தித்திக்கும் முத்தங்கள்
"அந்த குடிகார நாய் ஏதாவது சொன்னா, நீ நம்பிட்டு வாழுற பொண்ணு வாழ்க்கையை கெடுக்க கிளம்பிடுவியா? அவனே ஒரு பணத்தாசை பிடிச்சவன். நேத்து உன்கிட்ட பேசுனதே இன்னைக்கு அவனுக்கு ஞாபகம் இருக்காது. அவனை நம்பி... ஏன் வசந்த் இப்படியெல்லாம்? நாங்க உன்னை இப்படி வளர்க்கலையேடா..." என்றவர் இடிந்தவராக சோஃபாவில் அமர்ந்துவிட்டார்.
அதில் பதறியவனாக, "அப்பா." என்று...
தித்திக்கும் முத்தங்கள் 09
கார்த்திகா வீசியெறிந்த தட்டில் இருந்த உணவுப்பருக்கைகள் குமரன் மீதும், தரையிலும் இறைந்து கிடக்க, அசையாமல் அமர்ந்து கொண்டிருந்தான் குமரன். அவன் கண்கள் கலங்கி சிவந்திருந்ததன் காரணம் கோபமா, அல்லது உணவில் இருந்த அதிகப்படி காரமா என்று அறியமுடியவில்லை.
ஆனால், கார்த்திகா அவன் முகத்தை நிமிர்ந்தும் பாராமல் அழுகையில் கரைய, சில நிமிடங்கள் பொறுத்துப்...
தித்திக்கும் முத்தங்கள் 05
கார்த்திகைச்செல்வி படிக்கும் கல்லூரியின் நுழைவு வாயிலில் ஆட்டோவை நிறுத்திக் காத்துக் கொண்டிருந்தான் பூச்சி. நேரம் ஒன்றை கடந்திருக்க, இன்னும் பத்தே நிமிடங்கள் தான் என்று பதட்டத்துடன் அந்த கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவிகளை பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.
சில நிமிடங்களில் கூட்டம் கூட்டமாக மாணவிகள் வெளியே வரத் தொடங்க, தூரத்தில்...
தித்திக்கும் முத்தங்கள் 29
நேற்று இரவு பிரியா வீட்டிற்குள் வந்தபின்னும் கூட ராணி தன் வசைமாரியை நிறுத்தவே இல்லை. அவளைத் தொடர்ந்து வீட்டிற்குள் வந்தவர் மகன் தனது பேச்சைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திய கோபத்தையும் பிரியாவின் மீதே காண்பித்தார்.
இரவு முழுவதும் அவரின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு அசையாமல் படுத்திருந்தவள் காலையில் எழுந்து குளித்துவிட்டு வேலைக்கு புறப்பட்டுவிட்டாள். என்னவோ...
"யப்பா.." என்று அவரை அணைத்து கொண்ட மகன் "தெய்வம்ப்பா நீ.. என் தெய்வம்... என் வாழ்க்கைல வெளீக்கேத்தி வச்ச சாமி நீ.." என்று தந்தையின் காலில் விழுந்து வணங்கினான் மகன்.
இருவரும் பேசியது மொத்தத்தையும் அன்று இரவே தந்தை மறந்துவிட, "நாளைக்கே தூக்குடா.." என்றதை மட்டும் மறக்காமல் பிடித்துக் கொண்டான் மகன்.
இருவரும் அந்த குடியிருப்பின் பின்பகுதியிலேயே...
இவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த புதிய வீட்டில் ராஜம்மாவும், பூச்சியும் காத்திருக்க, குமரன் கார்த்திகாவோடு உள்ளே நுழைந்தான் இப்போது.
யாரும் எதுவும் சொல்வதற்குள் அவனே, "விளக்கை ஏத்து." என, கார்த்திகா மறுப்பதற்குள் பார்வையால் மீண்டும் பயம் காட்டினான்.
அவன் எதிர்பார்த்ததுப் போலவே பயந்து போனவள் அமைதியாக விளக்கை ஏற்ற, ஒருநிமிடம் கண்களை மூடி வேண்டிக்கொண்டான் குமரகுரு.
'இதயெல்லாம் சரி பண்ணிக்குடு...
தித்திக்கும் முத்தங்கள் 21
நேற்று இரவு கார்த்திகாவின் அருகாமையில் குமரன் நிம்மதியாக உறங்கியிருக்க, காலை ஆறுமணி வரையும் கூட அவன் உறக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால், கார்த்திகா எப்போதும்போல் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிட, குமரனை எழுப்பாமல் தானே வீட்டின் கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்கி வந்திருந்தாள்.
அதே நேரம், ராஜம்மா வாசல் தெளிப்பதற்காக எழுந்து வெளியே வந்திருந்தார்....
இந்த பண விஷயத்தில் அவளாலும் எதுவும் செய்ய முடியாதே. அவளால் முடிந்தவரை அவளது செலவுகளை சுருக்கிக் கொண்டாள். இதுவரை குமரன் கொடுக்கும் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட தனது சொந்த செலவுக்கென்று அவள் உபயோகப்படுத்தியதே இல்லை.
அவள் வீட்டை விட்டு வெளியேச் செல்வதும் வருவதும் குமாரனோடு மட்டுமே என்கையில், அவளது அத்தனை செலவுகளையும் அவனே பார்த்துக்...
தித்திக்கும் முத்தங்கள் 15
பிரியா அழுது சிவந்த விழிகளுடன் தனது தாய்வீடு இருந்த குடியிருப்பை நெருங்க, வழக்கம்போல் அந்த குடியிருப்பின் கீழே இருந்த தண்ணீர்த்தொட்டிக்கு அருகில் அமர்ந்து கதையளந்து கொண்டிருந்தார் ராணி. தொலைவில் வரும்போதே அவரைப் பார்த்துவிட்ட பிரியா "அம்மா..." என்று அழுகையுடன் அழைக்க, அவள் தோற்றம் கண்டு பதறிப்போனார் ராணி.
"பிரியா..." என்று அவர் வேகமாக...
தர்ஷனாவும், காவியாவும் அதிர்ந்து நின்றவர்கள் ஒருவழியாக சுதாரித்து, "ஹேய் விடுடி.. பிரச்னையாகிடப் போகுது." என்று பூர்ணியைப் பிடித்திழுக்க,
"விடுங்கடி. இவன்தான் அன்னைக்கு கார்த்தியைக் கூட்டிட்டுப் போனது. இப்போ அவ என்னடான்னா கார்த்தி ஓடிபோய்ட்டான்னு சொல்றா. ஏய்... எங்கேடா கார்த்தி, என்ன செஞ்ச அவளை. சொல்றியா இல்ல போலீசுக்கு போன் பண்ணவா." என்று எகிறியவள் "ஏய்.. போலீசுக்கு...
தித்திக்கும் முத்தங்கள் ௦3
அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, நேரம் காலை பதினொன்றை கடந்த பின்பும் உறங்கி கொண்டிருந்தாள் பிரியதர்ஷினி. அவள் குமரகுருவின் தங்கை.
குமரகுரு காலையிலேயே வேலை முடித்து வந்தவன் கையோடு மீன் வாங்கி வந்து கொடுத்திருக்க, அதை வாங்கி சமையலறையில் வைத்துவிட்டு மீண்டும் உறங்கிய ராணி பத்து மணிக்கு எழுந்து அந்த பாலிதீன்...
தித்திக்கும் முத்தங்கள் 19
அந்த மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் முன்பு நின்றிருந்தான் கதிர்வேல். எதிரில் அவனை எள்ளலாக பார்த்தபடி அவன் மனைவி நின்றிருக்க, மறந்தும் அவள் பக்கம் திரும்பாமல் தனக்குமுன் அமர்ந்திருந்த அந்த பெண் அதிகாரியைப் பார்த்திருந்தான் அவன்.
தன் கையில் இருந்த புகாரை நிதானமாக படித்துப் பார்த்த அந்த அதிகாரி, "வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவியா?...
"இப்போவும் அதேதான்.. தாலி கட்டதான் தூக்கினு வந்தேன்.. நாளைக்கு தாலி கட்ற வரிக்கும் இது உசுரோட இருக்கணும் இல்ல.. அதுக்குதான் இந்த செட்டப்.. இப்படியே கிடக்கட்டும்.." என்றவன் படகின் ஒரு ஓரம் சாவகாசமாக அமர்ந்து கொள்ள, அவன் பேச்சை கேட்டதில் மூர்ச்சையாகாத நிலைதான் கார்த்திகாவுக்கு.
"தாலி...
தித்திக்கும் முத்தங்கள் ௦3
அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, நேரம் காலை பதினொன்றை கடந்த பின்பும் உறங்கி கொண்டிருந்தாள் பிரியதர்ஷினி. அவள் குமரகுருவின் தங்கை.
குமரகுரு காலையிலேயே வேலை முடித்து வந்தவன் கையோடு மீன் வாங்கி வந்து கொடுத்திருக்க, அதை வாங்கி சமையலறையில் வைத்துவிட்டு மீண்டும் உறங்கிய ராணி பத்து மணிக்கு எழுந்து அந்த பாலிதீன்...
தித்திக்கும் முத்தங்கள் 24
குமரன் தங்கராஜின் வார்த்தைகளில் பெரிதும் குழம்பியிருந்தான். என்ன முயன்றும் அத்தனை எளிதில் அவர் கூறிய விஷயத்தை அவனால் விடமுடியவில்லை. குடிகாரன்... வாய்க்கு வந்ததை பேசியிருக்கலாம் என்று சமாதானம் சொல்லிக் கொண்டாலும், முழுதாக அதைப் பொய் என்று எண்ணி ஒதுக்கிவிட முடியவில்லை.
கார்த்தி ஒருவனை காதலித்து இருப்பதற்கெல்லாம் சாத்தியமே இல்லை என்று உறுதியாக தெரியும்...
அந்த நினைவே கசப்பாக இருக்க, எப்படி அங்கிருந்து கிளம்பினான். எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்று சத்தியமாக தெரியாது அவனுக்கு. வீட்டின் கீழே ஆட்டோவை நிறுத்தி இறங்கியவனுக்கு வீட்டுக்குச் செல்ல மனம் வரவில்லை.
என்ன நினைத்தானோ மீண்டும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியவன் பைத்தியக்காரன் போல் அன்று முழுவதும் சென்னையை சுற்றிவர, இதற்கும் சவாரிகூட இல்லை....
"இந்த கதைக்கும் அவளுக்கும் இன்னா லிங்க் இருக்கு. அவளை இழுக்காத" என்று குமரன் கூறும்போதே,
"அதெப்படி இல்லாம போவும். அவ ஆத்தாக்காரி மேல தான கேஸ் கொடுத்து இருக்கேன். இந்நேரம் பொண்ணுக்கு போனை போட்டு சொல்லி இருப்பா. உன் பொண்டாட்டி உன்கிட்ட நீலிக்கண்ணீர் வடிச்சிருப்பா. அதுக்காக தான வந்திருக்க." என்று தானாகவே எதையோ ஊகித்து பிரியா...
நேற்றுப்போலவே மனைவி சமைக்காமல் அமர்ந்திருந்தது ஆத்திரம் கொடுக்க, வந்ததும் வராததுமாக சண்டை வேண்டாம் என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் அமைதியாக அவள் அருகில் அமர்ந்தான்.
"என்ன பிரியா. உடம்பு முடியலையா." என்று நிதானம் தவறாமல் தான் வினவினான் அவன்.
ஆனால், பிரியா அவனை விட வேண்டுமே. "உடம்பு முடியலைன்னா, என்ன பண்ண போற." என்றாள் சவாலாக.
"ஏய்.. இன்னா...
தித்திக்கும் முத்தங்கள் 22
கார்த்திக்காக வீட்டில் இருக்க ஒப்புக்கொண்டாலும் அந்த ஒருநாளை கடத்துவது பெரும் போராட்டமாக இருந்தது குமரனுக்கு. இத்தனைக்கும் நேரம் பதினொன்று தான் அப்போது. கார்த்தி நேரத்திற்கு உணவு கொடுத்திருக்க, அதனுடனே மாத்திரைகளையும் உண்டு முடித்திருந்தான்.
கார்த்தி காலை உணவை முடித்து பாத்திரங்களை கையோடு சுத்தப்படுத்தி வைத்தவள் இப்போது துணிகளை ஊறவைத்துக் கொண்டிருந்தாள். குமரன் வீட்டில்...
தித்திக்கும் முத்தங்கள் 10
நேற்று ப்ரியாவிடம் கூறியதுப் போலவே காலையில் நேரத்திற்கு எழுந்து வேலைக்குச் செல்ல தயாராகி நின்றான் கதிர்வேல். ஆனால், அவன் மனைவி வழக்கம்போல் உறக்கத்தைத் தொடர, அதுவே எரிச்சலாகிப் போனது அவனுக்கு.
தன் வேலைகளை முடித்து அவள் முன்னே வந்து நின்றவன், "பிரியா... ப்ரியா." என்று அதட்டலாக அழைக்க, அதையும் காதில் வாங்காமல் உறக்கத்தைத்...