O Crazy Minnal
மின்னல்-14
வண்டியை வெளியே இடம் பார்த்து நிறுத்தியவன் ரேவதியை அழைத்துக் கொண்டு உள்ளே நுழையும்பொழுதே அஷ்மியை பார்த்துவிட்டான்.
அவர்கள் இருவரையும் பார்த்த மகிழ்ச்சியில் “அஷ்மி!” என்று அழைத்துவிட பக்கத்தில் இருந்த ரேவதியோ…
“யாரு இந்திரா?” என்று வினவ
“வேண்டியவங்க!” என்று திரும்பியவன் பொறி தட்டியவனாக அவளிடம் திரும்பி…
“என்ன இந்திரான்னு கூப்பிடாத!”
“ஏன்???”
“காரணமாத்தான்!” என்றவனின் முகத்தில் விளையாட்டுத்தனம் இல்லை…ஏன் என்று புரியாவிட்டாலும்… அவனிடம்...
மின்னல்-13
சில சமயங்களில் நாலு நாள் நட்பில் வரும் நெருக்கம்…நாலு வருட நட்பில்கூட வருவதில்லை…!
அப்படிதான் நரேனுக்கும்…குறைந்த காலத்திலேயே அவன் அந்த குடும்பத்துடன் ஒன்றிவிட்டான்… அவர்களும் அவனை தங்கள் வீட்டில் ஒருவனாய் ஏற்றுக் கொண்டது அதிசயமே…!
நாட்கள் ஐஸ்கட்டியாய் கரைய அவர்கள் உறவும் இன்னுமின்னும் மென்மையானதே தவிர விரிசல் விழவில்லை!...விழாமல் பார்த்துக் கொண்டான்!
சொந்த ஊரில் அவ்வளவு பெரிய கூட்டு...
மின்னல்-12
ஆராவையே பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம் உள்ளுக்குள் ஒரு குத்தாட்டம் போட்டாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தாள்.
'நன்றி சொல்லனுமா???... இல்ல நான் ஏன் நன்றி சொல்லனும்? அவன்தானே ஒடச்சான்... அப்போ அவன் அத சரி செஞ்சதுக்கு நான் ஏன் தாங்க்ஸ் சொல்லனும்..??' என்று கோர்ட்டில் நீதிபதி முன் வழக்கறிஞர்கள் வாதாடுவதைப் போல தன் மனசாட்சியுடன்...
மின்னல்-11
சூரிய கிரணங்கள் சுள்ளென்று என் முகத்தில் விழும்வரை நான் எழுவதாக இல்லை என்ற சபதத்துடன் உறங்கிக் கொண்டிருந்தாள் குறிஞ்சி.
இரவு முழுக்க பேசிப் பேசியே அஷ்மியை கொன்றவள் இப்பொழுதுதான் களைத்துப் போய் உறங்குகின்றாள்.
ஆனால் அது அந்த ஆதவனுக்குத் தெரியாதில்லையா...அவளை தன் கைகளால் ஸ்பரிசிக்க அவளும் சுளீரென்று முகத்தில் படிந்த சூரிய ஒளியால் புருவத்தை சுளித்தவாறு...திரும்பி...
மின்னல்-10
"ஓய்!!! நில்லு! மரியாதையா நின்னுரு" என்று கத்திக் கொண்டே விரட்டினாள் குறிஞ்சி.
"அய்யோ!! அஷ்மீ!!! ஆன்ட்டீ!!!" என்று எல்லோரையும் இழுத்து நடுவில் விட்டவன் கடைசியில் ஜிதேனிற்கு பின் வந்து நின்றிருந்தான்
அன்றைய நாளே அவளை வைத்து செய்திருந்த காரணத்தினால் கடுப்பிலிருந்தவள்...அவனை கண்டவுடன் முதலில் அதிர்ந்து பின் அது மனதில் பதிய...அவனை கொலைவெறிப் பார்வை பார்த்தாள்.
அவனால் ஆன...
மின்னல்-9
"அப்போ நீ அவள அடிச்சிட்ட...?" என்று ஒற்றை புறுவத்தை உயர்த்திய ஹாட்பாக்ஸை....ச்சே ஹெச்.ஓ.டீயை பார்த்து நின்றவளின் முகத்தில் துளியும் குற்ற உணர்வு இல்லை.
எப்படியிருக்கும் அவளை பொருத்தமட்டில் அவள் செய்தது சரியல்லவா...எது வந்தாலும் பார்த்துவிடலாம் என்றிருக்க அதில் லாரி லாரியாக மண்ணள்ளி கொட்டியிருந்தாள் புவன்.
"இந்த ஹெச்.ஓ.டீ. ஹாட்பாக்ஸ்ஸ எப்படி சமாளிக்கப் போறோம்...???" என்று அவள்...
மின்னல்-8
"ஸ்ஸ்ஸ்" என்ற குக்கர் விசில் சத்தத்தில் பதறியடித்துக்கொண்டு படுக்கையறையில் இருந்து அடுக்களைக்கு ஓடினான் நரேந்திரன்.
"ச்சே!!! பக்கத்து வீட்டுலயா...நம்மதான் குக்கரே வைக்கலேயே...ஏன்டா நரேன் இப்படியா பல்பு வாங்குவே...எதிர்கட்சி காரன் பாத்தா என்ன நினைப்பான்...???" யாருமில்லாத தைரியத்தில் தன்பாட்டுக்கு பேசிக்(?) கொண்டிருந்தான் அவன்.
அவன் தனியாக இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் அலறியது அவனது கைபேசி. "இதுவாது...
மின்னல்-7
வாழ்க்கையில் ஒரு சிலரைப் பார்த்தவுடனே பிடித்துவிடும்...சிலரிடம் முதல் சந்திப்பிலேயே ஒருவித ஒதுக்கம் தோன்றிவிடுமென்றால்...சிலரிடம் நெருக்கம்...!
அப்படித்தான் லீலாமதிக்கும் நரேந்திரனை கண்டவுடன்...!
ஏதோ நெருங்கிய உறவினனைக் கண்ட உணர்வு...! இவன் பாதுகாப்பானவன் என்ற உணர்வும்கூட இல்லையெனில் அவனை அடுக்களை வரை அனுமதித்திருப்பாரா...இல்லை வார்த்தைக்கு வார்த்தை அவனுடன் சேர்ந்து கிண்டலடித்திருப்பாரா என்பது சந்தேகமே...!
அவர்களது குடும்பம் அவர்களுக்கு ஒரு...