Thursday, July 23, 2026

    Malar Soodum Penmai 28 3

    0

    Malar Soodum Penmai 28 2

    0

    Malar Soodum Penmai 28 1

    0

    Malar Soodum Penmai 27 3

    0

    Malar Soodum Penmai 27 2

    0

    Malar Soodum Penmai

    Malar Soodum Penmai 15 2

    0
    சதாசிவம் புரியாமல் பார்க்க, "சென்னையில இவங்களோட ஆபிஸ் ஓபன் பண்ண போறாங்க. அதுக்காக நம்ம பேங்கை தான் அப்ரோச் பண்ணியிருக்காங்க" என்றார். "ஓஹ்" மாமனாருக்கு இது புது தகவல். ஏன் எங்ககிட்ட சொல்லலை? யாரோ சொல்லி நாங்க தெரிஞ்சுக்கணுமா?  "உங்க வேலை எல்லாம் எந்தளவுல இருக்கு?" என்று தேசிகனிடம் கேட்டார் அவர். "ஆல்மோஸ்ட் முடியுற ஸ்டேஜ் தான் சார்"...

    Malar Soodum Penmai 15 1

    0
    மலர் சூடும் பெண்மை 15 தன்வி வரவேற்பிற்கு தயாராக ஆரம்பிக்க, தேசிகனுக்கான உடையும், ஆட்களும் வந்தனர். "இல்லை, நானே ரெடியாகிப்பேன்" என்று தேசிகன் ஆட்களை மறுத்தவன், உடையை மட்டும் வாங்கி கொண்டான். "மாப்பிள்ளை. உங்களுக்கு உதவியா கூட வைச்சுக்கோங்க" என்று ராஜேந்திரனின் பெரிய மகன் சொல்ல, "இல்லைங்க. என் தம்பிங்க இருக்காங்க. அவங்க உதவி எனக்கு போதும்" என்றான் தேசிகன். "நீங்க...
    தன்விக்கு அதிர்ச்சி. "உண்மையா தான் சொல்றீங்களா?" "உண்மை தான். நீங்க பாருங்க மாமா" என்று அவரை அனுப்பிவிட்டவன், "நீ MBA படிச்சிருக்கிறதால என்கிட்ட அதிகம் எதிர்பார்த்துட்ட போல" என்றான் வருத்தமாக. "என்கிட்ட நீங்க இதை சொல்லியிருக்கணும்" தன்வி சொல்ல, "ஏன் என்னை வேணாம் சொல்லவா?" "இப்போ என்ன எல்லாம் தெரிஞ்சுக்கிட்டா உங்களுக்கு சரி சொன்னேன்" "சரி. உனக்கு தெரிஞ்சிருக்கும் நினைச்சேன். இட்ஸ்...
    மலர் சூடும் பெண்மை 14 மறுநாள் மணமக்கள் தேசிகன் குடும்பத்தின் குலதெய்வத்திற்கு முன் நின்றிருந்தனர். தன்வி பொங்கலிட்டு, பூஜையும் பெரிதாக நடந்தது. கோவில் நிறைய ஆட்கள்.  புதுமண தம்பதிகளுக்கு மாலை கொடுத்து, குங்குமம் கொடுக்க தேசிகன் மனைவிக்கு மாலை அணிவித்து, குங்குமம் வைத்துவிட்டான். அதன் பின் இருவரும் சுற்றி வர, உணவும் அங்கேயே ஏற்பாடாகி இருந்தது. எந்த வேலைக்கும் தனியே...
    தேசிகன், "என்ன இது?" என்று மனைவியிடம் கேட்டான். அவனிடம் சலிப்பே. சொல்ல போனால் தன்வி தொழில் பற்றி யோசிக்கவே இல்லை. எப்படியும் ராஜேந்திரன் யோசித்திருப்பார் என்று பெண்ணுக்கு தெரியும். இடையில் தந்தை நுழைவார் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கே என்ன பேச என்று தெரியாது போது, தேசிகனுக்கு என்ன சொல்வாள்? "சம்மந்தி. இதை உங்க மகளும், மருமகனும் யோசிச்சுட்டு...
    மலர் சூடும் பெண்மை 13 தேசிகனும் தன்வியிடம் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. உள்ளங்கையில் சிறைப்பட்டிருந்த மாங்கல்யத்தை அவளின் நெஞ்சத்திலே விட்டவன், தன் முன் நின்றிருந்தவளின் கை பற்றி தன்னருகே அமர வைத்து கொண்டான். அவர்களுக்கான உணவும் வந்துவிட்டது. வழக்கம் போல் மணமக்கள் மாற்றி ஊட்ட சொல்லவே இளைஞர்கள் அங்கு கூடிவிட்டனர். "டேய் இதென்னடா" என்று தேசிகன் சலிக்க, "ண்ணா. இதுவும்...
    தன்விக்கு இரவு முழுமையான உறக்கம் இல்லை. ஏதோ அவளை தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. மறுநாள் அவளே தேசிகன் அத்தைக்கு அழைத்து பேசினாள். "இன்னும் தகவல் வரலை. இவங்களும் வரலை" என்றவர், "நீங்க காலை சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வாங்க" என்று சொல்லி வைத்தார். சுதாவும், ஸ்ருதியும் நேரே தேசிகன் வீட்டுக்கு வர, தன்வி அம்மாவிடம் அப்பா இன்று...
    மலர் சூடும் பெண்மை 12 மறுபடியும் முதல்ல இருந்தா? தேசிகன் முறையா இது? இது இப்போதைக்கு முடியாது போல! அட போங்கடா! இளைஞர்கள் ஓரமாக அமர்ந்துவிட, பெரியவர்களுக்கு அமர இருக்கை போடப்பட்டது. தன்வியும், தேசிகனும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றிருக்க, "இப்போ நீ என்னதான் சொல்ல வர தேசிகா?" என்று கேட்டார் அவனின் மாமா. "எனக்கு இவங்க வேணாம்" என்றான் வார்த்தையில் அழுத்தம்...
    உடனே இங்கிருந்து கிளம்பியாக வேண்டும். "டிக்கெட் வேணும். சீக்கிரம் பாருங்க" என்று அவளின் ஆட்களை முடுக்கிவிட்டவள், மெடிக்கல் எமெர்ஜென்சி என்று மீட்டிங் ஆட்களுக்கு தகவல் கொடுத்தாள். சதாசிவம் காணாமல் போனதை பற்றி யாருக்கும் தெரிய கூடாது என்பதால் அவளின் உதவியாளர்களுக்கு கூட சொல்லாமல் கிளம்பினாள். அன்றைய நாளே முடிந்துவிட்டது. ஆனால் சதாசிவத்தை பற்றி சின்ன தகவல் கூட...
    மலர் சூடும் பெண்மை 11 இத்தனை வருட அனுபவத்தின் பலன் ராஜேந்திரனுக்கு பல புள்ளிகளை உடனுக்குடன் இணைக்க வைத்தது. இரவில் தேசிகன் காணாமல் போனது, விடியலில் அவன் திரும்பி வந்தது, இப்போது தம்பி காணவில்லை என்பதும் ராஜேந்திரனுக்கு பதட்டத்தை தான் கொடுத்தது. சதாசிவத்தின் குணம் அவருக்கு அத்துப்படியாயிற்றே! ஏதோ செய்திருக்கிறான்! எங்கு கண்டு அவரை தேடுவது? அதற்கு முதலில் என்ன நடந்தது என்று...
    தேசிகனின் மாமா மகள் திருமணம் நெருங்கிவிட்டது. திருமணத்திற்கு செல்ல வேண்டுமா? வேண்டாம் என்பதுதான் தன்வியின் எண்ணம். ஆனால் பாட்டி ஆரம்பித்து பலர் அவளை போனில் அழைத்துவிட்டனர். "எப்போ வரீங்க? பிளைட் டிக்கெட் நாங்க போடவா? வீட்ல தங்க பிடிக்கலைன்னா ஹோட்டல் கூட ரூம் போடுறோம். ஆனா நீங்க வந்து தான் ஆகணும்." என்று அன்பு கட்டளையாகவே எல்லாம்...
    மலர் சூடும் பெண்மை 10 சதாசிவம் மாப்பிள்ளை வீட்டார் கிளம்பிய பின்னமும், தெளியாமல் அமர்ந்திருந்தார். தன்வி விட்டால் போதுமென ஓய்வு எடுக்க அறைக்கு சென்றுவிட்டாள். பெண்ணுக்கு அவ்வளவு சோர்வு. மாப்பிள்ளை வீட்டார் விதித்த நிபந்தனை எல்லாம் தன்விக்கு ஒன்றுமில்லை. அப்பாவிடம் நேரம் கேட்டும் அவர் ஏன் அவ்வளவு அவசரமா மாப்பிள்ளை பார்க்க வேண்டும்? சதாசிவத்திற்கு தான் பயங்கர தலைவலி. இதென்ன புது...
    தன்வி தான் பிரச்சனை என்றால் அவளிடம் பேசவும் எல்லாம் தயார் தான். ஆனால் கூடாது, அவளிடம் யாரும் பேசவே கூடாது என்று நிற்கும் தேசிகனை தான் அவர்களுக்கு சமாளிக்க முடியாமல் போனது. தன்வி அங்கு எப்போதும் போல் இருந்தாள். பாட்டி அழைத்து பேசினால் நன்றாக பேசினாள். ஆனால் தேசிகன் விஷயத்தில் அவளின் நிலைப்பாடு என்ன என்பது இவர்களுக்கு...
    மலர் சூடும் பெண்மை 9 எதற்காக நான் இங்கு வந்தேன்? பாட்டியை பார்க்க தானே? என் வேலையை முடித்து நான் இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும். தன்வி முடிவெடுத்து கொண்டவள், "பாட்டி எப்போ எழுந்திருப்பாங்க?" என்று தேசிகனிடம் கேட்டாள். "தூங்க மெடிசின் கொடுத்திருக்காங்க. முழிக்கிற நேரம் தான்" என்று கடிகாரத்தில் நேரம் பார்த்து சொன்னவன், "உட்காரு வா" என்று அவனுக்கருகில்...
    தன்வி காரை விட்டு இறங்கவும், ஆரத்தியுடன் பெரியம்மா தயாராக இருந்தார். "எனக்கெதுக்கு ஆரத்தி எல்லாம்?" தன்வி உடனே மறுக்க, "விருந்தாளிக்கு ஆரத்தி எடுக்கிறது எங்க வழக்கம். பேசாம நில்லு" என்று அந்த முரட்டு பெரியம்மா அதட்டியதுடன், ஆரத்தி எடுத்தே அவளை வீட்டுக்குள் விட்டார். தன்விக்கு அவர்கள் உள்குத்து புரிந்தும், தானே எதுவும் பேசிவிட கூடாது என்று அமைதியாகிவிட்டாள். "பாட்டியை...
    மலர் சூடும் பெண்மை 8 விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து, தன்வி மிகுந்த குழப்பத்துடனே சுற்றி கொண்டிருந்தாள். தேசிகன் அலுவலகத்தில் இருந்து இன்று அக்ரீமெண்ட் பற்றி முடிவெடுக்க ஆட்கள் வருகிறார்கள் என்று தகவல் வந்தது. ராஜேந்திரன் தலையீட்டால், நிச்சயம் கையெழுத்தாகி விடும் என்று தன்வி எல்லாம் தயார் செய்ய சொல்லியிருந்தாள். ஆனால் பெரியப்பா போன் செய்து, "அவங்க வரலை தன்வி" என்றார். "ஏன்...
    அந்த வாரம் முழுதுமே ஓய்வெடுப்பது,  நண்பர்களுடன் அவுட்டிங் செல்வது, குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது என்று இருந்தாள். ராஜேந்திரன் அதன் பின் இரண்டொரு முறை அவளிடம் தேசிகன் பற்றி பேச முயன்று, மகளின் உறுதியான முடிவில் பின் வாங்கிவிட்டார். சுதாவிற்கு தேசிகன் குடும்பம் மேல் சிறிது விருப்பம் தான். ஆனால் மகள் வளர்ந்துவிட்டாள், இனியும் தான் என்ன சொல்வது,...
    மலர் சூடும் பெண்மை 7 தன்வி வீட்டுக்குள் வர, சதாசிவம் கோவமாக நின்றிருந்தார். ஸ்ருதி, "சாரிடி" என்றாள் தங்கையிடம். "முதல்ல பொண்ணு சாப்பிடட்டும். அப்புறம் எதுவானாலும் பேசலாம் தம்பி" என்றார் அண்ணன் ராஜேந்திரன். சுதா மகளுக்கு உணவு எடுத்து வைக்க, "சாப்பிட்டேன்மா" என்றாள் மகள். "எங்க? யார்கூட?" என்று சதாசிவத்தின் கேள்விகள் பாய்ந்து வர, "ப்பா. அவரோட, தேசிகனோட தான் சாப்பிட்டேன்"...

    Malar Soodum Penami 6 2

    0
    மிகவும் உரிமையாக வீட்டுக்குள் வலம் வந்தவர்களை ஒன்றுமே செய்ய முடியாமல் பார்த்து நின்றார் சதாசிவம். அவர் பேர் சொல்ல கூடிய தொழிலதிபர். அவரின் அண்ணன் முக்கிய கட்சியில் MP,  மருமகன் SP. அண்ணனின் இரு மருமகள்களும் கூட வலுவான குடும்பத்தை சேர்ந்தவர்கள். செல்வாக்கு, அதிகாரத்திற்கு எல்லாம் குறைவில்லை. ஆனால் இவர்களை சமாளிக்க தான் அவருக்கு கடினமாக...

    Malar Soodum Penami 6 1

    0
    மலர் சூடும் பெண்மை 6 அன்றைய நாளிற்கான ஓட்டத்திற்கு எல்லாம் தயாராகி கொண்டிருந்தனர். தன்வியும் அலுவலகத்திற்கு நேரம் ஆவதை உணர்ந்து, வேகமாக கிளம்பினாள். காலை உணவை முடித்து கொண்டு காருக்கு ஓட, சரியாக அம்மா அழைத்துவிட்டார். "ம்மா. ப்ளீஸ். எனக்கு ஆல்ரெடி லேட். நான் நைட் பேசுறேன்" என்று அவரின் பதிலை கூட எதிர்பார்க்காமல் வைத்துவிட்டாள். ஓர் பெரிய...
    error: Content is protected !!