என் இரவின் பொன் நிலவே
அத்யாயம் 7:
சந்தான லட்சுமி காலையில் அவர் கொடுத்து அவள் வாங்க மறுத்த அதே செயினை மறுபடியும் அவளுக்கு குடுக்க முறபட,
“ஜ்வெல் பாக்ஸ் மாதிரி இருக்கு பாட்டி” என்றாள் மறுப்புடன்.
“காலையில குடுத்த செயின் தான்டா உள்ள இருக்கு. கண்டிப்பா இதை நீ வாங்கிக்கிட்டே ஆகணும்” என்றார்.
“பாட்டி ப்ளீஸ்” என்றாள் மறுக்கும் குரலில்.
“பூமி இப்போ தாராவை வாங்கிக்க...
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சந்தான லட்சுமியுடன் வந்தான் அகன்.
“தாரா எங்க பூமி?” என்றார் லட்சுமி.
“இப்போத்தான் ரூம்க்கு போனா பெரியத்தை” என்றார் வேணி.
“என்னாச்சு பெரியம்மா?” என்றார் பூமி.
“என்ன பூமி இப்படி கேட்குற? பிள்ளைக்கு கேக் வெட்ட வேண்டாமா? அதோ அங்க எல்லாம் ரெடி பண்ணியாச்சு. வேணி நீ போய் தாராவைக் கூட்டிட்டு வாம்மா” என்றார்...
அத்தியாயம் 6:
அந்த இரவு நேரத்தில் வீடு வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. இரவு உணவுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்க, அதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்த யுகந்தாராவிற்கு மனம் முழுவதும் அகனைப் பற்றிய யோசனைகள் மட்டுமே.
“இப்படி ஒரு பஞ்சாயத்தைக் கூட்டி, இந்த வருஷப் பிறந்த நாளை எந்த வருஷமும் மறக்க முடியாமே பண்ணிட்டான் இந்த AP”...
அங்கே அறையில் மகனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த தயாளனோ வெகுவாய் சோர்ந்திருந்தார். இங்கு வந்து இத்தனை நாட்களாகியும் மகன் தன்னுடன் பேசாதது தயாளனை வெகுவாய் பாதித்திருந்தது. இத்தனை வருடங்களாக அவன் பேசாமல் இருந்தாலும் அவன் அருகில் இல்லாததால் எப்படியோ பொறுத்துக் கொண்டார். ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து வந்தும் தன்னிடம் பாராமுகமாய் இருக்கும் மகனை...
அத்தியாயம் 5:
ரோப் காரில் வரும் பெண்கள் அணி இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. சூரியனோ சுள்ளென்று எறிக்க, வெப்பத்தின் வேட்கையை தாங்க முடியாமல் அகனின் முகம் முழுவதும் சிவந்து விட்டிருந்தது. அவனை அப்படி பார்த்த யுகந்தாராவிற்கு பாவமாய் இருந்தது.
அவர்கள் வரும் வழி நோக்கி இவர்கள் விழி வைத்துக் காத்திருக்க, கூட்டம் வேறு அதிகமாக இருந்தது. ஒரு...
அவள் அவனைத் திகைத்தபடி பார்க்க, அவனோ அவள் மொபைலைப் பார்க்கும் படி புருவத்தை உயர்த்தினான்.
“ஹேப்பி பெர்த்டே பெஸ்ட்டி” என்று வாட்சப்பில் வந்த செய்தியைப் பார்த்து அவள் முட்டக் கண்ணை விரிக்க,
“பெஸ்ட்டியா?” என்றாள் வாயைத் திறந்து.
“ம்ம்.. கேர்ள் பெஸ்ட்டி” என்று அனுப்பியிருந்தான்.
“கேர்ள் பெஸ்ட்டினா பிரண்டுக்கு மேல, லவ்வருக்கு கீழ” என்று என்றோ தோழிகள் சொன்னது ஞாபகத்திற்கு...
அத்தியாயம் 4:
அகனின் திருமண வேலைகள் தடபுடலாய் நடக்க, அடுத்து வந்த இரண்டு நாட்களும் சென்ற வேகம் தெரியாமல் சென்றிருந்தது. இந்த இரண்டு நாட்களும் அகனின் அருகில் செல்வதை முடிந்த அளவு குறைத்துக் கொண்டாள் யுகந்தாரா. அதற்கு வேணியும் ஒரு காரணம் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். தாராவும் தன் மனம் அலைபாய்வதை விரும்பவில்லை.
அவளின்...
அவளை அறைக்குள் அழைத்துச் சென்ற லட்சுமி பாட்டியோ,
“அவங்க பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்மா” என்றார். அவள் அவரை சங்கடமாக பார்க்க,
“எல்லாத்தையும் கேட்டுட்டுத் தான் வந்தேன்” என்றார் சந்தான லட்சுமி நிதானமான குரலில்.
“கோபமில்லைன்னு பொய் சொல்ல மாட்டேன் பாட்டி. கொஞ்ச நேரத்துல நானே சரியாகிடுவேன். சொல்றனேன்னு தப்பா நினைச்சுக்காதிங்க, நீங்க அகனுக்கு அலையன்ஸ் பார்த்ததை இன்னும்...
அவள் வெளியே செல்வதைப் பார்த்த சுகந்தியோ,
“இந்த பொண்ணு என்னத்தை நம்ம கார்த்தி ரூம்ல இருந்து போகுது?” என்றார் சந்தான லட்சுமியிடம்.
“நான் தான் கார்த்திக்கு லஞ்ச் எடுத்துட்டு போய் குடுக்க சொன்னேன். அதுல உனக்கு எதுவும் பிரச்சனையா சுகந்தி?” என்றார் நேர்பார்வையாய்.
“அவனுக்கு அடுத்த வாரம் கல்யாணம். இப்போ இப்படி வயசுப் பொண்ணை அவன் ரூம்க்கு அனுப்புறது...
அத்தியாயம் 3 :
“அய்யோ பார்க்குறானே! பார்க்குறானே!” என்று வேகமாய் மறுபுறம் திரும்பிக் கொண்டவளுக்கு இதயம் வேகமாய் அடித்துக் கொண்டது.
“என்னா பார்வைடா சாமி? எப்பவும் பொண்ணுங்க தான் இப்படி ஆளை மயக்குற பார்வை எல்லாம் பார்ப்பாங்க. இங்க என்ன இவன் இப்படி பார்த்து வைக்கிறான்?” என்று தனக்குத் தானே அவள் பேசிக் கொண்டிருக்க,
“தாராம்மா, இதை கார்த்தி...
அங்கு சந்தானலட்சுமி அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்துக் கொண்டு செல்ல,
“என்னம்மா வீடே மாறியிருக்கு?” என்றார் சுகந்தி.
“சும்மாவே அந்த பொம்பளை பணக்காரத் திமிரைக் காட்டும். இப்போ கார்த்தி கல்யாணம் வேற? சொல்லவா வேணும்” என்றார் பரமேஸ்வரி.
“நம்ம வீட்டு பையன் கல்யாணத்துக்கு இப்படி மூணாவது மனுஷங்க மாதிரி வர வச்சுட்டாங்களே? பொண்ணைக் கூட போட்டோவுல காட்டினதோட சரி....
அத்தியாயம் 2 :
வெளியே வந்து அங்கிருந்த சேரில் அமர்ந்தவளுக்கு ஏனோ கேள்விப்பட்ட விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில வினாடிகளில் அவனை பற்றிய தவறான அபிப்பிராயத்தை வளர்த்தற்காக தன் மீதே அவளுக்கு கோபம் வந்திருந்தது.
‘செம்ம பிகரா இருக்கானேன்னு நினைச்சு முடிக்கலை, அதுக்குள்ளே அவனுக்கு இப்படி ஒரு பிரச்சனைன்னு சொல்லிட்டாங்களே? ஆனா அவனைப் பார்த்தா அப்படி...
மடத்துக்குளத்தில் தன் வீட்டின் வரவேற்பறையில் பாவமாய் அமர்ந்திருந்த பூமிநாதனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள் யுகந்தாரா.
கோபமாய் அந்த சோபாவில் தொம்மென்று அமர்ந்தவள் தந்தையை முறைக்க, அவரோ அப்பராணி போல் பார்த்து வைத்தார். இவர்களின் நாடகத்தை ஒரு சிரிப்புடன் பார்த்திருந்தார் வேணி.
“உங்களுக்கு சிரிப்பென்ன வேண்டி கிடக்கு?” என்றாள் கடுப்பாய்.
“அம்மாடி அப்பா சொல்றதை கொஞ்சம் கேளுமா?” என்றார் பூமிநாதன்.
“நீங்க ஒன்னும்...
அகனின் பார்வை நிதானமாய் அந்த வீட்டினை அளவெடுத்தது. எண்ணங்களின் இடுக்களில் பழைய ஞாபகங்கள் வந்து போக, அதை நினைவுகளாகவே தனக்குள் சேமித்துக் கொண்டவன், வேகமாய் மாடியேறி தனது அறைக்குள் சென்றான். அவன் இல்லாவிட்டாலும் அவனின் அறை அப்படியே தான் இருந்தது. மேலே சென்றவன் சில நிமிடங்களிலேயே கீழே வந்தான்.
“என்னாச்சு கார்த்தி? இப்போத்தான வந்த? அதுக்குள்ள...
அத்தியாயம் 1 :
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் அமைந்துள்ள, கோயம்புத்தூர் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமான பொள்ளாச்சியில், சற்று வசதி படைத்தவர்கள் வசிக்கும் அந்த பகுதியில் அமைந்திருந்தது அந்த வீடு.
வீட்டின் வரவேற்பறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த தயாளனின் முகத்தில் ஏகத்திற்கும் எரிச்சல் மண்டிக் கிடந்தது. அவர் முகமே...