மேகம் கறுக்குது
இதழ் 04
கண்ணீர் கடல்
வற்றிப்போனதனால்...
வரண்டு போய் கிடக்கும்
அவள் விழிகள்…
அதனால்
அழுகை கூட அவளை
கைநீட்டி…
ஆறுதல் கொடுக்க...
அணை(ழை)க்கவில்லை…!
அவள் சற்று நேரத்தில் கண்களை திறந்தவள், இயல்புக்கு வந்திருக்கவே… தண்ணீர் குழாயை திறந்து முகத்தை நன்றாக நீரடித்து கழுவியவள், தன் துப்பட்டாவால் அழுந்த துடைத்தவள், தன்னை சமப்படுத்திக்கொண்டு வெளியே வந்தாள். ஆனால் உள்ளுக்குள் மொத்தமாய் தான் வெடித்து சிதறியிருப்பதை வெளிக்காட்டாது வெளியே வந்தவள்...
இதழ் 03
சரவணன் மேகாவிடம் பணத்தை கொடுக்க திரும்பவும், கதவை திறந்து கொண்டு அவர்களது வீட்டில் வேலை செய்யும் காந்தா உள்ளே வந்தாள். வந்தவளை எல்லோரும் பார்க்க "அம்மா… மேகாப்புள்ள… ரொம்ப நேரமா இங்கே நிக்குது… அதான் நான் உங்களுடன் இருந்து கொண்டு அதை வீட்டுக்கு போய் சுத்தப்படுத்திக்கொள்ள அனுப்பலாம் என்று தான் வந்தேன். "என...
மேகம் கறுக்குது…
இதழ் 02
'இவ எங்கே போனா' என்றவாறே வெளியில் வந்தவள் அதிர்ந்து இரண்டடி பின்னால் போனாள் " அண்ணா…அ…அது வந்து…" என திக்கி தினறியவள் கையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை தனக்கு பின்னால் மறைத்துக்கொண்டாள்.
"ஆத்மி… நீ ஒன்றும் மறைக்கத்தேவையில்லை. அதை முதலே நான் பார்த்து விட்டேன். அம்மா கேக் தானே கொடுக்கச்சொன்னார்கள். நீ என்னடா...