திகம்பரனின் திகம்பரி அவள் 2

அப்படி என்னடா  சீரியஸா பார்த்துட்டு இருக்க..”  ஈஷ்வர் கையில் காபியுடன்  விஷ்ணுவின் மொபைல் பார்க்க, அங்கு பப்களின் விலாசம்  விரிந்திருந்தது

என்னடா இது..?”

ம்ப்ச்.. எத்தனை நாளைக்கு தான் சிட்டிக்குள்ளே போறது. இனி புல்லா ECR, OMR ரோட் தான். அங்கங்க என்னென்ன ரிசார்ட், பப் இருக்கோ எல்லாத்துக்கும் போறோம், ஷெடியூல் போட்டு போறோம்.. இன்னிக்கு இந்த பப் தான்..” மொபைலில் காட்ட

ம்ம்.. நல்லா தான் இருக்கு, இன்னிக்கு  செம வேட்டை போலாம்..” என்றான் ஈஷ்வரும் பார்த்து

சரி இரு புக் பண்ணிடலாம்..” என்றவன் கண்ணை சுற்ற, ஆள் ஓடியிருந்தான்

சுப்பு.. சுப்பு செல்லம்.. இப்போ நீ வெளியே வரல உன் கார்ட்ல இருக்கிற மொத்த பணமும் காலி.. xxx.. இதானே உன் பாஸ்வோர்ட், இரு எல்லா சரக்கும் புக் பண்றேன்..”

டேய்.. டேய்.. அப்படி மட்டும் பண்ணிடாதடா, நேத்து தான் சம்பளமே வந்துச்சு..” மறைந்திருந்தவன்  பதறி கொண்டு வர, அவனை இழுத்து தன் பக்கத்தில் வம்படியாக அமரவைத்த விஷ்ணு, அந்த வாரம் முழுதுக்கும் புக் செய்த பிறகே சுப்ரமணியை விட்டான்

மனுஷங்களாடா நீங்க..  டைம் டேபிள் போட்டு குடிக்கிறீங்க, ஒரே பத்து நிமிஷத்துல என் மொத்த சம்பளமும் காலி, உங்களோட இருக்கிறதுக்கு என் பொண்டாட்டி அந்த ராட்சஸி கூட இருக்கிறதே மேல்டா..”  பணம் போன கோவத்தில் கத்தி கொண்டிருந்த சுப்ரமணியின் போன் ஒலிக்க, பார்த்தால் அவனின் மனைவி

நான் ராட்சஸியா உனக்கு.. இந்த வாரம் ஊருக்கு வந்து தானே ஆகணும், வா உன் தலையில தபேலா வாசிக்கிறேன்..” உச்சகட்ட கோபத்தில் பொரிந்து கொண்டிருக்க, அதிர்ந்த மணி திரும்பி பார்க்க, விஷ்ணு, ஈஷ்வர் இருவரும் நக்கலாக  சிரித்து கொண்டிருந்தனர்

நீங்க குடிக்கரானுங்க மட்டுமில்லைடா, குடியை கெடுக்கிறவங்களும் கூட..”  மனதில் இருவரையும் திட்டி தீர்த்தான். இதையும் வெளியே திட்டி திரும்பவும் அவன் வாயாலே அவனுக்கு அர்ச்சனை நடக்கும் படி செய்துவிடுவார்களே

இப்போ சந்தோஷமாடா.. நிம்மதியா இருங்கடா..”  கை தூக்கி ஆசீர்வாதம் செய்தவன் உள்ளே செல்ல,  

மணி.. சுப்பு குட்டி.. எங்க செல்லம் போற, காலையிலே வாய் நமநமங்குது  ஒரு கோர்ட்டர் சொல்லேன்..” சிரிப்புடன் சீண்டி கொண்டிருந்த விஷ்ணுவின்  தலையில் நொங்கென்று கொட்டு விழுந்தது

யாருடா இந்த விஷ்ணு தலையில கை வச்சது..” சீறி கொண்டு நிமிர்ந்தவன்  எதிரில் இருந்தவரை  பார்த்துவிட்டு ஈஷ்வரை பார்த்தான்அவனோ  நிதானமாக காபியை குடித்து கொண்டிருந்தான். 

“காலையிலே உனக்கு கோர்ட்டர் வேணுமா..?”  திரும்பவும் விஷ்ணு தலையில் கொட்டிய கங்கா, திரும்பி ஈஷ்வரை பார்த்தார். அவன் கவனம் முழுதும் காபியிலே இருக்க, கிட்சன் சென்றவர்  தட்டுடன் டேபிள் வந்தார். 

“சாப்பிட வாங்கடா..” என்றவர் தட்டை வைத்துவிட்டு வெளியே பார்த்து கை அசைக்க, பெரிய உணவு கூடையுடன் ஒருவன் வந்தான். 

“எல்லாம் எடுத்து வச்சுடு..” என்ற கங்கா திரும்பவும் ஹாலுக்கு வந்த,  “உங்களை தான் கூப்பிடுறேன் சாப்பிட வாங்க..” மறுபடியும் கூப்பிட, ஈஷ்வர் மொபைலை பார்க்க செய்தான். 

விஷ்ணு அவனை பார்த்துவிட்டு தோளை குலுக்கி கொண்டவன் எழுந்து சாப்பிட சென்றான். மணியும் அவனை தொடர்ந்து சாப்பிட செல்ல, கங்கா மகன் பக்கத்தில் அமர்ந்து அவனின் பரட்டை தலையை வருடினார். 

“என்னடா இப்படி குத்துது.. எண்ணெய் ஒன்னு வைக்கிறேதே இல்லையா..?” கடிந்து கொண்டே உள்ளே சென்று எண்ணையுடன் வந்து அவனின் தலையில் வைக்க போக ஈஷ்வர் நிமிர்ந்து முறைத்தான்.  

“சரிடா நான் வைக்கல.. நீயே வை..” அவனின் கையில் திணித்தவர், “என்னமோ இவன் பிறந்ததுல இருந்தே அவதான் எண்ணெய் வச்ச வளர்த்த மாதிரி என்னை தொட கூட விட மாட்டேங்குறான்..”  சத்தமாக முணுமுணுத்தார்.  

ஈஷ்வர் கையில் எடுத்த எண்ணெய்யை அப்படியே கீழே வைத்துவிட, பார்த்த கங்காவிற்கு கோபத்துடன் அழுகையும். 

“அப்படி என்னடா சொல்லிட்டேன் நான், பெத்த அம்மா நான் உனக்கு எண்ணெய் வைக்க கூடாதா..? எனக்கு அந்த உரிமை கூட இல்லையா..? என்ன நீ மொத்தமும் அவளுக்கு தான் சொந்தமா..? அப்போ நான் யாருடா..?” கத்தியவர் கண்களில் கண்ணீரும் தேங்கியது. 

“நீயும் உன் அப்பாவும் சுயநலவாதிங்கடா, உங்களுக்கு  உங்களை பத்தி மட்டும் தான் கவலையே, என்னை பத்தி நினைக்க கூட யார் இருக்கா..? நான் எக்கேடு கெட்டு போனா உங்களுக்கு என்ன..?”

“ம்ப்ச்.. ம்மா..”

“என்னடா  ம்மா.. போடா..” அழுகையுடன் அமர்ந்துவிட, ஈஷ்வர் அவரின் கை பிடித்து தட்டி கொடுத்தான். 

“ஏண்டா உங்க பிரச்சனையில் என்னை இப்படி அழவைக்கிறீங்க, இன்னும் எத்தனை நாளைக்கு எனக்கு இந்த பாடு, நீ ஒரு பக்கம், உங்க அப்பா ஒரு பக்கம்ன்னு என்னை கிடந்து அல்லாட வைக்கிறீங்க..”

“பாரு இப்போ கூட உன்னை கூட்டிவர சொல்லி வெளியே இருக்கார் மனுஷன், என்னமோ முக்கியமான விஷயம் பேசியே ஆகணுமாம்,  நான் என்ன செய்யட்டும்..?”  கங்கா கணவன் வெளியே இருக்கும் விஷயத்தை சொல்ல, ஈஷ்வர் முன்னால் இருந்த டீபாயை உதைத்து எழுந்து நின்றான். 

“ராஜா..” கங்கா மகனின் கோவத்தில் தள்ளி நின்றார்.

“முதல்ல உங்க புருஷனை இங்கிருந்து போக சொல்லுங்க.. போங்க..”  அப்படி ஒரு கத்தல். அவன் சத்தம் வெளியே இருந்த நரசிம்மன்  காதிலும் விழுந்தது. எதிர்பார்த்திருந்தவர் அசையாமல் நின்றார். அவரை பார்க்க அத்தனை பேர் வீட்டு வாசலில் நிற்க, அவரோ மகனை பார்க்க  வாசலில் நின்றிருந்தார்

அய்யா.. தம்பி ரொம்ப கோவமா இருக்கு போல, இன்னொரு நாள்..”  உடன் இருந்த கலையரசு இழுக்க, நரசிம்மன் அவரை பார்த்த பார்வையில் அவர் வாய் மூடி  கொண்டார்

ண்ணா.. ராஜா என்மேல எவ்வளவு கோவமா இருந்தாலும், எத்தனை தூரம் என்னை விட்டு தள்ளி இருந்தாலும் அவர்  என் மகங்கிறது மாறாது, இன்னும் கூட கத்தட்டும், திட்டட்டும் நான் அவரை  விடறதா  இல்லை, அவர் என் மகன், என் வாரிசு, என் ரத்தம்..” உறுதியாக சொன்னவர், மகனை எதிர்பார்த்து வாசலிலே நின்றார். வரமாட்டன் என்று தெரிந்தும்

ராஜா.. ஏன்ப்பா இவ்வளவு கோவம், கொஞ்சம் பொறுமையா இரு..” கங்கா மகனை அமைதிப்படுத்த முயல, ஈஷ்வர் கோவம் இருக்க இருக்க அதிகம் தான் ஆகியது

ம்மா.. நான் சொல்றதை முதல்ல செய்ங்க, அவரை இங்கிருந்து வெளியே போக சொல்லுங்க, அவர் மூச்சு காற்று கூட நான் இருக்கிற இடத்தில இருக்க கூடாது..” உடல் அதிர கத்த, கங்கா பயந்தே போனார்

சுப்ரமனி சாப்பிடுவதை விட்டு ஓடி வர, விஷ்ணுவோ இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. சாப்பிடுவதை நிறுத்தவும் இல்லை

மச்சி.. ப்ளீஸ்டா கோவத்தை கண்ட்ரோல் பண்ணு..” சுப்ரமணி ஈஷ்வரை நெருங்கவும் அச்சம் கொண்டு தூரம் இருந்தே சொன்னான்.

“நான் என்ன சொல்லிட்டிருக்கேன்..” கீழே இருந்த காபி கப்பை  ஓங்கி டிவி மேல் அடிக்க, டிவிகப் இரண்டும் சில்லு சில்லாக சிதறியது

ஐயோ..”  கங்கா வாய் மேல் கை வைக்க, சுப்ரமணி இரண்டடி தள்ளி போனான்

ண்ணா.. என்ன ஆச்சு பாருங்க..”  சத்தத்தில் பதறி போன நரசிம்மன் கலையரசுவை உள்ளே அனுப்பினார்

தம்பி.. என்னய்யா இது..” அவர் அவனிடம் ஓடி செல்ல

கிட்ட வந்தீங்க அவ்வளவு தான்.. என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு, என் வாழ்க்கையை என்னை விட்டு துரத்திட்டு எந்த தைரியத்துல என்கிட்ட வரீங்க, போங்க, என் கண் முன்னாடி வராம போய் தொலைங்க.. இல்லை என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது..”   வெறி கொண்டு கத்தி கொண்டிருந்தவன் எதிரில் நின்றவர்களை பார்த்ததும் அப்படியே அடங்கி போனான்

அவனின் திடீர் அமைதியில் கங்கா திரும்பி யாரென்று பார்க்க, அவருக்கு அவர்கள் யாரென்று  தெரியவில்லை.

பரணி, ரத்னா இருவரும் நின்றிருந்தனர். அவர்களை அங்கு பார்த்து ஈஷ்வருக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. பரணி ஈஷ்வர் என்று கூப்பிட்டு அன்று பணம் கொடுத்ததிலே தெரிந்தது அவனுக்கு ஈஷ்வரை தெரிந்துவிட்டது என்று

டேய்.. இதை முதல்ல கிளீன் பண்ணு..” கலையரசு இன்னாரென்று புரிந்து ஆளை ஏவினார். அவன் வேக வேகமாக கிளீன் செய்ய யாரிடமும் பேச்சு இல்லை

நரசிம்மன் மட்டும் வெளியே கொஞ்சம் தவிப்புடன் நின்றிருந்தார். அவரை கடந்து தான் அவர்கள் உள்ளே சென்றது. ஒரு மினிஸ்டர் இப்படி வாசலிலே நின்றிருப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவரை கவனிக்கவும் இல்லை. மகளின் வேதனையில் அவரை கடந்து உள்ளே சென்றுவிட்டனர்

நரசிம்மனுக்கு பரணி மகன் மேல் கை எதுவும் வைத்து விடுவானோ என்று கவலைஅதே நேரம் பரணியை தடுக்கவும் அவர் விரும்பவில்லை. அவர்களின் வேதனை அவர் அறிந்ததேஅவர் ஒன்று நினைத்து செய்ய, அது வேறாக முடிந்து விட்டது.