்டு வயது பருவ மங்கைக்கு...
    மறு நாள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் சேப்பாக்கம் மைதானத்தை அடைந்திருந்தார்கள் ஸ்ரீ நிதியும் ராகுலும். நவீன் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியைக் காட்டி, அங்கிருந்த ஆஃபீசில் ஐ.டி. ப்ஃரூஃபும் காட்டி, அந்த விருந்தினர் பாட்ஜை வாங்கிக்கொண்டவர்களுக்கு காதில் ரத்தம் வராத குறையாக அறிவுரையும் அளிக்கப்பட்டது. தேவையில்லாமல் ப்ளேயர்சை தொந்தரவு செய்யக்கூடாது என்பதில் ஆரம்பித்து, நிறைய பேசியவனிடம் பயபக்தியாக...
    அத்தியாயம் – 9 அடுத்து வந்த ஒரு வாரமும் வேலையில் மும்மரமானாள் ஸ்ரீ. போட்டியைப் பற்றிய டீசர்கள் அனுப்பி, ஒவ்வொரு துறையும் 4 பேர் குழுவாக போட்டிக்கு பதிவு செய்யக் கோரி அடுத்த கட்ட வேலைகளை துவங்கியிருந்தாள். இவளது போட்டிக்கான முனைப்பிற்கு இராமலிங்கம் எதுவும் உதவ முன் வரவில்லை. ஸ்ரீக்கும் அதற்கான நேரத்தை பெரிதாக  ஒதுக்க விடவில்லை....
    அத்தியாயம் – 8 அன்றிரவு பத்து மணி போல, ‘முழிச்சிருக்கியா ? பேசலாமா?’, என்று மெசேஜ் அனுப்பியிருந்தான் நவீன். ஆன்-லைனில் இருந்த ஸ்ரீ, உடனே அவனை அழைத்தாள். “ஹே… நாளைக்கு மாட்ச்… இன்னும் தூங்க போகலியா நீங்க?”, என்றாள் ஸ்ரீ. “ம்ம்.. போகணும். இப்பதான் போலர்ஸ்க்கான மீட்டிங் முடிஞ்சுது. ரூமுக்கு வந்தேன். அம்மாகிட்ட பேசிட்டு, உனக்கு மெசேஜ் பண்ணேன்.:, என்று...
    “ஒரு நாலஞ்சு கேள்வில ஓரளவுக்கு தெரிஞ்சிரும் சர். உழைக்கறவங்களா? ஓபி அடிக்கறவங்களா? இருப்பாங்களா இல்லை கொஞ்சம் வேலை கத்துகிட்டதும் ஓடிருவாங்களா? கண்டுபிடிக்கலாம் சர்.”,என்றும் ஸ்ரீ சொல்ல, அப்போதும் அவர் நம்பிக்கையில்லாமல் பார்க்க, ஸ்ரீ கொஞ்சம் விலாவாரியாக உதாரணங்களோடு  அவருக்கு விளக்கினாள். “இந்த பேச்சு பேசறியே, என்னை மீறி நீ முதலாளிகிட்ட இது பத்தி பேசினது தப்புனு தெரியலையாம்மா...
    அத்தியாயம் – 5 ஸ்ரீயின் சித்தப்பா ராஜனிற்கு தலை கால் புரியாத சந்தோஷம். பின்னே, ஐ.பி.ல் வீரர் நவீன் சந்திரசேகர் அவர் வீட்டில், அவருடன் உணவருந்திக் கொண்டிருக்கிறார் என்றால் பெருமைதானே. சராசரி இந்தியக் குடிமகனாக ராஜனும் ஐ.பி.ல் கிரிக்கெட் ஆர்வமாகப் பார்ப்பவர்தான்.நுணுக்கங்கள் எல்லாம் தெரியாது என்றாலும் மாட்ச் பார்க்கப் பிடிக்கும் என்னும் ரகம். ஸ்ரீ போன் செய்து அவள்...
    “போ… அப்ப நவீன் இப்ப வரமாட்டார். “,  என்று சொன்னவள் அதன் பிறகு பிட்ச் பற்றிய பேச்சுகள் அங்கிருந்த டீ.வி.யில் வருவதில் ஆர்வமில்லாமல் எழுந்து கண்ணாடி வழியே நவீன் தெரிகிறானா என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.  ஆட்டம் களை கட்டத் தொடங்க, ராகுல் அதில் மொத்தமாக மூழ்கியிருந்தான். சற்று  நேரம் ஆர்.சி.பியின் ஆடாத சில வீரர்கள் வந்திருக்க, அவர்களைப்...
    அத்தியாயம் – 6 மாலை நேரம் நவீனின் போன் வந்தது. “ஹேய் ஸ்ரீ…. கங்கராட்ஸ். இப்பதான் ப்ராக்டீஸ் முடிச்சு, குளிச்சிட்டு வந்தேன். உன் மெசேஜ் பார்த்தேன். “, உற்சாகமாக வந்தது நவீனின் குரல். “தாங்க்ஸ் நவீன்.”, இவள் வேலை கிடைத்துவிட்டதாக போட்ட மெசேஜிற்கு வாழ்த்து செய்தி வரும் என்று நினைத்தவளுக்கு அவனே கூப்பிட்டு பேசவும், உள்ளம் பூரித்தது. “என்ன வேலை...
    தூரத்தில் ஆடுபவர்கள் புள்ளியாக தெரிய சீக்கிரமே போர் அடித்தது. அந்த ட்ரம்ஸ் பார்ட்டி வேறு ஓவர் வழிசலாக இருக்க, அவனிடமும்  பேச முடியவில்லை. முன் சீட்டில் இருந்த குட்டி வாண்டு ஒன்று அவ்வளவு விவரமாக ராகுலுடன் கிரிக்கெட்டைப் பற்றி பேசிக்கொண்டிருந்தது. ராகுல் பையை எடுத்து நோண்ட, இவளைப் பற்றி தெரிந்தவனாக சிப்ஸ் பாக்கெட், பிஸ்கெட் என்று...
    வீட்டு வாசலுக்கு வந்ததும்,  இறங்கியவன், “ இங்கருந்தே ஓலா புக் பண்ணிக்கறேன். உங்களுக்கு எதுக்கு தொந்தரவு ?”, என்று சங்கடமாக நின்றான். “கேட் திறங்களேன் ப்ளீஸ்.”, என்றாள் ஸ்ரீ. “ஓஹ்… சாரி.”, என்றவன் அவள் சொன்னதை செய்ய, வண்டியை உள்ளே விடும் போதே ஹார்னை தெறிக்க விட்டாள்.  நவீன் அந்த சத்தத்தில் முழிக்க, வாசல் கதவு திறந்தது.  “எதுக்குடி...
    “ஓஹ்… என்ன ரூல் போடப் போறீங்கக்கா?”, என்று ஸ்ரீ கேட்க, “ ஹா ஹா… இனிதான் யோசிக்கணும். அவர் ரூல்ஸ்ல எது என்னை ரொம்ப படுத்துதுன்னு பார்த்துட்டு செய்யணும்.”, என்றாள் மைதிலி. இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜென்னிஃபர், “ ஏன் ஸ்ரீ, எனக்கும் ஒரு கவுன்சலிங் குடேன். சின்ன விஷயம்தான். ஆனாலும் என்னை கடுப்படிக்குது. என் மாமியார்...
    error: Content is protected !!