மஞ்சள் காட்டு மைனா
பசுபதி தங்கள் குடும்பத்துடன் வளர்மதி வீட்டுக்கு வந்தார். முக்கியமான பெரிய தலைகளை மட்டும் உடன் வைத்து கொண்டு உறுதி பேசி முடித்தனர்.
"தேவாவுக்கு வரமுடியலை" என்று வைரவேல் சொல்ல வர,
"தெரியும்ண்ணா. ஏதோ முக்கியமான கேஸ் இருக்குன்னு போன் பண்ணி பேசினான்" என்றார் வளர்மதி.
குடும்பத்தினர் ஆசுவாசப்பட்டு கொண்டனர். சங்கடத்துடன் தான் அமர்ந்திருந்தனர்.
"கல்யாணம் வர முகூர்த்தத்துல வைச்சுடலாம்" என்றார்...
மஞ்சள் காட்டு மைனா 18
வைரவேல் தன் குடும்பத்திடம் தேவா சொன்னதை சொன்னார். துளசியை பெண் கேட்டு போக வேண்டும் என்றார்.
"இதைத்தான் நான் முதல்லே சொன்னேன்" என்ற ஜெயலட்சுமி உடனே நல்ல நாள் பார்த்தார். மகள்களை போன் செய்து வர சொன்னார்.
செல்வி அன்றே வந்துவிட, அகல்யா மறுநாள் வந்தவள், "ஏன்ம்மா? வேற பொண்ணு பார்க்கலாம் இல்லை?"...
மஞ்சள் காட்டு மைனா 17
"இந்த சந்திப்பு தேவையாம்மா?" என்று துளசி கேட்க,
"ஒரு முறை பேசித்தான் பார்ப்போம்" என்று வளர்மதி அதையே தான் திரும்ப சொன்னார்.
துளசிக்கு பழைய நினைவுகள் எல்லாம் கசப்பே. அதையே மீண்டும் பேசுவதில் பெண்ணுக்கு எப்படி விருப்பமிருக்கும்?
ஆனந்தி அறைக்குள் வர, "உட்காருமா" என்று வளர்மதி அவரை வரவேற்று அமர வைத்தார்.
துளசி அவருக்கு குடிக்க...
"அப்புறம் எப்படி பொண்ணை உறுதி பண்றது? ஊருக்கு சொல்றது? அவங்க வீட்டு ஆளுங்களுக்கிட்ட முறைப்படி பேசுறது. இதெல்லாம் செஞ்சு தான் ஆகணும் வேலு" என்று பசுபதி சொல்லிவிட, வேறு வழி இல்லாமல் வைரவேல் வாசலுக்கு வெளியே அமர்ந்திருந்தார்.
வீட்டுக்குள் செல்லவில்லை, மாலதியை பார்க்கவில்லை. மாப்பிள்ளை எனும் முத்திரை அவரை மிகவும் சங்கட படுத்தியது.
"அப்புறம் மாப்பிள்ளைக்கு என்ன...
மஞ்சள் காட்டு மைனா 16
வைரவேல் நேரம் கேட்டு கூட இரண்டு வாரம் கடந்துவிட்டது. தேவா தன் சிறிய தந்தையிடம் அது பற்றி பேசவில்லை.
மற்றதில் எப்படியோ, இதில் மாலதியும் அடங்கியிருக்கிறார். திருமணத்திற்காக அவரை கட்டாயப்படுத்தினான் தான்.
ஆனால் மாலதியை கட்டிக்க சொல்வதில் அவரை நெருக்கவில்லை. முழு மனதாக அவர் சம்மதிக்க வேண்டும்.
இல்லையென்றால் நாளை வைரவலுடன் மாலதி மட்டுமில்லை,...
அகல்யா மட்டும் தான் படபடப்பாக ஏதோ பேசி கொண்டிருந்தாள். குழந்தைகள் அங்கும், இங்கும் சென்று கொண்டிருக்க, வைரவேல் மகனுடன் தங்கிவிட்டார். அவரின் ஆதரவு மகனுக்கு எப்போதும், எந்த நிலையிலும் உண்டே!
"மிஸ் காபி கொண்டு வர சொல்லுங்க" என்றான் தேவா.
அகல்யா, மருமகன்கள், குழந்தைகளை தவிர எல்லார் பார்வையும் சட்டென துளசியை தொட்டு சென்றது. அவள் மொபைலில்...
மஞ்சள் காட்டு மைனா 15
வைரவேலிடம் "சந்தோஷ் மேல பைல் பண்ற இன்னொரு கேஸை நீங்க பார்த்துக்கோங்க சித்தப்பா" என்று சொல்லிவிட்டான் தேவா.
வைரவேலுக்கு யோசனை. "மோசடி கேஸ் நடத்தணுமா தேவா? நமக்கு தான் விவாகரத்து கிடைச்சிருச்சு இல்லை" என்று கேட்டார்.
ஏற்கனவே சுந்தரத்தின் பல கணக்குகள் தவறிவிட்டன. இதில் இந்த வழக்கு அவரை மேலும் தூண்டிவிடுவது போலாகி...
தேவா மெல்லிய புன்னகையுடன் பேச ஆரம்பித்தவன், "காதல் எப்போ குற்றத்தில கொண்டு வந்தாங்கன்னு எனக்கு தெரியலை" என்றான்.
"துளசியோட காதலை மன்னிச்சு ஏத்துக்கிறார். ம்ஹ்ம். நல்ல பேச்சு. இப்போ என் கட்சிக்காரர் என்ன பண்ணனும்? சந்தோஷை மட்டும் ஏத்துக்கணுமா? இல்லை அவரோட சேர்ந்து வாழ்ந்த அந்த பொண்ணையும், அவங்க குழந்தையையும் கூட ஏத்துக்கணுமா?"
"உடனே அது முடிஞ்சு...
மஞ்சள் காட்டு மைனா 14
செல்வி அம்மா வீட்டிற்கு வந்திருந்தாள். ஜெயலட்சுமி மகளை வர வைத்திருந்தார்.
"உனக்கு ஆயிரம் வேலை இருக்கும். அம்மாவை எல்லாம் உனக்கு எங்க ஞாபகம் இருக்க போகுது? நானா உன்னை கூப்பிட்டா கூட, நாளைக்கு வரேன், அடுத்த வாரம் வரேன்னு சொல்ற. உங்க யாருக்கும் நான் தேவையில்லை" என்று கோவத்தில் பேசி போனை...
மஞ்சள் காட்டு மைனா 13
வைரவேல் போன் பேசி கொண்டிருக்க, "சித்தப்பா" என்று வந்தான் தேவா.
"இரு" என்று சைகையில் சொல்லி, போன் பேசி வைத்தவர் முகத்தில் கோவம்.
"இப்போ என்ன?" என்று அவரின் பக்கத்திலே படுத்துகொண்டான் தேவா.
"டேய் இங்க வேணாம். எழுந்திரு" என்று சின்ன தந்தை மகனை அதட்ட,
"ஏன் படுத்தா என்ன?" என்று இன்னும் சட்டமாக படுத்தான்.
"உன்னோட....
"பிடிக்கலை, வாழ இஷ்டமில்லை, அவன் குணம் சரியில்லை, எனக்கு விவாகரத்து வேணும்ன்னு ஒரு பொண்ணு கோர்ட்டுக்கு வரது அவளோட உரிமை. அதுக்காக அவள் கேரக்டருக்கு களங்கம் விளைவிக்கிறதுல என்ன நியாயம் இருக்கு? இந்த கோர்ட் தான் அதை வேடிக்கை பார்த்துட்டு இருக்குமா?”
"அப்போ என் கட்சிக்காரர் மேல மட்டும் அவதூறு சொல்லலாமா?” என்று எதிர் தரப்பில்...
மஞ்சள் காட்டு மைனா 12
இரவெல்லாம் தூங்காமல் அங்கும், இங்குமாக வளர்மதி உழன்று கொண்டிருக்க, "ம்மா" என்று தூக்க கண்களுடன் எழுந்து வந்தாள் துளசி.
"தண்ணீர் குடிக்க எழுந்தேன் துளசி. நீ போய் தூங்கு" என்று அவரின் அறைக்கு செல்ல போக,
"ம்மா. தண்ணீர் குடிச்சீங்களா?" என்று கேட்டாள் மகள்.
இல்லையே? வளர்மதி, "குடிச்சுகிறேன்" என,
துளசி அம்மாவிற்கு தண்ணீர் பாட்டிலை...
"தேவா"
"என்னோட கிளையண்ட் அவங்க. பாதுகாப்பு ரொம்ப முக்கியம்"
"நாங்க கேஸை வேற ஒருத்தருக்கு கொடுத்துகிறோம். இல்லை நானே கூட வாதாடிக்கிறேன்" துளசி சொல்ல,
"என்ன சொன்ன? திரும்ப சொல்லு?" என்று பெண்ணை நெருங்கிவிட்டான் தேவா.
அவனின் ஆக்ரோஷத்தில் வளர்மதி சட்டென நகர்ந்துவிட, துளசி ஓர் அடி கூட நகராமல் அங்கேயே நின்றாள்.
"ச்சு. டேய் என்ன பண்ணிட்டிருக்க?" என்று பசுபதி...
மஞ்சள் காட்டு மைனா 11
வைரவேல் தனி அறைக்கு மாற்றப்பட்டிருக்க, தேவா தான் முதலில் அவரை பார்க்க சென்றான்.
கால்களில் சிறிதான அறுவைசிகிச்சை செய்தபடியால், வைரவேல் மயக்கத்தில் இருந்தார்.
"தெளியும் நேரம் தான்" என்று மருத்துவர் சொல்ல, தேவா கைகட்டி அமர்ந்துவிட்டான்.
வைரவேல் சில நிமிடம் சென்று கண் விழிக்க, மனிதர் அசைய முயன்று, முடியாமல், அக்கம் பக்கம் பார்த்தார்.
தேவா...
மஞ்சள் காட்டு மைனா 10
"என்னடா சொல்ற?" என்று சுந்தரம் கேட்க,
"ஆமாங்க சார். இப்போதான் தெரிஞ்சது. வைரவேலுக்கு பதிலா இன்னைக்கு தேவா சார் தான் ஆஜர் ஆக போறார்" என்றான் மற்றவன்.
அருணிடம் சொல்லி அதற்கான நடைமுறையை பார்க்க சொல்லி தேவா போனில் சொல்லியிருந்தான்.
தேவா கோர்ட்டுக்கு வருவதற்குள் அருண் அதற்கான வேலையில் இறங்கியிருக்க, விஷயம் சுந்தரம் காதுக்கு...
வளர்மதியின் பிறந்த வீட்டினரை பற்றி அவரிடம் சொல்லியிருந்தார். "என் பிறந்த வீடு சரியில்லை அய்யா. என் அண்ணனுங்களுக்கு என்மேல பெருசா அக்கறையில்லை. புகுந்த வீடுன்னு இப்போதான் சொந்தம் ஒன்னு சேர்ந்து வருது. என் பொண்ணு நாளைக்கு தனிச்சு நின்னுட கூடாது. நான் இல்லைன்னாலும் அவ நல்லா வாழணும். உங்க பையன் பத்தி நான் தப்பா...
மஞ்சள் காட்டு மைனா 9
"படிக்கிற பிள்ளையை தொந்தரவு பண்ண கூடாது தேவா" என்றார் பசுபதி.
“இப்போ நான் அவளை என்ன தொந்தரவு பண்ணிட்டேன்" என்று தேவா முகம் சிவக்க,
"அப்புறம் எதுக்கு வளர்மதி டீச்சர் வந்து சண்டை போட்டுட்டு போறாங்க?" என்றார் தந்தை.
தேவா முகம் திருப்பி எங்கோ பார்க்க, "என் மகன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை"...
மஞ்சள் காட்டு மைனா 8
துளசியின் வழக்கில் நல்ல முன்னேற்றம். சந்தோஷிடம் இருந்து விடுதலை கிடைப்பதற்கான அத்தனை சாத்தியமும் கண் முன் தெரிந்தது.
வைரவேலின் விடா முயற்சி அப்படி. மனிதர் மிகவும் வலுவாக துளசி பக்கம் நின்றார்.
சந்தோஷ் எப்போதும் போல, "எனக்கு என் மனைவி வேண்டும். அவளை பிரிந்து என்னால இருக்க முடியாது" என்று கண்ணீர் மல்க...
"இந்த தேங்காய் தோப்பு உங்களுதா?" என்று தேவா கேட்க.
"ஆமா மாப்பிள்ளை. சுத்தி பத்து ஏக்கருக்கு தென்னந்தோப்பு தான்" என்றார் பெண்ணை பெற்றவர்.
"கோழி பண்ணை இருக்குன்னு சொன்னாங்க"
"அதுவும் இருக்கு மாப்பிள்ளை"
"ம்ம். பொண்ணுக்கு எதை கொடுக்கிறீங்க?"
"ஆஹ்ன்"
"தேவா. என்ன இது" என்று தந்தை அதட்ட,
"அவர் பொண்ணுக்கு தானே கேட்டேன். எனக்கா கேட்டேன்" என்றான் மகன்.
"மாப்பிள்ளை கேட்கிறது சரிதான். நாங்க...
மஞ்சள் காட்டு மைனா 7
முதல் நாள் வழக்கில், துளசி அவளுக்கு விடுதலை வேண்டும் என்று தெளிவாக சொல்ல,
சந்தோஷும், எனக்கு என் மனைவி வேண்டும் என்று உறுதியாக நின்றான். வழக்கு தள்ளி போனது.
தெரிந்தது தானே, அடுத்து என்ன என்று வைரவேல் துளசியிடம் பேசினார்.
மகள் முடிந்த வரை எல்லாவற்றையும் தானே பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்...