மிஞ்சியின் முத்தங்கள்
11
வீடே பரபரப்பாக இருந்தது அந்த அதிகாலை வேளையில் இன்று திரும்பிச் செல்கிறானே, மகனுக்குக் காப்பியை ஆற்றிக்கொண்டிருந்த பார்வதி இந்தமுறை கொஞ்சம் சந்தோஷத்தோடு இருந்தார்.
இந்த முறை செல்வதுதான் இறுதி இதோடு வந்துவிடுவான் குடும்பமாக அவன் வாழ்வதை கண்நிறைய காண மனம் விரும்பியது.
நிச்சயம் நடக்கும் தினத்தில் குழந்தையை ஆப்பரேஷன் செய்து எடுத்துவிட வேண்டும் என்று முடிவோடு...
2
“ஏய் பாப்பா… நில்லு மா நில்லு” என்ற குரல்கள் கேட்கப் பதட்டத்தில் வேகமாகச் சைக்கிளை மிதிக்கப் பார்த்தாள் கொடிமலர், சட்டென்று வழியை மரித்தவனின் வலிய கரம் மிதிவண்டியை பிடித்து நிறுத்தியது, விழிகள் பயத்தில் விரிந்துகொள்ள அந்தப் பெரிய உருண்ட விழிகளை விரித்து அவனைப் பார்த்தாள் மலர்.
அவளைப் பார்த்துக்கொண்டே வலப்பக்கம் குனிந்தவன் சைக்கிளில் மாட்டியிருந்த தாவணியின்...
4
இரண்டு நாட்கள் ஆகிறது கொடிமலரை பார்த்து, இது பட்டணம் அல்லவே வெள்ளந்தியான மனிதர்களாக இருந்தாலும் கிராம மக்கள் மிகவும் கவனமானவர்கள் எப்பொழுதும் சுற்றத்தை பற்றிய தெளிவு இருக்கும்.
யார் எங்குச் செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்ற கவனம் இருக்கும் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தால் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் சந்தேகம் வரலாம் என்பதால் அந்தப் பக்கமே செல்லவில்லை.
இன்று நண்பனின்...
8
“இப்போ என்ன அவசரம் அவன் போய் ஒருவருஷம் தானே ஆகுது அடுத்ததடவ வரும்போது பாத்தா போதாதா” என்ற ராஜவேலுவை ஏறிட்ட பார்த்திபன் “ஏன் அடுத்ததடவ என்ன செஞ்சு அவன் நிம்மதியை கெடுக்கறதா இருக்கீங்க” என்றார் கூர்மையாக அக்காள் கணவரைப் பார்த்து.
அந்த வார்த்தைகளில் அதிர்ச்சியாகி மனைவியைப் பார்த்தார் ராஜவேலு “என்னடா சொல்ற என்ன செஞ்சார்?...
14
“ஏய் புள்ள மலரு பாலிஷ் பண்ண தங்கம் மாதிரி பளபளன்னு மின்னுற என்ன சங்கதி” என்று அவளின் முகத்தை ஆராய்ந்தாள் கயல்விழி.
அவள் தலையில் நறுக்கென்று கொட்டிய அவளின் தாய் பூங்கோதை “புள்ளைய கண்ணுவைக்காதடி கழுத” என்று கொடிமலருக்கு தன் கையால் திருஷ்டி சுற்றினார்.
கயல்விழியை நெருங்கிய வள்ளி “அடியே கூறுகெட்டவளே கல்யாணம் முடிஞ்சா பொண்ணுங்களுக்கு மினுமினுப்பு தான...
18
கரும்பச்சை நிறத்தில் சில்க் புடவை
உடுத்தி தலைநிறைய மல்லிப்பூ
சூடி கையில் பால் எடுத்துக்கொண்டு
அறையின் உள்ளே நுழைந்த
மனைவியை அப்படியே கைகளில்
அள்ளிக்கொண்டான் அதிவீரன்.
“ஒய் காலைலயும் பால் குடுத்துட்டு
இப்போவும் பால் எடுத்துட்டுவர,
எனக்குப் பால் வேண்டாம்
இந்தத் தேன்மிட்டாய்த்தான் வேணும்”
என்றவன் கீழே விரிக்கப்பட்டிருந்த
பாயில் அவளைக் கிடத்த,
கையில் இருந்த பால் கிளாசை
ஓரமாக வைத்தாள் கொடிமலர்.
“தேன்மிட்டாய் இங்கேயேதான்
இருந்துச்சு உரிமைப்பட்டவங்க
கண்ணுக்குத் தெரியலைப் போல”
என்றவளை பிடித்துத் தன் மடியில்
அமர்த்தியவன் “நல்லா தெரிஞ்சுது
தெரியாத மாதிரி நடிச்சோம்
அப்போதானே எங்க விரதத்தை
காப்பாத்த முடியும்” என்றவன்
விரல்கள் அவள் இதழை மெல்ல
வருடியது.
கொடிமலரின் இமைப்பீலிகள்
தன்னாலே மூடிக்கொள்ள
மென்மையாகத் தொடங்கிய அவனின்
இதழொற்றல் வன்மையான
முத்தமாக மாறியது,
இடையில் அவளிடமிருந்து
பிரிந்தவன் “தேன்மிட்டாய் போதை
தருமா” என்றான் அவள்
செவிமடலில் பற்த்தடம் பதித்து.
“எனக்கு எப்படி தெரியும்!” என்றவள்
குரல் காற்றோடு கலந்தது
“எனக்குத் தெரியுமே…
இந்தத் தேன்மிட்டாய் போதையேத்தும்
எவ்ளோ ருசித்தாலும் பத்தாது”
என்றவனின் இதழ்கள்
அவள் மேனியில் கவிதை
படிக்கத் தொடங்கியிருந்தது,
கணவனுக்குத் தன்னை
முழுதாகக் கொடுத்துவிட்டு
அவன் கைகளில் பாகாய்
உருகினாள் கொடிமலர்.
திறந்திருந்த ஜன்னலின் வழியே
தென்னங்கீற்றின் நிழலோடு
நிலவொளியும் அவர்கள் அறையை
நிறைத்தது அயர்வில் அழகாய்
துயில் கொண்டிருக்கும்
மனைவியைப் பார்த்திருந்தவன்
நன்றாகப் போர்வையை
அவளுக்குப் போர்த்திவிட்டு அவள்
நெற்றியில் அழுத்தமாக
முத்தம்வைத்தான்.
அவர்களின் புதிய வீட்டில்
இருந்தனர், புதிய வீடு
அவர்களின் கனவைபோல
அழகான ஒரு வீடு,
அவனுடைய நிலத்தின் தொடக்கத்தில்
ஒரு இடத்தைத் தேர்வு செய்து
நஷ்டஈடாகக் கிடைத்த மொத்த
பணத்தையும் கொண்டு
இந்த வீட்டைக் கட்டிமுடித்திருந்தான்,
கீழே இரண்டு அறைகள்
மேலே மூன்று அறைகள்
என்று கட்டப்பட்ட கேரள
மாடல் ஓட்டுவீடு.
கண்திறந்து பார்க்கும் இடமெல்லாம்
பசுமை நிறைந்திருந்தது
வீட்டின் முன்னிலும் பின்னிலும்
அனைத்துவகை மரங்களும்
செடிகளும் என்று மனதை
குளிரூட்டும் காழ்ச்சிகள்.
அவர்கள் அறையின்
பால்கனியை திறந்து
நிலவைப் பார்த்துக்கொண்டே
அமர்ந்துவிட்டான்...
“மா…” என்ற அழைப்பில் பார்வதி பெரிதாக வெடித்தழுதார் “மன்னிச்சுருங்கம்மா” என்றதோடு அந்த வாய்ஸ் மெஸ்சேஞ்ஜ் நின்று போனது.
‘மன்னிப்பு வேண்டாம்’ என்று அவன் மறுத்திருக்க புனித்தின் வீட்டில் அவனைக் கருணைக்கொலை செய்ய மனு செய்திருந்தனர், இன்னும் எத்தனை காலம் அந்த உயிரைப் பிடித்துவைக்க “எங்களால் இப்படி பார்த்துக்கொண்டு இருக்கமுடியவில்லை” என்று அவர்கள் கேட்டிருந்தனர்.
நீண்ட ஆலோசனைக்குப் பிறகு...
9
“என்னடி இது அதிசயமா இருக்கு இவர் வரமாட்டார்ன்னு தானே சொன்னாங்க!” – சுமதி.
“ஆமாக்கா பொண்ணு பாக்குறதுக்கே இவ்ளோ தூரம் வந்து நிக்குறாரு!” -கஸ்தூரி.
“அதானே, பொண்ணு குடுக்கமாட்டோம்னு சொல்லிட்டா தூக்கிட்டு போய்த் தாலி கட்டிடுவாரு போல” என்றாள் சுமதி.
“எதுக்கு குடுக்கமாட்டோம்னு சொல்லணும் பாப்பாக்கு இவரைவிடப் பொருத்தமான மாப்பிளையை எங்க போய்த் தேட” என்ற கஸ்தூரி...
13
அதிவீரனின் வாழ்வில் அழகான காலைப் பொழுது இன்று உறக்கம் விழிகளைத் தழுவவில்லை, மலரின் வாசத்தை எத்தனை நுகர்ந்தும் போதாமல் போனது அவனுக்கு அவனின் தேடலில் கொடிமலர் கொஞ்சம் தளர்ந்துவிட்டாள், அவளைத் தன்னுள் பொதிந்துகொண்டவனுக்கு இப்பொழுதும் முழுதாக நம்ப முடியவில்லை தன்னவள் தன்னுடன் என்பதை.
மனம் மிகவும் அமைதியாக இருந்தது உறக்கம் வராமல் விழித்தே கிடந்தவன்...
5
அதிவீரன் தன் உழைப்பில் தனக்கென்று வாங்கிக்கொண்டது அந்தக் கடையை மட்டுமே, ஒரு சூப்பர் மார்க்கெட் கொஞ்சம் பெரிதாக இருந்த கடையை வாங்கி மாற்றங்கள் செய்துகொண்டான்.
அணைத்து பொருட்களும் கிடைக்கும், பெரிதாகக் கடைகள் அங்கே இல்லாத நிலையில் அவனின் கடை நன்றாகவே சென்றது, கடையைத் தந்தையின் பொறுப்பிலே விட்டிருந்தான் மாதா மாதம் செலவுக்கென்று அவன் அனுப்பும்...
10
“ஆதி என்னப்பா இன்னும் அதையே யோசிச்சுட்டு இருக்கியா” என்று வந்து அமர்ந்தார் பார்வதி, பின்னால் தோட்டத்தில் மல்லிகை பந்தலின் கீழே அமர்ந்திருந்தான், நாளை நிச்சயதார்த்தம் இருக்க இப்படி யோசனையோடு அமர்திருப்பவனை பார்க்க வருத்தமாக இருந்தது.
“ஒண்ணுமில்லமா” என்றான் அவரைப் பார்த்து மெலிதான புன்னகையோடு, பெண் பார்த்து விட்டு வந்த நாளிலிருந்து அம்மா வீட்டிலேயே இருக்கிறாள்...
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்
மனதிற்கு தைரியம் தரும் ஹனுமான் மந்திரம் அனு தினமும் சொல்கிறாள் உள்ளுக்குள் உடைந்துகொண்டிருக்கும் இதயத்தை ஓட்ட வைக்க முயற்சிக்கும் மந்திரம்.
நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைக்க நீண்ட விரல்கள் அப்படியே நின்றது.
“கொடி… குங்குமம் எங்க!” என்றவன் பின்னிலிருந்து அணைத்து கண்ணாடி முன்னில் ...
12
“ஆதி இதைப் பாருப்பா” என்றார் பார்வதி தன் கையில் இருந்த தாலிக்கொடியை காண்பித்து, வீடியோ காலில் இருந்தவன் விழிகள் கொடிமலரின் இருந்து மீண்டு தாயின் கையில் இருந்த செயினில் பதிந்தது அவர் வைத்திருந்த ஐந்து செயினில் ஒன்றை கைக்காண்பித்தான்.
நகை எடுக்க வந்திருந்தார்கள் இன்று, இரண்டு நாட்களுக்கு முன்பு அனைவருக்கும் உடைகள் எடுத்திருந்தனர் இத்தனை...
17
அன்றிலிருந்து போராட்டமே மூன்று வருடங்கள் ஆறு மாதங்கள் ஆகிறது அவனைப் பார்த்தோ அவன் குரலைக் கேட்டோ, ஆதவனிடம் அவள் எந்தப் பேச்சுவார்த்தையம் வைத்துக்கொள்வதில்லை அனைத்தும் பார்த்திபன் வழியே.
அரசாங்கம் முயன்றால் ஒருவேளை விடுதலை கிட்டலாம் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவே, பாதிக்கப்பட்ட நபரின் வீட்டினர் மன்னிப்பை வழங்கத் தயாரானால் தூக்கு தண்டனை மாற்றப்படலாம், இப்படி யார்...
15
“வீட்ல வந்து ரெண்டு நாள் இருக்கியா பாப்பா” என்ற அண்ணன்களை நிமிர்ந்து பார்த்தவள் விழிகள் பார்வதியின் மீது பதிந்தது.
“போ மலரு உனக்கும் கொஞ்சம் மாறுதலா இருக்கும்” என்றார் அவர், மீண்டும் அண்ணனைப் பார்த்தவள் “இல்லண்ணா அத்த தனியா இருப்பாங்க நான் அப்புறம் வரேன்” என்க பார்வதியின் விழிகள் நிறைந்தது.
அதிவீரனுக்கு பிறகு அவரின் தனிமையை...
அனைத்தையும் ஒருவிதம் அவனுக்குச் சொல்லிக்கொடுத்தவன் “ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருக்கும் செய்யச் செய்யப் பழகிடும், என்ன வேணும்னாலும் எனக்குப் போன் பன்னு எல்லாரோடையும் அனுசரிச்சு போ, இங்க வேற யாரும் நமக்காக வரமாட்டாங்க” என்று அவனை விட்டுச்சென்றான்.
அந்த வார இறுதி ராகேஷை அழைத்தவன் “அனைத்தும் சரியாக இருக்கிறதா” என்று கேட்டுக்கொண்டான், அடுத்த வாரம் அதிவீரனிடமிருந்து...