Sunday, June 8, 2025

    KK 26 3

    0

    KK 26 2

    0

    KK 26 1

    0

    KK 25 2

    0

    KK 25 1

    0

    கனவுக்குள் காவல்

    KK 24 2

    0
    "கல்யாணத்துக்கு ஓகே சொன்னப்போதும் சரி, எப்ப வேணாலும் பிரிஞ்சிடுவேன்னு சொல்லும் போதும் சரி,   என் மனசுல இருந்தது ஒண்ணு தான் இருந்தது.  உனக்கு ஏதும் ஆயிடக்கூடாதுன்னு மட்டும் தான். நீ கேட்டதும் கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்குள்ளையும் ஒரு ஆசை துளிர் விட்டுச்சு.  அதுக்காக உன்ன பாத்த உடனே லவ் வந்துருச்சின்னு எல்லாம் சொல்லல. நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு...

    KK 24 1

    0
    பாகம் - 24 "அன்னைக்கு அப்பா அம்மா கூட நாங்க மூணு பேருமே சேர்ந்துதான் கிளம்பினோம்.  ஆனா கடைசி நிமிஷத்துல ஆஃபீஸ்ல இருந்து எனக்கு கால் வரவும் ஜீவாவும் சக்தியும், அக்காக்கு துணையா இங்கேயே இருந்துக்குறோம்னு சொல்லி என்கூடவே தங்கிட்டாங்க. அப்பா அம்மா ரெண்டு பேரும் திருத்தனிக்கு தனியா கார்ல  கிளம்பினாங்க.  ட்ராவல் ஏஜென்சில தான் கார்...

    KK 23 2

    0
    இப்போது அவள் அதிர்ச்சியில் விழிவிரித்து பார்த்து நின்றாள்.  இருந்தும் தன்னை திடப்படுத்திக் கொண்டு, "சார் என்ன சொல்றீங்க?"  என்று கேட்க, "ஆமா மூணு லட்சத்தை 30 லட்சமா என்னால மாத்த முடியும்னு சொல்றேன்.  அதுவும் ஒரே மாசத்துக்குள்ள நீ தரேன்னு சொல்லி ஒன்றரை மாசம் ஆகியும் நீ தராம இருக்கன்னு சொல்றேன். இல்லனா அந்த கடன் பத்திரத்தை...

    KK 23 1

    0
    பாகம் - 23(௨௰௩) நிமிடங்கள் கரைந்து கொண்டிருக்க,  கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கி கட்டிக் கொண்டு நின்றிருந்தனர்.‌ இருவருமே அந்த மோன நிலையில் இருந்து மீள முயற்சிக்கவில்லை. மனைவியின் முதுகில் படர்ந்து இருந்த தன் கையை மெல்ல தலைக்கு நகர்த்தியவன், தலையை தன் தோளோடு நன்றாக அழுத்திக் கொள்ள, அடுத்த சில நொடிகளில்  தன் தோளில்...

    KK 22 2

    0
    தன்னுடைய மகிழுந்தை தவிர்த்துவிட்டு அவர்கள் எப்போதும் குடும்பமாக செல்லும்போது மட்டும், எடுத்துச் செல்லும் மகிழ்ந்தை எடுத்துச் வந்தான். உண்மையில், மதியும் அவனும் மட்டும் செல்வதற்காக என்றே ஒரு புது மகிழுந்து வாங்கி வீட்டில் வைத்திருந்தான் ரகு. இதுவரை அதில் செல்வதற்கான வாய்ப்பு இருவருக்கும் கிடைக்கவில்லை.  இப்போது முதல் முறை வெளிய போகிறார்கள், ஆனால் மருத்துவமனைக்கு. மருத்துவமனை செல்லும் போது...

    KK 22 1

    0
    பாகம்- ௨௰௨ எங்கவேணா போயிகோ நீ என்ன விட்டு போயிடாம இருந்தாலே அது போதுமே....! தண்ணியத்தான் விட்டுபுட்டு தாமரையும் போனதுன்னா தரை மேல தலசாயுமே......! மறைஞ்சு போனாலும் மறந்து............(கூட மேல கூட வச்சு..ரம்மி) மகிழுந்து முழுக்க இசை மட்டும் மிதந்து கொண்டிருக்க, அதில் பயணித்துக் கொண்டிருந்த நபர்களிடம், அந்த மகிழ்ந்து புறப்பட்ட நேரத்தில் இருந்து மௌனம் மட்டும். பத்து வருடங்களாகும் இசையோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு அந்த இசை ...

    KK 21

    0
    பாகம்- ௨௰௧ "உன் கூட நான் பேசமாட்டேன் போ பா.  உன் கூட நான் டூ" "நான் உன் கூட ஃபோர். போ நீயும் என்கிட்ட பேசாத. " தன்மகள் தன்னிடம் பேச மாட்டேன் என்று கூறியும் அலட்சியமாக, நானும் பேசமாட்டேன் என்று கூறிவிட்டு, தன் கையில் இருந்த அந்த தொலையியக்கியை வைத்து தொலைக்காட்சியில் தனக்கு  விருப்பமான  பழைய பாடலை...

    KK 20

    0
    பாகம்- ௨௰ "சொல்லுங்க மிஸ்டர். சுகுமாரன். ஏதோ சொன்னீங்களே? என்ன சொன்னீங்க? ஹான்.. ஸ்டேட்டஸ உடைப்பீங்களா.. முத உங்களுக்கு அவரோட ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியுமா?ஹ்ம்?' என்று மதி சுகுமாரனை நேர் பார்வை பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் உள்ளே நுழைந்ததில் இருந்து அவளை மட்டும் பார்த்திருந்த சுகுமாரன், அவள் ரகு அருகில் சென்று அமர்ந்ததும் சற்று வியப்போடு...

    KK 19

    0
    பாகம்-19(௰௯) பூ...போன்ற கன்னி தேன் அவள் பேர் சொல்லி தித்தித்தேன்....அது ஏன் என்று யோசித்தேன்.. அட நான்... எங்கு சுவாசித்தேன்... காற்றோடு மெளனங்கள்.. இசை வார்க்கின்ற... நேரங்கள்.. பசி நீர் தூக்கம் இல்லாமல்.. உயிர் வாழ்கின்ற மாயங்கள் அலைகடலாய்.................. இருந்த மனம்........துளி துளியாய்..........சிதறியதே.......... (விழிகளில் அருகினில் வான்ம்- பாடல்). பாடலில் மூழ்கி இருந்த ரகுவை, "டேய் ரகு, கண்ண தொறந்து பார்த்து தொலைடா" என்று அவனை நன்றாக குலுக்கி சுயநினைவுக்கு மீட்டு...

    KK 18

    0
    பாகம் - ௰௮ உனக்குள் நானே.... உருகும் இரவில்.. உள்ளத்தை... நான் சொல்லவா..... மருவும் மனதின் ரகசிய அறையில்.. ஒத்திகை பார்த்திட வா...... சிறுக சிறுக உன்னில் ....என்னை.. தொலைத்து மொழி சொல்லவா..... சொல்லால் சொல்லும் என்னை.. வாட்டும் ..ரணமும் தேன் அல்லவா ...... (பாடல் - மின்னும் பனிச்சாரல் ) நேரம் நடு இரவை தாண்டி இருக்க  கூடல் முடிந்த களைப்பில் தன் கணவனின் மார்பில் புதைந்த வண்ணம்...

    KK 17 2

    0
    "சரிடி ரொம்ப பண்ணாத. ஒரு முக்கியமான வேலை அதனால் தான் உட்கார்ந்து லாப்டாப் பாத்துட்டு இருந்தேன்.  என்னிக்காவது ஒரு நாள் தானே இப்படி பண்றேன்.  உடனே காச்சு முச்சுனு கத்துற.  சரி நம்ம முத்தம்மா எங்க.  அவங்கள சாப்பிட வைக்க தான என்னை முக்கியமா கூப்ட" "அவங்க இப்பதான் சற்குணம் அண்ணன் வந்திருக்காருன்னு சாப்பாடு கொடுக்க...

    KK 17 1

    0
    "உடல் எனும் பொய்க்கு மெய்யென பெயரிட்டான்...காலன்... மெய் வழியே மெய் இன்பம் காண மெய்மையாய் மையல் கொண்டான் என் காதலன்... அவனே என் கனவின் காவலன்...".  (சொந்த கவிதை பிடித்தவர்கள் Comment sectionல் தெரிவிக்கவும்- மகா ஆனந்த்) மதி, தன் தலை வரைப் போர்த்தி இருந்த போர்வையை மெதுவாக விலக்கி எட்டிப் பார்த்தாள். ரகு அசையாது ஒரே இடத்தில்...

    KK 16

    0
    "டேய் ரகு, நானும் உன்னை ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன். நீ காது கேட்காம உக்காந்துட்டு இருக்க என்ன பண்ணிட்டு இருக்க?" என்ன தேவி சற்று சத்தமாக கூப்பிட,  ரகு அப்போது தான் தன் கவனத்தை தன் சித்தியின் புறம் திருப்பினான். "என்ன சித்தி?" என ரகு கேட்க, "என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு தான்...

    KK 15

    0
    "ஜெய் மணி 6:15 வந்துருவான்ல? அஞ்சு அரை மணியிலிருந்து இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம் டா.  அவன் மட்டும் வராமல் இருக்கட்டும் உனக்கு இருக்கு." என ஜெனி புலம்பிக் கொண்டிருக்க, மதி அமைதியாக அங்கு நடக்கும் சூழலை அவதானித்துக் கொண்டிருந்தாள். "ஹே ஜெனி எனக்கு தகவல் கொடுத்த ஆளு ரொம்ப நம்பிக்கையானவன்.  அவன் சொல்லி ஒரு...

    KK 14

    0
    கனவுக்குள் காவல் - ௰௪ மதி கூறியதை கேட்ட ரகுவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்க அவளுக்கு குழப்பமாக இருந்தது. சிறிது நேரம் அவனை கூர்ந்து பார்க்க, மிக மெலிதாக அவன் முகத்தில் கோபம் படர்ந்து இருப்பது அவளுக்கு உரைத்தது. "இது உனக்கு எப்படி தெரிஞ்சது மதி",  ரகு கேட்க "நேத்து கார்மெண்ட்ஸ் வந்தப்போ, ரெஸ்ட் ரூம்...

    KK 13

    0
    கனவுக்குள் காவல் - ௰௩ காலையில் எழுந்ததிலிருந்து ரகுவின் முகம் யோசனையை சுமந்தபடியே இருந்தது.  அடிக்கடி மதியின் முகத்தை திரும்பி  பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மதி இவனை கண்டு கொண்டதாக கூட தெரியவில்லை.  முதல் நாள் இரவு மதியின் மடியில் படுத்தி உறங்கிக் கொண்டிருந்தவன். காலையில் எழுந்து பார்க்கும் போது தலையணையில் படுத்து இருப்பது தெரிந்தது.  உடனே எழுந்து...
    கனவுக்குள் காவல் - ௰௨ "என்னாச்சு மதி?" என தன் அருகே  அமைதியாக அமர்ந்திருந்த தன் மனைவியிடம் கேள்வி எழுப்பினான் ரகு.  "ஒன்னும் இல்ல", என்று கூறிய போதும், அவள் ஏதோ யோசனை இருக்க, ரகு மீண்டும் "என்னாச்சு?", என்றான். ஒரு நொடி அவனை உற்றுப் பார்த்தவள்,  மற்றவர்கள் என்ன செய்கின்றனர் என அந்த அறையை ஒரு...

    KK 11

    0
    கனவுக்குள் காவல் -  ௰௧ "நெஜமா தான் பா சொல்றேன் கன்னம் எப்படி வீங்கி இருந்துச்சி தெரியுமா? அன்னைக்கே உங்ககிட்ட இத சொல்லனும்னு நினைச்சேன் அதுக்குள்ள ஒரு அவசர வேலை.  அதான் ஊருக்கு போய்டேன்." என்றவனை அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்த மூவரும் குழப்பமாக பார்த்தனர். "அதுமட்டுமில்லை சார் கிட்ட கூட கேட்டேன்.  அவரு இந்த விஷயம் உனக்கு மட்டும்...

    KK 10

    0
    கனவுக்குள் காவல் - கo மதியை சுற்றி நின்றவாறு அவள் என்ன கூற போகிறாள் என கேட்க அனைவரும் தயாராகினர். கௌதமி அவள் அருகே வந்ததுமே, ரகு கட்டிலில் இருந்து எழுந்து மதிக்கு நேராக அங்கு அமைந்திருந்த கண்ணாடியுடன் கூடிய மேஜையில் சாய்ந்தவாறு நின்று கொண்டான். மதி ரகு முகத்தை பார்த்துக் கொண்டே சொல்ல ஆரம்பித்தாள். "அஞ்சு நாளைக்கு முன்னாடி...

    KK 9 2

    0
    "மதி...மா... போலாம் வா",  என சற்று குரலை உயர்த்தி அழுத்தமாக கூறிவிட்டு மதியுடன் விறுவிறுவென படிக்கட்டில் ஏறி விட்டான். மூவரும் அவனை ஆச்சரியமாக பார்திருந்தனர்.   கோவத்தின் உச்சியில் இருந்த கௌதமி கூட அவன் குரலையும் அந்த பாவனையும் கண்டு அமைதியாகிவிட்டார். ஏனெனில்  ரகு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது தான் இத்தனை அழுத்தமாகவும் கோவமாகவும் பேசிவிட்டு செல்கிறான். ரகுவின்...
    error: Content is protected !!