Marakka Manam Kooduthillaiyae
அத்தியாயம் – 8
“டேய் மாப்ள... யாருடா அந்தப் பொண்ணு... கழுத்துல மாலை போட்டு லவ் யூன்னு சொல்லிட்டுப் போகுது... முன்னமே செட் பண்ணிட்டியா... எங்ககிட்ட சொல்லவே இல்ல...” என்ற நண்பனுக்கு பதில் ஏதும் சொல்லாமல் திகைப்புடனே அமர்ந்திருந்தான் நிதின்.
“ஓஹோ... பேய் அடிச்சா மட்டுமில்ல... தேவதை மாலை போட்டாலும் மந்திரிச்சு விட்ட போல ஆயிடுவாங்க போலருக்கு...”...
அத்தியாயம் – 22
மகள் கல்யாணம் முடிந்து புகுந்த வீடு சென்று விட்டதால் பேசுவதற்கு ஆளில்லாமல் வீடே வெறிச்சென்று தோன்றியது மீனாட்சிக்கு. நிதினும் ஏதோ வேலை விஷயமென்று அடிக்கடி வெளியூர் சென்று விடுவதால் தொலைக்காட்சியின் உதவியோடு ஒவ்வொரு நிமிடத்தையும் தனிமையில் நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தார்.
கேரளா சென்றுவிட்டு நிதின் காலையில்தான் திரும்பி வந்திருக்க, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்....
அத்தியாயம் – 1
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸூதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்...
மங்களகரமாய் கை கூப்பி நின்று இனிய குரலில் கணபதி மந்திரத்தைத் தெளிவாய் உச்சரித்துக் கொண்டிருந்த மகளைப் பெருமையும் புன்னகையுமாய் நோக்கிக் கொண்டே...
அத்தியாயம் – 15
அந்த நாள் விடியாமலே இருந்திருக்கக் கூடாதா என்பது போல் ஒரு செய்தி அவர்களை வந்தடைந்தது. திருச்சூர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அழைத்து சஹானாவை அங்கு அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறினர்.
அவளைப் பற்றிய இவர்களின் கேள்வியில் நான்கைந்து மிருகங்கள் ஒன்று சேர்ந்து அவள் உடலில் உயிரை மட்டும் மிச்சம் வைத்து எச்சில் இலையாய் குப்பைத்...
அத்தியாயம் – 10
வெகு நேரம் டான்ஸ் ஆடிக் களைத்துப் போனவர்கள் போட்டின் ஓரமாய் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஒரு சிலர் மட்டும் ஆடிக் கொண்டிருந்தனர். அழகான மாலை மயங்கத் தொடங்கியிருக்க நீரைக் கிழித்துக் கொண்டு மென்மையான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது படகு.
சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த சஹானாவை நோக்கி ரூபன் ஜாடை காட்டி அழைக்க, என்னவென்று...
அத்தியாயம் – 14
அலைபேசியை ஆவலுடன் எடுத்து காதுக்குக் கொடுத்த நிதின் “ஹலோ...” எனவும், எதிர்ப்புறத்தில் இருந்து “யார் பேசறீங்க...” என்றாள் சாதனா.
“சஹி, நான்...” அவன் தொடங்கவுமே புரிந்து கொண்டவள், “நிதினா...” என்றாள். அவளது கேள்வியிலேயே அழைத்தது சஹானா அல்ல எனத் தெரிய, “நீங்க சாதனாவா...” என்று கேட்டான்.
“ம்ம்... எதுக்கு கால் பண்ணீங்க நிதின்...”
“அதுவந்து... சஹி...
அத்தியாயம் – 28
யசோதா, ஆகாஷ் இருவரின் புகைப்படம் முன்னும் ஊதுபத்தி புகைந்து கொண்டிருக்க எந்த சலனமும் இல்லாமல் ஒளிர்ந்து கொண்டிருந்தது விளக்கு. காரியம் முடிந்து உறவுகள் எல்லாம் சென்றுவிட வீடே வெறிச்சென்று இருந்தது.
சோபாவில் சாய்ந்து கண் மூடி இருந்த கிருஷ்ணனின் இமைக்குள் கண்ணீர்த் துளிகள் உருண்டு கொண்டிருந்தன. குற்ற உணர்வில் மனம் குறுகுறுக்க தனது...
அத்தியாயம் – 31
“சஹா... எல்லாரும் வரத் தொடங்கியாச்சு... என் பேத்திய ரெடி பண்ணியாச்சா இல்லியா...” மீனாட்சி கீழிருந்து குரல் கொடுக்க, “இதோ வந்துட்டேன் அத்தை...” மாடியிலிருந்து எதிர்குரல் கொடுத்த சஹானா அடுத்த நிமிடத்தில் மாடிப்படியில் பிரசன்னமானாள்.
உடலைச் சுற்றியிருந்த பர்ப்பிள் வண்ண பட்டுப் புடவையும் கூந்தலில் சூடியிருந்த பூவும் மெருகேறியிருந்தவளை மேலும் அழகாய் காட்ட முகத்தில்...
அத்தியாயம் – 13
திமிறிக் கொண்டு நின்றவளை ஆகாஷ் காருக்கு தள்ளிச் செல்ல முயல்கையில் பிரகாசமாய் வெளிச்சத்தை சிந்திக் கொண்டு அவர்களை நோக்கி வேகமாய் வந்தது கார் ஒன்று. சட்டென்று திகைத்தவன் சுதாரிப்பதற்குள் அருகில் வண்டி நிற்க காரைத் திறந்து வேகமாய் இறங்கினாள் சாதனா.
“மேடம்... ஹெல்ப் மீ மேடம்... இவன் என்னைக் கடத்திட்டுப் போகப் பார்க்கிறான்...”...
அத்தியாயம் – 16
அழகான மாலை நேரத்தின் இனிமையைக் கூட்ட மழை சாரலிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னலருகே நின்றிருந்த சஹானா வெளியே தூரத்தில் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள். ஏதேதோ நினைத்து அலைபாய்ந்து கொண்டிருந்த மனம் இன்றே அமைதிப்பட்டிருந்தது.
அவளது பின்னில் காபிக் கோப்பையுடன் வந்து நின்ற சாதனா மெதுவாய் தோள் தொட திரும்பினாள். உடலும், மனமும் சோர்ந்திருப்பதை முகம்...
அத்தியாயம் – 3
புது ஆர்டர் விஷயமாய் கம்பெனி மானேஜர் ஒருவரைக் காண வந்திருந்தான் நிதின்.
“சார்... இந்த ஆர்டர் தீபாவளிக்குள்ள முடிச்சு மும்பை அனுப்பனும்... அப்புறம் ஒரு மாசத்துக்கு போனஸ் வாங்கிட்டு ஊருக்குப் போற லேபர்ஸ் யாரும் ஒழுங்கா வேலைக்குத் திரும்ப மாட்டாங்க... அதுக்குள்ளே உங்களால முடிக்க முடியுமா...” நிதினுடன் பேசும்போதே அலைபேசி சிணுங்க எடுத்து...
அத்தியாயம் – 24
“இல்லமா, நான் வரல... உன் புத்திரன் வெளிநாட்டுக்கு கிளம்பினதும் சொல்லு... வீட்டுக்கு வரேன்...” கோபமாய் அதே நேரம் அழுத்தமாய் வந்த மகள் ஆஷிகாவின் வார்த்தையில் கண்ணில் நீர் துளிர்த்தது யசோதாவுக்கு.
“நீயே இப்படி சொன்னா எப்படி மா... இந்த வீட்டுல என்னையும் ஒரு மனிஷியா நினைச்சு அன்பா இருக்கறது நீ மட்டும் தான்......
அத்தியாயம் – 19
வெகுநேரம் பூஜையறை முன்பு அம்பாளின் சிலையையே கண்ணெடுக்காமல் தீர்க்கமாய் பார்த்துக் கொண்டு மனதில் ஏதோ கலக்கத்துடன் அமர்ந்திருந்த யசோதா ஹால் சோபாவில் தனது அலைபேசி சிணுங்கும் சத்தத்தைக் கேட்டும் எழுந்திருக்கவில்லை.
ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது பூஜா ஓடிச் சென்று அலைபேசியை எடுத்தவள் அதில் ஒளிர்ந்த ஆகாஷின் புகைப்படத்தைக் கண்டு உற்சாகமானாள்.
“ஆகாஷ்...
அத்தியாயம் – 18
சோகமான சிலையொன்று உயிர் பெற்று வந்தது போல அலைபேசி மெசேஜை வாசித்து புன்னகையுடன் எழுந்து நடந்தவளை கோவில் தூணின் பின்னிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த நிதினின் மனதில் அவள் மனதை மாற்றிவிட முடியுமென்ற நம்பிக்கை விதை வேகமாய் வளர்ந்தது.
காலையில் அவள் கோவிலுக்கு கிளம்பியது முதல் அவளறியாமல் அவளுடனே சுற்றிக் கொண்டிருக்கிறான். மூன்று வருடப்...
அத்தியாயம் – 23
“நரேன்... நல்லாருக்கியா, எப்ப வந்தே...” கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்த அடுத்த வீட்டுப் பெண்மணியிடம் புன்னகையுடன் பதில் சொல்லிவிட்டு நகர்ந்த நரேன் தங்கையின் நிச்சயதார்த்தப் பரபரப்பில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். அழகான குறுந்தாடி அவன் கோதுமை நிற முகத்துக்குப் பாந்தமாய் இருக்க சந்தன நிற ஜிப்பாவும் வேஷ்டியுமாய் கம்பீரமாய் இருந்தான்.
நெருங்கிய உறவுகளையும்...
அத்தியாயம் – 30
பிரபா, ஆனந்தியின் குரல் வீடெங்கும் சந்தோஷமாய் ஒலித்துக் கொண்டிருக்க, அவர்களுடன் பேசிக் கொண்டே விருந்துக்கான ஏற்பாடுகளை தடபுடலாய் கவனித்துக் கொண்டிருந்தார் மீனாட்சி. சரவணன் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தான். புகுந்த வீட்டு விசேஷங்களை மகள் வாய் கொள்ளாமல் சொல்லுவதைக் கேட்டு அவருக்கு நிறைவாய் இருந்தது. அண்ணி காரியத்தில் கறாராய் பேசினாலும்...
அத்தியாயம் – 5
“நிதின்... இந்த இன்விடேஷன் டிஸைன்ஸ் பாரேன்... உனக்குப் பிடிச்சிருக்கா... உன்னையும் கூட வர சொன்னா வேலை இருக்குன்னு ஓடிட்ட...” அங்கலாப்புடன் சொல்லிக் கொண்டே அவனது கட்டில் மீது நான்கைந்து அழைப்பிதழ் டிஸைன்களை பரப்பினார் மீனாட்சி.
“உங்களுக்கும், பிரபாவுக்கும் பிடிச்சாப் போதும்... சரவணன் வீட்டுலயும் கேட்டுடுங்க... பார்க்காமலே கையிலிருந்த டாகுமென்ட் எதையோ பார்த்துக் கொண்டு...
அத்தியாயம் – 2
“சஹா... இந்த மிக்ஸி ஓகே வான்னு பாரு...” அன்னையின் குரலில் திரும்பிய சஹானா கண்டதுமே மனதில் சாரல் வீசும் அழகோடு இருந்தாள். பளிச்சென்ற வெள்ளை சல்வாரில் நெற்றியில் ஒரே ஒரு கறுப்புப் பொட்டு தவிர எந்த அலங்காரமும் இல்லை. காது, கழுத்து எல்லாமே காலியாய் கிடக்க ஒளி வீசும் கண்களில் மட்டும்...
அத்தியாயம் – 6
“அண்ணா... அம்மா எவ்ளோ நேரமா சாப்பிட கூப்பிட்டு இருக்காங்க... கீழ வராம என்ன பண்ணிட்டு இருக்கே...” கேட்டுக் கொண்டே அண்ணனின் அறைக்குள் நுழைந்த பிரபா அவனது கோலத்தைக் கண்டு அதிர்ந்து போனாள்.
இரவெல்லாம் உறங்காத கண்கள் கொவ்வைப் பழமாய் சிவந்திருக்க தலையெல்லாம் கலைந்து ஆபீஸ் கிளம்ப வேண்டிய நேரத்தில் சோபாவில் எங்கோ வெறித்துக்...
அத்தியாயம் – 17
நாட்கள் கடந்திருக்க காரை சர்வீஸ் சென்டரில் விட்டுவிட்டு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றாள் சஹானா. சர்வீஸ் விட வேண்டிய கிலோ மீட்டரைத் தாண்டி வெகு நாட்களாகி இருந்தது. வங்கிக்கு செல்வதற்கான பேருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவளின் கண்கள் சில நாட்களின் வழக்கம் போல் இன்றும் ஆவலுடன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து, தேடியது காணாததால் ஏமாற்றத்துடன்...