Nee Ninaivaa Unarvaa
அத்யாயம் 1:
சிட்டியின் பிரதானப் பகுதியில் அமைந்திருந்த அந்த அரங்கம் முழுவதும் வண்ண விளக்குளால் ஜொலித்துக் கொண்டிருக்க, ரசிகர்களின் கரவொலி அந்த அரங்கத்தையே நிறைத்திருந்தது. எங்கு நோக்கினும் ஆடம்பரம். எதிலும் ஆடம்பரம். செயற்கை வண்ண ஒளிகள், கண்களின் இயற்கை ஒளித் திறனை கூசச் செய்து கொண்டிருந்தது. திரை உலகின் முக்கிய பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் அனைவரும்...