Sunday, July 19, 2026

    Engaeyo Paartha Ngabagam

    அத்தியாயம் 5 தாயிடமிருந்து தேநீர் கோப்பையை வாங்கிவிட்டு மன அமைதியைத் தேடி மாடியிலிருக்கும் தனது அறைக்கு வந்த சக்தீஸ்வரன், தனது அறையில் அமைக்கப்பட்டிருந்த ஹோம் தியேட்டரில் பாடலை ஓட விட்டான். என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே எண்பதுகளின் பாடல்கள் அவனது காதினில் இன்ப தேன் பாயச்செய்ய, மாடியிலிருக்கும் தனது அறையின் பால்கனியில் வந்து அமர்ந்தான் சக்தீஸ்வரன். சொந்தமாகக்...
    அத்தியாயம் 6 தனது அறைக்குச் சென்று படுத்தவளிடம் வந்த மங்கை, "சாப்பிட்டுப் படு வஞ்சி" என்றாள். "பசியில்லைக்கா! சாரி என்னால நீயும் திட்டு வாங்குறல!" என்றவாறு வஞ்சி எழுந்து அமர, "என்னால என் காதல்னால தானே அம்மா உன்னை இந்த கல்யாணத்துக்கு வற்புறுத்துறாங்க. நான் தான் சாரி சொல்லனும். என்னால் தானே உன் கல்யாணமும் டிலே ஆகி இப்படி...
    அத்தியாயம் 7 கல்லூரிப் பேருந்தில் ஜன்னலருகே இருக்கைப் பார்த்து அமர்ந்தவளை வெளியே நின்று பார்த்திருந்தான் சக்தீஸ்வரன். பேருந்து நகரவும் வெளியே பார்த்தவள் அவனது கண்களைச் சந்திக்க, கை அசைத்து சிரித்தான் அவன். சட்டெனத் தலையை திருப்பிப் பார்வையைத் திசை திருப்பியவளுக்கு அவனை மீண்டுமாய் திரும்பிப் பார்க்கச் சொல்லி மனம் உந்தித் தள்ள, "ம்ம்ம்ஹூம் பார்க்க மாட்டேன். இந்தாளு சரியான...
    அத்தியாயம் 10 கண் முன் கண்ட காட்சியில், உடலும் உள்ளமும் பதற, "சக்தீஇஇஇ" என அலறியவாறு அவனை நோக்கி ஓடினாள் இளவஞ்சி. அந்த கல்லூரியின் வாயிலில் இருந்த காவல் பணியாளர் (செக்யூரிட்டி) இவளின் அலறலில் சாலையைப் பார்த்தவர் அவள் பின்னேயே ஓடினார். ஓடிய வேகத்தில் சேலைத் தடுக்க தார்சாலையிலேயே விழுந்தாள். அந்தத் தார்சாலை அவளின் முழுங்கையை பதம்...
    அத்தியாயம் 9 வஞ்சி என ஆங்காரத்துடன் கோபமாய் அழைத்த தாயின் குரலில் வஞ்சியின் உடல் நடுங்க, சட்டெனத் தனது கையை அவனது கையிலிருந்து உருவியவளாய் வீட்டினுள்ளே சென்றாள் இளவஞ்சி‌. உள்ளே சென்ற மகளையும், வெளியே அவளையே பரிதவிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் சக்தியையும் கோபமாய் பார்த்தார் வசந்தா. வீட்டினுள்ளே சென்ற வஞ்சியின் உள்ளம் நடுக்கத்தை நிறுத்தாமல் இருக்க, ஜன்னல் வழியாக...
    அத்தியாயம் 8 எதிர் வீட்டு மேல் மாடியில் பார்த்திருந்த அந்த பெண் தான் நின்றிருந்தாள். "ஹாய் வஞ்சி! என் பேரு மேனகா! எதிர்வீட்டுல புதுசா குடி வந்திருக்கோம். நாங்க பால் காய்ச்சும் போது நீங்க வரலைல அதான் இப்ப ஸ்வீட் கொடுக்கலாம்னு வந்தேன்" எனக் கையிலிருந்த இனிப்புப் பொட்டலத்தை அவள் கையில் திணித்தாள் மேனகா. மேனகாவின் கழுத்தினில் இருந்த...
    ஆமென தலையசைத்தவளாய், "என்னால நார்மலா இருக்க முடியலை‌ ஜானு. ஒரு மாதிரி அவர் நினைப்பாவே இருக்கு‌. நான் இது வரைக்கும் யார்கிட்டேயும் இப்படி ஃபீல் செஞ்சது இல்லை ஜானு. அவர் நினைப்பை ஒதுக்கி வைக்க நினைச்சாலும் முடியாம தவிச்சிட்டு இருக்கேன்" குற்றவுணர்வுடன் தன்னிலையை இளவஞ்சி விளக்க, ஆச்சரியமடைந்தவளாய், "ஓ மை காட்! யாரது? எங்க வஞ்சியோட...
    அத்தியாயம் 13 சக்தீஸ்வரனின் அறையில் இருந்த ஜன்னலின் வழியாக தனது வீட்டைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் இளவஞ்சி. மதிய வேளை என்பதால் வீட்டில் யாருமில்லாமல் பூட்டப்பட்டிருந்தது. அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வசிக்கும் வீடு அது. தந்தையின் நினைவுகளைச் சுமந்திருக்கும் வீடு இன்று தன்னை அந்நியமாக நிறுத்தி வைத்திருப்பதை எண்ணிக் கலங்கியவாறு பார்த்துக் கொண்டிருந்தாள் இளவஞ்சி. "எந்த மாதிரியான வாழ்க்கையை...
    அத்தியாயம் 12 "இந்தா இந்தப் புடவையை சீக்கிரமா கட்டிட்டு வா! வந்தவங்க முன்னாடி என் மானத்தை வாங்காம நில்லு" என்று பட்டுப் புடவையை அவளின் கையினில் திணிக்க, அதிர்ச்சியும் கோபமுமாய் கண்களில் நீருடன் தாயைப் பார்த்திருந்தாள் இளவஞ்சி. "என்ன பார்க்கிற? சீக்கிரம் மாத்திட்டு வா! இன்னிக்கு பூ வைக்கிற மாதிரி ஒப்பு தாம்பூலம் தான் மாத்துறாங்க. நிச்சயதார்த்தம்...
    "மாத்த கூடிய இல்ல அட்ஜஸ் செஞ்சிக்க கூடிய விஷயமா இருந்தா ஓகே ஜானு! ஆனா ஆளே தவறானவரா இருந்தா பிடிச்சவராவே இருந்தாலும் அந்தக் கல்யாண வாழ்க்கை நரகம் தானே ஜானு. அதுக்கு கல்யாணமே செஞ்சிக்காம இருந்துக்கலாமே! சந்தோஷமா வாழுறதுக்குத் தானே வாழ்க்கை ஜானு" என்றவளைத் தழுவிக் கொண்டாள் ஜானகி. "எல்லாம் வல்ல ஈசன் உனக்கு எல்லாமே...
    அத்தியாயம் 11 அந்தப் பூஞ்சோலை வனத்தில் பூக்களைப் பறித்தவாறு நின்றிருந்தவளின் பின்னே வந்து நின்றான் அவன்‌. "அடடே என்னைத் தேடியும் வந்து விட்டீர்களே! வியப்பாக உள்ளது" என்று முகத்தில் எவ்வித பாவனைகளையும் வெளிப்படுத்தாமல் உரைத்த பாவையின் கைகளோ பூக்களைப் பறித்து கூடையில் போட்ட வண்ணம் இருந்தன. "திரும்பி பாராமலேயே என்னை அறிந்து கொண்ட தங்களின் நுண்ணறிவு தான் என்னை...
    அத்தியாயம் 15 அவர்களுக்கான அன்றைய இரவில் சக்தீஸ்வரனின் அறையில் இருந்தாள் இளவஞ்சி. இரு கால்களையும் மடித்து முட்டியில் தனது கன்னத்தை வைத்து அமர்ந்திருந்தவளின் மனமோ பலவிதமான சிந்தனையில் சுழன்றிருந்தது. இன்றைய திருமண நிகழ்வில் நெகிழ்ந்திருந்த மனத்தின் மகிழ்வு நிலையிலேயே அடுத்தடுத்த சடங்குகள் நடந்திருந்தன. இப்பொழுது எண்ணிப் பார்க்கையில் அனைத்தும் துரிதகதியில் நடந்து முடிந்ததற்கு அவளுக்கு வந்த கனவுகளே காரணமாய் இருந்திருக்கிறது...
    அத்தியாயம் 14 இன்று தான் முதல் முறையாக சக்தீஸ்வரனின் அறையில் இருக்கும் அந்தக் கண்ணாடி ஜன்னலைக் காண்கிறாள். அதனைப் பார்வையிட்டவளுக்கு எப்படி அன்று சக்தி தான் நிற்பதை அறிந்து பாடலின் ஓசையை அதிகரித்தான் எனப் புரிந்தது.  அந்த ஜன்னலின் கண்ணாடியில் அறையிலிருந்து பார்த்தால் மறுபக்கமுள்ளவர்கள் தெரிவார்கள் ஆனால் வெளிப்புறத்திலிருந்து பார்த்தால் அவர்களின் முகம் தான் தெரியும். வீட்டினுள்ளே இருப்பவர்கள்...
    அத்தியாயம் 16 மறுநாள் காலை இளவஞ்சி தனது அத்தை மகேஸ்வரியுடன் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் வந்த மங்கை, "சாரிடா நேத்தே வந்து பார்க்கனும்னு நினைச்சேன். ஆனா வர முடியலை. கல்யாணம்லாம் எப்படி நடந்துச்சு?" எனக் கேட்டாள். தங்கைக்கான அன்பும் மகிழ்வும் கூடவே உடன் இருக்க முடியாமல் போன குற்றவுணர்வும் என கலவையான உணர்வுகளுடன் தங்கையை...
    அத்தியாயம் 20 இறைவனைத் தரிசித்து விட்டு வெளியே வந்து வண்டியில் ஏறியதும், "சக்தி நாம முக்கியமான ஒரு இடத்துக்கு இப்ப போகப் போறோம்" என்றவள் ஓட்டுனரிடம் தான் கூறும் பாதையில் வண்டியைச் செலுத்துமாறு உரைத்தாள். "எதுவும் சர்ப்ரைஸ்ஸா பொண்டாட்டி?" என்று வழமைப் போல் கேட்டவனை, 'அய்யோ எங்க போறோம்னு தெரிஞ்சா திட்டுவாரோ' என்ற பாவனையுடன் பார்த்தவள், "அதெல்லாம்...
    அத்தியாயம் 19 விடியற்காலை மூன்று மணியளவில் இருவரும் பேருந்தில் இருந்து இறங்கியதும், அங்கிருந்த பலகையில் இருந்த பெயரைப் பார்த்தவன், "சோலைவனம்" எனப் படித்தவாறு நெற்றியைச் சுருக்கினான். குளிர் உடலுக்குள் ஊடுருவி கை கால்களை நடுங்கச் செய்தது. உறக்கத்தில் மலை மீதான பயணத்தைக் கவனியாது வந்தவன், இறங்கியதும் தான் தாங்கள் பல அடி தூர உயரமான மலை கிராமத்தில்...
    மறுநாள் காலை கணவனின் செய்கையை எண்ணி சிவந்த கன்னங்களும் மின்னிய கண்களுமாய் கிளம்பிக் கொண்டிருந்த மனைவியைப் பின்னோடு அணைத்த சக்தி, "கண்டிப்பா காலேஜூக்கு போகனுமா?" எனக் கேட்டவாறு அவளின் பின்னங்கழுத்தில் இதழால் வருடினான். அவனின் செயலில் ஹ்ம்ம்ம் என்றவளின் குரல் ஹஸ்கியாய் வெளி வர, அவனை நோக்கி திரும்பியவள் அவன் மார்பில் கை வைத்து தள்ளி...
    அத்தியாயம் 30 நினைக்க நினைக்க நெஞ்சம் பூரித்துப் போனது சக்தீஸ்வரனுக்கும் இளவஞ்சிக்கும். தங்களை கொண்டு இன்று எத்தனை பக்தர்கள் நன்மை அடைகிறார்கள் என்றெண்ணி மனம் மகிழ்ந்த அதே சமயம் சிவபிரானின் கருணையை எண்ணி கலங்கின கண்கள். தன்னவளின் பக்திக்கு கிடைத்த வரமல்லவா இது! அந்த வரம் இன்று தங்களுக்கே உதவியும் இருக்கிறது என்பதை நினைக்க உடல் புல்லரித்தது. தாங்கள் இனி...
    அத்தியாயம் 17 கத்தியை எடுத்த பள்ளி மாணவன் தன்னுடன் சண்டையிட்டிருந்த மாணவனைக் குத்துவதற்காக நீட்ட, இடைபுகுந்த சக்தியின் வயிற்றுப் பக்கமிருந்த சட்டைத்துணியை லேசாய் உரசிக் கிழித்திருந்தது அந்தக் கத்தி. அந்த மாணவனின் கையைப் பிடித்து பின்னோக்கித் திருகி கத்தியை கீழே போட வைத்த சக்தி, அவனின் கையை பின்னாலே முறுக்கிப் பிடித்து தோளில் ஒரு கராத்தே அடியும்...
    அத்தியாயம் 18 பேருந்தில் பயணித்திருந்தனர் இருவரும். இளவஞ்சியின் வலது முன்னங்கையை தனது இரு கரங்களினாலும் இறுக்கமாய் பற்றி அவளின் தோளில் தலையைச் சாய்த்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் சக்தீஸ்வரன். கண்களை மூடியவாறு இருக்கையில் தலை சாய்த்திருந்தவளின் மூளை பலவிதமான சிந்தனையில் சுழன்றிருந்தது. அன்று ஆத்மநல்லூருக்கு தேனிலவு செல்லும் எண்ணம் உருவானதும், அதனை செயல்படுத்தும் திட்டத்தை உருவாக்கினாள் இளவஞ்சி. அன்றிரவே அவனிடம், "ஏங்க...
    error: Content is protected !!