Malar Soodum Penmai
மலர் சூடும் பெண்மை 23
"என்னாச்சு என் தன்வி பொண்ணுக்கு?" என்று தேசிகன் அவளை நெஞ்சின் மீது தாங்கி கொண்டே கேட்க,
"டையர்டா பீல் பண்றேன்" என்றாள் தன்வி.
"பீல் பண்றியா?" தேசிகனுக்கு புரியவில்லை. முரளிகிட்ட கிட்ட பேசணுமே.
"சாப்பிட்டியா?"
"சாப்பிட்டேன். ஆனாலும் பசிக்குது" என்று தன்வி கணவன் முகம் பார்க்க,
"சரி வா" என்று அவளை உணவுண்ணும் இடத்திற்கு அழைத்து வந்தான்.
அவனுக்கான...
தன்விக்கு இரவு முழுமையான உறக்கம் இல்லை. ஏதோ அவளை தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.
மறுநாள் அவளே தேசிகன் அத்தைக்கு அழைத்து பேசினாள். "இன்னும் தகவல் வரலை. இவங்களும் வரலை" என்றவர், "நீங்க காலை சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வாங்க" என்று சொல்லி வைத்தார்.
சுதாவும், ஸ்ருதியும் நேரே தேசிகன் வீட்டுக்கு வர, தன்வி அம்மாவிடம் அப்பா இன்று...
அவனுடன் ஸ்ருதி. தன்வியின் அக்கா. அவரை பார்த்ததும் தான் தன்வியின் விறைத்த உடல் தளர்ந்ததோடு, "க்கா" என்று அவளின் கைக்குள் சரணடைந்துவிட்டாள்.
"என்னாடாம்மா. என்ன ஆச்சு தன்வி" என்று அக்காவும் தங்கையின் மணக்கோலம் கண்டு கலங்கி போனாள்.
"உங்க பொண்ணு எங்கன்னு எங்க வீட்டு பொண்ணை கேள்வி கேட்கிறது இல்லாம, அவளை மிரட்ட வேற செய்வீங்களா?" என்று...
மலர் சூடும் பெண்மை 12
மறுபடியும் முதல்ல இருந்தா?
தேசிகன் முறையா இது?
இது இப்போதைக்கு முடியாது போல! அட போங்கடா!
இளைஞர்கள் ஓரமாக அமர்ந்துவிட, பெரியவர்களுக்கு அமர இருக்கை போடப்பட்டது.
தன்வியும், தேசிகனும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றிருக்க, "இப்போ நீ என்னதான் சொல்ல வர தேசிகா?" என்று கேட்டார் அவனின் மாமா.
"எனக்கு இவங்க வேணாம்" என்றான் வார்த்தையில் அழுத்தம்...
"இது நல்லா இருக்குடி. நான் பேசாம இருந்தேன். நீதான் தொழில் பண்ணுங்க, அப்ரூவல் வாங்குங்கன்னு என்னை தூண்டிவிட்டுட்டு, இப்போ என்னையே திட்டுற இல்லை. ஒருவேளை என் பொண்டாட்டிக்கு நான் சும்மா இருக்கிறதுல இஷ்டம் இல்லை போலன்னு ஆரம்பிச்சா"
"நான் அப்படி சொன்னேனா? சும்மா எப்போ இருந்தீங்க நீங்க? பேசணும்ன்னு பேச கூடாது" என்று தன்வி அவன்...
மலர் சூடும் பெண்மை 8
விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து, தன்வி மிகுந்த குழப்பத்துடனே சுற்றி கொண்டிருந்தாள்.
தேசிகன் அலுவலகத்தில் இருந்து இன்று அக்ரீமெண்ட் பற்றி முடிவெடுக்க ஆட்கள் வருகிறார்கள் என்று தகவல் வந்தது.
ராஜேந்திரன் தலையீட்டால், நிச்சயம் கையெழுத்தாகி விடும் என்று தன்வி எல்லாம் தயார் செய்ய சொல்லியிருந்தாள்.
ஆனால் பெரியப்பா போன் செய்து, "அவங்க வரலை தன்வி" என்றார்.
"ஏன்...
"செல்ல மகன் பாசமா?" என்று பெரிய மகன் சீண்டினான்.
"தேசிகா"
"ம்மா. நீங்க ஏன் அவன் சரின்னு சொல்றீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அந்தாள் என் கண்ணை விட்டு மறைஞ்சுட்டா, நான் அமைதியா இருப்பேன்னு தானே?"
"அதான் தெரியுது இல்லைடா" என்று சாவித்திரி கேட்க,
"சென்னையில இப்போ கூட ஒருத்தனை வம்பிழுத்து வைச்சிருக்கேனே? அவனை நாட்டை விட்டே அனுப்பிடலாமா?"
"தேசிகா இதுக்கு...
மலர் சூடும் பெண்மை 16
தன்விக்கு நடந்த எதையும் முழுதாக புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது.
அதற்குள் தேசிகன் அங்கிருந்தே சென்றுவிட, பெண்ணுக்கு திகைத்த நிலை.
அவள் அப்படியே நின்றுவிட, ராஜேந்திரனின் பெரிய மகன் வாசுதேவன் தங்கையை தன் தோளோடு அணைத்து கொண்டான்.
"ண்ணா" என்ற பெண்ணுக்கு அந்நேரம் அவன் தோளணைப்பு மிகவும் வேண்டியதாகவே இருந்தது.
"ஒண்ணுமில்லைடா. நாங்க இருக்கோம்"...
"அவன் உனக்கு ஹலோ சொன்னான்" என்ற தேசிகன் மனைவியை தீர்க்கமாக பார்த்தான்.
தன்விக்கு இஷ்டமில்லை என்றாலும், கணவனுக்காக, "ஹலோ முரளி" என்றாள்.
"சரி நான் வரேன்ண்ணா. வரேன் அண்ணி" என்று அவன் கிளம்ப பார்க்க,
"முரளி நில்லு. சாப்பிட்டு போ" என்றான் தேசிகன் கட்டளையாக.
"ண்ணா. எனக்கு பசிக்கலை" என்று அவன் மறுக்க,
"டேய் சாப்பிடாம வெளியே கால் எடுத்து வைச்ச...
மலர் சூடும் பெண்மை 13
தேசிகனும் தன்வியிடம் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. உள்ளங்கையில் சிறைப்பட்டிருந்த மாங்கல்யத்தை அவளின் நெஞ்சத்திலே விட்டவன், தன் முன் நின்றிருந்தவளின் கை பற்றி தன்னருகே அமர வைத்து கொண்டான்.
அவர்களுக்கான உணவும் வந்துவிட்டது. வழக்கம் போல் மணமக்கள் மாற்றி ஊட்ட சொல்லவே இளைஞர்கள் அங்கு கூடிவிட்டனர்.
"டேய் இதென்னடா" என்று தேசிகன் சலிக்க,
"ண்ணா. இதுவும்...
தன்வியிடம் அவர்கள் இப்படி என்று சொல்ல, தன்விக்கு கணவன் வருவான் என்ற எண்ணம் ஏனோ வரவில்லை.
'அவர் வர மாட்டார்' அவளுள்ளம் அடித்து சொன்னது.
ராஜேந்திரன் அவர் வேலையை முடித்து கொண்டு வீடு வர, மகன்கள் அவரிடம் நடந்ததை சொல்லிவிட்டார்கள். மனிதருக்கு பிரஷர் எகிறிவிட்டது.
"வர சொல்லு அவனை" என்று கத்தவே செய்தார்.
சதாசிவத்திற்கு போன் போக, அவரும் எதிர்பார்த்து...
உடனே இங்கிருந்து கிளம்பியாக வேண்டும். "டிக்கெட் வேணும். சீக்கிரம் பாருங்க" என்று அவளின் ஆட்களை முடுக்கிவிட்டவள், மெடிக்கல் எமெர்ஜென்சி என்று மீட்டிங் ஆட்களுக்கு தகவல் கொடுத்தாள்.
சதாசிவம் காணாமல் போனதை பற்றி யாருக்கும் தெரிய கூடாது என்பதால் அவளின் உதவியாளர்களுக்கு கூட சொல்லாமல் கிளம்பினாள்.
அன்றைய நாளே முடிந்துவிட்டது. ஆனால் சதாசிவத்தை பற்றி சின்ன தகவல் கூட...
தேசிகனின் மாமா மகள் திருமணம் நெருங்கிவிட்டது.
திருமணத்திற்கு செல்ல வேண்டுமா? வேண்டாம் என்பதுதான் தன்வியின் எண்ணம்.
ஆனால் பாட்டி ஆரம்பித்து பலர் அவளை போனில் அழைத்துவிட்டனர். "எப்போ வரீங்க? பிளைட் டிக்கெட் நாங்க போடவா? வீட்ல தங்க பிடிக்கலைன்னா ஹோட்டல் கூட ரூம் போடுறோம். ஆனா நீங்க வந்து தான் ஆகணும்." என்று அன்பு கட்டளையாகவே எல்லாம்...
"உனக்கு என்கிட்ட பயம் இல்லை. திரும்ப உன்னை கடத்தினா தான் நீ அடங்குவ"
"கடத்தி தான் என்னை அடக்கினீங்களா, எனக்கு இது தெரியாம போச்சே" என்று ஆச்சரியம் கொண்டாள்.
"மிஸ்டர் மாமனார் பொண்ணாச்சே நீ?"
"தேசிகன் பொண்டாட்டி இல்லையா நான்?" என்று இமைசிமிட்டினாள் பெண்.
தேசிகன் அவளை தனக்குள் கொண்டு வந்தவன், "பிடிச்சிருக்காடி?" என்று கேட்டான்.
"உங்களை தானே?"
"தன்வி. தன்வி" என்றான்...
தன்வி தான் பிரச்சனை என்றால் அவளிடம் பேசவும் எல்லாம் தயார் தான். ஆனால் கூடாது, அவளிடம் யாரும் பேசவே கூடாது என்று நிற்கும் தேசிகனை தான் அவர்களுக்கு சமாளிக்க முடியாமல் போனது.
தன்வி அங்கு எப்போதும் போல் இருந்தாள். பாட்டி அழைத்து பேசினால் நன்றாக பேசினாள்.
ஆனால் தேசிகன் விஷயத்தில் அவளின் நிலைப்பாடு என்ன என்பது இவர்களுக்கு...
நீங்க வாங்க என்று தன்வி அன்றும் அழைக்கவில்லை, இன்றும் அழைக்கும் எண்ணமில்லை.
ஒப்பந்தம் கையெழுத்தானதிற்காக சதாசிவத்தின் வீட்டில் பார்ட்டி. அந்த கம்பெனி ஆட்கள் முதல்கொண்டு, அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
ராஜேந்திரன் முதலில் தேசிகனை தான் அழைத்தார். அதன்பின்னே மற்றவர்களுக்கு அழைப்பு சென்றது.
சதாசிவம், சுதா மருமகனை போனில் அழைக்க, "ம்ம்" என்றதோடு முடித்துக்கொண்டான் தேசிகன்.
வாசுதேவன் முதல் கொண்டு...
தன்விக்கு அதிர்ச்சி. "உண்மையா தான் சொல்றீங்களா?"
"உண்மை தான். நீங்க பாருங்க மாமா" என்று அவரை அனுப்பிவிட்டவன், "நீ MBA படிச்சிருக்கிறதால என்கிட்ட அதிகம் எதிர்பார்த்துட்ட போல" என்றான் வருத்தமாக.
"என்கிட்ட நீங்க இதை சொல்லியிருக்கணும்" தன்வி சொல்ல,
"ஏன் என்னை வேணாம் சொல்லவா?"
"இப்போ என்ன எல்லாம் தெரிஞ்சுக்கிட்டா உங்களுக்கு சரி சொன்னேன்"
"சரி. உனக்கு தெரிஞ்சிருக்கும் நினைச்சேன். இட்ஸ்...
மிகப்பெரிய மண்டபம் என்பதால், அதனுடனான தோட்டமும் பெரியதாகவே இருந்தது.
தேசிகன் ஏற்பாடு செய்திருந்த உணவும் தன்விக்கு மிகவும் பிடித்து போனது. "உங்களுக்கு பிடிச்சது எது?" என்று கேட்டு அவனுக்கு அதை வைத்து, தானும் அதை சுவைத்து என்று அவர்களுக்கான நேரம் இனிமையாகவே சென்றது.
இறுதியாக இனிப்பு வர, தன்வி அவனுக்கு தானே ஊட்டினாள்.
"வாவ். என்ன அதிசயம் இது"...
மலர் சூடும் பெண்மை 25
"இது சரியா வருமா?" என்று ராஜேந்திரன் சந்தேகமாக கேட்டார்.
"ண்ணா. இதுல சரியா வரதுக்கு என்ன இருக்கு? தன்வியும், அவளோட வீட்டுக்காரரும் இங்க தான் இருக்காங்க. சம்மந்தி வீட்டுக்காரங்களையும் வர சொல்லி, விருந்து கொடுத்திடலாம்" என்றார் சதாசிவம்.
மகளுக்கு செய்ய வேண்டிய முறை, தடை பட்டு நிற்பதில் தந்தைக்கு ஆதங்கம்.
"முதல்ல தேசிகன்கிட்ட பேசிடலாம்...
தன்விக்கு அவளின் அலுவலகம் முழு மகிழ்ச்சியை கொடுத்துவிடவில்லை. தேசிகன் தொழில், அவன் அதில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதையே, உறுத்தலாக உணர்ந்தாள்.
எல்லோருக்கும் ஏதோ ஒன்று இருந்தது. தேசிகன் மட்டும் எல்லாவற்றிலும் எதோ ஓர் இடத்தில் இருந்தான். அவ்வளுவே! அவனுக்கென்று தனியாக வருமானம் எதுவும் இல்லை.
சாவித்திரி, அவரின் தொழிலை மகனிடம் கொடுக்க போராடி பார்க்கிறார். அசைய மாட்டேங்கிறான்....