Pirayillaa Pournami
பிறை 4:
சேகர் இறந்து இன்றோடு இரண்டு நாட்கள் முடிந்திருந்தது.ஆனால் அந்த
வீட்டில் எந்த மாற்றமும் இன்றி...அவன் இறந்த சோகம் அப்படியே இருந்தது.யாரும்
யாரையும் பார்த்து பேசக் கூட பிடிக்காமல்..அழுது கொண்டிருந்தனர்.
மகனின் இழப்பை மின்னல் கொடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பாண்டியராஜன்
அதற்கும் மேலாக தளர்ந்து போனவராய் அமர்ந்திருந்தார். இருக்கிற அவரது
சொத்துக்களுக்கு எல்லாம் அவன் ஒருவன் தானே ஆண் வாரிசு.
தனது...
பௌர்ணமி 8:
அவளின் பதிலில்
ஓராயிரம் வலிகளும்,வேதனைகளும் அடங்கியிருக்கும் என்று அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.சில
நிகழ்வுகளின் போது அவன்... சம்பந்த பட்ட இடத்தில் இருந்திருந்தால்.. தன் காதலையே
காப்பாற்றி இருப்பானே..! தன் காதலையும், காதலியையும் காப்பாற்ற முடியாமல் போன
அவனுக்கு மற்ற நிகழ்வுகள் எப்படி தெரியும்...?
“நீங்க என்ன
சொல்ல வரீங்க..? நிம்மதியா இருக்கான்னா..?” என்ற கேள்வியுடன் நிமிர்ந்தவன்....அங்கிருந்த
மகாவின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்தான்.
“இது எப்ப
நடந்தது..?”...
பிறை 2:
“முன்னால் நீதிபதியின் மகன் சேகர் திடீர் மரணம்...” என்ற செய்தி அன்றைய எல்லா நாளிதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டு....அவர்கள் குடியிருந்த ஏரியா முழுவதும் ஒரே கூட்டமாக இருந்தது.
நீதித்துறையில் பலவருடங்களாக பழம் தின்று கொட்டை போட்டவராக பாண்டியராஜன் இருந்ததால்..ஆளும் கட்சி,எதிர்க்கட்சி...என பலதரப்பட்ட ஆட்களும் வந்து போய் கொண்டிருந்தனர்.
அனைத்து செய்தி சேனல்களிலும்...இந்த செய்தியே பெரிய விவாதமாய் ஓடிக் கொண்டிருக்க....
சேனலின்...
பௌர்ணமி 10:
செந்தில் குமரன்
எதுவும் தனக்குத் தெரிந்ததாக காட்டிக் கொள்ளவே இல்லை.அவனின் மூளைக்குள் யோசனைகள்
ஓடிக் கொண்டே இருக்க...அந்த யோசனையில் மீனாட்சியை மறந்தான்.
அவனும் வம்பு
செய்வானோ..? திருமண இரவை எதிர்நோக்க வேண்டுமோ..என்ற அச்சத்துடன் இருந்தவளுக்கு...அவ்வளவு
நிம்மதியாக இருந்தது.அவன் அவளிடம் எதையும் எதிர்பார்க்காதது ஒரு பக்கம் நிம்மதி
தான் என்றாலும்...மனதின் ஓரத்தில் ஒரு சின்ன வருத்தம் அவளறியாமல்.
அதற்கு அடுத்து
வந்த நாட்களிலும்...அவன் அப்படியே நடந்து...
பௌர்ணமி 6:
“எனக்கு அவ்வளவு
தான் சார் தெரியும்..!” என்று சொல்லி
முடித்திருந்தாள் கயல்விழி.சர்வ மீனாட்சியின் தோழி.
“அவங்க கல்யாணம்
எப்படி நடந்தது...அதில் ஏதும் பிரச்சனை வந்ததா..?” என்றான்
குமரன்.
“இல்லை சார்..!
அப்படி எந்த பிரச்சனையும் நடக்கலை..சொல்ல போனா சேகர் அவங்க அம்மா அப்பா பார்த்த
மாப்பிள்ளை.மீனாட்சியும் சந்தோஷமாதான் சரின்னு சொன்னா..அவங்க கல்யாணமும் ரொம்ப
கிராண்டா தான் நடந்தது...ஆனா இவ்வளவு சீக்கிரம் அவர் மீனாவை விட்டு போவார்ன்னு
நாங்க...
பௌர்ணமி 7:
அன்றுதான்
செந்தில் குமரன் அவளை இறுதியாகப் பார்த்தது.அதற்கு பிறகு ஒரு கேஸ் விஷயமாக அவன்
பக்கத்து மாநிலம் சென்று வர...அதற்குள் மீனாட்சிக்கும் திருமணம் முடிந்திருந்தது.
தன் மனதில் உள்ள
காதலை எப்படியாவது அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணி அவளைத் தேடித் போன
குமரனுக்கு கிடைத்த தகவல் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது.
என்னவென்று
வெளியில் சொல்ல முடியாத ஒரு உணர்வு அவன் தொண்டையை...
பிறை 1:
“கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளஞ்சு வளஞ்சு கும்மியடி
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
எண்ணெய் ஊத்தி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி...”
சென்னையின் பரபரப்பான அந்த காலை வேளையில்....செழுமைக்கு கொஞ்சமும் குறைவில்லாத அந்த திருமன மண்டபத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக்...