mounamaai
மௌனமாய்...
அத்தியாயம் 05
இருள் மெல்ல கசியத் தொடங்கி இருந்தது.
திவ்யாவின் வீட்டின் முற்புற பூங்காவில் அம்ர்ந்து இருந்தாள்,
மகா.
பணியை முடித்து விட்டு நேரே இங்கு தான் வந்திருந்தாள்,
திவ்யாவுடன்.
அவள் இருக்கும் மனநிலையில் திவ்யாவுடன் கதைத்தாலாவது மனம் சற்று மட்டுப்படும் என்று தோன்றிற்று.
முன்னே வடிவமைக்கப்பட்டிருந்த கல் இருக்கையில் அமர்ந்து இலக்கில்லாமல் வானை வெறித்துக் கொண்டிருந்தாள்.
ஆங்காங்கே பெரிய மேகங்களும் கரு வானமும்
கொஞ்சமாய் மின்ன...
*மௌனமாய்...*
*அத்தியாயம் 06*
நேரம் இரவு பத்தரை மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
தன் அறையில் மூலையில் இருந்த கூடை ஊஞ்சலில் கால்களை மடக்கி குவிந்து அமர்ந்து இருந்தாள்,
மகா.
இரவு விளக்கு மட்டும் அறையில் ஒளிர்ந்து கொண்டிருக்க
மெதுவாக ஊஞ்சல் அசைந்து கொண்டிருந்தது.
மனம் அலையடித்துக் கொண்டிருந்தது,
அவளுக்கு.
நேற்றைய தினம் போல்..
இன்றும்...!
எத்தனை பிரயத்தனங்கள் செய்தாலும் அவளின் தனிமையின் போது மனதில் மித்ரனை பற்றிய எண்ணங்கள் வந்து...