திகம்பரனின் திகம்பரி அவள்
“பேசுனா தூக்கம் வராதுன்னு தானே கேள்விப்பட்டிருக்கேன்..” முணுமுணுத்த கோமதி வாய் மூடி கொள்ளவே செய்தார்.
கார் சென்னையை விட்டு திருப்பதி செல்லும் பாதையில் வேகம் எடுக்க, காருக்குள் இருந்தவர்களில் கோமதி, ஸ்மிதா, மகிளா மூவரும் தூங்கிருந்தனர். முழித்திருந்த மற்ற மூவரின் கண்களும் இருட்டை வெறித்து கொண்டிருந்தது.
ரத்னா கண்கள் கலங்கி போய் அமர்ந்திருந்தார். முன் கண்ணாடி வழியே...
“திருப்பதியில் இருந்து வர வழியில டீக்காக அப்பா நிறுத்த சொன்னார், அங்க இவர் இறங்கி முகம் கழுவிட்டு இருந்தார். அப்போ அவர் கழுத்து செயின் வெளிய வந்து விழுந்துச்சு, அதுல இருந்த டாலர் பல்லவிகிட்ட நான் ஒரு நாள் பார்த்தேன், சிவனோட உருவம் அவுட்லைனா இருக்கிற டிசைன், சோ எனக்கு நல்லா ஞாபகம் இருந்தது....
“யார் நீங்க..?” கங்கா கேட்க, பரணி, ரத்னா இருவரும் ஈஷ்வரிடம் சென்றனர். அவன் கை இறுக்க மூடி நின்றான்.
விஷ்ணு சாப்பிட்டு எழுந்து வந்தவன் இவர்களை பார்த்து தள்ளியே நின்றான். பரணி ஈஷ்வரை நெருங்க, அவனின் அடியை எதிர்பார்த்து நின்றான் ஈஷ்வர். ஆனால் பரணியோ அவனின் இரு கைகளையும் பிடித்தவன்,
“என் தங்கச்சியை எங்ககிட்ட கொடுத்துடுங்க, அவ...
“பாட்டி சொல்லு..” கங்கா பேத்தியிடம் கேட்டு கொண்டிருக்க, நரசிம்மன் முகம் ஓரமாக தெரிந்தது. மருமகளின் முகத்தை அவதானித்து கொண்டிருந்தார் மாமனார்.
“சீக்கிரம் பாட்டிகிட்ட வந்துடணும்..” கங்கா அனுவிற்கு சொல்வது போல மருமகளுக்கு சொல்லி போனை வைத்தவர்,
“ஏங்க.. பல்லவி முகமே சரியில்லை..” கணவனிடம் சொன்னார்.
“ம்ம்..” அவருக்கும் யோசனை தான். மகன் இரவு அங்கு சென்றான் என்று தெரியும்.
“நாம...
திகம்பரனின் திகம்பரி அவள் 2
“அப்படி என்னடா சீரியஸா பார்த்துட்டு இருக்க..” ஈஷ்வர் கையில் காபியுடன் விஷ்ணுவின் மொபைல் பார்க்க, அங்கு பப்களின் விலாசம் விரிந்திருந்தது.
“என்னடா இது..?”
“ம்ப்ச்.. எத்தனை நாளைக்கு தான் சிட்டிக்குள்ளே போறது. இனி புல்லா ECR, OMR ரோட் தான். அங்கங்க என்னென்ன ரிசார்ட், பப் இருக்கோ எல்லாத்துக்கும் போறோம், ஷெடியூல் போட்டு...
CM வருவதற்காக ஈஷ்வர் எல்லாம் மேற்பார்வை பார்க்க, அடுத்த சில நொடிகளில் CM கார் உள்ளே வந்தது. ஒரு கட்சி மாநாடு போல கூட்டம் அலைமோத, “மகா.. நீங்க எல்லாம் ஒரு இடத்துல இருங்க..” ஈஷ்வர் குடும்பத்தை ஓரிடத்தில் உட்காரவைத்தவன், பல்லவியுடன் மேடையேறியவன் அவளின் கையை விடவே இல்லை.
முக்கிய கட்சி ஆட்கள், உயர் அதிகாரிகள்...
திகம்பரனின் திகம்பரி அவள் 5
பல்லவியின் திடீர் அணைப்பிலும், இதழ் முத்தத்திலும் ஈஷ்வரின் காதல் விழித்து கொள்ள, அந்த நொடி அவளின் நெருக்கத்தை விரும்பி ஏற்று கொண்டான். வருடங்கள் சென்று கிடைத்த நெருக்கம் அல்லவா..? கணவனாக அவனின் உணர்வுகள் மனைவியை தேடத்தான் செய்தது. அது தானாக கிடைக்கும் போது அனுபவிக்க செய்தான் காதல் கணவன்.
“ஈஷ்வர்..” பல்லவி...
“முடியாது இல்லை.. நடந்து முடிஞ்சதை உன்னால மாத்த முடியாது இல்லை.. அப்பறம் என்ன..? போடி..” அவளை விலக்கி நிறுத்த, பல்லவி மீண்டும் அவனிடம் வந்து நின்றாள். ஈஷ்வர் புருவம் உயர்த்தி பார்க்க,
“இதுக்கு என்ன முடிவு ஈஷ்வர்..? நம்ம லைப் இனி இப்படி தான் போகணும் நினைக்கிறீங்களா..? நான் ஏன் அன்னிக்கு அப்படி ஒரு முடிவு...
திகம்பரனின் திகம்பரி அவள் 4
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். ஒருகால தீவிர காதலர்கள், பின்னால் ஈருடல் ஓருயிர் கணவன், மனைவி.. அவர்களின் இந்த நெடிய பிரிவின் பின்னாலான சந்திப்பு எப்படி இருக்க வேண்டும்..?
கண்ணும் கண்ணும் காதல் பாஷை பேச, உதடுகள் தங்களின் இணையின் நலத்தை விசாரிக்க துடிக்க, உடல்கள்...
திகம்பரனின் திகம்பரி அவள் 6
பல்லவிக்கு மறுநாள் காலை ஒன்பது மணி போல தான் விழிப்பு வந்தது. தூக்கம் கலைந்து கண் திறக்கும் சில நொடிகளுக்குள் நேற்றிரவு நடந்தது நினைவிற்கு வர, உடல் வலியும் அதை உறுதி படுத்தியது.
முழு வெறுமை. அதையும் மீறி கோவம். மனதின் ஓரத்தில் சிறு கசப்பும். சீறலான மூச்சை இழுத்துவிட்ட படி...
“இதுக்கு தான் சொல்றது பெரியவங்க பேச்சை கேட்கணும்ன்னு, இப்போ பட்டுட்டே இருக்க..”
“ம்ப்ச்.. விஷ்ணு நீயும் அவளை மாதிரி பேசாத..”
“அனு வந்தது தான் ரொம்ப சீக்கிரம்ன்னு உனக்கு தோணல..”
“விஷ்ணு..” இப்போதும் ஈஷ்வர் லேசான வெட்கத்துடன் தலை கோதி கொண்டான்.
“டேய்.. இப்போவும் நீ வெட்கப்படுறது பார்த்தா அனுக்கு தம்பி, தங்கச்சி ஏற்பாடு பண்ணாம விட மாட்ட போலயே..”
“எங்க..?...
திகம்பரனின் திகம்பரி அவள் 7
சில வருடங்களுக்கு முன்பு..
“ஈஷ்வர்.. என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட..? காலேஜ்க்கு இன்னும் நேரம் இருக்கே..” கங்கா கிளம்பிய மகனுக்கு குரல் கொடுக்க, அவனோ நிற்கவே இல்லை. வாசலுக்கு நடக்க ஆரம்பித்துவிட்டான்.
“ஈஷ்வர்.. உன்னை தான்.. சாப்பிட்டு போடா..” கங்கா மகனின் பின் வர,
“எனக்கு வேண்டாம்மா, நான் வெளியில பார்த்துகிறேன்..” சொல்லி கொண்டே...
“ஆனா மருமககிட்ட பேசினா அவங்ககிட்ட மறுப்பு தான் தெரிஞ்சது. ஒரு நாலு வருஷம் பிரிஞ்சிருந்தா என்ன..? அவர் ஐபிஸ் படிச்சு முடிக்கும் போது இவங்க குடும்பம் நடத்த வயசும் சரியா இருக்கும், ஒரு நல்ல பேரும் இருக்கும், அடையாளமும் இருக்கும், சமுதாயத்துல இவங்களுக்குனு ஒரு கௌரவமும் கிடைக்கும்..”
“ஏன் இதை இவங்க ரெண்டு பேருமே புரிஞ்சுக்க...
திகம்பரனின் திகம்பரி அவள் 3
“என்ன பேசுறீங்க நீங்க..? எப்படி இப்படி பேசலாம் நீங்க..?” பரணி, ரத்னா பேச்சில் அவர்கள் இன்னாரென்று புரிந்து கொண்ட கங்காவிற்கு, அவர்கள் மகனிடம் பேசியது கோவத்தை கொடுத்தது.
“ராஜா ஏதோ உங்க பொண்ணை மறைச்சு வச்சி கொடுமை படுத்திட்டு இருக்கிற மாதிரி பேசுட்டு இருக்கீங்க, அவ தான் என் மகனை பிரிஞ்சு...
“அது எப்படி தான் உங்களுக்கு காதல் வருதோ, தொடர்ந்து பார்த்துட்டே இருந்தா ஒரு கட்டத்துல குரங்கு கூட அழகா தான் தெரியும், அப்படி தான் உங்களுக்கும் போல..” விஷ்ணு கேலியாக சிரித்தான்.
“இப்போ நீ யாரை குரங்கு சொல்ற..?” ஈஷ்வர் கடுப்பாக கேட்க,
“லவ் பண்ற எல்லா ரோமியோ, ஜுலியட்டையும் தான்..”
“ஸ்ஸ்ஸ்.. உன்கூட பேசி என் மூடை...
திகம்பரனின் திகம்பரி அவள் 24
இத்தனை வருடங்களில் ஈஷ்வரை யாரும் இப்படி பார்த்ததில்லை. பல்லவிக்கு அவனை இப்படி பார்க்கவும் உயிர் வரை வலித்தது. எங்கு, யார் மீது தவறு, எப்படி இது எல்லாம் நடந்தது என்று பேசி அலசி ஆராய்ந்ததின் விளைவு ஈஷ்வரின் கோவமும், வெறுமையும்.
“இதுக்கு தான் நான் முதல்ல இருந்தே உங்ககிட்ட சொல்லிட்டிருந்தேன், இந்த...
திகம்பரனின் திகம்பரி அவள் 23
“என்னடா பேசிட்டிருக்க..?” கங்கா மகன் பேச்சில் கோவம் கொண்டு கலங்கி போனார். பல்லவிக்கோ அவன் வார்த்தைகள் மனதை கொய்ய, கண்ணீர் தேங்கிவிட்டது.
ஈஷ்வர் பக்கத்தில் நின்ற விஷ்ணுவோ அவனை மிகவும் கண்டனத்துடன் பார்த்தவன், அவன் கை பிடித்து உள்ளே இழுத்து வந்தான். நரசிம்மன் மகனின் பேச்சில் ஆடி தான் போனார். உள்ளே...
திகம்பரனின் திகம்பரி அவள் 21
இன்று..
“கிளம்புங்க முதல்ல..” பல்லவி ஈஷ்வரனிடம் சொல்ல,
அவனோ “முடியாது.. ஏன் போகணும்..?” என்றான்.
“ஈஷ்வர்.. இப்படி இருக்க உங்களோட நான் ஒரு ரூம்ல இருக்க மாட்டேன்..”
“ஓஹ்..” ஈஷ்வர் அவளை நெருங்க நெருங்க அவனை மிகவும் தீவிரமாக பார்த்த பல்லவி,
“நேத்து நைட் நீ என் மறுப்பை மீறி என்னை தொட்டப்போ என்னோட அந்த காதல்...
திகம்பரனின் திகம்பரி அவள் 22
“என்ன பேசிட்டிருக்க பல்லவி..?” கங்காவின் குரலில் எல்லோரும் திரும்பி பார்க்க, அவருடன் நரசிம்மனின் நின்றிருந்தார். பார்த்த பல்லவி குடும்பத்தாருக்கு கொஞ்சம் திக்கென்று தான் இருந்தது.
அதிலும் கோமதிக்கு நரசிம்மன் பின் நின்றிருந்த படைய பார்க்க உள்ளுக்குள் லேசான அச்சம் எழுந்தது உண்மை. ஆனாலும் அதை மறைத்து அவரின் குணமான அதே திமிர்...
விஷ்ணுவிற்கு அந்த மொபைலை பிடுங்கி உடைக்கும் ஆத்திரம் தான். ஆனால் மகாவை புரிந்தவன் என்பதால் அதை விட்டுவிட்டான். இதை உடைத்தால் இன்னொன்று இரவிற்குள் வாங்கி விடுவாள். செய்யாத என்றால் செய்யும் ரகம். எப்படியோ போ.. விஷ்ணு எரிச்சலுடன் கீழிறங்கி விட்டான்.
“ஏய்.. விஷ்ணு..” அவனின் கல்லூரி நண்பர்கள் கடையில் இருந்து வெளியே வந்தவர்கள், இவனை பார்த்ததும்...